Tuesday, June 19, 2007

மகிந்த ராஜபக்ஸவின் அணுகுமுறைகள்

அதிகரித்திருக்கிற முரண்பாடுகளின் கூர் முனையை மழுங்க வைக்கும் முயற்சிகளில் இப்போது சிறிலங்கா அரசு முயன்று வருகிறது. இதற்காக சிறிலங்கா ஜனாதிபதியே களத்திலிறங்கிச் செயற்பட்டுவருகிறார். சர்வதேச சமூகத்தின் நெருக்கடிகளைத்தணிப்பதற்காக அவர் இப்போது அதிக கவனத்தை எடுத்திருக்கிறார். இதை அவர் ஒரு உபாயமாகவே கடைப்பிடிக்கிறார்.


போர் நிறுத்த உடன்பாட்டை மீறி, மனித உரிமைகளைப் பொருட்;படுத்தாது சிறிலங்கா அரசு செயற்பட்டு வருவதால் அதற்கு சர்வதேச அளவில் அதிக கண்டனங்கள் வந்தவாறே இருக்கின்றன.
இந்தக்கண்டனங்கள் இன்னும் வரவர கூடுகின்றனவே தவிர குறைவதாகத் தெரியவில்லை. அதாவது சிறிலங்கா அரசு மனித உரிமைகளைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

போரை நிறுத்தாத வரையில் அதனால் மனித உரிமை மீறல்களைக்கட்டுப்படுத்த முடியாது என்பது நடைமுறையான உண்மை. ஆனால் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலில் போருக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இனப்பிரச்சினைத்தீர்வு குறித்து அதனிடம் வேறு தெரிவுகளும் மாற்று யோசனைகளும் கிடையாது.

அதனால் அது போரையே தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. அப்படிப் போரைச் செய்யும்போது மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த படியேயிருக்கும். மனித உரிமை மீறல்கள் தொடரப்படும்வரையில் அதற்கான கண்டனங்களும் வந்தவண்ணமேயிருக்கும்.
ஆனால் இந்தக்கண்டனங்கள் ஒரு கட்டத்தில் அரசுக்கு நெருக்கடிகளையும் அழுத்தங்களையுயும் கொடுக்கும். அத்துடன் கண்டனங்களை வெளியிட்டு வரும் தரப்பினர் தொடர்ந்து வெறுமனே அவற்றை வெளியிட்டுக் கொண்டிருக்கவும் முடியாது.

இந்த யதார்த்தத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டே சிறிலங்கா ஜனாதிபதி இப்போது புதிய அணுகுமுறைக்குச் சென்றுள்ளார். தன்னைச்சூழ்ந்துள்ள நெருக்கடிகளைத் தணிக்க முயல்கிறார்.

அவர் தன்னுடைய தந்திரோபாயத்தின்படி இப்போது மூன்று முனைகளில் தன்னுடைய வியூகத்தை வகுத்திருக்கிறார். ஒன்று தமிழ் மக்களை செயற்படமுடியாத ஒரு நிலைக்குத்தள்ளுவது. அடுத்தது புலிகளைப்பலவீனப்படுத்துவது. மூன்றாவது சர்வNதுச சமூகத்தை தன்னுடைய பக்கத்துக்கு கவர்ந்திழுப்பது.

இன்று இலங்கைத்தீவில் தமிழர்கள் எங்கேயிருந்தாலும் அவர்கள் எல்லோரும் நிம்மதியற்ற ஒரு நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழர்கள் கொழும்பிலிருந்தாலென்ன மட்டக்களப்பிலிருந்தாலென்ன யாழ்ப்பாணத்திலிருந்தாலென்ன அவர்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது என்று மகிந்த ராஜபக்ஸ சொலலிவிட்டார்.

அத்துடன் தமிழ் மக்கள் எதையம் திட்டமிட முடியாதவாறும் செய்ற்பட முடியாதவாறும் ஒரு நிலையை அவர் உருவாக்கியுள்ளார். எங்கும் இறுக்கமான நடைமுறைகளுக்குள்தான் தமிழர்கள் வாழவேண்டியிருக்கிறது இப்போது. அது கொழும்பிலும் சரி, யாழ்ப்பணத்திpலும் சரி வவுனியாவிலும் சரி எங்கும்தான். முழுத்தமிழர்களையும் அவர் தன்னுடைய ஆட்சியில் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்.

போரை தமிழ் மக்களுக் கெதிராக முழுஅளவிலும் விரிவாகவும் வௌ;வேறு வடிவங்களிலும் நுட்பமாகவும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவாறும் அவர் வடிவமைத்திருக்கிறார்.

ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு அவருடைய 'ஒப்பிறேஸன்கள்' வேறுபடுகின்றனவே தவிர அடிப்படை ஒன்றுதான். அதாவது அவர் இப்போது தமிழ் மக்களுக்கெதிரான ' மல்ரி ஒப்பிறேஸன்'களில் ஈடுபட்டிருக்கிறார்.

எனவே தமிழ் மக்களுக்கெதிரான அவருடைய போரென்பது முழு அளவிலானதே.

அடுத்தது, அவர் புலிகளைப்பலவீனப்படுத்த முயற்சிப்பது. முதற்கட்டமாக கிழக்கிலிருந்து புலிகளை அகற்றுவது. அது முடியாது என்றால், அவர்களை அங்கிருந்து ஓரங்கட்டுவது, அதுவும் முடியாதென்றால் அவர்களை அங்கே பலவீனப்படுத்துவது என்பதே அவருடைய திட்டம்.

இதன்படி சிறிலங்கா அரசு போர் நிறுத்த உடன்படிக்கையை அப்படியே தள்ளி வைத்துவிட்டு, வெளிப்படையாகவும் கநேரடியாகவும் கிழக்கில் போரை நடத்தத் தொடங்கியிருந்தது.

இதில் நேரடியாயகவே சிறிலங்கா அரசுக்குபெரும் பாதிப்புகள் வருமென்று தெரிந்த போதும் அதை மகிந்த ராஜபக்ஸ பெரிதும் பொருட்படுத்தவில்லை.
அதாவது போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி போர் செய்யப்படுவது என்பது சர்வதேச சமூகத்தின் விருப்புக்கு மாறானது என்பது ஒன்று. அடுத்தது அப்;படிப்போரைச் செய்யும் போது அதனால் ஏற்படும் மனித அழிவுகள் உரிமை மீறல்கள் எல்லாம் அவருக்கெதிராகவே வரும் என்பது அடுத்தது.

ஆனால் அவர் முதற்கட்டமாக புலிகளைப்பலவீனப்படுத்தும் முயற்சிலேயே ஈடுபட்டார். அவருக்குத் தெரியும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டிவரும் என்று. அது தவிர்க்க முடியாத யதார்த்தமும் கூட.

அப்படி தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கும் போது புலிகள் பலவீனமான நிலையிலேயே இருக்க வேண்டும் என்று அவர் கணக்கிட்டார். இதற்கு வாய்ப்பாக அவர் கருணா குழவைப் பயன்படுத்தி காரியங்களைச் சாதிக்க முற்படுகிறார்.

கிழக்கில் புலிகளை பலவீனமாக்கி விட்டால் அடுத்;தது வடக்கில் வன்னியில்தான் அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அதை தான் சமாளித்துக் கொள்ளலாம் என்றும் அவர் கணித்தார். இதன்படி அவருடைய படை நடவடிக்கைகளை வகுத்திருக்கிறார்.

இதற்கெல்லாம் சாதகமான முறையியல் அவர் சிறிலங்காவுக்குள் குறிப்பாக சிங்களத்தரப்புக்குள் ஒரு பொறிமுறையை வகுத்திருக்கிறார். அதன்படி சிங்களத்தரப்பை போருக்கு ஆதரவாக அவர் முழதாகத் திரட்டி விட்டார். போருக்கெதிராகவும் அவருடைய நிகழ்ச்சி நிரலுக்கெதிராகவும் அங்கே வலுவான அழுத்தங்களைக் கொடுக்கும் நிலை எவரிடமும் இப்போதில்லை.

அடுத்ததாக சர்வதேச சமூகத்தை கையாள்வது அல்லது அதை சமாளிப்பது. தொடக்கத்தில் அவருடைய போர் முனைப்புக்கும் அதனால் ஏற்பட்ட போர் நிறத்த மீறலுக்கும்; எதிராக சர்வதேச சமூகம் கடுமையான கண்டனங்களை வெளியிட்டது.

மகிந்த ராஜபக்ஸ இந்தக்கண்டனங்களைப் பொருட்படுத்தாது தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார். ஆனால் போரை நிறுத்த முடியாத இந்தக்கண்டனங்கள் அடுத்த கட்டத்தில் மனித உரிமை மீறல் என்ற வடிவத்தில் வரத்தொடங்கியுள்ளன.

முதலில் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வந்த சர்வதேசத்தின் விருப்பை அப்படியே தூக்கிவீசிய ராஜபக்ஸவினால் இப்போது வரும் கண்டனங்களை அப்படி தூக்கியெறிய முடியவில்லை.

போரை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் சொன்ன போது அவர் அதற்கு, சிங்களத்தரப்பின் பெரும்பான்மை விருப்பமும் அரசாங்கத்தின் நிலைமையும் போரைச் செய்ய வேண்டியதாகவே உள்ளதென்று காட்டினார். அதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டதோ இல்லையொ அவர்அப்படித்தான் அதை நிரூபித்தார். அவருக்கு ஆதரவாக, அவருடைய அந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாக சிங்களத்தரப்பும் நின்றது.

முழுச்சிங்களச் சமூகமும் போரை ஆதரிக்கிறது என்பதை சர்வதேச சமூகம் விளங்கியிருக்கிறது என்று ஒரு சிங்கள ஊடகம் வெளிப்படையாகவே எழுதியுமிருந்தது. ( சிங்களச்சமூகம் போரையே விரும்புகிறது என்பதை சர்வதேசம் விளங்கியிருக்லாமே தவிர அது அதை ஏற்றுக் கொண்டதா என்பதை கவனிpக்க வேண்டும்.)

சிங்களத்தரப்பின் போர் நிறுத்த மீறலையும் போர் முனைப்பையும் கட்டுப்படுத்த முடியாத சர்வ தேச சமூகம் மனித உரிமை மீறறல்கள் என்ற பேரில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முற்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி யாருக்கும் எழ வாய்ப்புண்டு. சிறிலங்கா அரசின் போர் முனைப்பை கட்;டுப்படுத்த முடியாத நிலையிலா சர்வதேச சமூகம் இருக்கின்றது என. ஒரு வகையில் சிறிலங்கா அரசை முழுதாகக்கட்டுப்படுத்தும் நிலையில் இன்னும் சர்வதேச சமூகத்தின் நெருக்குவாரம் சிறிலங்காவுக்கு இல்லை.

சிங்களவர்கள் எந்த நெருக்கடிக்குள்ளும் சுழித்து லாபம் தேடும் ஒரு அரசியற் பாரம்பரியத்தை உரு வாக்கி வைத்திருக்கிறார்கள். அமெரிக்கா தலைமையிலான சர்வதேச ஒற்றை உலகமே இப்போதிருந்தாலும் அதற்குள் ஆசிய மண்டலத்தின் செல்வாக்கு வலயம் இன்னும் முற்றாகக் கரைந்து விடவிpல்லை. அதிலும் சீனா, இந்தியா என்ற அடையாளங்கள் அல்லது செல்வாக்கு வலயங்களின் இயல்பு மெல்லியதாக இன்னும் இருக்கிறது. இதைத்தனக்கு சாதகமாகப்பயன் படுத்துகிறது சிங்களத்தரப்பு.

இதன்படி அது மேற்குலகத்தின் நெருக்குவாரங்கள் அதிகரிக்கும் போது சீனாவின் பக்கம் ஒட்டிக்கொள்கிறது. அப்படி ஒட்;டிக்கொள்வதன் மூலம் லாபங்களையும் பாதுகாப்பையும் அது பெற்றுவிடுகிறது. கடுமையாக நெருக்கினால் சிறிலங்கா முற்றுமழுதாக சீனாவைச்சார்ந்து விடும் என்று மேற்கு எதிர்பார்க்கிறது.

ஆக, இத்தகைய பின்னணியில் நேரடியாக சிறிலங்காவுடன் முட்டிக்கொள்ளும் நிலைக்கு மேற்குலகம் இன்னும் தயாராகவில்லை. அதனால் அது மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில் மறைமுக நேரடி அழுத்தத்தை சிறிலங்கா அரசுக்கு ஏற்படுத்திp வருகிறது. இந்த அழுத்தத்தில் எந்த நாடும் நேரடியாக முழு அளவில் சம்மந்தப்படாது. அதேவேளை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தங்கள் தரப்புக்கண்டனங்களையும் திருப்பியின்மைகளையும் தெரிவிப்பதற்கு அவற்றின் மனித உரிpமை அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

இந்த அமைப்புகளின் கண்டனங்களுடன் சேர்ந்து ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான அமைப்பும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இந்த அமைப்புகளின் கண்டனம் அடுத்த கட்டத்தில் ஏதாவதொரு தீரமானத்தை சமமந்தப்பட்ட தரப்புகள் எடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டத்துக்கு தள்ளுமென்பதால் அதற்கு முன்னதாக ஜனாதிபதி நேரடியாகக் களத்திலிறங்கி சூட்டைத்தணிக்கத் தொடங்கி விட்டார்.

இதன்படியே அவர் அதிரடியாக ஜெனிவாவுக்குப் புறப்பட்டதும் நோர்வேப் பிரதிநிதிகளைச் சந்தித்ததும். ஜெனிவாவில் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதியை அவர் சந்தித்து இலங்கையில் தொடருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசி, அது தொடர்பாகத் தான் உடனடிக்கரிசனத்தைக் கொள்வதாகச் சொல்லியுள்ளார்.

ஜனாதிபதி மனித உரிமைகள் பிரதிநிதியை சந்தித்ததே சர்வதேச சமூகத்துக்கு பெரிய திருப்தியளிக்கும் விசயமாகும். அவர்களைப் பொறுத்தவரை பிரச்சினைக்கு அதனுடன் சம்மந்தப்பட்ட தரப்பு முகம் கொடுத்தால் அது முதல்கட்ட வெற்றி என்றே கருதுகிறார்கள்.

ஆனால் மகிந்தவைப் பொறுத்தவரையில் அவருக்கு ஒரு தற்காலிக நெருக்கடித்தணிவு தேவைப்படுகிறது. அதைத்தேடியே அவர் ஜெனிவாவுக்குப் போனார். ஜெனிவாவில் அவர் கூறியபடியும் ஒப்புக்கொண்டபடியும் எதையும் செய்யப்போவதில்லை. ஆனால் தற்காலிகமாக அவர் ஆறுதலைப் பெற்றுள்ளார்.

ஆனால் இதைவிடவும் அவர் நோர்வேயின் சமாதானப்பிரதிநிதிகளைச் சந்தித்ததே அவருடைய முக்கிய தந்திரமாகவுள்ளது.

நோர்வேப்பிரதிநிதிகளான எரிக் சூல் கெய்ம்மிடமும் ஜோன் ஹான்ஷர் போவரிடமும் புலிகளை பேச்சு மேசைக்குக் கொண்டுவரும்படி அவர் கேட்டுள்ளார். பந்தை அவர் நோர்வேயிடம் கொடுத்துள்ளார்.

இனி நோர்வே இதற்குரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற கட்டம் இது. ஆனால் யதார்த்தத்தில் பேச்சுக்கான சூழலே இல்லை. இப்போது நோர்வே புலிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நிலையை அவர் உருவாக்கியுள்ளார். அத்துடன் பேச்சுக்கு புலிகள் வரத்தயாரில்லை என்றால் பழியைப்புலிகளின் மீது போட்டும் விடலாம் என்றெல்லாம் அவர் கருதுகிறார்.

இதன் அர்த்தம் தான் பேச்சுக்கு தயார் என்பதாகக் காட்டுவதே. இப்போது படைவலுச்சமநிலையில் அரசாங்கம் வலுவாக உள்ளதாக அவர் கருதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அத்துடன் நோர்வேயோ சர்வதேச சமூகமோ இப்போதைக்கு தீர்வுத்திட்டம் பற்றியோ பேச்சுவார்த்தைபற்றியொ தன்னிடம் எதையும் பேச முடியாது என்ற நிலையை உருவாக்க முயன்றுள்ளார்.

எதிலும் தான் முந்திக் கொள்வதன் மூலம் தனக்குச் சாதகமான ஒரு களநிலையைத் தயாரிக்கும் நோக்கிலான அணுகுமுறையில் அவர் தானே நேரடியாக முன்னின்று செயற்படுகிறார்.

இந்த அணுகுமுறைக்கு இப்போது ஏதாவது சிறு வெற்றிகள் கிட்டலாம். ஆனால் அவை தற்காலிக வெற்றிகளே. அல்லது வெற்pபோலானவையே. உண்மையான முறையில் அவர் எதிலும் செய்றபடாத வரையில் அவர் எந்த வெற்றியையம் பெறப்போவதுமில்லை. நன்மைகளை அடையப் போவதுமில்லை.

அவருடைய தந்திரப்பொறிக்குள் சிக்குப்படும் சர்வதேச சமூகமும் ஒரு போதும் இந்தப்பிரச்சினைக்கு சரியான தீர்வைக் கண்டடையப் போவதுமில்லை.

பதிலாக பெரும் பேரழிவுக்குள் இலங்கைத்தீவைத்தள்ளும் மகிந்தவின் நோக்கத்துக்கு சகலதரப்பும் வழியேற்படுத்துவதாகவே படுகிறது.

No comments: