இன்றும் நான் பேச நினைத்தேன்
வார்த்தைகள் சலிப்பூட்டின
ஒளி அதிக சங்கடத்தைத் தந்தபோது
வெளியே
சுவரினோரம்
நிழலும் இருளம் கலந்திருந்த
அறைவில் ஒதுங்கனேன்
உள்ளே
இசையின் உக்கிரமும்
நடனத்தின் ஆவேசமும்
சுவர்களிலும் நிழல்களிலும் பிரதிபலித்தன
யாரும் என்னைக் கவனிக்கவில்லை.
No comments:
Post a Comment