Thursday, June 28, 2007

அகாஸி சொல்வதென்ன

யப்பானிய சிறப்புத்தூதுவர் யசூஸி அகாஸி ஒரு காரிய சித்தர் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. அவர் தன்னுடைய நோக்கம் நிறைவேறும் வரையில் ஒரு போதும் அந்த முயற்சியில் தளர்ந்து விடுவதில்லை.

அந்த முயற்சி வெற்றி பெறவேண்டுமென்பதற்காக அவர் எவ்வளவு கீழே இறங்கமுடியுமோ அந்தளவுக்கு கீழே இறங்கிக்கொள்வாhர். எவ்வளவு இறுக்;கமாக நிற்க முடியுமோ அந்தளவுக்கு இறுக்கமாக நிற்பார்.

அவரைப் பொறுத்த வரையில் யப்பானுக்காகவே எல்லாம். அதுவும் எதிர்கால யப்பானுக்காக எல்லாம் எல்லாம்.

அகாஸியின் தீவிரமான முயற்சி இப்Nபுhது மெல்ல வெளிப்படையான பலனை அவருக்கு ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. அவர் போர் நெருக்கடியும் அபாயமும் நிறைந்த வாகரைக்கே போயிருந்தார்.

மீள் குடியேற்றம் என்றபோர்வையில் சிறிலங்காவுக்கு உதவும் பொருட்டே அவர்அங்கே சென்றார். அவருடைய பயணம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியென ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் காட்டும் முயற்சி என்று சில நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறர்கள்.

அத்துடன் சிறிலங்காவுக்கு வேண்டிய உதவிகளை யப்பான் தொடர்ந்து செய்;யும் என்றும் அவர் சொல்லியிருந்தார். இப்படிச் சொல்லி, அவர் சிறிலங்காவுக்கு ஒரு பெரிய தூண்டிலைப் போட்டிருந்தார்.

சிறிலங்கா இப்பொழுது சர்வதேச ரீதியாக மனித உpமைகள் விசயத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் சூழலில் யப்பானின் இந்த உதவியும் அறிவிப்பும் சிறிலங்காவுக்கு பெரும் ஆறதலாகவேயிருந்தது.

அதற்குப் பதிலாக சிறிலங்கா இப்போது யப்பானுடன் மீண்டும் கொடுக்கல் வாங்கல்களை அதிகரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களின் முன்பு நூற்றுக்கு மேற்பட்டோரைக் கொண்ட பெரியதொரு வர்த்தகக் குழுவுடன் ஜனாதிபதி சீனாவுக்குப் போயிருந்தார். சிறிலங்காவில் சீனா தாhராளமாக முதலீடுகளைச் செய்யலாம். சீனப் பொருட்களை இலங்கைச்சந்தையில் விற்கலாம் என்ற உடன்படிக்கைகள் அப்போது செய்யப்பட்டன.

ஆனால் அந்த நிலைமையை சற்று மாற்றியமைக்கும் விதமாக இப்போது அகாஸியின் முயற்சிகள் அமைந்திருக்கின்றன. அவருடைய முயற்சியின் விளைவாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித Nபுhகல்லாகம அடங்கிய குழவினர் இப்போது யப்பானுக்குப் போயிருக்கிறார்கள்.

யப்பானில் இந்தக்குழுவுக்கு உற்சாகமான வரவேற்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது சீனாவுக்கு கிடைத்திருக்கும் சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்பை கையகப்படுத்தும் தீவிர முயற்சியில் இப்பொழுது யப்பான் ஈடுபட்டிருக்கிறது.

ஏறக்குறைய பன்னிரண்டாண்டுகளுக்கு முதல் சிறிலங்காவின் சந்தையில் யப்பான் அதிக செல்வாக்குடையதாக இருந்தது. குறிப்பாக ஐ.தே. க காலத்தில் யப்பானின் செல்வாக்கு அதிகமாக இருந்தது.

சந்திரிகா வந்து இதை மாற்றியமைத்தார். அவர் தமிழ் மக்களுக்கான போரைச் செய்வதற்கான முறையில் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை தயாரித்தபோது அது யப்பானுக்கு சற்றுப் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை மாற்றுவதற்காக யப்பான் கடுமையாக முயன்றது. இதற்காக அது ரணிலை முழதாக நம்பியுமிருந்தது. ரணில் ஆட்சிப்போறுப்பை ஏற்றவுடன் யப்பான் அதிகமாக சந்தோசப்பட்டது. ரணில் போர்; நிறுத்த உடன் படிக்கையைச் செய்தNபுhது யப்பான் அதற்கு முழ ஆதரவைத் தெரிவித்து உதவியது.

இந்தப்புதிய ஏற்பாட்டுடன் யப்பான் வலு மும்முரமாக களத்தில் இயங்கத் தொடங்கியது. அகாஸி சிறப்புத்தூதுவராக இலங்கைக்கான பயணங்களைத் தொடங்கினார். இந்த ஐந்தாண்டுகளில் அதிகமாக இலங்கைக்குப் பயணம் செய்த வெளிநாட்டுத்தூதர்களில் அகாஸியும் ஒருவர்.

ஆனால் அகாஸியின் திட்டத்துக்கு மரணாக ரணிலின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

அவர் அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எம்பிக்களைச் சந்தித்த போது அவர்கள் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் போர் முனைப்பையும் தமிழ் மக்களுக் கெதிரான Nபுhக்கையும் அகாஸியிடம் சொன்னார்கள். அதற்கு அகாஸி சொன்னார், ரணிலைத் தோற்கடித்ததன் பலனை இப்போது அனுபவிக்கிறீர்கள் என்று. இதை அவர் சொல்லும்போது தாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்ற உணர்வோடுதான் சொன்னாராம்.

இதேபோல ஒருதடவை அவர் விடுதலைப்புலிகளைச்சந்திக்கும் Nபுhது " யப்பானுக்கு அமெரிக்கர்கள் என்ன செய்தார்கள் என்று நாங்கள் இப்போது யோசிக்கவில்லை, இனி அமெரிக்காவுடன் எப்படி இருக்கப் போகிறோம், மாறிவரும் புதிய உலகில் எதையெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம் என்பதைப்பற்றியே சிந்திக்கிறோம், கடந்தகாலத்தைப்பற்றி யோசித்துக் கொண்டிருப்பதைவிடவும் எதிர்காலத்தில் என்ன செய்;லாம் என்று சிந்திப்பதே முக்கியமானது " என்ற தொனிப்பட சொல்லியிருந்தாராம்.

அதாவது 'அமெரிக்கா அணுக்குண்டு போட்டதையே மறந்து விட்டோம் அதைவிடவா இந்தப்பிரச்சினையெல்லாம் பெரியது ' என்று அவர் கேட்காமல் கேட்கிறார்.

இந்தக்கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதோ இல்லையோ ஆனால் இதுதான் அகாஸி, இதுதான் யப்பான்.

அதாவது இத்தகைய ஒரு போக்கைப் பின்பறறியதால்தான் இனறு யப்பான் மீண்டும் உலக அரஙகில் முன்னுக்கு வந்திருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். அதாவது யப்பானின வெளியுறுவுக் கொள்கை மிக வித்தியாசமானது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவைப்போலல்லாது அது நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது எனபதே இங்கே கவனிகக் வேண்டியது.

யப்பான் இரண்டாம் உலகப்போருடன் சர்வதேச சமூகத்தால் முற்றிலும் துண்டித்து விடப்படும் அபாயத்திலிருந்த நாடு. அதிலும் மேற்குலகம் யப்பானை அடியோடு 'படுத்;திவிடும் ' நோக்கில் அதனைத் தனிமைப்படுத்த முயற்சித்;தது.

யப்பான் ஒரு ஆசிய நாடாக இருந்ததும் இதற்கான காரணங்களில் ஒன்று. தவிர யப்பான் மூர்கத்தனமான உழைப்பிலும் நுட்பத்திறனிலும் வளர்ச்சி பெற்ற தன்மை. அதிலும் ஆசிய நாடுகளிலேயே யப்பானில்தான் இந்த இயல்பு முதன்முதலிலும் அதிகமாகவும் இருந்தது.

எனவே இந்தமாதிரியான காரணங்களால் மேற்கு யப்பானை அடக்கி வைப்பதற்காக அதைத்தனிமைப்படுத்த முயற்சித்தது. ஆனால் அதற்குள்ளால், அந்தத்தடைகள் நெருக்குவாரங்களுக்குள்ளால் எல்லாம் யப்பான் நிமிர்ந்து விட்டது.

உண்மையில் அமெரிக்கா யப்பானுக்கு இழைத்த அநீதி என்றென்றைக்கும் மாறாதது மட்டுமல்ல, மறக்க முடியாததும் கூட. ஆனால் அதை வைத்துக் கொண்டு பகைமை பாராட்டும் அரசியலை யப்பான் தவிர்த்து விட்டது. அதன்மூலம் அது தொடரும் நெருக்க்டிகளைத் தவிர்த்ததுடன் புதிய வளர்ச்சியை நோக்கியும் போய்விட்டது. யாராலும் புறக்கணிக்கமுடியாத ஒரு ஸ்தானத்தையும் பெற்றிருக்கிறது.

இப்போது சர்வNதுச ரீதியில் சந்தையைப் பகிர்வதுடன் தீர்மானமெடுக்கும் தரப்புகளில் முக்கியமன நாடுகளில் ஒன்றாகவும் அது தன்னை நிலை நிறுததியிருக்கிறது. இத்தகைய உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் யப்பானின் உளவியலும் உழைப்புத்திறனும் சிந்தனையுமே அடிப்படை.

யப்பானியர்களின் உழைப்பைப்பற்றி பொதுவாக எவரும் சிறப்பித்தே சொல்வார்கள். அந்த உழைப்புத்தான் அவர்களுடைய முதல் நம்பிக்கை.

எந்தச்சூழலிலும் தங்களின் உழைப்பின் மூலம் எந்தத்டைகளையும் தாம் கடந்து விடுவோம் என்ற மனோ பலம் அவர்களிடம் வலுவாகவுண்டு. அதேபோல அந்த உழைப்புக்கான பெறுமதியை வீணாக இழக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள்.

எனவே தங்களுடைடய உழைப்பின் பெறுமதியை இழக்காமல் அதை மேலும் அதிகரிக்ச் செய்யும் நோக்கிலான வெளியுறவுக் கொள்கையை அவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதையே அவர்கள் பின்பற்;றுகிறார்கள்.

இந்த வெளியுறவுக் கொள்கையில் அவர்கள் தங்களுக்கான வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது யப்பானின் முதன்மையிடம் குறித்தே அவர்கள் எப்போதும் இயங்குகிறார்கள்.

இதற்கு யப்பானின் வரலாற்றில் நிறைய அடையாளங்களுண்டு. ஆனால் அதைப்பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில்; பார்த்துக் கொள்வோம்;.

சீனா எனற பெரிய நாட:டுக்கு அருகில் கடலால் சூழப்பட்ட தீவுககூட்டமாக இருந்த யப்பான் சீனாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் பல தடவை வைத்திருந்தது இதற்கொரு நல்ல உதாரணம்.

இந்தப்பின்னணியில் இப்போது யப்பான் இலங்கை விவகரத்தில் செயற்படுகிற விதத்தைப் பார்க்கலாம்.

யப்பான் இலங்கையின் அரசியல் விவகாரங்களில் நேரடியாக தலையிடாத ஒரு போக்கைக் கடைப்பிடித்து வந்தது. ஆனால் இது வெளியே தெரிந்த ஒரு Nபுhக்கு மட்டுமே. இதற்குப்பின்னே மறைமுகமாக யப்பானின் தொடர்புகளும்; உதவிகளும் இலங்கை அரசியலிலும் இனப்பிரச்pனையிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

யப்பானின் வர்த்தகத் தொடர்புகளும் நிதியுதவிகளும் சிறிலங்கா அரசை எப்போதும் பலப்படுத்தியே வந்துள்ள்து. அதிலும் ஜே. ஆரின் காலத்தில் யப்பான் சிறிலங்காவுக்குச் செய்த உதவிகளும் சிறிலங்காவுடன் கொண்டிருந்த வர்த்தக உறவுகளும் சிறிலங்காவை மிகப்பலமாக்கின.

இது இனப்பிரச்சினையில் பாதிப்புகளை அடைய விடாமல் சிறிலங்காவைக் காப்பாற்றியது. அNதுவேளை போரினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை யப்பானின் இந்த உதவி மறுவளத்தால் ஈடுசெய்தது.

இதில் யப்பான் இலங்கையின் இனப்பிரச்சினையில் பாதகமான நிலைப்பாட்டை எடுததாக முழதாகச்சொல்ல முடியாது. அதாவது யப்பான் தமிழர்களுக்குப் பாதகமான நிலைப்பாட்டை எடுத்ததாக அர்த்தமில்லை. ஆனால் யப்பானின் பொருளாதார உறவுகளையும் உதவிகளையும் திரட்டி சிறிலங்கா தமிழர்களுக் கெதிராகவே பிரயோகித்தது.

யப்பானுக்குத் தேவை எப்போதும் சந்தையே. அதிலும் இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதார வளர்ச்சி யப்ப்hனுக்கு நேரடிச்சவாலான விசயம். இந்தியாவும் சீனாவும் யப்பானின் சந்தையை இப்போது அதிகமாகப் பங்கு போட்டு வருகின்றன.

பதினைந்து வருசத்துக்கு முதல் சிறிலங்காவில் யப்பான்தான் பொருளாதாரப் பிரயோகத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. ஆனால் அந்த நிலைமை பின்னர் இல்லை.

குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் சந்தையில்; அதிக செல்வாக்கை யப்பான் செலுத்தி வந்தது. இப்போது இந்தச் சந்தையை இலக்கு வைத்து சீனாவும் இந்தியாவும் தமது பொருளுற்பத்தியையும் சந்தையையும் விரிவாக்கம் செய்துள்ளன. இது இன்றைய நிலையிலும் எதிர்கால நோக்கிலும் யப்பானுக்கு நெருக்கடிகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துமு; காhரியங்கள்.

எனவேதான் யப்பான் புதிய 'றோலைப் பிளே' பண்ணத் தொடங்கியிருக்கிறது. இதன்படி அது இணைத்தலைமை நாடுகளுக்கூடாகவும் தனியாகவும் உதவி வழங்கும் தரப்பினருடன் இணைந்தும் இந்த விசயத்தைக் கையாளத் தொடங்கியுள்ளது.

மறுபக்கம் தன்னுடைய தேவைகளுக்காக இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்துக்கு அப்பாலும் அது செயறபடத்தீர்மானித்துள்ளது போலுள்ளது. இந்தமுறை இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்தை உள்ளடக்கிய கூட்டறிக்கையை சேர்ந்து விடுவதில் யப்பான் இணங்கவில்லை என்றும் சொல்லபபடுகிறது.

இலங்கையில் போரோ சமாதானமோ எதுவோ நடந்தாலெனன் நடக்காது விட்டாலென்ன தனது நலன்கள் நிறைவேறினால் போதும் என்று நினைக்கின்றது யப்பான்.

இதில் மகிந்த ஆட்சியென்றால் என்ன ரணில் ஆட்சியென்றால் என்ன என்ற கட்டத்துக்கும் அது வந்து விட்டது. அதாவது அது ரணில் ஆட்சியமைக்கும் வரையில் காத்திருக்குத் தயாரில்லை.

அதுதான் அகாஸியே சொல்லி விட்டாரே அமெரிக்கா செய்த பாதகத்தைவிடவும் தமக்குத் தேவையாக இருப்பது இன்றைய நலன்களே, எதிர்காலத்துக்கான பலத்தை சேகரிப்பதற்கான வளங்களே. அதுக்காக அவர்கள் எதையும் மறக்கவும் தயார், மன்னிக்கவும் தயார். யாரோடும் கூட்டுச்சேரவும் தயார். யாரைப் பகைக்கவும் தயார்.

இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்தில் விலகி நிற்கவும் அது துணிந்திருப்பதன் பின்னணியை இந்த வகையிலே புரிந்து கnhள்ளலாம்.

அதாவது இப்போது இலங்கை விவகாரத்தைப் பொறுத்தே இந்த நிலைப்பாடு. அகாஸி ஒரு விடாக்கண்டராக இந்த முதுமையிலும் ஓடித்திரிகிறார். அவர் எல்லாக்கதவுகளையும் திறக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தோடே இயங்கிக் கொண்டிருக்pறார்.

Wednesday, June 27, 2007

விடுதலை அரசியலின் உக்கிரம் மலர்ச்செல்வன் கவிதைகள்


வாழ்க்கையின் உத்தரவாதங்கள் தகர்ந்து போயிருக்கும் யதார்த்தவெளியில் தனித்தலையும் கவியின் மொழிதலாக மலர்ச்செல்வனின் கவிதைகள் பெருகியிருக்கன்றன. அதிரும் மனமும் நொருங்கும் சூழலும் சிதறடித்த மொழியைக் கூட்டியள்ளி மலர்ச்செல்வன் தன் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவிந்த உணர்வின் சிதைகளில் மூட்டப்பட்ட பெருந்தீயாய் கொழுந்து விடுகின்றன அவருடைய தனித்துத் திரிதல் கவிதைகள்.

வாழவிரும்பிய கணங்கள் எதிர்நிலையில் விபரீதங்கொண்டு இயங்குவதை
சகிக்க முடியாமல்தத்தளிக்கும் நிலை ஒரு புள்ளியில் உணரப்பட
இன்னொரு புள்ளியில் சகிப்பை மீறிய கோபம் மலர்ச்செல்வனுக்குள்
பொங்குகிறது. இது ஒரு நிலை. ஆனாலும் மலர்ச்செல்வனின்
கவிதைகளில் துயரத்தின் நிழலே படிந்திருக்கிறது.

துயரம்தான் மலர்ச்செல்வன் கவிதைகளின் மையம். துயரம் வனைகின்ற மொழியை தன்னொழுங்கில் அமைப்பதன்முலம் கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என மூன்றின்மீதும் கேள்விகளை எழுப்புகிறார் மலர்ச்செல்வன். மனிதவாழ்க்கையில் இது காலவரையும் கண்டறியப்பட்ட உண்மைகளென்ன? மனிதமனம் தொகுத்துக் கொண்டிருக்கும் அனுபவத்தின் நிலையென்ன? எது அதனைப்புறந்தள்ளுவது? வாழ்வின்மீது எது நிழல் விழுத்துவது? எப்போதும் ஒவ்வொருவிதமாகத் திரட்சிபெற்று மேலெழும் அரசியலா? அந்த அரசியலின் வௌ;வேறு முகங்களா?

உண்மையில் அரசியல் எப்போதும் ஏதோவொருவகையில் அனுபவத்துக்கு எதிராகத்தான் இயங்குகிறதா? அப்படி அது இயங்குகின்றபடியால்தானோ எப்போதும் அனுபவத்துக்கு முரணாகவும் அதைப்பொருட்படுத்தாமலும் அது வாழ்வைச்சிதைக்கும் வாளைத்தன் உறையில் வைத்திருக்கிறது?
அது வாழமுடியாத்துயரம் அறிவின் யுகமாகிய இன்று கூட தீராப்பழி பெருத்து வாழ்வைச் சிதைக்கிறது. எதனெதன் பேராலோவெல்லாம் ஏதொரு சம்பந்தமுமில்லாமல் பழிவாங்கப்படுகிறார்கள் சனங்கள். தீராத்துயரின் வலியின் குருதித்தெறிக்கைகள் தனித்திருந்தலின் கவிதைகளில் படிந்துள்ளன.

இப்போது நிகழ்காலத்தில் சிதையும் வாழ்வுபற்றிய மனித மனத்தின் மதிப்பீடென்;ன? நிகழ்காலம் வரையான அறவியலும் அறிவியலும் வாழ்வின் மீது நிகழ்த்துவதென்ன? வாழ்வின்மீது துன்பத்தின் நிழல் விசமாகக்கவிகையில் இந்த அறவியலும் அறிவியலும் என்னவாகின்றன? உண்மையில் அதிகாரத்துக்கிடையிலான போட்டியும் அது பெருக்கும் நுட்பங்களும் கண்டறிந்த எல்லா அறிவியலையும் அறவியலையும் துவம்சமாக்கி விடுகின்றன. அறிவியலும் அறவியலும் துவம்சமாகும்போது வாழ்க்கை சிதைகிறது. இங்கே துன்பத்தின் ஊற்று பெருக்கெடுத்து வாழ்வை மூழ்கடிக்கிறது. இதுவே தொடரும் யதார்த்தம்.

இதற்கெதிராகத் தொடர்;ந்தும்;;; இன்னொரு முனையில் மனிதமனம் இயங்குகிறது. அது அதிகாரத்துக்கு எதிரானது. ஆனால் அதேவேளை அது அதிகாரத்தைப் பகிரக் கோருகிறது. அதிகாரத்தைப்பகிர்வதற்கான மனப்பாங்கு, இணக்கம் தயார் என்பன இல்லாதபோது அதைப்பகிர்வதற்கான வன்முறை வெடிக்கிறது. இந்த வன்முறையின் எல்லையை அது வெடித்தபின் யாராலும் நிர்;ணயம் செய்யமுடியாது. அது கட்டற்றது. அது எல்லாப் பருவங்களையும் ஊடுருவி எல்லாத்திசைகளையும் சிதைத்து விடுவது. இங்கேயும் வாழ்வின் மீது துன்பத்தின் நிழல் கருந்திரையாகப்படர்கிறது. எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை தன்வழியே துளிர்க்கிறது.

எல்லாக்காலத்தையும் சிதைக்கும் அதிகாரத்தின்முன் அறமும் தோற்கிறது. அறிவியலும் தோற்கிறது. அப்படியாயின் உலகம் இதுவரையிலும் தன்னனுபவத்திலும் தன்னறிவிலும் கண்டதென்ன? அதிகாரத்துக்கான போட்டியென்பது அறிவுக்கும் அறிவின்மைக்கும் இடையிலான போட்டியா? கடவுளே இதன்முடிவெது? இதற்கு முடிவேயில்லையா? ஒரு அதிகாரத்துக்கு எதிரான மாற்று அதிகாரமென்பது இன்னொரு அதிகாரமாக மாறிவிடும் விந்தை இன்னும் மாறமலிருக்கிறதே. மாற்று அதிகாரமென்பது இன்னொரு அதிகாரத்தின் தொடக்கமா? என்று மலர்ச்செல்வன் அச்சத்தோடு உணர்கிறார். இந்த உணருகை அவரை எழுதத்தூண்டுகிறது. அதொரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் மொழிதல்தான் மலர்ச்செல்வனின் தனித்துத்திரிதல் கவிதைகள்.

மலர்ச்செல்வன் வாழ்கின்ற சூழலும் காலமும் அவருடைய கவிதைகளை வனைகின்றன. அதற்குரிய மொழியை வழங்குவதும் காலமும் சூழலுமே. ஒரு கவிஞன் தன் கவிதையைக் காலத்திலும் சூழலிலுமே கண்டெடுக்கிறான். அது கவிதையின் வடிவமாயினும் சரி அதன் மொழியாயினும் சரி அதன் பொருளாயினும் சரி காலமும் சூழலும் விரிக்கின்ற பரப்பிலே அவன் அதை எடுத்துக்கொள்கிறான். மலர்ச்செல்வன் தன்னுடைய காலத்திலும் தன்னுடைய சூழலிலும் கண்டெடுத்து உருவாக்கியளித்துள்ள இந்தக்கவிதைகள் நமக்கு முன்னுள்ள ஒருவகைச் சவாலே. நம் காலத்தின் நிலையை அப்படியே தொகுத்து நம்முன்னே வைக்கிறார் மலர்ச்செல்வன். வைத்துவிட்டு அவர் நமது முகத்தைப் பார்த்தபடியிருக்கிறார். என்ன பதில் நம்மிடமிருந்து வருமென்ற ஆவலுடன்.

சிதையும் நம் காலத்தில் நமது பாத்திரமென்ன? நமது அனுபவமும் அறிவும் என்ன செய்யப்போகின்றன? காலத்துயராய் இது இன்னும் எத்தனை யுகத்துக்கு நீளப்போகிறது.அதிகாரம் குவியப் போகிறதா? அதிகாரம் என்பது அதன் மெய்யான அர்த்தத்தில் துயரந்தானா?அது துயரத்தைப் பெருக்குகிறதா? அதிகாரத்துக்கிடையிலான போட்டியில் நிகழ்வதென்ன? வாழ்வின் சிதைவில் துளிர்த்துப்பெருகும் துயருறுவலிதானா
துயரத்தை நிலைநிறுத்தத்தான் இத்தனை போட்டிகளும்? அப்படியெனில் வெற்றியென்பது என்ன? துயரத்தை கைப்பற்றுவதிலா?

மலர்ச்செல்வன் இவற்றிலிருந்து விலகிச்செல்ல முனைகின்றார். ஆனால் அவரால் அப்படி விலகிச்செல்லவும் முடியவில்லை. சூழல் அவரை நிர்ப்பந்திக்கிறது. காலம் அவரை அழுத்துகிறது. இந்த நிலையில் இணைந்தும் விலகியும் மலர்ச்செல்வன் பயணிக்கிறார். அது ஒரு வகைத்தனிப்பயணம்.

மலர்ச்செல்வன் தனித்துத்திரிகிறார். தனித்துத்ததிரிய முடியாக்காலத்தில் அவர் ஒரு சாகசக்காரனைப்போல தனித்திருக்கிறார். இந்தத் தனியன் தனமே மலர்ச்செல்வனின் பலம். அதொருவகை வீரமே.


மலர்ச்செல்வன் மிக எளிதாய் ஆனால் வலியதாய் தன் உணர்வைப்பகிர்வதன் மூலம் தன்னுள் எரிகின்ற சுடரை மற்றவர்க்கும் பற்றவைத்து விடுகிறார். எரிகின்ற காலத்தையும் சூழலையும் இணைப்பதன் மூலம் இந்த வித்தையை அவர் எளிதாக நிகழ்த்தி விடுகிறார்.


ஈழவாழ்வின் கதிகலங்கிய நாட்களின் பதிவுகளாக இந்தத் தொகுதிக் கவிதைகள் பலவுண்டு. அவற்றிற்பல ஏற்கனவேயுள்ள ஈழக்கவிதைகளின் தொடர்ச்சியே. இன்னும் சொல்லப்போனால் தென் ஈழக்கவிதைகளின் தொடர்ச்சி இவை எனலாம். அதிலும் சோலைக்கிளிக்குப் பின்னான சுவடுகள்.

சோலைக்கிளிக்குப்பிறகு இந்தத்தொடர்ச்சியில் ஆத்மா றஸ்மி ஓட்டமாவடி அரபாத் அலறி அனார் என ஒரு வளர்நிலையுண்டு.

தென்னீழ சமகால வாழ்க்கை அசாதாரணங்கள் கொண்டது. அதன்வழி அதன் கனவும் நிசமும் அபத்தத்தின் ஈரம் ஊறியது. குருதியிலிருந்து தீ மூண்டெரியுமு; யதார்த்தம் அது. தீயினுள்ளிருந்து குருதி பீறிட்டோடும் வரலாற்றையுடையது. இதை மலர்ச்செல்வன் உணர்ந்துள்ள முறைமை அல்லது விதமே இக்கவிதைகள்.
அரசியல் உணர்வு அல்லது அரசியல் இடையீறு கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழ்க்கவிதையைப்பாதித்து வருகிறது. ஈழத்தில் அரசியலின் நிழலற்று எந்தக்கவிஞரும் தங்கள் கவிதைகளை எழுதியதில்லை நேரடியாகவேர் மறைமுகமாகவோ. விலக்காக சில கவிதைகள் வாழ்வின் ஏனைய திசைகளிலுக்கு நகர்ந்திருக்கலாம். அந்தளவுக்கு அரசியல் ஈழவாழ்வில் செல்வாக்குப்பெற்றுள்ளது. அது உயிருடன் விளையாடுகிறது. உயிர்வாழ்வதற்கு அதைச்சார்ந்தும் விலகியுமிருக்கவேண்டும் என்ற தத்தளிப்பை உருவாக்கியுள்ளது. மலர்செல்வனுக்கு இந்தஅரசியலின் செல்வாக்கு அதிகமுண்டு.

முன்னகரும் வகையான வழிகளைத் தொடும் பயணமாக மலர்செல்வன் தன் அரசியல் தேர்வைச் செய்கின்றர் மூன்று காலங்களாக வகைசெய்யப்பட்டிருக்கும் இந்தத்தொகுதியின் கவிதைகளில் தொடர் அடக்குமுறை என்ற இராணுவப்பயங்கரவாதத்துக்கு எதிரான வலுப்பாதைகள் நிகழ்த்தப்படுகின்றன. மிகயதார்த்தமாக தான்வாழ்கின்ற மட்டக்களப்பு நிலப்பகுதியின் ஆன்மாவின் நடனத்தை நிகழ்த்தி அந்த யதார்த்தத்துக்கு நம்மை அழைத்துச்செல்கிறார் எளியசொற்களின் மூலம் உருவாக்கப்படுகிற-அல்லது உருவாகின்ற நிகழ்காலத்தின் தோற்றத்தையும் அதன் உயிரையும் தருவதற்கு மலர்செல்வனிடம் சொற்கள் உருவாகிவிட்டன.

விடுதலைஅரசியலின் மீதுள்ள பற்று அல்லது நாட்டம் இந்தத் தொகுதிகவிதைகளில் முன்னெழுந்தவாறு நிற்கின்றன அதில் அவருக்குள்ள நம்பிக்கைகள் சிதறல்கள் முனைப்புகள் தெளிவுகள் தெளிவின்மைகள் சரிவுகள் விலகல்கள் கொந்தளிப்புகள் அடங்குதல்கள் குற்றவுணர்;வுகள் இயலாமைகள் எல்லாம் சாட்சிப்படுத்தப்படுகின்றன. உள்ளுக்குள்ளே ஊடுருவிப்பதிவாகியிருக்கும் கொந்தளிப்பின் நடனம் நிழலாகவும் நிஐமாகவும் தெரிகின்றது. சகலத்தையும் காட்சிப்புலமாக விரிக்கும் உத்தியை பின்பற்றுவதன் மூலம் எல்லாவற்றுக்கும் ஒருசுவடு நிலையை ஆதாரநிலையை மலர்செல்வன் உருவாக்குகிறார். அழிவின் சுவடுகளும் வலியும் அதன் கருநிழலும் காலத்தால் கலைந்து போய்விட்டாலும் மலர்செல்வனும் ஈழக்கவிதைகளும் ஆதாரப்படுத்துவது இந்தச் சுவடுகளையே இதுகாலத்தால் நகர்த்த முடியாத காயங்களாக இருப்பதற்கு இவற்றுக்குள் துடிக்கும் ஆன்மாவே பலம்.


எண்பதுக்குப்பின்னான ஈழக்கவிதையின் இன்னொரு சுவடாக வரும் மலர்ச்செல்வன் அதிலிருந்து சில இடங்களில் விலகுகிறார். அந்த விலகலே மலர்ச்செல்வனின் அடையாளம். அதுவே தமிழ்க்கவிதையில் எதிர்பார்க்கப்படுவது.

ஒரு மொழிக்குப் புது முகங்களே அவசியமானது. சாயல்கள் இரண்டாம் பட்சம். அல்லது நாலாம் பட்சம். சாயல்களுடைய கவிதையும் அப்படியே.

கடந்த காலத்தின் நினைவுகளில் வீழ்ந்து சுழலும்போது தவிர்க்க முடியாமல் சாயலோடான மொழிக்கும் அதன் வெக்கை தகிக்கும் நிழலுக்கும் சென்று விடுகிறார் மலர்ச்செல்வன். இது பயணமல்ல. பயணத்துக்கு முரணானது.

அவர் இதிலிருந்து மீள வேண்டும். மலர்ச்செல்வன் தன்னடையாளங்களோடு பல இடங்களில் செய்யும் பயணம் வேறானது. அதுவே தொடர வேண்டும்.

மலர்ச்செல்வனுக்குள் நிகழ்ந்தபடியிருக்கும் உணருகை புதிய பயணத்தின் சுவட்டுக்குரியது. அது மேலும் திசைகளைத் திறக்கும்.

Monday, June 25, 2007

மகிந்தவின் போர்ப்பொறி

முழு ஈழத்தமிழரையும் இயங்க முடியாத ஒரு நிலைக்குத்தள்ளியிருக்கிறார் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. தமிழர்களைப் பொறுத்தவரையில் ராஜபக்ஸ ஒரு டேஞ்சரான பேர்வழி என்று ஒரு நண்பர் சொல்வது மிகச்சரியாக இருக்கிறது.
இலங்கைத்தீவில் எங்கேயிருந்தாலும் சுயமாகச் சிந்திக்கமுடியாத அளவுக்கு மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கெதிராக உள்ளது. எதையும் திட்டமிட முடியாதவாறும் மகிந்தவின் போர்ப்பொறி தமிழருக்கு முன்னால் விரிக்கப்பட்டிருக்கிறது.
எல்லா இடங்களிலும் வௌ;வேறு விதமான ஒப்பிரேஸன்களை தமிழருக்கெதிராக மகிந்தவின் அரசு செய்து வருகிறது. எல்லாமே தமிழ்மக்களை முடக்கும் நோக்pலானவை. அத்துடன் அவர்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் வகையிலுமானவை.
இவையெல்லாவற்றுக்கும் அரசாங்கம் சொல்கிற பதில், அல்லது நியாயம் இதெல்லாம் புலிகளுக்கெதிரான போர் என்பதே. அரசாங்கம் அதை இன்னும் வியாக்கியானப்படுத்தி பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்றும் சொல்கிறது.
இப்படிச் சொல்வதன்மூலம் தனது பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்துவதுடன் பயங்கரவாதத்துககு எதிரான போரை சிறிலங்கா செய்துவருவதாகவும் அதற்குச் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவையென்றும் ஒரு தோற்றப்பாட்டை அது காட்ட முனைகிறது.



ஆனால், சிறிலங்காவில் அரச பயங்கரவாதமே கடந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரச பயங்கரவாதமே இலங்கைத்தீவிலும் தென்னாசியப்பிராந்தியத்திலும் பெரும் நெருக்கடிச்சூழலையும் உருவாக்கியுள்ளது. இதனைச் சர்வதேச சமூகமும் நன்கறியும்.
இலங்கையின் இனப்பிரச்சினை என்பதே அரச பயஙகரவாதத்தின் இன்னொரு வடிவம்தான். அது அரசியல் ரீதியாகவும் தமிழர்களை ஒடுக்குகிறது. இராணுவரீதியாகவும் ஒடுக்குகிறது. பிராந்திய நாடுகளையும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது.
இந்த ஒடுக்குமுறைக்கு பல சந்தர்ப்பங்களிலும் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச சமூகமும் ஆதரவை வழங்கி வந்திருக்கிறது. சர்வதேச சமூகம் தன்னுடைய நலன்களுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்குள் இந்தப்பயங்கரவாதத்தை அது இன்னொரு விதத்தில் வளர்த்தும் வந்திருக்கிறது.
ஆனால் அரசு என்ற அடிப்படையில் இந்தப்பயங்கரவாதம் மறைக்கப்பட்டும் காப்பாற்றப்பட்டும் வந்துள்ளது. அப்படி இது காப்பாற்றப்பட்டு வந்தமையே இப்போது மகிந்த அரசின் உசசமான மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாகியுமிருக்கிறது. இதை இன்னும் மென்போக்காக மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில, என்ற அளவில் இப்போதும் சர்வதேச சமூகம் காப்பாற்றலாம் அல்லது மறைக்கலாம். ஆனால் அது இன்னும் இன்னும் பயங்கரமானதாகவும் கட்டுப்படுத்த முடியாததாகவும் வளர்ந்தே செல்லும்.



ஏனெனில் இலங்கையின் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் அது வரவர மேலும் மேலும் சிக்கலாகியே செல்கிறது. அந்த கூர்மைப்பட்ட வளர்ச்சியின் இப்போதைய நிலையே மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரலாகும். மகிந்தவின் இந்த நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதே இப்போது சர்வதேச சமூகத்தின் முன்னாலுள்ள பிரதான கேள்வியாகும். மகிந்தவின் நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே சர்வதேச சமூகத்துக்கு உவப்பில்லாமலேயிருந்தது. அவர் ஆட்சிக்கு வரும்போதே முன்வைத்திருந்த 'மகிந்த சிந்தனை ' என்ற கொள்கைப்பிரகடனம் அப்போதே சர்வ தேச சமூகத்துக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கவில்லை. அந்தப்பிரகடனத்தில் மேற்கின் விருப்பங்களுக்கு அதிக இடமிருக்க்வில்லை எனபது இங்கே கவனிக்கத்தககது. அதிலும் தொடருகின்ற இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு யோசனைகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்வில்லை. அப்போது மேற்கின் ஆதரவோடு நோர்வேயின் அனுசரணையில் சமாதானப் பேச்சுவாhர்த்தை நடந்து கொண்டிருந்தது. சமாதானப் பேசசுவார்த்தைக்கு முற்றிலும் நேர்மாறான கருத்தையுடைய தரப்பாக மகிந்தவின் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. இது ஒரு மோசமான சமிக்ஞை என்று அப்போதே பல நோக்கர்களும் சுட்டிக்காட்டியிருந்தாhர்கள். அந்தச் சமிக்ஞை இப்போது எதிர் நிலையில் பிரகாசமாயிருக்கிறது.



இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரலை சர்வதேசம் தொடர்ந்தும் அனுமதிப்பதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் அந்த நிகழ்ச்சி நிரலை தமிழர் தரப்பு அடுத்து எவ்வாறு கையாளப் போகிறது என்பதும் முக்கியமானது.



உண்மையில் மகிந்தவின் நிகழ்ச்சிநிரல் தமிழர்களுக்கும் இந்தியா, ஜப்பான் உள்ளடங்கிய மேற்குலகத்துக்கும் எதிரானது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அது இந்தத்தரப்புக்கு எதிர் விளைவுகளை உருவாக்கும் ஒரு பாதகமான நிகழ்ச்சி நிரலாகும்.
அடுத்த கட்டமாக எந்த அசைவுகளையும் ஏற்படுத்த முடியாத படிக்கு அந்த நிகழ்ச்சி நிரல் இறுக்கமானது. அதனால்தான் அது இத்தனை சிக்கல்களுக்குள்ளாகியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையை விழுங்கிய நிழ்ச்சி நிரலாகவும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழவை முடக்கியதாகவும் சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தததாகவும் இந்தியா நெருங்கவும் முடியாது தூரப்போகவும் முடியாது தவிக்கும் படியாகவும் என பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலாக அது இருக்கிறது. மேற்கு இப்போது பலவிதமான மறைமுக அழுத்தங்களைக் கொடுக்கின்ற போதும் மகிந்த எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை என்ற நிலையை அவர் தன்னுடைய நிகழ்ச்p நிரலுக்குள்ளால் உருவாக்கியுள்ளார். அதாவது தன்னுடைய திட்டத்தின் ஒரு பாதியை சீனா மற்றும் அதனோடிணைந்த வளைய நாடுகளுடன் தொடர்பு படுத்தி வைத்திருக்கிறார். இதை அவர் மறைமுக வெளிப்படையாகவே கையாள்கிறார். பட்டும் படாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்று சொல்வோமே அதேமாதிரிக் கையாள்கிறார்.



இது மேற்குத்லைமையிலான சர்வதேச சமூகத்துக்கு ஒரு மிகப்பெரிய நெருகக்டிக்குரிய விசயமாகவுள்ளது. இதை இந்த அணியினர் இறுக்கிப்பிடிக்வும் முடியாது தளர்த்தி விடவும் முடியாத ஒரு நிiலையில் கையாள முயற்ச்சிக்கின்றனர். இதில் ஆகப்பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்டிருப்பது இந்தியாதான். இந்தியா சிறிலங்காவைக்கட்டுப்படுத்தவும் முடியாமல் அதற்கு ஆதரவளிக்கவும் முடியாமல திணறுகிறது.அது வலிய உதவிககளைச் செய்கிறேன் என்று சொன்னாலும் அதனை சிங்களவர்கள் இப்போது ஏற்கத்தயாரி;லலாதது போலக்காட்டுகிறார்கள். ஏன் இந்தியாவின் ஆயத உதவியையே அவர்கள் பகிரங்கமாகவே மறுத்துமிருக்கிறார்கள்.



ஆனால் இந்தியா இதையெல்லாம் புரிந்து கொள்ளாததுபோல தொடர்ந்தும் தன்னுடைய ஆயத உதவிகள் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் என்று சொல்லிக்கொண்டேயிருக்pறது. இந்தியாவின் ஆயத உதவி அறிவப்புகளை, அதிலும் வலிந்த ஆயத உதவிகளை சிறிலங்காவின் பொறுப்பான அமைச்சர்களும் அதிகாரிகளும் படுகேவலமான முறையில் கொச்சைப்படுத்தி நிராகரித்தாரர்கள்.
இந்தியா கொட்டும் பழைய குப்பைகளை வாங்குவதற்கு சிறிலங்கா தயாரில்லை என்றுகூடச் செசான்னாரர்கள். ஆனால் இந்தியா மிகப்பிடிவாதமாகவும் மிகவும் தீவிரமாகவும் சிறிலங்காவுக்கு உதவியே தீருவேன் என்ற முடிவு செய்திருக்கிறது. அதிலும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலொசகர் நாரயணன் சொன்னதை சிறிலங்கா பொருட்படுத்தாமல் விட்;டதன் பின்னரும் இந்திய்ப பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி மறபடியும் இந்திய உதவிகள் சிறிலங்காவுக்கு கிடைக்கும் என்று கெஞ்சாத குறையாக, அழாக்குறையாகச் சொல்லியிருக்கிறார்.

அதுவும் சிறிலங்கா அரசாங்கம் இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்ப்பதற்குப்பதிலாக இராணுவரீதியாக போரையே செய்து கொண்டிருக்கிறது என்ற நிலையிலும் அதற்கு இப்படி இராணுவ உதவிகள் தாராளமாகக்கிடைக்கின்றன.ஒருபக்கம் மனித உரிமை மீறல்கள் பற்றிய கண்டனங்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டிருக்கிறNபுhதும் இந்த உதவிகளை சம்மந்தப்பட்ட தரப்பினர் வழங்கிவருவது கவனத்திற்குரியது. இதற்கிடையில் இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கிடையில் சிறிலங்கா சீனாவிடம் ஒரு தொகுதி ஆயதங்களை வாங்கியிருப்பதாகவும் தெரிகிறது. சீனாவிடம் சிறிலங்கா ஆயத உதவிகளைப் பெறக்கூடாது எனறுதான் இந்தியா முந்திமுயன்றபோதும் அதற்கு சிறிலங்கா மசிந்து கொடுக்க்வில்லை. அது சீனாவிடம் நெருங்க நெருங்க அதற்குப்பதிலாக சிறிலங்காவுக்கு இந்தியாவும் ஜப்பானும் இன்னும் மேற்குலகமும் போட்டிபோட்டுக்கொண்டு தாராளாக உதவவருகிpன்றன.



மகிநத இப்படி சகல தரபபினரிடமிருந்தும் உதவியைப் பெறக்கூடியதொரு பொறியமைப்புக் கொண்ட ராஜதந்திரத்;தை கையாள்கிறார். இது மகிந்த ராஜபக்ஸவுக்கு முன்னர் திருமதி சந்திரிகா குமாரதுங்க கையாண்ட ராஜதந்திர அணுகுமுறையாகும். சிங்களவர்கள் இப்போதுள்ள ஒற்றை உலக ஒழுங்கையும் அதற்குள் தென்னாசிய, தென்கிழக்காசியப்பிராந்திய அரசியலையும் நன்றாகப்புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று ஒரு அவதானி சொன்னார். அதாவது அவர்கள் இப்போது இநத நெருக்கடிகளைக்கடப்பதற்காகவும் சிறிலங்காவை எப்போதும் சர்வதேச அரங்கில் ஒரு முக்கிய புள்ளியாக வைத்திருக்கவும் தங்களுடைய ராஜதந்திரத்தை வடிவமைததிருக்கிறார்கள். சிங்கள ராஜதந்திரம் கடந்த முப்பதாண்டுகளில் தென்னாசியப்பிராந்தியத்தில் பெருந்துலக்கமாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறாரர். தவிர சிங்கள ராஜதந்திரத்தை சரியாக விளங்கிக் கொள்வதாயின் அது இந்திய ராஜதந்திரத்தை விடவும் சிறப்பானதாகவுமே இருப்பதாகவும் படுகிறது என்றுமவர் மேலும் சொல்கிறார். இதுபற்றிப்பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். சிங்களவர்களின் இந்த ராஜதந்திரம் என்பது அவர்களுடைய வரலாற்றுத் தொடர்ச்சியை காட்டுவதற்கு அவர்களிடமுள்ள மகாவம்ச ஆக்கத்தைப்போலவே தனித்தன்மை கொண்டதாக உள்ளது. அதாவது கூட்டு எண்ணத்தின் விளைவாக அதை அவர்கள் திரட்டிக்கொள்கிறார்கள்.



மகிந்தவைப்பலப்படுத்துவதும் இந்தக்கூட்டு எண்ணத்திரட்சிதான். இது ஒரு பக்கம் தமிழ் மக்களுக்கெதிரான மனப்போக்குடையது. அதேNவுளையில் அது இந்திய எதிர்ப்பையும் அடிப்படையாகக்கொண்டது. ஆனால் இத்தகைய விரோதப் போக்குடைய சிறிலங்காவின் எண்ணத்திரட்சிக்கு இன்னும் இந்தியத்தரப்pல் வலுவான ஒரு மறுதீர்மானம் அல்லது மறு சிந்தனை உருவாகவில்லை என்பது கவனத்திற்கும் வருத்தத்துக்குமுரியது. எப்படியோ மகிந்தவின் நிகழ்ச்சி நிரலை சர்வதேச சமூகம் தொடர்ந்து அனுசரிக்க முடியாத ஒரு நிலைக்கு வந்துவிட்டது. எனவே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது முக்கியமாகியுள்ளது.



அத்துடன் தமிழர் தரப்பும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலை மாற்றி புதிய சூழ்நிலையொன்றை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழர் தரப்புக்கு இப்போது இரண்டு பிரதான அணுகுமுறைகளிருக்கின்றன. ஒன்று போரை போரினால் எதிர்கொள்வது. இப்போது அதை நோக்கியே கள நிலவரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப்போரென்;பது சாதாரணமாக நடந்து விடப்போவதில்லை. அது பெரும் மாற்றங்களுக்கும் முடிவுகளுக்குமானது. எனவே அதறகேறற மாதிரியே அதன் விளைவுகளும் மிகப்பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பாhர்க்கப்படுகிறது. பெரும் உயிரிழப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் போராகவே அது இருக்கும். மற்றது போருக்கெதிராக சிறிலங்காவை மடக்குக்கூடிய மாதிரி ராஜதந்திரப் பொறியை வைப்பது.



அந்த அணுகுமுறை சர்வதேச சமூகம் தமிழர் தரப்பை நோக்கி நெருங்கக்கூடியமாதிரி அமையும் போது தமிழர் தரப்பு பல அனுகூலங்களை பெறவாய்ப்பிருக்கிறது. இப்போது சர்வதேச சமூகம் போருக்கெதிரான ஒரு நிலைப்பாட்டை விரும்புகிறது. இந்த விருப்பத்தை தமிழர்கள் தமக்குச்சாதகமாக கையாள்வதன் மூலம் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலை சிதைக்க முடியும்.

நிலவரம்

இலங்கை இனப்பிரச்சினை இப்போது சகலருடைய கட்டுப்பாட்டையும்மீறி விபரீத கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது அது பெரும் போரொன்றின் விளிம்புக்கு வந்து விட்டது.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேவழியாக போரைத்தான் பிரச்சினையுடன் சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பும் தேர்ந்திருக்கின்றன என்று மேற்குலகின் ராஜதந்திரி ஒருவர் கவலையோடு சொன்னார்.
ஆனால் இந்தப் போரை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. அது தொடர்ந்து சமாதானத்தையே வலியுறுத்தி வருகிறது. போரில் ஈடுபட்;டுள்ள சம்மந்தப்பட்ட தரப்புகளான விடுதலைப்புலிகளையும் சிறிலங்கா அரசாங்கத்தையும் சமாதானத்தை நோக்கித்திரும்பும்படி தொடர்ந்து அது வலியுறுத்தி வருகின்றது.

இப்போது இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் போதும் இந்த நிலைப்பாடு மீண்டும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போர் நிறுத்தத்தை பின்பற்றுமாறு இணைத்தலைமை நாடுகள் கேட்டுள்ளபோதும் அதனை ஏற்றுக் கொள்ள அரசாங்கமும் புலிகளும் சம்மதம் தெரிக்கக்கூடிய நிலையில் இலலையென்று தெரிகிறது. ஆனாலும் மேற்கு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றுவதாக இல்லை.

அத்துடன் இப்போது மேற்குலகம் சம்மந்தப்பட்ட தரப்புகளை போரை நோக்கிச் செல்லாதிருக்கும் வகையில் அவற்றைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மெல்ல இறங்கியுள்ளது.

இதன்படி மனித உரிமை மீறல் விவகாரத்தை வைத்து சிறிலங்கா அரசாங்கத்தை கட்டுப்படுததும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் எலல்hத்திசைகளிலிருந்தும் மனித உரிமைகள் விவகாரத்தைக் கண்காணிக்கும் கண்களை சிறிலங்காவை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.



இறைமையுள்ள அரசு என்ற வகையில் முதற்கட்டமாகச் செய்யக்கூடிய அழுத்தத்தையே இப்போது மேற்குலகம் சிறிலங்காவின் மீது பிரயோகித்திருக்கிறது.



மனித உரிமை மீறல்களை குற்றச்சாட்டாக வைத்து சிறிலங்காவுக்கான நிதிக்குறைப்பையும் அவை செய்வதற்குத் திட்டமிட்டிருக்கின்றன.



தவிர தமது முதலீடுகளை சிறிலங்காவில்; செய்வததையும் அவை இப்போது குறைத்திருக்கின்றன. தொடரும் போரினால் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லி முதலீட்டுக் குறைப்பை மேற்கு நாடுகள் செய்திருக்கின்றன. அத்துடன் தமது பிரஜைகள் சிறிலங்காவுக்குச் செல்வதையும் அவை மடடுப்படுத்தியுள்ளன.

இதேபோல விடுதலைப்புலிகளுக்கும் அவை மறைமுக நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.


வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளுக்காகச் செயற்படுவோரையும் ஆதரவழிப் போரையும் மட்டுப்படுத்தும் வகையில் பிரான்ஸிலும் லண்டனிலும் இடம்பெற்ற சில தமிpழரின் கைதுகள் இதனையே காட்டுகின்றன.


இப்படி நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலம் போரைத்தவிர்த்து சமாதானத்துக்கான வழிமுறைக்கு இரண்டு தரப்பினரையும் கொண்டு வரலாம் என்றும் அவை கருதுகின்றன.


இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் இன்னும் மேற்குலகம் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழவையும் புரிந்துணர்வு உடன்படிக்கையையும் நம்பிக்கைக்குரியதாக கருதிக் கொண்;டிருக்கிறது.

நடைமுறை அர்த்தத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையும் புரிந்துணர்வு உடன்படிக்கையும் செயலற்றிருந்தாலும் அது உத்தியோக பூர்வமாக இரண்டு தரப்பினராலும் இன்னும் மீறப்படவில்லை என்பது மேற்கைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகவேயிருக்கிறது.

அதாவது இந்த உடன்படிக்கையை உத்தியோக பூர்வமாக மீறக்கூடிய திராணி இன்னும் இரண்டு தரப்பினருக்கும் இல்லை என்று கொழும்பில் மேற்கு நாடொன்றின் ராஜதந்திரியொருவர் கூறியது இங்கே கவனத்திற்குரியது.


சர்வதேச அபிப்பிராயத்தை முழுதாக நிராகரிக்கக்கூடிய அகச்சூழல் சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு ஏற்படாத வரையில் தமது முயற்சிகளுக்கான இடம் இன்னும் பலமாக இருப்பதாகவே சரிவதேச சமூகம் கருதுகின்றது.

எனவே இவற்றை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு பேச்சுவாரத்தைச் சூழலை உருவாக்கி விடலாம் என்றும் அது வலுவாக நம்புகிறது.

ஆனால் கள யதார்த்தம் சமாதானத்துக்குச் சாதகமாக இல்லையென்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. அது முழதாக போருக்கே தயாராக இருப்பதாகவும் எப்போதும் பெரும் போரொன்று வெடிக்கக்கூடிய நிலையே காணப்படுவதாகவும் களத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் சொல்கின்றன.


கொழும்புச் செய்திகளும் வன்னி மற்றும் யாழ்ப்ப்hணச் செய்திகளும் இவற்றை உறுதிப்படுத்துகின்றன. முழு இலங்கைத்தீவிலும் நிலவுகின்ற போருக்கான தயாரப்படுத்தல்களும் போர் குறித்தான அச்ச நிலையும் இவற்றை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

ஆனால் உண்மை நிலையென்பது, இப்போது போரோ சமாதானமோ யாரும் நினைத்தமாதிரி இலகுவானதாக இலங்கையில் இல்லை என்பதுதான்.

சமாதானத்துக்கான முயற்சிகள் எவ்வளவு கடினமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு போர் செய்யும் நிலையும் கடுமையானதாகவேயிருக்கிறது.
இனிவரும் போர்க்களம் மிக முக்கியமானதொரு புள்ளியாகும். அதாவது இந்தக்களமே மையப்புள்ளி. சவால்கள் நிறைந்த பெரும் புள்ளி.
சிறிலங்காப் படைகளைப் பொறுத்தவரையில் வன்னியை நோக்கிப் பெரும் படையெடுப்பையும் போரையும் மேற்கொள்வதைத்தவிர வேறு தெரிவுகள் இப்போது அவற்றுக்கு இல்லை.
அதேபோல விடுதலைப்புலிகள் வன்னியிலிருந்து வெளியே படை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதாவது யாழ்ப்ப்hணம் மீதோ மணலாற்றின்மீதோ மன்னாரின் மீதோ தான் அவர்கள் அடுதத கட்டத்தாக்குதல்களை தொடுக்கலாம்.

இதன்படி வன்னியைச்சுற்றிய தடைகளை அகற்றுவதே புலிகளின் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கிறது. அப்ப்டித் தடைகளை அகற்றிக் கொண்டே இடுத்த கட்டத்துக்குப் போகமுடியும் என்றும் அவர்கள் சிந்திக்கக்கூடும்.

இவ்வாறு வன்னியைச்சுற்றிய தடைகளை அகற்றும் நடவடிக்கையில் இரண்டு அனுகூலஙகள் புலிகளுக்குண்டு. ஒன்று வன்னி மீPதான சிறிலங்கா அரசின் படையெடுப்பைத் தடுக்கலாம். அடுத்தது வன்னி மீதான இறுக்கத்தை உடைக்க்லாம். இப்போது இந்த இரண்டும் புலிகளுக்கு மிக அவசியமானவை.
இதேபோலவே சிறிலங்கா அரசுககும் பிரச்சினைகளுண்டு. அது இப்போது அவசரமாகப் புலிகளை கட்டுப்படுத்தா விட்டால் அவர்கள் வன்ன்pக்கு வெளியே படையினரின் பிடியிலுள்ள பகுதிகளின் மீது தாக்குதல்களை நடத்துவார்கள். அது அரசாங்கத்துக்கு பெரும் சி;ககலைக் கொடுக்கும்.

அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தையை முறித்ததே போர் மூலம் வெற்றியைத் தான் பெறமுடியும் என்ற நோக்கோடுதான். அப்படியிருக்கும்போது புலிகள் வன்னிக்கு வேளியே போரைத்தொடுத்து அரசாங்கத்தை தோற்கடித்தால் அது தன்னை நிலைப்படுத்த முடியாதென்று அஞ்சுகிறது.

அத்துடன் வன்னிப் போர்க்களம் அரசாங்கத்துக்கு சாதாரணமானதாகவோ சுலபமானதாகவோ இருக்கப் போhவதில்லை. மேலும் வன்னிமீது அரசாங்கம் போரைத்தீவிரப்படுத்தும் போது கொழும்பும் அதன் விளைவுகளை அதிகளவில் எதிர் கொள்ள வேண்டிவரும்.

இப்போதுள்ள பிரச்சினையே இதுதான். இரண்டு தரப்புக்கும் அடுத்த கட்ட நகர்வென்பது பெரும் சவாலுக்குரியதாகவே யிருக்கிறது. அது சமாதானமாக இருந்தாலும் சரி போராக இருந்தாலும் சரி.

எனவே இந்தப்பின்னணியில் இனிநடக்கும் போர் பெரிய விளைவுகளைத்தரக்கூடியது. இதனையே சர்வதேச சமூகம் உள்ளிட்ட ஐ.நா சபை கூட சொல்கின்றன. பெரும் மனிதப்பேரிவுகள் ஏற்படக்கூடிய நிலையே இப்போது ஏற்பட்டிருப்பதாகவும் அவை கவலையடைந்திருக்கின்றன.

இந்த நிலையில் போரைத்தவிர்ப்பதற்கு ஒரேயொரு தெரிவு மட்டுமே உண்டு. அது சர்வதேச சமூகததின் கைகளிலேயே இருக்கிறது.

பொத்தாம் பொதுவாகவும் மேலோட்டமாகவும் அழுத்தங்கள் என்ற போர்வையிலும் கண்டனங்கள் என்ற வகையிலும் ஒளித்து விளையாடாமல் சர்வ தேச சமூகம் இப்போது தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்.

சிறிலங்கா பிற நாட்டு உதவிகளிலும் ஆதரவிலும் தங்கியிருக்கும் நாடு. அதிலும் சர்வNதுச நிதியுதவியை வைத்துத்ததான் சிறிலங்காவின் பட்ஜெட்டே உருவாக்கப்படுகிறது. எனவே சிறிலங்காவை கட்டுப்படுத்தக்கூடிய வல்லாண்மை சர்வதேச சமூகத்துக்கு மிக வசதியாகவேயுண்டு.
இந்த வசதியையப்பயன் படுத்தி அது சிறிலங்காவை வழிக்குக் கொண்டுவர வேண்டும். அதன்மூலம் சமாதானத்துக்கும் போர் நிறுத்தத்துக்குமான ஒரு புறச்சூழலை உருவாக்கலாம். சிறிலங்கா அரசின் போர் முனைப்புக்குறையும் போது புலிகளின் போர் முனைப்பும் தணிந்து விடும்.
சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பினருடனும் தொடர்பை இன்னமும் சர்வNதுச சமூகம் வைத்திருப்பது இங்கே உதவக்கூடும். ஆனால் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போவதென்பது சாதாரணமானதல்ல. அதற்கு ஏராளமான தடைகளிருக்கின்றன என்பதையும் நாம் இங்கே கவனிக்க் வேண்டும்.

அந்தத் தடைகளைத் தாண்டக்கூடிய மனப்பக்குவத்தை பிரச்சினையுடன் தொடர்புடைய தரப்புகளிடம் வளர்க்க வேண்டும் என்று நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.



பிரச்சினைகளைக் கையாளக்கூடிய பொறுமையும் நிதானமும் புரந்துணர்வும் மேலான நோக்கும் இல்லாத வரையில் மாற்றுத் தெரிவுக்கும் தீர்வுக்கும் இடமில்லைஎன்றும் அவர்கள் சொல்கிறார்கள்.



எனவே போர்தான் யதார்த்தத்தில் இருக்கிறது போலும். அதாவது அழிவுகளும் கண்டனங்களும்தான் மிஞ்சப் போகின்றன. மீண்டும் வகைதொகையில்லாத அளவில் கண்டன அறிக்கைகள் வரப் போகின்றன.


அந்த அறிக்கைகள் காலங்கடந்தவையாகவும் ஏதும் செய்ய முடியாதவையாகவுமே இருக்கும். அதைப்பற்றி யாருக்குத்தான் கவலையிருக்கப் போகிறது.


இதற்கெல்லாம் முதற்படி தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய கரிசனை உண்மையாகவே சகலருக்கும் ஏற்பட வேண்டும். குறிப்பாக சர்வ தேச சமூகத்துக்கு.