Sunday, June 17, 2007

அணில் மரம் பூனை

மாதுளைச் செடிக்கும்

குறுக்கு வேலிக்குமிடையில்

தாவித்திரியும்

அணிலின் கனவில்

தின்று முடித்த பழத்தின் ஞாபகங்களா

தின்னப்போகும் கனிகளின் ருஷியா



அணிலின் கண்களில்

தீராத் தவிப்பில் துடிக்கிறது

அச்சத்தின் குரூர நிழல்



அணிலின் காதலுக்கு

இருக்கின்றன மரங்கள்

காதல் முடிய

மரத்தின் கனிகளும் தீரும்

மரத்தில் நின்றே

மரப்பழத்தைத் தின்றாறிக்

கொண்டாடும் அணில்



மரத்தின் கீழே

வேட்டையின் நுட்பங்களோடு

பாயும் முனைப்பில் பூனை



யார் வாய்க்கு

யாதோ

No comments: