மாதுளைச் செடிக்கும்
குறுக்கு வேலிக்குமிடையில்
தாவித்திரியும்
அணிலின் கனவில்
தின்று முடித்த பழத்தின் ஞாபகங்களா
தின்னப்போகும் கனிகளின் ருஷியா
அணிலின் கண்களில்
தீராத் தவிப்பில் துடிக்கிறது
அச்சத்தின் குரூர நிழல்
அணிலின் காதலுக்கு
இருக்கின்றன மரங்கள்
காதல் முடிய
மரத்தின் கனிகளும் தீரும்
மரத்தில் நின்றே
மரப்பழத்தைத் தின்றாறிக்
கொண்டாடும் அணில்
மரத்தின் கீழே
வேட்டையின் நுட்பங்களோடு
பாயும் முனைப்பில் பூனை
யார் வாய்க்கு
யாதோ
No comments:
Post a Comment