Sunday, June 17, 2007

மரணத்தின் ருஷி

ஒரு ஆட்டுக்குட்டி

என்றும் நினைப்பதில்லை

தன் கழுத்தில் விழக்காத்திருக்கும் கத்தியை

என்றும் அது அறிவதில்லை

தன்னை வளர்ப்போனே

ஒரு கொலையாளன் என்பதை


சாவுக்குப்பிறகும்

தனது குருதியும் மாமிசமும்

மகிழ்ச்சிக்குரிய பண்டமாகிப் போகுமென்று

துள்ளுகிறது மகிழ்ச்சியுடன்

அழகாக



நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.



பிறகொருநாள் மடிகிறது

நமது குருரவெளியில் எந்த நிபந்தனையுமின்றி



அது

நமக்கு ருஷியாகிப்போகிறது.

No comments: