காயங்களிலிருந்து
வெளியேறிய பறவை
தன்னுடன் எடுத்துச் செல்கிறது
தன் அழகிய மலரை
தன்னுடைய பெருந்தீயை
தன் கடலை
தன் வெளியை
அதனிடமில்லை
மீண்டும்
கூடு திரும்பும்
நினைவின் நிழல்
அது செல்லும் வழியில்
தன் சிறகுகளையும்
கொடுத்துச் செல்கிறது காற்றிடம்
வலிகளைக்கடந்து போகும் பயணம்
வெறுமையை
நிரப்பிவிடுகிறது கூட்டினுள்
பறவையின் ஆறாச் சூட்டில்
தவிக்கின்றது கூடு தனியே
No comments:
Post a Comment