பிரகாசமானது அந்த நட்சத்திரம். ஞாபகங்களில் நிரம்பியது அதன் ஒளி. சிதறடிக்கப்பட்டபின்னும்; அது ஒளியுடனிருந்தது. அப்போது அது பல்லாயிரம் ஒளிமுகங்களாகியது. பல்லாயிரம் பல்லாயிரம் ஒளிமுகங்கள். ஒரு நட்சத்திரத்தின் சிதறடிப்பு பல்லாயிரம் நட்சத்திரங்களாகியது.
(-சிவராம் கொல்ப்பட்ட பிறகு அவரைப்பற்றி எழுதப்பட் கவிதையொன்றிலிருந்து.)
அப்போது அவர் அதிகம் பேசப்பட்டவராக இருந்தார்;. அதிகம் சர்ச்சைக்குரியவராகவும் இருந்தார். அதற்கு சில காரணங்களிருந்தன. அவர் அதிகம் சர்ச்சைக்குரிய விசயங்களை எழுதினார். மற்றவர்கள் அறியாத விசயங்களை எழுதினார். மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்களை எழுதினார். மற்றவர்கள் மதிப்பிடக்கடினமான விசயங்களையும் எழுதினார். இதனால் அவர் பெருங்கவனிப்புக்குள்ளானார்.
தொண்ணூறுகளில் தராகி என்ற பெயர் இலங்கையில் பெருங்கவனிப்பைப் பெற்றிருந்தது. அப்போது இலங்கையின் அரசியல் இராணுவ நிலைமைகள் மிகவும் பாரதூரமான ஒரு கட்டத்தில் இருந்தன. இதனால் ஊடகத்துறையிலும் இவற்றின் அதிர்வுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இவற்றை தராகி அறிவுபூர்மாக அணுகி, நவீனமாக வெளிப்படுத்தினார். இதற்காக அவர் கடுமையாக உழைத்தார். அதற்கேற்றமாதிரி அவர் தன்னை வடிவமைத்தார்.
சிவராம் கொல்லப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அவரைப்பற்றிய முழு மதிப்பீடுகள் அவசியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுவரையிலும் அவரைப்பற்றிய அத்தகைய மதிப்பீடுகள் செய்யப்படவில்லை என்பது சற்று கவலை அளிப்பதாயினும் அவருடைய பாத்திரம் வலுவாக இலங்கை முழுவதிலும் உணரப்பட்டிருப்பது சற்று ஆறதலான விசயம். அதிலும் தமிழ் மக்களிடம் சிவராம் மிக ஆழமான பதிவாகவும் உறவாகவும் ஆகிவிட்டார். எனவே அவர் பற்றிய மதிப்பீடு நிகழ்ந்துதானிருக்கிறது. ஆனால் அந்த மதிப்பீடு அறிவு பூர்வமாக நடந்திருக்க வேண்டும். தராகி இயங்கிய துறையில் அது நடந்திருக்க வேண்டும். அது ஏன் நிகழவில்லை என்பது தவிர்க்க முடியாத கேள்விதான். இங்கே அத்தகைய மதிப்பீட்டைச் செய்யும் நோக்குடன் இந்தக்குறிப்புகள் எழுதப்படவில்லை. ஆனால் தராகி இயங்கிய சூழலைவைத்து இந்தக்குறிப்பு எழுத முயற்றிக்கப்படுகிறது.
தராகி டி.சிவராம் இலங்கையில் மிகப்புகழ்வாய்ந்த ஊடகக்காரராக பதினைந்தாண்டுகள்; செயற்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிடம் ஆழமாக உணரப்படுகின்ற அளவில் அவர் தன்னுடைய பாத்திரத்தை உருவாக்கி வளர்த்திருந்தார். அவர் செயற்பட்ட இந்தப் பதினைந்தாண்டுகளும் இலங்கை அரசியலிலும் போர் மற்றும் படைத்துறை என்பவற்றிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அசாதாரணமானவை. வாழும் உரிமைகேட்டுப்போராடிய தமிழர்களின்மீPது அரசு முழுமையாகப் போரைத்தொடுத்திருந்த சூழல் அது.
கூடவே தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் பெரும் மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்பட்ட காலகட்டம் இது. இவற்றைத் தன்னுடைய நுன்னுணர்கொம்புகளால் உணர்ந்து கொண்டார் சிவராம். இது அவருடைய முதலாவது வெற்றி. அதாவது இந்த மாற்றங்களும் திருப்பங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டு வருகின்றதென அவர் கூர்மையாக அவதானித்தார். சிலவிசயங்களை முன்கூட்டியும் சிலவற்றை அவை நிகழ்ந்துவரும் சம காலத்திலும் கண்டறிந்து வெளிப்படுத்தியதன் மூலம் சிவராம் தன்மீது அதிக கவனத்தைக் குவித்தார். அவர் அந்த நாட்களில் பல தரப்பினராலும் வாசிக்கப்பட்டார். தேடி வாசிக்கப்படுமளவுக்கு அவருடைய எழுத்துகளிருந்தன. அந்தளவுக்கு பெறுமதியாக எழுதினார்.
போர் நிகழும் களத்திலும் காலத்திலும் இவ்வாறு செயற்படுவது மிகக்கடினமான காரியம். அது மிகச்சவாலான காரியமும் கூட. இதற்கு அசாத்தியமான துணிச்சலும் மிகக்கவனமாக இயங்கக்கூடிய அவதானமும் தேவை. சிவராம் இதைப்புரிந்து கொண்டு இயங்கினார். அவர் மற்றெல்லா ஊடகக்காரர்களையும்விட முற்றிலும் வேறான தளத்திற்குள்ளிருந்து ஊடகத்துறைக்கு வந்தவர் என்ற வகையில் இந்த விசயங்கள் அவருக்கு நன்றாக விளங்கியிருந்தன. இதனால் மற்ற ஊடகக்காரர்களைவிடவும் புதிய விசயங்களை அவரால் எழுதக்கூடியதாகவும் இருந்தது.
சிவராம் ஆயதப்போராட்ட அரசியலுக்குள்ளால் ஊடகத்துறைக்கு வந்;தவர். இவ்வாறு ஆயதப்போராட்ட அரசியலுக்குள்ளால் ஊடகத்துறைக்கு ஏற்கனவே விகரர் ஐவன் போன்றவர்கள் வந்திருந்தனர். என்றாலும் அவர்களின் தளம் வேறு. சிவராம் வந்த தளம் வேறு. விக்ரர் ஐவன் போன்றவர்கள் ஜே.வி.பி யின் கிளர்ச்சிப்போராட்டத்தினூடாக வந்வர்கள். சிவராமோ தமிழீழ விடுதலைப் போராட்டப்பாரம்பரியத்துக்கூடாக வந்தவர்.
தொண்ணூறில் இலங்கையின் ஊடகத்துறை முற்றிலும் புதிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. அதுவரையிலும் பின்பற்றப்பட்டு வந்த பத்திரிகைத்துறை முறைமை இனிமேல் தாக்குப்பிடிக்கமுடியாதென்ற நிலைக்கு உள்ளாகியது. சர்வதேச மயவாக்கம் அதிதீவிரத்துடன் நிகழவாரம்பித்த காலம். அதுவும் அமெரிக்கா தலைமையிலான புதிய உலக ஒழுங்கு விரிவாக்கம் பெற்ற காலம் அது. மேற்குலகின் நிழல் பெரும்பாலான தேசங்களின்மீது படியத்தொடங்கிய காலகட்டம்.
அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் என எல்லாவற்றிலும் வேறுபட்ட தன்மைகளும் போக்குகளும் தீவிரம் பெறத்தொடங்கியது அப்போது. இலங்கை போன்ற மூன்றாம் நான்காம் நிலை நாடுகளில் இந்த வேகவளர்ச்சி அல்லது விரைந்;த மாற்றம் சிதறலாகவும் மெதுவாகவுமே நடந்தது. ஆனாலும் அவற்றின் நொதிப்பு பொதுவாக எதிலும் உணரத்தொடங்கியிருந்தது. இது ஊடகத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதேவேளை இலங்கையின் இனப்பிரச்சினை முழுஅளவிலான போருக்குள் திணிந்தபோது இந்தச்சவால் இன்னும் அதிக விசையோடு வெடித்தது. போர,; புதிய உத்திகளிலும் நுட்பங்களிலும் முனைப்புடன் விரிவுகொள்ள அதற்கிணையான ஊடகச்செயற்பாடும் புதிய வேகத்தையெடுக்க வேண்டியதாயிற்று.
அடிப்படையில் எப்போதும் யுத்தத்துக்கு ஒருவகையான கவர்ச்சியுண்டு. சம்மந்தப்பட்ட இரண்டு தரப்புகளுக்குமிடையிலான போட்டிகளும் அவை பெறுகின்ற வெற்;றி தோல்விகளும் இதில் முக்கியமானவை. அதிலும் யுத்தத்தில் எட்டப்படுகின்ற வெற்றி தோல்விகள்தான் அரசியலையும், நாளாந்த வாழ்வையும் நிர்ணயிக்கின்றது என்ற வகையிலும் இது முக்கியமானது. அதையும்விட உயிர் வாழ்வதற்கான உத்தரவாதத்தையே யுத்தத்தின் வெற்றி தோல்விகள்தான் அளிக்கின்றன. எனவே யுத்தம் எப்போதும் சீரியசாக இருக்கிறது. ஏனைய சீரியசான விசயங்களுக்கில்லாத பெருங்கவர்ச்சி யுத்தத்துக்கு உண்டு.
இவற்;றைவிட, அரசியல் அணுகுமுறைகள், அவற்றின் சுழிப்புகள் எல்லாவற்றையும் சனங்கள் ஏற்கனவே முற்றாக அறிந்திருந்தனர். ஆனால் போர் பற்றி, அதிலும் நவீன போர் பற்றி அவர்கள் அவ்வளவுக்கு அறிந்திருக்கவில்லை. ஆனால் போரின் போக்கையும் நிலைமையையும்; அவர்கள் அறிய வேண்டியிருந்தார்கள். இத்தகையதொரு அவசியச்சூழலில்தான் தராகி, இக்பால் அத்தாஸ் போன்றோர் எழுத வருகிறார்கள். இவர்கள் போரையும் போர்ச் செய்திகளையும் வெறும் தகவல்களாக வழங்க வில்லை. அதற்குமப்பால் போரின் தன்மையை, அதன் போக்கை, போரில் ஈடுபடும் விடுதலைப்புலிகளையும் சிங்களத்தரப்பையும் அல்லது அரசாங்கத்தையும் ஆய்வு ரீதியாகப்பார்க்கும் மரபொன்றை உருவாக்கினர்கள். அதாவது விஞ்ஞான பூர்வமாகப்பார்க்கும் பண்பை தங்களின் ஊடகத்தொழிலில் ஏற்றினர்கள். இதில் தமிழில் செயற்பட்டு வந்தவர்களில் இன்னுமொருவர் நிலாந்தன்.
போர்ச்செய்திகளை வெறும் தகவல்களாகப் படித்து வந்த சனங்களுக்கு இந்தப்புதிய ஆய்வுமுறைமை வித்தியாசமாகப்பட்டது. படைத்துறையையும் போரியலையும் இவர்கள் படித்தார்கள். இந்தத்துறையினரோடு சர்வதேசமெங்கும் தொடர்புகளைக்கொண்டார்கள். இவற்றின்மூலம் வாசகர்களுக்குப்புதிய பிரதேசங்களைக்காட்டினார்கள். வாசர்களுக்கு இது புதுமையாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. இவ்வாறு எழுதப்பட்ட இந்தக்கட்டுரைகளையும் பத்திகளையும் வெளியிட்டு வந்த பத்திரிகைகள் சட்டென ஆயிரக்கணக்கான பிரதிகளால் உயர்ந்தன என்று இப்போதும் பல பத்திரிகை நிறுவனங்கள் நினைவுகூர்கின்றன.
ஊடகத்துறையை நவீனமாக அணுக வேண்டும், அந்தமுறையிலேயே இயங்க வேண்டுமென்ற அடிப்படைப்புரிதல் இவர்களுக்கு இருந்ததுதான் இதற்குக்காரணம். இதற்குத்துறைசார்ந்த நிபுணத்துவத்துவம் அவசியம். அதனை வளர்ப்பதன்மூலமே இதனைச்சாத்தியப்படுத்தலாம் என்று இவர்கள் புரிந்திருந்தனர். அதாவது அறிவுபூர்வமாக செயற்படவேண்டும்; என்ற விளக்கம் இவர்களுக்கிருந்தது. தொழிலை, அதற்குரிய அடிப்படையான தகுதிகளுடன் செய்யும்போதுதான் அதற்குரிய பெறுமதியும் மதிப்பும் ஏற்படும். தராகி இவற்றை நன்றாக விளங்கியிருந்தார். அதற்கேற்ற மாதிரி அவர் தன்னைத்தயார்ப்படுத்தினார். இதை இன்னும் சரியாகச் சொன்னால் அதற்கேற்றமாதிரி அவர் தன்னைத்தயாரித்தார்.
தராகி தொடக்கத்தில் இயங்கிய தளம் ஆங்கிலப்பத்திரிகைகளில்தான். ஆங்கிலப்பத்pரிகைகளுக்கென்றொரு யதார்த்;தம் இருக்கிறது. முதலில் அதனை விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையில் பெரும்பான்மையானோர் சிங்களவர். அடுத்தது தமிழர். அப்படியென்றால் இந்த இரண்டு மொழியிலான பத்திரிகைகளும்தான் கூடுதலாக வரவேண்டும். இவற்றுக்குத்தான் அதிக செல்வாக்கும் மதிப்பும் இருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் அப்படியல்ல. இவற்றைவிடவும் இங்கே ஆங்கிலப்பத்திரிகைகளுக்குத்தான் செ;லவாக்கு அதிகம். அவை தம்முடன் கொண்டு செல்கின்ற செய்திகள், கருத்துகள், விளம்பரங்கள், இலவச இணைப்புகள் எனச்சகலமும் இதற்கு ஆதாரம்.
படித்த, மேல்வர்க்கத்தினரும் மேல் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரும் ஆங்கிலப்பத்திரிகைகளின் வாசகர்களாக இருக்கின்றனர். இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச அளவிலான பார்வை கொண்டவர்கள். சர்வதேச அளவிலான விவகாரங்களில் அறிதலுடையவர்கள். வெளியுலகம் தெரிந்தவர்கள். எனவே இவர்களை இலக்காகக்கொண்ட ஊடகம் என்ற வகையில் அதற்கேற்றமாதிரி இவர்களுக்கான வழங்கலைச் செய்யவேண்டும். இதேவேளையில் ஆங்கில ஊடகங்கள் ராஜதந்திரிகள் மற்றும் வெளியுலகப்பிரதிநிதிகளையும் சென்றடைவன. ஆகவே அவர்களின் ரசனைத்தரம், அறிவுத்தரம் என்பவற்றையும் இந்த ஊடகங்கள் கவனம் கொள்ள வேண்டியது தவிரக்க முடியாதது. ஆங்கிலப்பத்pரிகைகளின் செய்தி வெளிப்பாடு மற்றும் அவற்றின் வடிவமைப்பு என்பனவற்றைவைத்தே இதைச் சாதாரணமாக கண்டறியலாம். பாமரத்தன்மையைக் கடந்த நிலை இவற்றில் உண்டு. ஆக இந்த அடிப்படையில்தான் இநதப்பத்திரிகைகளில் வருகின்ற எழுத்துக்களும் இருக்கவேண்டுமென்பது அவசியமாகிறது. எனவே, இவற்றில் எழுத வருவோர் முதலில் இவற்றுக்கேற்றமாதிரித் தம்மைத்தயார் செய்யவேண்டும். ஏறக்குறைய மேற்கின் வளர்ச்சி பெற்ற ஊடகமுறைக்கு நிகரான வெளிப்பாட்டையும் தரத்தையும் கொண்டதாக இருந்தாலே இவற்றின் வாசகர்களிடம் விசயங்கள் எடுபடும் என்ற நிலையில் இயங்க வேண்டும்.
தராகி என்ற டி. சிவராம் இந்தத் தன்மைகளைப்புரிந்து கொண்டு தன்னை ஊடகத்துறைக்குத் தயாரப்படுத்தினார். முதலில் அவர் ஆங்கில ஊடகங்களில்தான் எழுதினார். சிவராம் எழுத வந்த காலப்பகுதியில் இனப்போர் பெரும் சுவாலை விட்டு எரியத்தொடங்கியிருந்ததால் போர்பற்;றியும் அதன் அரசியல் பற்றியும் புதிய முறையிலான எழுத்துகள் வெளிவரத்தொடங்கியிருந்தன. முன்னெப்பொழுதையும்விட பத்தி எழுததுகளும் இராணுவ ஆய்வுகளும் அதிகமாக எழுதப்பட்டன. பத்திரிகைகளில் இராணுவ ஆய்வுக்கெனத்தனியான பகுதிகள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தன. அந்தளவுக்கு இந்த விசயங்கள் ஊடகத்தில் முக்கியம் பெற்றிருந்தன.
சிவராம் இதில் மற்றெல்லோரையும் விடவும் அதிகமான சாத்தியங்களோடு களத்தில் இறங்கினார். சிவராமுக்கு இருந்த ஆங்கில அறிவு, அவர் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஆயதப் பயிற்சி பெற்றிருந்தவர் என்பதனால் ஏற்பட்டிருந்த அந்த அனுபவம் மற்றும் அறிவியலில் உள்ள நம்பிக்கையும் ஆர்வமும், வரலாறு, இலக்கியம: புவியியல்; ஆகியவற்றில் இருந்த புரிதலும் அறிவும் என எல்லாம் கலந்தநிலையில் அவர் ஒரு புதிய வெளிப்பாட்டுக்காரனாகினார்.
இந்தக்கலவை அப்போது இலங்கைத்தீவில் ஊடகத்துறையில் இயங்கிய எவருக்கும் கிடைத்திராத ஒன்று. வெளிநாட்டுப்பிரதிநிதிகள் தராகின் எழுத்துகளை கூடிய கவனத்துக்குள்ளாக்கியிருந்தனர் என்று பின்னாளில் ராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்புடைய ஊடகக்காரர் சிலர் சொனனார்கள். இனப்பிரச்சினையின் உள்முகத்தை அறியவும் தொடர்ந்து கொண்டிருந்த போரின் போக்கை அறியவும் அவர்கள் சிவராமின் எழுத்துக்களைப்பயன்படுத்தினார்கள்.
கொழும்பில் அப்போது சிவராமின் எழுத்துகளுக்கு பெருங்காத்திருப்பிருந்தது. அவருடன் போட்டியிலிருந்த ஏனைய ஊடகவியலாளரும்கூட அவர் அடுத்து என்ன சொல்லப்போகிறார், எதைப்பற்றியெல்லாம் எழுதப்போகிறார் என்ற ஆவலோடு காத்திருந்தனர். தமிழ் நிலப்பரப்புப்பற்றியும் போராளிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்கும் மக்களுக்குமான உறவு அதைப்பற்றியெல்லாம் எழுதுவதற்குஅவரைத்தவிர அப்போது வேறெவரும் இருக்கவில்லை. இதனால் அவர் மற்றவர்களுக்கில்லாத வாய்ப்போடிருந்தார். இதைப்பின்னாளில் சிவராமே ஒத்துக்கொண்டிருக்கிறார்.
சிவராம் எழுதத்தொடங்கியபோது அந்த எழுத்தில் ஒரு புதிய அலை மேலெழும்புவது தெரிந்தது. அதற்குப் பிரதான காரணம்; நான் முன்னர் சொன்ன அவருக்கிருந்த தகுதிகள்தான்.
கொழும்பை மையமாகக் கொண்ட ஊடகக்காரர்களிலிருந்து விலகி, அவர்களுக்குத்தெரியாத பல புதிய விசயங்களை எழுதுவதன்மூலம் அந்த அலை உருவானது. அத்துடன் சில விசயங்களில் அவர் கொஞசம் கூடுதலாக சர்ச்சைக்குரிய விதமாகவும் கை வைத்தார். சிவராம் யார் என்று புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு பலபிராந்தியங்களிலும் சஞ்சரிக்கும் எழுத்து முறையைக்கையாண்டார். இதில் சிங்களவர்கள் கூடுதலாகத்தடுமாறினார்கள். இதைப்பற்றி பின்னாளில் அவர் வெளிப்படையாகவும் பேசியிருக்கிறார்.
தீவிரமாகவும் ஆழமாகவும் உயிர்ப்hன விசயங்களை அப்போது சிவராம் எழுதினார். குறிப்பாக ஈழவிடுதலைப்போராளிகள் பற்றி வெளியே தெரிய வராத பல சங்கதிகளை அவர் வெளிக்கொண்டு வந்தார். ஈழவிடுதலைப்போராளிகளின் ஆயதப்பயற்சி, அவர்களின் களவாழ்க்கை, பயணப்பாதைகள், கெரில்லா வாழ்க்கை, போருத்தி போன்ற பல விசயங்களை அவர் எழுதினார். அத்துடன் உலக விடுதலைப்போராட்டங்கள் பற்றியும் உலகின் மிக முக்கியமான போர் நடவடிக்ககைகளைப்பற்றியும் அறிந்து எழுதினார்.
மற்றவர்கள் தொடமுடியாத, மற்றவர்களுக்குத்தெரியாத பரப்பை சிவராம் திறந்ததன் மூலம் அவருக்கு கூடுதல் கவர்ச்சி ஏற்பட்டது. அத்துடன் ஈழவிடுதலைப் போராட்டத்தைப்பற்;றித் தெரிந்த ஒருவரை சிங்களத்தரப்பும் அப்போது அனுசரிக்கத்தொடங்கியது. காரணம் சிங்களத்தரப்புக்கு தனக்குத்தெரியாத ஒரு பரப்பை, தான் அறிய வேண்டிய பரப்பை எப்படியோ அறியக்கிடைக்கிறது என்ற எண்ணம்.
சிவராம் தனக்குத்தெரிந்த விசயங்களையெல்லாம் கொட்டி எழுதினார். அதன்மூலம் அவர் தன்னை ஸ்தாபித்தார்.
இது சிவராமுக்கு அப்போது வாய்ப்;பான ஒரு வெளியை உருவாக்கியது. அதேவேளை தமக்குச்சாதகமாக சிவராமைப்பயன்படுத்த சிங்ளத்தரப்பினர் முயன்றனர். ஆனால் சிவராம் அதற்குப்பலியாகவில்லை. அவர் தனக்குரிய, தான் இயங்கக்கூடிய வெளியை உருவாக்கிக்கொண்;டு தன்னுடைய தளத்தில் தொடர்ந்து இயங்கினார்.
சிவராம் தொடக்கத்திலிருந்தே ஈழவிடுதலைக்கான தளத்திலே செயற்பட்டவர். அந்தத்தளத்தை அவர் தொடர்ந்து பேணிவந்தாரே தவிர அதைவிட்டு விலகவில்லை. ஆனால் சிவராம் ஈழவிடுதலைத்தளத்தைவிட்டு விலகிவிட்டார் என்ற எதிர்பார்ப்பில் கொழும்பு அவரை அரவணைத்தது. சிவராம் இதனை தெளிவாக விளங்கியிருந்தார். விளங்கிக்கொண்டேதான் அவர் செயற்பட்டார்.
போர் மூலமோ முறையான தீர்வுத்திட்டத்தை முன்வைக்காமலோ தமிழ்மக்களின் பிரச்சினையைத்தீர்க்முடியாதென்று அவர் தொடர்ந்து எழுதிவந்தார். விடுதலைப்புலிகள் சிறிலங்கா ராணுவத்தால் வெற்றிகொள்ள முடியாத போரியல் முறையைக்கொண்டவர்கள் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தமிழ் மக்களையும் புலிகளையும் வேறுபடுத்திப்பார்க்க முடியாது என்று சொல்லிவந்த சிவராம், சிங்களவர்களால் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை தரமுடியாதென்றும் சொன்னார். இது ஒரு கட்டத்தில் அவருக்கும் கொழும்புக்குமிடையலான தொழில்முறை உறவில் வெடிப்பை ஏற்படுத்தியது. சிவராமைப்பற்றி சிங்களத்தரப்பில் முகச்சுழிப்பும் விமர்சனமும் தோன்றியது. சிவராம் தன்னுடைய சுயருபத்தைக் காட்டிவிட்டார் என்று தீவிர சிங்கள ஏடுகள் அவரைச்சாடின. அவர் புலிகளின் ஆள் என்று நேரடியாக அவை குற்றம்சாட்டி அவரை முடக்கமுயற்சித்தன.அல்லது களத்திலிருந்து வெளியேற்ற முயன்றன.
தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதிவந்த சிவராம், பின்னர் தமிழிலும் எழுதத்தொடங்கினார். தமிழ்த்தேசியம் பற்றியும் அது எதிர்கொண்டிருக்கிற சவால்கள் பற்றியும் அவர் விரிவான பார்வையை ஏற்படுத்தும் விதமாக எழுதினார். இக்காலப்பகுதியில் அவர் முழுதாக தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தைப்பலப்படுத்த வேண்டும், அதற்கான அகப்புறச்சூழ்நிலை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கத்தொடங்கினார். சர்வதேச அளவில் ஊடகத்துறை மூலம் பெற்றிருந்த அறிமுகத்தையும் தொடர்புகளையும் இதற்கு அவர் பயன்படுத்தினார். இதெல்லாம் கொழும்பு அரசியலுக்கு சீற்றத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அவர் ஏற்கனவே அறிமுகமாகியிருந்த இடைநிலை ஊடகவியயலாளர்களும் புத்திஜீவிகளும் அவரைப்புரிந்து கொண்டிருந்தனர். அவருடைய நிலைப்பாட்டின் நியாயத்தன்மையையும் ஏற்றிருந்தனர்.
சிவராம் கொண்டிருந்த இன்னொரு முக்கியமான அம்;சம் அவர் அறிவுபூர்வமாக இயங்கியதன் காரணமாக அவருக்கு மேற்குலகிலும் அறிமுகமிருந்தது. அதனால் இலங்;கை நிலைவரம் தொடர்பாக அறிவதற்கான இன்னொரு வாசலாக அவர் மேற்குலகால் கொள்ளப்பட்டார். அதிலும் தமிழர் தரப்பின் நிலைப்பாடு தொடர்பாக மேற்கு நாடிபிடித்துப் பார்ப்பதற்குரிய ஆளாக இருந்தார். தனக்குக்கிடைத்த இந்தச்சந்தர்ப்பத்தையும் சிவராம் நன்றாகப் பயன்படுத்தினார்.
சிங்களவரின் சிந்தனை முறைமை என்பது சிங்களப் பௌத்தத்துடன் இணைந்த கூட்டுருவாக்கம் என்பதை அவர் வெளியுலகுக்கு தெளிவுபடுத்தினார். பிற்போக்குத்தனமும் அடிப்படைவாதப்பண்பும் திரண்டிருக்கும் சிங்கள ஆட்சியதிகாரம் ஒருபோதும் நியாயமான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியாதென்று அவர் ஆதாரபூர்வமாக சொன்னார்.
இதெல்லாம் சிங்களத்தரப்பில் சிவராம் தொடர்பாக ஒரு எதிர்மறைத்தோற்றத்தை உருவாக்கியது. அவர் சிங்களத்தரப்பில் கூடுதலான விமர்சனத்துக்கு உள்ளானார். தொடக்கத்தில் அரவணைக்க முயன்ற சிங்களத்தரப்பினர் பின்னர் அவரை தூரவிரட்டிவிடவும் முடக்கிவிடவும் முனைந்தமையென்பது சிவராமே சொன்னது போல, சிங்களப்பௌத்தவாதத்தின் இயல்பே. இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. அவர்கள் தமக்குச்சாதகமாக அவரைப் பயன்படுத்த விளைந்தனர். அது சாத்தியமில்லாது போகவே அவரை அவர்கள் அப்படி நிந்தித்தார்கள். அவருக்கான ஆபத்து வளையத்தையும் உருவாக்கினார்கள்.
சிஙகளவர்களிடத்தில் எத்தகைய புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியாதென்று அவர் பல தடவை கூறியிருக்கிறார். பதிலாக தமிழர்கள் தமக்கான அரசியற்பலத்தை நிர்ணயம் செய்வதிலும் அதை வெற்றிகரமாக முன்னகர்த்துவதிலுமே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் என்றும் அதுவே இலங்கைத்தீவில் சமாதானத்துக்கான வழி என்றும் சொன்னார்.
இந்தக்கட்டத்தில் அவர் அதிக விமர்சனங்களுக்குள்ளானார். யுத்தம் நடக்கும்போது யுத்தத்திற்குள்ளே நிரம்பியுள்ள ரகசியச்சேதிகளுக்கிருக்கும் கவர்ச்சியும் செல்வாக்கும் அரசியல் விமரிசனங்களுக்கிருப்பதில்லை. அரசியல் விமர்சனங்கள் எப்போதும் கறுப்பு வெள்ளைத்தன்மைக்கு நெருங்கியவையாக இருப்பதால் சிவராம் இதில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளானார். தொடக்கத்தில் இராணுவ ஆய்வாளராக அறியப்பட்ட சிவராம் பின்னர் அரசியல் விமர்சகராகவே உணரப்பட்டார். பின்னாளில் அவர் அரசியல் விமர்சனத்துக்கும் அரசியல் அறிவுக்குமே அதிக இடமளித்துச் செயற்பட்டார். அதனால்தான் அவர் அவ்வாறு விமர்சிக்கப்பட்டார். இதில் தமிழர்கள் சிவராமோடு இன்னும் மிக நெருக்கமாகினார்கள். சிங்களவர்களோ அவரை எதிரி நிலையாளர் என உணரத்தொடங்கினார்கள்.
அதாவது தமிழர்களைத் தன் பங்குக்குப் பலப்படுத்தும் முயற்சியிலும் சிஙகள் மேலாதிக்;க அரசிலை உச்சமாக விமர்சிக்கும் வகையிலும் அவர் ஈடுபட்டார். குறிப்பாக நோர்வேயன் பங்கேற்புடனான சமாதான முயற்சிகளில் சிவராம் அதாடக்கத்திலிருந்தே அதிக ஈடுபாடற்றவராக இருந்தார். நோர்வே ஏற்கனவே பங்கேற்ற அமைதிப்பேச்சு முயற்சிகள் பாதிக்கப்பட்ட மக்ககுள்ளான நிரந்தர ஆறதலைத்தரவில்லை என்ற கருதது அவரிடம் இருந்தது. நோர்வே மிக நல்ல முன்னுதாரணங்களைக் கொண்டிருக்வில்லை என்ற வாதத்தையும் அவர் முன்வைத்திருந்தார். இதன்போதும் சிவராம் சற்று விமர்சனங்களுக்காளானார். ஆனால் இவைபற்றியெல்லாம் அவர் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. தனக்குப்படுகின்ற விசயங்களை ஆய்வுபூர்வமாக மற்றவர்களுடன் பகிர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவருக்கிருந்தது. அதிலும் தமிழ்ச்சமூகம் தன் விடுதலைக்காக எல்லாத்தளங்களிலம் பலம் பெற வேண்டும் என்ற விருப்பமே அவரிடம் மேலோங்கியிருந்தது எனலாம். அதற்காக தான் உழைக்கவேண்டும் என்றும் அத தன்னுடைய பொறுப்புவாய்ந்த கடமையென்றும் அவர் நினைத்திருந்தார்.
சிவராமிடம் இருந்த இன்னுமொரு சிறப்பம்சம், அவர் சகலரையும் சமமாக மதிக்கும் பண்புடையவர் என்பது.புதிய ஊடகவியலாளர்களையும் அவர் தன்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் சேர்த்திருந்தார். சிங்கள ஊடகவியலாளர்கள் தொடக்கம் சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள்வரையில் அவருக்கு நெருங்கிய அறிமுகமும் தொடர்பும் இருந்தன. அதேவேளை தெருவிலே சாதாரணமாக நடந்துபோகிற மனிதர்களிடமும் அவருக்கு நெருக்கமும் உறவும் இருந்தன. விவசாயிpகள்.கூலித்தொழிலாளிகள், மீனவர்கள்,ட்றைவர்மார் என சமூகத்தின் சகல தரப்பினரிடமும் அவர் தனடனுடைய உறவைப்பலமாக்கி அந்த மனிதர்களின் உணர்வலைகளைப்புரிந்து கொண்டிருந்தார். சமூகத்தின் நாடியோட்டம் என்ன எனபதில் அவருக்குகுத் தௌவான பார்வையும் படிமமும் ஏற்படுவதற்கு இவை பெருங்காரணமாக இருந்தன. அதனால் சிவராமின் எழுத்துகள் எப்பொழும் யதாரத்தமாக அமைந்தன. இந்த யதார்த்தப்பார்வை அவருக்கப்பலதடவை கைகொடுத்திருக்கிறது.
மட்க்களப்பு என்ற பிரதேச வாதத்தை கருணா தனக்குச்சாதகமாக தூக்கியபோது சிவராம் அதற்கெதிராக வெளப்படையாக நின்று அதை தவறென்று எதிர்த்தார். அரசியல் ரீதியாகவும் பிரதேசவாதம் என்பது பெரும் பலவீனத்தைத் தரும். அத்துடன் தமிழ் மக்களின் வரலாறு. பண்பாடு, உறவுநிலை என்;பவற்றிலும் பெரும் சிக்கல்களையும் தேவையற்ற பிரச்சினைகளையும் அது உருவாக்கும் என்று அவர் தீர்க்கமாகச் சொன்னார்.
சரியாகச்சொன்னால் அவர் தெளிவான பார்வையைக கொண்டிருந்ததுடன் பிழையான போக்குக்கெகதிராக தன்னை அர்ப்பணிதது அபாயமான சூழலிpலும் செயற்பட்டார். அவர் தன்னைக்கருதியதைப்போல தான் ஒரு போராளிக்கரிய பாத்திரத்தை நிரப்பவேண்டும் என நினைத்திருந்ததைப்போலவே அவருடைய பாத்திரம் அமைந்த விட்டது.
No comments:
Post a Comment