இலங்கை இனப்பிரச்சினை இப்போது சகலருடைய கட்டுப்பாட்டையும்மீறி விபரீத கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது அது பெரும் போரொன்றின் விளிம்புக்கு வந்து விட்டது.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேவழியாக போரைத்தான் பிரச்சினையுடன் சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பும் தேர்ந்திருக்கின்றன என்று மேற்குலகின் ராஜதந்திரி ஒருவர் கவலையோடு சொன்னார்.
ஆனால் இந்தப் போரை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. அது தொடர்ந்து சமாதானத்தையே வலியுறுத்தி வருகிறது. போரில் ஈடுபட்;டுள்ள சம்மந்தப்பட்ட தரப்புகளான விடுதலைப்புலிகளையும் சிறிலங்கா அரசாங்கத்தையும் சமாதானத்தை நோக்கித்திரும்பும்படி தொடர்ந்து அது வலியுறுத்தி வருகின்றது.
இப்போது இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் போதும் இந்த நிலைப்பாடு மீண்டும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போர் நிறுத்தத்தை பின்பற்றுமாறு இணைத்தலைமை நாடுகள் கேட்டுள்ளபோதும் அதனை ஏற்றுக் கொள்ள அரசாங்கமும் புலிகளும் சம்மதம் தெரிக்கக்கூடிய நிலையில் இலலையென்று தெரிகிறது. ஆனாலும் மேற்கு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றுவதாக இல்லை.
அத்துடன் இப்போது மேற்குலகம் சம்மந்தப்பட்ட தரப்புகளை போரை நோக்கிச் செல்லாதிருக்கும் வகையில் அவற்றைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மெல்ல இறங்கியுள்ளது.
இதன்படி மனித உரிமை மீறல் விவகாரத்தை வைத்து சிறிலங்கா அரசாங்கத்தை கட்டுப்படுததும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் எலல்hத்திசைகளிலிருந்தும் மனித உரிமைகள் விவகாரத்தைக் கண்காணிக்கும் கண்களை சிறிலங்காவை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.
இறைமையுள்ள அரசு என்ற வகையில் முதற்கட்டமாகச் செய்யக்கூடிய அழுத்தத்தையே இப்போது மேற்குலகம் சிறிலங்காவின் மீது பிரயோகித்திருக்கிறது.
மனித உரிமை மீறல்களை குற்றச்சாட்டாக வைத்து சிறிலங்காவுக்கான நிதிக்குறைப்பையும் அவை செய்வதற்குத் திட்டமிட்டிருக்கின்றன.
தவிர தமது முதலீடுகளை சிறிலங்காவில்; செய்வததையும் அவை இப்போது குறைத்திருக்கின்றன. தொடரும் போரினால் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லி முதலீட்டுக் குறைப்பை மேற்கு நாடுகள் செய்திருக்கின்றன. அத்துடன் தமது பிரஜைகள் சிறிலங்காவுக்குச் செல்வதையும் அவை மடடுப்படுத்தியுள்ளன.
இதேபோல விடுதலைப்புலிகளுக்கும் அவை மறைமுக நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளுக்காகச் செயற்படுவோரையும் ஆதரவழிப் போரையும் மட்டுப்படுத்தும் வகையில் பிரான்ஸிலும் லண்டனிலும் இடம்பெற்ற சில தமிpழரின் கைதுகள் இதனையே காட்டுகின்றன.
இப்படி நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலம் போரைத்தவிர்த்து சமாதானத்துக்கான வழிமுறைக்கு இரண்டு தரப்பினரையும் கொண்டு வரலாம் என்றும் அவை கருதுகின்றன.
இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் இன்னும் மேற்குலகம் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழவையும் புரிந்துணர்வு உடன்படிக்கையையும் நம்பிக்கைக்குரியதாக கருதிக் கொண்;டிருக்கிறது.
நடைமுறை அர்த்தத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையும் புரிந்துணர்வு உடன்படிக்கையும் செயலற்றிருந்தாலும் அது உத்தியோக பூர்வமாக இரண்டு தரப்பினராலும் இன்னும் மீறப்படவில்லை என்பது மேற்கைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகவேயிருக்கிறது.
அதாவது இந்த உடன்படிக்கையை உத்தியோக பூர்வமாக மீறக்கூடிய திராணி இன்னும் இரண்டு தரப்பினருக்கும் இல்லை என்று கொழும்பில் மேற்கு நாடொன்றின் ராஜதந்திரியொருவர் கூறியது இங்கே கவனத்திற்குரியது.
சர்வதேச அபிப்பிராயத்தை முழுதாக நிராகரிக்கக்கூடிய அகச்சூழல் சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு ஏற்படாத வரையில் தமது முயற்சிகளுக்கான இடம் இன்னும் பலமாக இருப்பதாகவே சரிவதேச சமூகம் கருதுகின்றது.
எனவே இவற்றை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு பேச்சுவாரத்தைச் சூழலை உருவாக்கி விடலாம் என்றும் அது வலுவாக நம்புகிறது.
ஆனால் கள யதார்த்தம் சமாதானத்துக்குச் சாதகமாக இல்லையென்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. அது முழதாக போருக்கே தயாராக இருப்பதாகவும் எப்போதும் பெரும் போரொன்று வெடிக்கக்கூடிய நிலையே காணப்படுவதாகவும் களத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் சொல்கின்றன.
கொழும்புச் செய்திகளும் வன்னி மற்றும் யாழ்ப்ப்hணச் செய்திகளும் இவற்றை உறுதிப்படுத்துகின்றன. முழு இலங்கைத்தீவிலும் நிலவுகின்ற போருக்கான தயாரப்படுத்தல்களும் போர் குறித்தான அச்ச நிலையும் இவற்றை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் உண்மை நிலையென்பது, இப்போது போரோ சமாதானமோ யாரும் நினைத்தமாதிரி இலகுவானதாக இலங்கையில் இல்லை என்பதுதான்.
சமாதானத்துக்கான முயற்சிகள் எவ்வளவு கடினமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு போர் செய்யும் நிலையும் கடுமையானதாகவேயிருக்கிறது.
இனிவரும் போர்க்களம் மிக முக்கியமானதொரு புள்ளியாகும். அதாவது இந்தக்களமே மையப்புள்ளி. சவால்கள் நிறைந்த பெரும் புள்ளி.
சிறிலங்காப் படைகளைப் பொறுத்தவரையில் வன்னியை நோக்கிப் பெரும் படையெடுப்பையும் போரையும் மேற்கொள்வதைத்தவிர வேறு தெரிவுகள் இப்போது அவற்றுக்கு இல்லை.
அதேபோல விடுதலைப்புலிகள் வன்னியிலிருந்து வெளியே படை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதாவது யாழ்ப்ப்hணம் மீதோ மணலாற்றின்மீதோ மன்னாரின் மீதோ தான் அவர்கள் அடுதத கட்டத்தாக்குதல்களை தொடுக்கலாம்.
இதன்படி வன்னியைச்சுற்றிய தடைகளை அகற்றுவதே புலிகளின் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கிறது. அப்ப்டித் தடைகளை அகற்றிக் கொண்டே இடுத்த கட்டத்துக்குப் போகமுடியும் என்றும் அவர்கள் சிந்திக்கக்கூடும்.
இவ்வாறு வன்னியைச்சுற்றிய தடைகளை அகற்றும் நடவடிக்கையில் இரண்டு அனுகூலஙகள் புலிகளுக்குண்டு. ஒன்று வன்னி மீPதான சிறிலங்கா அரசின் படையெடுப்பைத் தடுக்கலாம். அடுத்தது வன்னி மீதான இறுக்கத்தை உடைக்க்லாம். இப்போது இந்த இரண்டும் புலிகளுக்கு மிக அவசியமானவை.
இதேபோலவே சிறிலங்கா அரசுககும் பிரச்சினைகளுண்டு. அது இப்போது அவசரமாகப் புலிகளை கட்டுப்படுத்தா விட்டால் அவர்கள் வன்ன்pக்கு வெளியே படையினரின் பிடியிலுள்ள பகுதிகளின் மீது தாக்குதல்களை நடத்துவார்கள். அது அரசாங்கத்துக்கு பெரும் சி;ககலைக் கொடுக்கும்.
அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தையை முறித்ததே போர் மூலம் வெற்றியைத் தான் பெறமுடியும் என்ற நோக்கோடுதான். அப்படியிருக்கும்போது புலிகள் வன்னிக்கு வேளியே போரைத்தொடுத்து அரசாங்கத்தை தோற்கடித்தால் அது தன்னை நிலைப்படுத்த முடியாதென்று அஞ்சுகிறது.
அத்துடன் வன்னிப் போர்க்களம் அரசாங்கத்துக்கு சாதாரணமானதாகவோ சுலபமானதாகவோ இருக்கப் போhவதில்லை. மேலும் வன்னிமீது அரசாங்கம் போரைத்தீவிரப்படுத்தும் போது கொழும்பும் அதன் விளைவுகளை அதிகளவில் எதிர் கொள்ள வேண்டிவரும்.
இப்போதுள்ள பிரச்சினையே இதுதான். இரண்டு தரப்புக்கும் அடுத்த கட்ட நகர்வென்பது பெரும் சவாலுக்குரியதாகவே யிருக்கிறது. அது சமாதானமாக இருந்தாலும் சரி போராக இருந்தாலும் சரி.
எனவே இந்தப்பின்னணியில் இனிநடக்கும் போர் பெரிய விளைவுகளைத்தரக்கூடியது. இதனையே சர்வதேச சமூகம் உள்ளிட்ட ஐ.நா சபை கூட சொல்கின்றன. பெரும் மனிதப்பேரிவுகள் ஏற்படக்கூடிய நிலையே இப்போது ஏற்பட்டிருப்பதாகவும் அவை கவலையடைந்திருக்கின்றன.
இந்த நிலையில் போரைத்தவிர்ப்பதற்கு ஒரேயொரு தெரிவு மட்டுமே உண்டு. அது சர்வதேச சமூகததின் கைகளிலேயே இருக்கிறது.
பொத்தாம் பொதுவாகவும் மேலோட்டமாகவும் அழுத்தங்கள் என்ற போர்வையிலும் கண்டனங்கள் என்ற வகையிலும் ஒளித்து விளையாடாமல் சர்வ தேச சமூகம் இப்போது தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்.
சிறிலங்கா பிற நாட்டு உதவிகளிலும் ஆதரவிலும் தங்கியிருக்கும் நாடு. அதிலும் சர்வNதுச நிதியுதவியை வைத்துத்ததான் சிறிலங்காவின் பட்ஜெட்டே உருவாக்கப்படுகிறது. எனவே சிறிலங்காவை கட்டுப்படுத்தக்கூடிய வல்லாண்மை சர்வதேச சமூகத்துக்கு மிக வசதியாகவேயுண்டு.
இந்த வசதியையப்பயன் படுத்தி அது சிறிலங்காவை வழிக்குக் கொண்டுவர வேண்டும். அதன்மூலம் சமாதானத்துக்கும் போர் நிறுத்தத்துக்குமான ஒரு புறச்சூழலை உருவாக்கலாம். சிறிலங்கா அரசின் போர் முனைப்புக்குறையும் போது புலிகளின் போர் முனைப்பும் தணிந்து விடும்.
சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பினருடனும் தொடர்பை இன்னமும் சர்வNதுச சமூகம் வைத்திருப்பது இங்கே உதவக்கூடும். ஆனால் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போவதென்பது சாதாரணமானதல்ல. அதற்கு ஏராளமான தடைகளிருக்கின்றன என்பதையும் நாம் இங்கே கவனிக்க் வேண்டும்.
அந்தத் தடைகளைத் தாண்டக்கூடிய மனப்பக்குவத்தை பிரச்சினையுடன் தொடர்புடைய தரப்புகளிடம் வளர்க்க வேண்டும் என்று நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பிரச்சினைகளைக் கையாளக்கூடிய பொறுமையும் நிதானமும் புரந்துணர்வும் மேலான நோக்கும் இல்லாத வரையில் மாற்றுத் தெரிவுக்கும் தீர்வுக்கும் இடமில்லைஎன்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
எனவே போர்தான் யதார்த்தத்தில் இருக்கிறது போலும். அதாவது அழிவுகளும் கண்டனங்களும்தான் மிஞ்சப் போகின்றன. மீண்டும் வகைதொகையில்லாத அளவில் கண்டன அறிக்கைகள் வரப் போகின்றன.
அந்த அறிக்கைகள் காலங்கடந்தவையாகவும் ஏதும் செய்ய முடியாதவையாகவுமே இருக்கும். அதைப்பற்றி யாருக்குத்தான் கவலையிருக்கப் போகிறது.
இதற்கெல்லாம் முதற்படி தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய கரிசனை உண்மையாகவே சகலருக்கும் ஏற்பட வேண்டும். குறிப்பாக சர்வ தேச சமூகத்துக்கு.
No comments:
Post a Comment