Monday, August 6, 2007
வெளிச்சக்திகள் விரும்பும் மங்கள - ரணில் கூட்டு
கொழும்பில் இப்போது விசித்திரமான சம்பவங்கள் நடக்கின்றன. இந்த விசித்திரமான சம்பவங்கள் உருவாக்குகின்ற
தாண்டமுடியாத கிணறுகள்...
1
வன்னியில் இப்போது ஐம்பது கிலோ நிறையுள்ள ஒரு சிமென்ற் பாக்கின் விலை என்ன தெரியுமா? கேட்டால்
வன்னியில் இப்போது ஐம்பது கிலோ நிறையுள்ள ஒரு சிமென்ற் பாக்கின் விலை என்ன தெரியுமா? கேட்டால்
யாழ்பாணத்துக்கான பாதை மூடப்பட்டு ஒருவருடநிறைவு...
தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவது என்பார்களே அதுமாதிரி, யாழ்;ப்பாணத்திலிருந்து பலாலிக்குப்போய் பிறகு
வருமுன் காக்குமா இந்தியா...
ஒரு திடீர்த்திருப்பமாக இந்தியாவின் முன்னாள் சிறப்புத்தூதுவரும் இலங்கை விவகாரங்களில்
இலங்கையின் பிளவுற்ற பொருளாதார நிலைகள்...
உங்களுக்கு முறிகண்டியை ஞாபகமிருக்கிறதா. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும்போது கண்டி வீதி என்று சொல்லப்படும் ஏ9 வீதியில், கிளிநொச்சிக்கு முன்பாக வன்னியின் மையத்தில் ஒரு சின்னக்கோவிலிருக்குமே, பாலை மரத்தோடு ஒரு சிறிய கொட்டில்போல இருக்கும் அந்தக்கோவிலை மறந்து விட்டீர்களா. கோவில் சிறியதாக இருந்தாலும் எப்போதும் அந்தக் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். முறிகண்டிப்பிள்ளையார் கீர்த்தியுள்ளவரோ இல்லையோ எல்லோருக்கும் நட்பானவர்.
கற்பூர வாசனையும் தேங்காய் உடைப்பும் கச்சானும் முறிகண்டியின் மறக்கமுடியாத ஞாபகங்கள். எப்போதும் அங்கே கூட்டம்தான். பெரிய திருவிழாவோ பொங்கலோ குளிர்த்தியோ என்று எதுவும் கிடையாது. ஆனால் எப்படியொ கூட்டம் திரண்டு விடுகிறது. நானறிந்தவரையில் முறிகண்டியில் ஆகப்பெரிய நேர்த்தி என்றால் தலைமுடி மழிப்பதும் சோறு தீத்துவதும்தான். நீண்டநாளைக்குப்பிறகு நேற்று முறிகண்டிக்குப்போனேன். கோவிலடி வெறிச்சோடிப்போயிருக்கிறது. ஆள்நடமாட்டமே நல்லாக்குறைந்து விட்டது. கடைகளும் குறைந்து விட்டன. ஆட்களில்லாமல் இருக்கும்போது எதுக்காக அதிகம் கடைகள் இருக்க வேணும்.
போன வருசம் இப்படியா இருந்தது முறிகண்டி. சமாதானம் வற்றியதுடன் முறிகண்டியும் வற்றிவிட்டது. ஏ9 வீதிப்போக்கவரத்து இருந்தால்தான் முறிகண்டி உயிர்ப்பாக இரக்கம். இப்போது ஏ9 வீதி கிழமையில் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் திறக்கப்படுது. அதுவும் முழுநேரமாகத் திறக்கப்படவில்லை. படையினர் விரும்பிய நேரத்தில் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமாக மூன்று நாட்போக்குவரத்து நடக்கிறது. சில வேளை அதுவும் நடக்காது. இந்த நிலைமையில் எப்படி முறிகண்டியில் சனக்கூட்டமிருக்கும்.
அதிலும் யாழ்ப்பாணத்துக்கான போக்குவரத்து வன்னிக்குள்ளால் இல்லாமற்போன பிறகு முறிகண்டியில் எப்படிச்சனம் கூடமுடியம். அப்போது எத்தனை பஸ்ஸ_ம் வாகனங்களும் அந்தக் கோவிலைச் சுற்றி நிற்கும். பெருந்திருவிழாவில் நிற்கிறதைப்போல அவ்வளவு சனம். அதிலும் ஒரு விசேசம் என்னவென்றால், மற்றக் கோவில்களில் நடக்கும் திருவிழாக்களில் எப்போதும் கூட்டமிருக்காது. சிலநேரம் அதிகமாகக்கூட்டமிருக்கும். சிலபோது குறைந்திருக்கும். ஆனால் திருவிழா முடிந்தால் கோவிலடி வெறிச்சோடிப்போய்விடும்.
முறிகண்டியில் எப்போதும் கூட்டமிருக்கம். அதன் அமைவிடம் இப்படியிருப்பதால் அதில் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும் கூட்டம். ஏ9 வீதியினால் எவ்வளவுக்க வாகனங்கள் ஓடுகின்றனவோ அந்தளவுக்கு கூட்டம் இருக்கும். அவ்வளவுதான். வாகனப்போக்குவரத்து இல்லையென்றால் முறிகண்டிப்பிள்ளையார் தனித்துவிடுவார். நான் முறிகண்டிக்குப்போனபோது ஒரு பஸ்ஸ_ம் பழைய லொறியம் மூன்று நான்கு மண்ணெண்ணை மோட்டார் சைக்கிள்களும்தான் அங்கே நின்றன. அவையும் மல்லாவிக்கோ புதுக்குடியிருப்புக்கோ அக்கராயனுக்கோ போவதற்காக அங்கே இளைப்பாறுகின்றன.
போரின் நிலைமையை யாரும் முறிகண்டியில் பார்க்கலாம் என்றொரு நண்பர் முன்பு ஜெயசிக்குறு காலத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது. அதுமட்டுமா தமிழ்மக்களின் வாழ்வின் செழிப்பையும் வரட்சியையும் கூட முறிகண்டியில் பார்த்தால் தெரியும்.மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள்கள் புகையைக் கக்கிக்கொண்டு தனியே நீண்டு வெறித்திருக்கும் வீதியால் போய்க் கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரிய மூட்டைகளைக் கட்டிக்கொண்டு போகிறார்கள். யாருடைய முகததிலும் பெரிய மகிழ்ச்சியைக்காணவில்லை. எல்லோரும் படு சீரியஸாகவே இரக்கிறார்கள். போர் எப்பொதும் சீரியஸாகவே இருக்கிறது.
அது உயிரோடும் வாழ்வோடும் நேரடியாக் சம்மந்தப்பட்டது. கரணம் தப்பினால் மரணம் என்பார்களெ அதுதான். உயிருடன் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் யாரும் விளையாட முடியுமா. அதில் அவகாசமோ அவதானக்குறைவோ இருக்க முடியாது.
இந்தச் சீரியஸ்தனம் எப்படியொ எல்லாச் சனங்களுக்கும் வந்துவிடுகிறது. போரில் அவர்கள் ஒவ்வொருவரும் எப்படியோ ஏதோ வகையில் சம்ந்தப்பட்டே ஆகிவிடுகிறார்கள். போரின் இயல்பு அது. அது யாரையும் தீண்டாமல் விடாது. அதையார் விரும்பினால் என்ன விரும்பாது விட்டால் என்ன அது எவரையும் விட்டு வைக்காது. போரின் நிழல் படிந்த முகங்களோடு அவர்கள் எங்கெங்கோவெல்லாம் போய்க்கொண்டிருக்கிறார்கள். மண்ணெண்ணெய் மோட்டார்ச் சைக்கிள்கள் எதையும் தாங்கிக் கொள்ளத்திராணியுள்ளவை என்பதாகப்படுகிறது.
இவ்வளவு பெரும் பாரத்தோடு மேடு பள்ளம் நிறைந்த வீதிகளாலும் ஒழுங்கைகளுக்குள்ளாலும் அவை அவர்களுடைய வீடுகளுக்கும் தோட்ங்களுக்கும் கடற்கரைக்கும் பேசாமற்போகின்றன.
இது என்ன வேடிக்கை. சனங்கள் இப்படி புழதி படிந்தபடி மணணெண்ணெய் வண்டிகளிலும் வாகனங்களிலும் அலைந்தபடியிருக்கும்போது வெள்ளை வாகனங்களில் பெரிய கொடி பறக்க தொண்டு நிறுவனங்கள் புழதியை வாரியிறைத்தபடி பறக்கின்றன.
என்ன் செய்வது எல்லாம் விதியாகிவிட்டது என்றபடி ஒரு சைக்கிளோடி தன்பாட்;டில் சொல்லிக்கொண்டு போகிறார். அவரை முந்தியும் எதிர்;கொண்டும் இன்னும் பல தொண்டு வாகனங்கள் போகக்கூடும். ஆனால் அவரால் எதையும் முந்திச் செல்லமுடியாது. அவர் புழதி குடிக்கப்பிறந்தவர். அவர் மண்ணின் மைந்தனல்லவா.
யாரோ கத்திக்கதறியபடி ஒரு மோட்டார்ச்சைக்கிளில் வருகிறார்கள். எங்கே போகிறார்கள். ஏன் போகிறார்கள். இப்படி யாராவது அந்தரப்பட்டு வந்தால் ஒன்றில் பாம்பு கடித்திருக்கும். அல்லது விதானக்குண்டு வீசச்pல் அகப்பட்டு காயப்பட்ட சனங்களாக இருக்கும். இது யார். பொதுவாக ஆஸ்பத்திரி கேஸ்கள்தான்; இப்படி அந்தரப்பட்டு வரும்.
குண்டுவீச்சில் காயப்பட்ட கேஸ்தான் இதுவும். கடவுளெ.. இதென்ன கொடுமை … யார் காயப்பட்டிருக்கிறார்கள். ஆணா பெண்ணா மூப்பா இளமையா … .
பெண்ணொருத்திதான் காயப்பட்டிருக்கிறாள். கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறார்கள். காயப்பட்;ட பெண்ணை யாரோ ஒருத்தர் மடியில் தாங்கி வைத்திருக்கிறார். இரத்தம் இன்னும் காயவில்லை. சொட்டிக்கொண்டேயிருக்கிறது. தெருநீளம் அவளின் இரத்தம் சிந்தவேண்டிய விதியைப்பார்த்தீர்களா.
இந்த விதியைத்தான் இப்போது சிறிலங்காவின் ஜனாதிபதி திரு மகிந்த ராஜபக்ஸ அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கிழக்கின் உதயம் என்று மட்டக்களப்பிலுள்ள குடுமு;பிமலையைக் கைப்பற்றியதை ஒரு பெரிய வெற்றி விழாவாக கொழும்பில் கொண்டாடியதே தமிழர்கள் இப்படி இரத்தம் சிந்தத்தான்.
2
கொழும்பில் மகிந்த ராஜபக்ஸ போன கிழமை பெரியதொரு வெற்றி விழாவைக் கொண்டாடினார். போரில் அவர் தன்னுடைய எதிர்காலத்தையும் இலங்கையின் நிகழ்காலத்தையம் முதலீடு செய்துள்ளார். அந்த முதலீட்டை அதிகம் கவர்ச்சிகரமாக்க வேண்டுமாயின் அவர் அப்படி கிடைக்கும் சிறு வெற்றிகளையோ சாதக அம்சங்களையோ அவர் கொண்டாடித்தான் ஆக வேண்டும். ஆனால் மகிந்த ராஜபக்ஸவின் இந்த விருப்பத்துக்கும் நோக்கத்துக்கும் கொழும்பில் உடன்பாடற்ற தன்மை அதிகரித்து வருகிறது. அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் கட்சிகளே அரசாங்கத்தை இப்போது கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன.
கடுமையான இனவாதக்கட்சிகளாக அடையாளங்காணப்பட்ட சிஹல உறுமய மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகளே அரசாங்கத்தின் வெற்றி விழாக்கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை. இந்த வெற்றிவிழாவை அரசாங்கம் கொண்டாடவில்லை. இது மகிந்த ராஜபக்ஸவின் தனிப்பட்ட தேவைகள் , நலன்களுக்கான கொண்டாட்டம் என்றும் அந்தக்கட்சிகள் விமர்சித்திருந்தன.
அத்துடன் ஐ.தே.க வும் ஏனைய இடதுசாரிக்கட்சிகளும் ஊடகங்களும் கூட இநந்தக் கொண்டாட்டத்தை ஒரு பைத்தியக்காரத்தனத்தின் வெளிப்பாடு என்று வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தெரிவித்திருந்தன.
மகிந்தவின் இந்த வெற்றிக் கொண்டாட்;த்தின் ஆதரவு மற்றும் எதிர்ப்பலைகள் அடங்குவதற்குமுன்னர் இப்போது கொழும்பில் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திரு மங்கள சமரவீர, சூரியாராய்ச்சி ஆகியோரும் ரணிலும் மனோகணேசன் போன்றோரும் பெரியதொரு பேரணியை நடத்ததியிருக்கிறார்கள். இந்;தப்பேரணியில் கிட்டத்தட்;ட ஒரு லட்சம் மக்கள்வரையில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மகிந்த பெரியதொரு வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தி ஒரு வாரமாகுவதற்கு இடையில் இந்தப்பேரணி நடத்தப்பட்டிருக்கிறது.
அப்படி நடத்தப்பட்ட இந்தப்பேரணியில் இந்தளவு மக்கள் கலந்து கொண்டனர் என்றால் மகிந்தவின் அணுகுமுறையில் சனங்கள் திருப்பியறற்றிருக்கிறார்கள் என்றுதானெ அரத்தம். அத்துடன் ரணில் மங்கள கூட்டணியின் இந்தப்பேரணிக்கு போட்டியாகவும் எதிர்ப்பாகவும் அரசாங்கத்தரப்பும் சிங்களப்பகுதிகளெங்கும் கூட்டங்களை அதே நாள் நடத்தியது. ஆனால் அரசாங்கத்தரப்பின் கூட்டங்களுக்கு அவ்வளவாகக் கூட்டம் சேரவில்லை. அததுடன் இந்தக்கூட்டடங்களிலும் அரசாங்கத்தின் ஆதரவுககட்சிகள் கலந்து கொள்ளவில்லை.அப்படியென்றால் இப்போது அரசாங்கத்துக்குள் ஒரு வெடிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று யாரும் கேட்கலாம். அதில் ஓரளவு உண்மையுண்டு. இப்பொதே அரசாங்கத்துக்குள் இழுபறிகளும் உள் முரண்பாடுகளும் அதிகரித்திருக்கின்றன.
இந்தமாதிரியான ஒரு நிலையைத்தான் இப்போது சர்வதேச சமூகமும் இலங்கையைப் பொறுத்து விரும்புதாகத் தெரிகிறது. அதாவது அரசாங்கம் பலவீனப்படும் ஒரு நிலையையே அது அதிகமும் விரும்புகிறது. இப்போது பலவீனமாக இருந்த ரணில் மெல்ல மெல்ல பலமடைந்து வரவதாக கொழும்பின் அசைவுகள் காட்டுகின்றன. ரணிலும் மங்களவும் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியுள்ள எதிர்ப்பலை மகிந்தவை இனி நிச்சயம் நித்திரை கொள்ளவிடப்போவதில்லை.
மகிந்தவின் நிகழ்ச்சிநிரல் இப்படி அதிகரித்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சிங்கள மக்கள் பரவலாக வாய்விட்டே சொல்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்லாமல் வேறு என்னதான் nசெய்ய முடியும். மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தபோது ஒரு லீறறர் மண்ணெண்ணெய் கொழும்பில் 28 ரூபாய்க்கு விற்றது. ஆனால் இப்போது 85 ரூபாயாகிவிட்டது. ( வன்னியின் விலை வேறு ) ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 24 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 55 ஆக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் எல்லாப் பொருட்களின் விலையம் பொரின் பேரால் ஏற்றிவிடப்பட்டுள்ளது.
ஒரு வருசத்தில் இப்படி இரண்டு மூன்று மடங்கு என் விலையேறும்போது அதை யாரால்தான் தாங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். இவ்வளவுக்கும்இந்த விலையேற்றத்துக்கு அவர் சிங்களச்சமூகத்துக்கு பரிசாகக் கொடுத்தது கிழக்கின் வெற்றியைத்தான். இந்த வெற்றி அவர்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. அதனால்தான் அரசாங்கத்தரப்பு ரணிலுக்குப்போடடியாக நடத்திய கூட்டங்களில் பெரிதாகச் சனங்கள் கூடவில்லை.ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் நடத்துகின்ற கூட்டத்துக்கே அதிகமாகச் சனங்கள் பொவது வழமை. ஏனென்றால் அப்போதுதான லாபங்களை அதிகமாகப் பெறலாம் என்று வஅர்கள் மதிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இந்தமுறை அரசாங்கத்துக்கெதிரான பேரணியில் அவர்கள் நின்றிருக்கிறாரகள என்றால் அது சாதாரணமானதல்ல.
அதுவும் இன்னும் நான்கு வருடங்கள் ஆட்சியிலிருக்கக்கூடிய அரசாக இருக்கும் அரசாங்கத்தை அவர்கள் இத்தனை வலுவாக எதிர்ப்பது கட்டாயம் கவனிக்கத்தக்கது. ரணிலை இப்போது சர்வதேச சமூகம் அதிpகமாக உசார்ப்படுத்துவதாகவும் தெரிகிறது. ஐ.தே.க விலிருந்து வெளியேறியோரால் பலவீனமான நிலையிலிருந்த ரணில் இப்போது மங்களவுடன் கூட்டுச் சேர்ந்து சற்றுப்பலமடைந்திருக்கிறார் என்பதை இந்தச்சம்பவங்கள் காட்டகின்றன.
இப்போது ரணில் மங்கள கூட்டுக்கு ஆமற்குலகின் ஆதரவும் ஆலொசனையும் இருப்பதாக பகிரங்கமாகவே கொழும்பில் பேச்சடிபடுகிறது. அதாவது ஜே.வி.பி யுடன் தொடரபில்லாத வட்டாரங்களெ இப்படிச் சொல்கின்றன.ஆக மகிந்த ராஜபக்ஸ எதிர்பாரி;த்ததற்கும் மாறாகவே நிகழ்சச்pகள் மாறத் தொடங்கிவிட்டன. அவர் இன்னும் வடக்கில் போரைத்தொடங்கவேயில்லை. அது மட்டுமல்ல புலிகளும் இன்னும் பொரை ஆரம்பிக்கவில்லை. அதற்கிடையில் அரசாங்கம் ஆட்டங்காணக்கூடிய நிலைமையை நோக்கிப் பnhய்க்கொண்டிருக்கிறது.
கிழக்கில் படைத்தரப்பு பெற்றிரக்கிற அனுகூலங்களுக்கே வரவேற்பில்லாத ஒரு நிலை இருக்கும்போது வடக்கில் படைத்தரப்பு சந்திக்கவுள்ள நிலைமைகள் எப்படியான வரவேற்பை அளிக்கும் என்பதை யாரும் இலகுவாக ஊகித்துக்கொள்ள முடியும்.வடக்குப்போர்க்களம் எல்லோரும் எதிர்பார்ப்பதைப்போலவும் எல்லோரும் சொல்வதைப்போலவும் முற்றிலும் வித்தியாசமானது. குறிப்பாக அது புலிகளுக்கே அதிக சாத்தியங்களையுடையது. எப்போதும் வன்னியில்தான் யுத்த முனைப்புகள் தணிவடைவது வழமை. அல்லது யுத்த முனை முறிபடுவது.
இப்போது மகிந்த ராஜபக்ஸவும் இப்படியான ஒரு தணிவுக்கும் முனைமுறிவுக்கும் உள்ளாகத்தான் போகிறார். அதற்கு முன்னர் அவருக்கு அரசியல் எதிரிகளும் எதிர் வளையங்களும் உருவாகிவிட்டன. அதேபோல அடுதத கட்டததில் போரின் எதிர் வளையங்களம் அவரையும் அரசாங்கத்தையும் சுற்றிவளைக்கவே போகின்றன.விட்டுப்பிடிக்கும் ஒரு அணுகுமுறையை பின்பற்றும் சர்வதேச சமூகம் இப்பொது சற்றுத் தூர்திலிருந்து வேடிக்கை பார்;க்கிறது.
ஆனால் அதற்கிடையில் முறிகண்டியில் இரத்தம் சிந்தச்சிந்த விமானக்குண்டு வீச்சில் காயப்பட்ட அந்தப் பெண்ணைப்போல மகிந்த ராஜபக்ஸ நாடுமுழுவதும் அவலங்களையும் இரத்தப் பெருக்கையும் உருவாக்கத்தான் போகிறார். அவர் இப்போது தன்னைக் கட்டுப்படுத்தமுடியாத போர் வளையத்துக்குள் நுiழைந்து விட்டார். அவர் மட்;டுமல்ல இலங்கைத்தீவில் மகிநதவின் பொறிக்குள் சகலரையும் அவர் வீழு;ததி விட்டார். இப்போது பரிதாபத்துக்குரிய நிலையிலிருப்போர் சனங்கள்ததான்.
3
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இருபத்தைந்து நாட் திருவிழாவுக்கு பதினைஞ்சு வருசமாக வன்னியிலிருந்து கொண்டு விரதம் பிடிக்கிறா கமலமக்கா. ஒல்வொரு வருசமும் தன்ர ஊரக்குப் போய்விடுவன் என்று அவ முழு நம்பிக்கையோடு இருக்கிறதைப் புhர்க்க எனக்கே வயிறு பத்தி எரியும்.
அந்த மனுசியின்ர ஆசையையும் நம்பிக்கையையும் எப்படி என்னால் மறுதலிக்க முடியும். ஆனால் அதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை எண்டு அவ புரிந்து கொள்ள மாட்டா. அவவுக்கே நிலைமைகளை விளங்கிக் கொளளக்கூடிஙய அனுபவம் தாராளமாகவுண்டு.
இந்த முறையும் தான் போக முடியாத கோவிலுக்காக அவ விரதமிருக்கிறா. பதினைஞ்சு வருசமமாக அவ முரகனை நினைத்து நினைத்து உருகியிருககிறா. முரகன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வசமாகச் சிக்கிவிட்டார்.
கமலமக்கா மட்டுமல்ல, மாவிடடடபுரத்தைச் சேர்ந்த முழப்பேரும் அங்கங்கே நின்ற முரகனை நினைத்து உருகவேண்டியதுதான இப்போது வாழ்வாயிற்று. இப்போது விரதமாவது பிடிக்கக்கூடியதாயிருக்கிறது. இனி அடுத்த கட்டத்தில் அதுவும் இல்லையோ அல்லது அப்படியே அடுத்த வருசம் மாவிட்டபுரத்திலேயே விரதம் பிடிக்கலாமோ என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேணும்.
இன்றைக்கும் அமெரிக்காவிலிருந்து சிறிலங்காவில் நடக்கும் மனிதவுரிமை மீறல்களைப்பற்றி ஒரு கண்டன அறிக்கை வந்திருக்கிறது. பிள்ளையையும் கிள்ளவிட்டு தொடட்டிலையும் ஆட்டிவிடும் தந்ததிரோபாயம் இது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வார்கள். இப்போது இலங்கை எத்தனை துண்டாக உளவியல் ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் துண்டாகிவிட்டது என்பதை யாரும் கவனிப்பதாக இல்லை. எரிகின்ற நாட்டில் இப்போது எத்தனையோ பெரும் அணிகள் வந்துவிட்டன. எல்லாம் ஒன்றிலொன்ற தங்கியபடி.
இந்தக்கவனக்குறைவுகளுக்கெல்லாம் ஒரு தண்டனை கிடைக்கத்தான் போகிறது. இனிப்போதும். அடுத்த கிழமை மிச்சத்தைப்பாக்கலாம். வெக்கையாகவும் கடும் புழக்கமாகவும் இருக்கு. இண்டைக்கு ஒரு கிலோ மீனின் சராசரி விலை என்ன தெரியுமா நானூற்றம்பது ரூபாய்.இனி யாரால்தான மீன் சாப்பிட முடியும். வாங்கேலாமல் கைவிடப்பட்;டவற்றில் இப்பொது மெல்ல மெல்ல மீனும் விலையேறிவிட்டது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நாட்டில் ரின் மீன் இறக்கப்படுகிறது என்று சிரித்திரன் சுந்தர் சொன்னதை ஒஐ தடவை நினைத்துப் பாருங்கள்.
கற்பூர வாசனையும் தேங்காய் உடைப்பும் கச்சானும் முறிகண்டியின் மறக்கமுடியாத ஞாபகங்கள். எப்போதும் அங்கே கூட்டம்தான். பெரிய திருவிழாவோ பொங்கலோ குளிர்த்தியோ என்று எதுவும் கிடையாது. ஆனால் எப்படியொ கூட்டம் திரண்டு விடுகிறது. நானறிந்தவரையில் முறிகண்டியில் ஆகப்பெரிய நேர்த்தி என்றால் தலைமுடி மழிப்பதும் சோறு தீத்துவதும்தான். நீண்டநாளைக்குப்பிறகு நேற்று முறிகண்டிக்குப்போனேன். கோவிலடி வெறிச்சோடிப்போயிருக்கிறது. ஆள்நடமாட்டமே நல்லாக்குறைந்து விட்டது. கடைகளும் குறைந்து விட்டன. ஆட்களில்லாமல் இருக்கும்போது எதுக்காக அதிகம் கடைகள் இருக்க வேணும்.
போன வருசம் இப்படியா இருந்தது முறிகண்டி. சமாதானம் வற்றியதுடன் முறிகண்டியும் வற்றிவிட்டது. ஏ9 வீதிப்போக்கவரத்து இருந்தால்தான் முறிகண்டி உயிர்ப்பாக இரக்கம். இப்போது ஏ9 வீதி கிழமையில் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் திறக்கப்படுது. அதுவும் முழுநேரமாகத் திறக்கப்படவில்லை. படையினர் விரும்பிய நேரத்தில் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமாக மூன்று நாட்போக்குவரத்து நடக்கிறது. சில வேளை அதுவும் நடக்காது. இந்த நிலைமையில் எப்படி முறிகண்டியில் சனக்கூட்டமிருக்கும்.
அதிலும் யாழ்ப்பாணத்துக்கான போக்குவரத்து வன்னிக்குள்ளால் இல்லாமற்போன பிறகு முறிகண்டியில் எப்படிச்சனம் கூடமுடியம். அப்போது எத்தனை பஸ்ஸ_ம் வாகனங்களும் அந்தக் கோவிலைச் சுற்றி நிற்கும். பெருந்திருவிழாவில் நிற்கிறதைப்போல அவ்வளவு சனம். அதிலும் ஒரு விசேசம் என்னவென்றால், மற்றக் கோவில்களில் நடக்கும் திருவிழாக்களில் எப்போதும் கூட்டமிருக்காது. சிலநேரம் அதிகமாகக்கூட்டமிருக்கும். சிலபோது குறைந்திருக்கும். ஆனால் திருவிழா முடிந்தால் கோவிலடி வெறிச்சோடிப்போய்விடும்.
முறிகண்டியில் எப்போதும் கூட்டமிருக்கம். அதன் அமைவிடம் இப்படியிருப்பதால் அதில் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும் கூட்டம். ஏ9 வீதியினால் எவ்வளவுக்க வாகனங்கள் ஓடுகின்றனவோ அந்தளவுக்கு கூட்டம் இருக்கும். அவ்வளவுதான். வாகனப்போக்குவரத்து இல்லையென்றால் முறிகண்டிப்பிள்ளையார் தனித்துவிடுவார். நான் முறிகண்டிக்குப்போனபோது ஒரு பஸ்ஸ_ம் பழைய லொறியம் மூன்று நான்கு மண்ணெண்ணை மோட்டார் சைக்கிள்களும்தான் அங்கே நின்றன. அவையும் மல்லாவிக்கோ புதுக்குடியிருப்புக்கோ அக்கராயனுக்கோ போவதற்காக அங்கே இளைப்பாறுகின்றன.
போரின் நிலைமையை யாரும் முறிகண்டியில் பார்க்கலாம் என்றொரு நண்பர் முன்பு ஜெயசிக்குறு காலத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது. அதுமட்டுமா தமிழ்மக்களின் வாழ்வின் செழிப்பையும் வரட்சியையும் கூட முறிகண்டியில் பார்த்தால் தெரியும்.மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள்கள் புகையைக் கக்கிக்கொண்டு தனியே நீண்டு வெறித்திருக்கும் வீதியால் போய்க் கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரிய மூட்டைகளைக் கட்டிக்கொண்டு போகிறார்கள். யாருடைய முகததிலும் பெரிய மகிழ்ச்சியைக்காணவில்லை. எல்லோரும் படு சீரியஸாகவே இரக்கிறார்கள். போர் எப்பொதும் சீரியஸாகவே இருக்கிறது.
அது உயிரோடும் வாழ்வோடும் நேரடியாக் சம்மந்தப்பட்டது. கரணம் தப்பினால் மரணம் என்பார்களெ அதுதான். உயிருடன் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் யாரும் விளையாட முடியுமா. அதில் அவகாசமோ அவதானக்குறைவோ இருக்க முடியாது.
இந்தச் சீரியஸ்தனம் எப்படியொ எல்லாச் சனங்களுக்கும் வந்துவிடுகிறது. போரில் அவர்கள் ஒவ்வொருவரும் எப்படியோ ஏதோ வகையில் சம்ந்தப்பட்டே ஆகிவிடுகிறார்கள். போரின் இயல்பு அது. அது யாரையும் தீண்டாமல் விடாது. அதையார் விரும்பினால் என்ன விரும்பாது விட்டால் என்ன அது எவரையும் விட்டு வைக்காது. போரின் நிழல் படிந்த முகங்களோடு அவர்கள் எங்கெங்கோவெல்லாம் போய்க்கொண்டிருக்கிறார்கள். மண்ணெண்ணெய் மோட்டார்ச் சைக்கிள்கள் எதையும் தாங்கிக் கொள்ளத்திராணியுள்ளவை என்பதாகப்படுகிறது.
இவ்வளவு பெரும் பாரத்தோடு மேடு பள்ளம் நிறைந்த வீதிகளாலும் ஒழுங்கைகளுக்குள்ளாலும் அவை அவர்களுடைய வீடுகளுக்கும் தோட்ங்களுக்கும் கடற்கரைக்கும் பேசாமற்போகின்றன.
இது என்ன வேடிக்கை. சனங்கள் இப்படி புழதி படிந்தபடி மணணெண்ணெய் வண்டிகளிலும் வாகனங்களிலும் அலைந்தபடியிருக்கும்போது வெள்ளை வாகனங்களில் பெரிய கொடி பறக்க தொண்டு நிறுவனங்கள் புழதியை வாரியிறைத்தபடி பறக்கின்றன.
என்ன் செய்வது எல்லாம் விதியாகிவிட்டது என்றபடி ஒரு சைக்கிளோடி தன்பாட்;டில் சொல்லிக்கொண்டு போகிறார். அவரை முந்தியும் எதிர்;கொண்டும் இன்னும் பல தொண்டு வாகனங்கள் போகக்கூடும். ஆனால் அவரால் எதையும் முந்திச் செல்லமுடியாது. அவர் புழதி குடிக்கப்பிறந்தவர். அவர் மண்ணின் மைந்தனல்லவா.
யாரோ கத்திக்கதறியபடி ஒரு மோட்டார்ச்சைக்கிளில் வருகிறார்கள். எங்கே போகிறார்கள். ஏன் போகிறார்கள். இப்படி யாராவது அந்தரப்பட்டு வந்தால் ஒன்றில் பாம்பு கடித்திருக்கும். அல்லது விதானக்குண்டு வீசச்pல் அகப்பட்டு காயப்பட்ட சனங்களாக இருக்கும். இது யார். பொதுவாக ஆஸ்பத்திரி கேஸ்கள்தான்; இப்படி அந்தரப்பட்டு வரும்.
குண்டுவீச்சில் காயப்பட்ட கேஸ்தான் இதுவும். கடவுளெ.. இதென்ன கொடுமை … யார் காயப்பட்டிருக்கிறார்கள். ஆணா பெண்ணா மூப்பா இளமையா … .
பெண்ணொருத்திதான் காயப்பட்டிருக்கிறாள். கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறார்கள். காயப்பட்;ட பெண்ணை யாரோ ஒருத்தர் மடியில் தாங்கி வைத்திருக்கிறார். இரத்தம் இன்னும் காயவில்லை. சொட்டிக்கொண்டேயிருக்கிறது. தெருநீளம் அவளின் இரத்தம் சிந்தவேண்டிய விதியைப்பார்த்தீர்களா.
இந்த விதியைத்தான் இப்போது சிறிலங்காவின் ஜனாதிபதி திரு மகிந்த ராஜபக்ஸ அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கிழக்கின் உதயம் என்று மட்டக்களப்பிலுள்ள குடுமு;பிமலையைக் கைப்பற்றியதை ஒரு பெரிய வெற்றி விழாவாக கொழும்பில் கொண்டாடியதே தமிழர்கள் இப்படி இரத்தம் சிந்தத்தான்.
2
கொழும்பில் மகிந்த ராஜபக்ஸ போன கிழமை பெரியதொரு வெற்றி விழாவைக் கொண்டாடினார். போரில் அவர் தன்னுடைய எதிர்காலத்தையும் இலங்கையின் நிகழ்காலத்தையம் முதலீடு செய்துள்ளார். அந்த முதலீட்டை அதிகம் கவர்ச்சிகரமாக்க வேண்டுமாயின் அவர் அப்படி கிடைக்கும் சிறு வெற்றிகளையோ சாதக அம்சங்களையோ அவர் கொண்டாடித்தான் ஆக வேண்டும். ஆனால் மகிந்த ராஜபக்ஸவின் இந்த விருப்பத்துக்கும் நோக்கத்துக்கும் கொழும்பில் உடன்பாடற்ற தன்மை அதிகரித்து வருகிறது. அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் கட்சிகளே அரசாங்கத்தை இப்போது கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன.
கடுமையான இனவாதக்கட்சிகளாக அடையாளங்காணப்பட்ட சிஹல உறுமய மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகளே அரசாங்கத்தின் வெற்றி விழாக்கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை. இந்த வெற்றிவிழாவை அரசாங்கம் கொண்டாடவில்லை. இது மகிந்த ராஜபக்ஸவின் தனிப்பட்ட தேவைகள் , நலன்களுக்கான கொண்டாட்டம் என்றும் அந்தக்கட்சிகள் விமர்சித்திருந்தன.
அத்துடன் ஐ.தே.க வும் ஏனைய இடதுசாரிக்கட்சிகளும் ஊடகங்களும் கூட இநந்தக் கொண்டாட்டத்தை ஒரு பைத்தியக்காரத்தனத்தின் வெளிப்பாடு என்று வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தெரிவித்திருந்தன.
மகிந்தவின் இந்த வெற்றிக் கொண்டாட்;த்தின் ஆதரவு மற்றும் எதிர்ப்பலைகள் அடங்குவதற்குமுன்னர் இப்போது கொழும்பில் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திரு மங்கள சமரவீர, சூரியாராய்ச்சி ஆகியோரும் ரணிலும் மனோகணேசன் போன்றோரும் பெரியதொரு பேரணியை நடத்ததியிருக்கிறார்கள். இந்;தப்பேரணியில் கிட்டத்தட்;ட ஒரு லட்சம் மக்கள்வரையில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மகிந்த பெரியதொரு வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தி ஒரு வாரமாகுவதற்கு இடையில் இந்தப்பேரணி நடத்தப்பட்டிருக்கிறது.
அப்படி நடத்தப்பட்ட இந்தப்பேரணியில் இந்தளவு மக்கள் கலந்து கொண்டனர் என்றால் மகிந்தவின் அணுகுமுறையில் சனங்கள் திருப்பியறற்றிருக்கிறார்கள் என்றுதானெ அரத்தம். அத்துடன் ரணில் மங்கள கூட்டணியின் இந்தப்பேரணிக்கு போட்டியாகவும் எதிர்ப்பாகவும் அரசாங்கத்தரப்பும் சிங்களப்பகுதிகளெங்கும் கூட்டங்களை அதே நாள் நடத்தியது. ஆனால் அரசாங்கத்தரப்பின் கூட்டங்களுக்கு அவ்வளவாகக் கூட்டம் சேரவில்லை. அததுடன் இந்தக்கூட்டடங்களிலும் அரசாங்கத்தின் ஆதரவுககட்சிகள் கலந்து கொள்ளவில்லை.அப்படியென்றால் இப்போது அரசாங்கத்துக்குள் ஒரு வெடிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று யாரும் கேட்கலாம். அதில் ஓரளவு உண்மையுண்டு. இப்பொதே அரசாங்கத்துக்குள் இழுபறிகளும் உள் முரண்பாடுகளும் அதிகரித்திருக்கின்றன.
இந்தமாதிரியான ஒரு நிலையைத்தான் இப்போது சர்வதேச சமூகமும் இலங்கையைப் பொறுத்து விரும்புதாகத் தெரிகிறது. அதாவது அரசாங்கம் பலவீனப்படும் ஒரு நிலையையே அது அதிகமும் விரும்புகிறது. இப்போது பலவீனமாக இருந்த ரணில் மெல்ல மெல்ல பலமடைந்து வரவதாக கொழும்பின் அசைவுகள் காட்டுகின்றன. ரணிலும் மங்களவும் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியுள்ள எதிர்ப்பலை மகிந்தவை இனி நிச்சயம் நித்திரை கொள்ளவிடப்போவதில்லை.
மகிந்தவின் நிகழ்ச்சிநிரல் இப்படி அதிகரித்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சிங்கள மக்கள் பரவலாக வாய்விட்டே சொல்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்லாமல் வேறு என்னதான் nசெய்ய முடியும். மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தபோது ஒரு லீறறர் மண்ணெண்ணெய் கொழும்பில் 28 ரூபாய்க்கு விற்றது. ஆனால் இப்போது 85 ரூபாயாகிவிட்டது. ( வன்னியின் விலை வேறு ) ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 24 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 55 ஆக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் எல்லாப் பொருட்களின் விலையம் பொரின் பேரால் ஏற்றிவிடப்பட்டுள்ளது.
ஒரு வருசத்தில் இப்படி இரண்டு மூன்று மடங்கு என் விலையேறும்போது அதை யாரால்தான் தாங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். இவ்வளவுக்கும்இந்த விலையேற்றத்துக்கு அவர் சிங்களச்சமூகத்துக்கு பரிசாகக் கொடுத்தது கிழக்கின் வெற்றியைத்தான். இந்த வெற்றி அவர்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. அதனால்தான் அரசாங்கத்தரப்பு ரணிலுக்குப்போடடியாக நடத்திய கூட்டங்களில் பெரிதாகச் சனங்கள் கூடவில்லை.ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் நடத்துகின்ற கூட்டத்துக்கே அதிகமாகச் சனங்கள் பொவது வழமை. ஏனென்றால் அப்போதுதான லாபங்களை அதிகமாகப் பெறலாம் என்று வஅர்கள் மதிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இந்தமுறை அரசாங்கத்துக்கெதிரான பேரணியில் அவர்கள் நின்றிருக்கிறாரகள என்றால் அது சாதாரணமானதல்ல.
அதுவும் இன்னும் நான்கு வருடங்கள் ஆட்சியிலிருக்கக்கூடிய அரசாக இருக்கும் அரசாங்கத்தை அவர்கள் இத்தனை வலுவாக எதிர்ப்பது கட்டாயம் கவனிக்கத்தக்கது. ரணிலை இப்போது சர்வதேச சமூகம் அதிpகமாக உசார்ப்படுத்துவதாகவும் தெரிகிறது. ஐ.தே.க விலிருந்து வெளியேறியோரால் பலவீனமான நிலையிலிருந்த ரணில் இப்போது மங்களவுடன் கூட்டுச் சேர்ந்து சற்றுப்பலமடைந்திருக்கிறார் என்பதை இந்தச்சம்பவங்கள் காட்டகின்றன.
இப்போது ரணில் மங்கள கூட்டுக்கு ஆமற்குலகின் ஆதரவும் ஆலொசனையும் இருப்பதாக பகிரங்கமாகவே கொழும்பில் பேச்சடிபடுகிறது. அதாவது ஜே.வி.பி யுடன் தொடரபில்லாத வட்டாரங்களெ இப்படிச் சொல்கின்றன.ஆக மகிந்த ராஜபக்ஸ எதிர்பாரி;த்ததற்கும் மாறாகவே நிகழ்சச்pகள் மாறத் தொடங்கிவிட்டன. அவர் இன்னும் வடக்கில் போரைத்தொடங்கவேயில்லை. அது மட்டுமல்ல புலிகளும் இன்னும் பொரை ஆரம்பிக்கவில்லை. அதற்கிடையில் அரசாங்கம் ஆட்டங்காணக்கூடிய நிலைமையை நோக்கிப் பnhய்க்கொண்டிருக்கிறது.
கிழக்கில் படைத்தரப்பு பெற்றிரக்கிற அனுகூலங்களுக்கே வரவேற்பில்லாத ஒரு நிலை இருக்கும்போது வடக்கில் படைத்தரப்பு சந்திக்கவுள்ள நிலைமைகள் எப்படியான வரவேற்பை அளிக்கும் என்பதை யாரும் இலகுவாக ஊகித்துக்கொள்ள முடியும்.வடக்குப்போர்க்களம் எல்லோரும் எதிர்பார்ப்பதைப்போலவும் எல்லோரும் சொல்வதைப்போலவும் முற்றிலும் வித்தியாசமானது. குறிப்பாக அது புலிகளுக்கே அதிக சாத்தியங்களையுடையது. எப்போதும் வன்னியில்தான் யுத்த முனைப்புகள் தணிவடைவது வழமை. அல்லது யுத்த முனை முறிபடுவது.
இப்போது மகிந்த ராஜபக்ஸவும் இப்படியான ஒரு தணிவுக்கும் முனைமுறிவுக்கும் உள்ளாகத்தான் போகிறார். அதற்கு முன்னர் அவருக்கு அரசியல் எதிரிகளும் எதிர் வளையங்களும் உருவாகிவிட்டன. அதேபோல அடுதத கட்டததில் போரின் எதிர் வளையங்களம் அவரையும் அரசாங்கத்தையும் சுற்றிவளைக்கவே போகின்றன.விட்டுப்பிடிக்கும் ஒரு அணுகுமுறையை பின்பற்றும் சர்வதேச சமூகம் இப்பொது சற்றுத் தூர்திலிருந்து வேடிக்கை பார்;க்கிறது.
ஆனால் அதற்கிடையில் முறிகண்டியில் இரத்தம் சிந்தச்சிந்த விமானக்குண்டு வீச்சில் காயப்பட்ட அந்தப் பெண்ணைப்போல மகிந்த ராஜபக்ஸ நாடுமுழுவதும் அவலங்களையும் இரத்தப் பெருக்கையும் உருவாக்கத்தான் போகிறார். அவர் இப்போது தன்னைக் கட்டுப்படுத்தமுடியாத போர் வளையத்துக்குள் நுiழைந்து விட்டார். அவர் மட்;டுமல்ல இலங்கைத்தீவில் மகிநதவின் பொறிக்குள் சகலரையும் அவர் வீழு;ததி விட்டார். இப்போது பரிதாபத்துக்குரிய நிலையிலிருப்போர் சனங்கள்ததான்.
3
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இருபத்தைந்து நாட் திருவிழாவுக்கு பதினைஞ்சு வருசமாக வன்னியிலிருந்து கொண்டு விரதம் பிடிக்கிறா கமலமக்கா. ஒல்வொரு வருசமும் தன்ர ஊரக்குப் போய்விடுவன் என்று அவ முழு நம்பிக்கையோடு இருக்கிறதைப் புhர்க்க எனக்கே வயிறு பத்தி எரியும்.
அந்த மனுசியின்ர ஆசையையும் நம்பிக்கையையும் எப்படி என்னால் மறுதலிக்க முடியும். ஆனால் அதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை எண்டு அவ புரிந்து கொள்ள மாட்டா. அவவுக்கே நிலைமைகளை விளங்கிக் கொளளக்கூடிஙய அனுபவம் தாராளமாகவுண்டு.
இந்த முறையும் தான் போக முடியாத கோவிலுக்காக அவ விரதமிருக்கிறா. பதினைஞ்சு வருசமமாக அவ முரகனை நினைத்து நினைத்து உருகியிருககிறா. முரகன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வசமாகச் சிக்கிவிட்டார்.
கமலமக்கா மட்டுமல்ல, மாவிடடடபுரத்தைச் சேர்ந்த முழப்பேரும் அங்கங்கே நின்ற முரகனை நினைத்து உருகவேண்டியதுதான இப்போது வாழ்வாயிற்று. இப்போது விரதமாவது பிடிக்கக்கூடியதாயிருக்கிறது. இனி அடுத்த கட்டத்தில் அதுவும் இல்லையோ அல்லது அப்படியே அடுத்த வருசம் மாவிட்டபுரத்திலேயே விரதம் பிடிக்கலாமோ என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேணும்.
இன்றைக்கும் அமெரிக்காவிலிருந்து சிறிலங்காவில் நடக்கும் மனிதவுரிமை மீறல்களைப்பற்றி ஒரு கண்டன அறிக்கை வந்திருக்கிறது. பிள்ளையையும் கிள்ளவிட்டு தொடட்டிலையும் ஆட்டிவிடும் தந்ததிரோபாயம் இது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வார்கள். இப்போது இலங்கை எத்தனை துண்டாக உளவியல் ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் துண்டாகிவிட்டது என்பதை யாரும் கவனிப்பதாக இல்லை. எரிகின்ற நாட்டில் இப்போது எத்தனையோ பெரும் அணிகள் வந்துவிட்டன. எல்லாம் ஒன்றிலொன்ற தங்கியபடி.
இந்தக்கவனக்குறைவுகளுக்கெல்லாம் ஒரு தண்டனை கிடைக்கத்தான் போகிறது. இனிப்போதும். அடுத்த கிழமை மிச்சத்தைப்பாக்கலாம். வெக்கையாகவும் கடும் புழக்கமாகவும் இருக்கு. இண்டைக்கு ஒரு கிலோ மீனின் சராசரி விலை என்ன தெரியுமா நானூற்றம்பது ரூபாய்.இனி யாரால்தான மீன் சாப்பிட முடியும். வாங்கேலாமல் கைவிடப்பட்;டவற்றில் இப்பொது மெல்ல மெல்ல மீனும் விலையேறிவிட்டது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நாட்டில் ரின் மீன் இறக்கப்படுகிறது என்று சிரித்திரன் சுந்தர் சொன்னதை ஒஐ தடவை நினைத்துப் பாருங்கள்.
மகிந்தவின் வெற்றிவிழாவிற்கு அடுத்து...
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் தமிழர்களை வெற்றி கொண்டுவிட்டோம் என்ற தோரணையில் பெரியதொரு வெற்றி விழாவைக் கொண்டாடியிருக்கிறது. இந்தமாதிரி முன்னர் திருமதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலும் ஒரு வெற்றிவிழாக் கொண்டாடப்பட்டது. அது யாழ்;ப்பாணத்தை வெற்றி கொண்ட விழா. இது மட்டக்களப்பின் குடும்பிமலைக்காட்டுப்பகுதியை வெற்றி கொண்ட விழா. இந்த வெற்றி விழாவுக்கு அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதே இப்போதுள்ள பெரும் எதிர்பார்ப்பாகவுள்ளது.
அடிப்படையில் இவ்வாறு இந்த வெற்றி விழாக்களை எப்போதும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் கொண்டாடுவதற்கான பின்னணி என்பது ஒன்றாகவேயிருக்கிறது. சந்திரிகா அப்போது போரை பெரும் எதிர்ப்புகளின் மத்தியில் ஆரம்பித்தார்.
அப்படி அவர் தொடங்கிய போர்; வெற்றியை நோக்கிச் செல்கிறது என்பதைக்காட்ட வேண்டிய தேவை அபடபோது அவருக்கிருந்தது. எனவே அதற்கு வெற்றி விழா அவசியப்பட்டது.
அத்துடன் நீண்டகாலமாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்தை முழதாக படையினர் கைப்பற்றியுள்ளனர் என்ற சேதியை வெளியே சொல்ல வேணும். அத்துடன் படையினரின் உளவியலை ஊக்கப்படுத்தி அவர்கள் அடுத்த போருக்கு தயாராகும் விதமாக செய்ய வேண்டும்.
இந்தமாதிரியான தேவைகள் மற்றும் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அப்போது அந்த வெற்றி விழாவைக் கொண்டாடினார் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவருக்கு அப்போது துணையாயக இருந்தவர் திரு. அனுருத் ரத்வத்த. அதாவது வீடுகொழுத்துகிற ராசாவுக்கு நெருப்புக் கொடுக்கும் மந்திரி போல அவரிருந்தார்.
இதேமாதிரி இப்போது கிழக்கில் மட்டக்களப்பு குடும்பிமலையைக் கைப்பற்றி விட்டதாகக்கூறி மகிந்தவின் அரசாங்கம் பெருமெடுப்பில் வெற்றி விழாவைக் கொண்டாடியுள்ளது. சந்திரிகாவுக்கு எந்தவகையிலும் தான் குறைந்தவரில்லை என்பதை இதன்மூலம் மகிந்து காட்ட முற்பட்டிருக்கிறார். அத்துடன் ரணிலுக்கும் மங்கள போன்ற புதிய அரசியல் எதிரிகளுக்கும் ஒரு செய்தியை அவர் இந்த வெற்றிவிழாவிpன் மூலம் சொல்ல முற்பட்டிருக்கிறார். போரில் தான் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் எனவே யாரும் தனக்குக் கிட்டவாக நெருங்க முடியாதெனவும் அவர் காட்;ட முற்பட்;டிருக்கிறார்.
நாட்டின் தேசியப்பிரச்சினையாக இருக்கும் இனப்பிரச்சினையை போரின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதைத் தீர்க்கலாம் என்று அவர் சிங்களச் சமூகத்துக்கு சொல்ல முற்பட்டிருக்கிறார். அப்படிச் சொல்வதன் மூலம் சிங்களத்தரப்பின் முழமையான ஆதரவை போருக்காகத் திரட்;ட முடியும் என்றும் ஜனாதிபதி கணக்கிட்டிருக்கிறார். அப்படிப்போருக்கு ஆதரவாக சிங்கள மக்களைத் திரட்டிவிட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வைத்து ரணிலோ மங்களவோ அல்லது ஜே.வி.பி யோ தனக்கெதிராக போராட்டங்களை நடத்த முடியாது என்றும் அவர் கருதியுள்ளார்.
அத்துடன் பொருளாதாரப்பிரச்சினைகளை யாரும் தூக்கவோ அது தொடர்பாக கேள்விகளை எழுப்பவோ முடியாத ஒரு நிலையை இந்தப்போரின் வெற்றி மூலம் அவர் உருவாகக்pவிட்டார். தவிர, கிழக்கின் வெற்றியை பிரமாண்டப்படுத்துவதன் மூலம் வடக்கிலும் அடுத்த வெற்றி இதுபோலப் பெறவேண்டும் என்ற ஒரு போட்டியணர்வை படையினர் மத்திpயில் ஏற்படுத்துவது. அதாவது கிழக்கின் கட்டளைத்தளபதிகளுக்கும் வடககிலுள்ள கட்டளைத்தளபதிகளுக்குமிடையில் போட்டியுணர்வை ஏற்படுத்தி தொடரும் வடக்குப் போர்க்களத்துக்கு சூடேற்றுவது.
மேலும் இந்த வெற்றியைக் கொண்டாடுவதன் மூலம் படையினரின் உளவியலை போரை நோக்கி உந்துவது. எப்படியென்றால் போரில் வெற்றி பெறமுடியும் என்று ஒவ்வொரு படையினரையும் அவர் நம்ப வைக்க இதன் மூலம் முயல்கிறார். அத்துடன் போரில் ஈடுபடும் படையினரின் உறவினரை ஆற்றுப்படுத்தவும் அவர் இந்த வெற்றி விழாவைப் பயன் படுத்தியிருக்கிறார். பொதுவாக சிங்களச்சமூகத்தை போருக்கு முழு அளவில் தயார்ப்படுத்துவதே இதன் நோக்கம்.
போரில் வெற்றி கிடைக்கும் என்ற ஒரு தோரணையை ஏற்படுத்தி விட்டால் சமாதானத்தைப் பற்றி யார் கதைத்தாலும் அது சிங்கள மக்களின் மத்தியில் எடுபடாது என்பது மகிந்த ராஜபக்ஸவின் கணிப்பாகும். அதிலும் மேற்கு இனி இப்போதைக்கு அமைதிப்பேச்சு வார்த்தையைப்பற்றி பேச்சே எடுக்க முடியாது என்ற கட்டம் உருவாகிவிட்டது. இதையே அவர் நோக்காகக் கொண்டு இயங்கியிருக்கிறார். கடந்த ஓராண்டுக்குள் கிழக்கை தன்னுடைய முழக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக அவர் சொல்வதும் இவற்றின் பின்னணியில்தான். இதன் அடிபபடையில்தான் புலிகளின் மீதிப்பகுதியையம் தாம் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று அவர் கடந்த வாரம் கொழும்பில் தெரிவித்திருப்பதும்.
எனவே ஜனாதிபதி முழதாகப் போர்ச்சன்னதமாடத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு இப்போது போர்தான் உள்ள ஒரே மார்க்கம். அவரிடம் சமாதானத்துக்குப் போகும் வழியெதுவும் கிடையாது. இனப்பிரச்சினையைத்தீர்ப்பதற்கான வேறு தெரிவுகளும் அவரிடமில்லை. அதனால் அவர் போரில்தான் முழு முதலீட்டையும் செய்திருக்கிறார். மகிந்த சிந்தனையில் செய்யப்படாதவைகளையும் செய்ய முடியாதவையையும் அவர் போரின் மூலமே கணக்குத்தீர்க்க விரும்புகிறார். யுத்தத்தில் கேள்விகளுக்கு இடமில்லை என்பார்கள். எல்லாக்கேள்விகளுக்குமான ஓரெ பதிலை யுத்தம் சொல்லிவிடும். ஆனால் அந்த யுத்தம் தோற்கும்போது எல்லாக்கேள்விகளும் யுத்தபிதாவை நோக்கியே ஒரு பெரும்யுத்தத்தை நடத்தத் தொடங்கிவிடும்.
மகிந்த தன்னை நோக்கிய எல்லாக் கேள்விகளைத் தவிர்ப்பதற்காகவும் தமிழ்மக்களை நோக்கி பெரும் யத்தத்தை நடத்துகிறார். அவர் கடந்த ஒரு வருடகாலமாக யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை திறக்காமலே மூடி வைத்திருக்கிறார். ஏறக்குறைய அதுவும் ஒரு போர் நடவடிக்கைதான். அதாவது யாழ்ப்பாணத்தில் அவர் தமிழ் மக்களை முற்றுகைக்குட்படுத்தி வைத்திருக்கிறார். தமிழ்மக்களைத் திரளச் செய்தால் அவர்கள் பலமடைந்து விடுவார்கள் என்ற அடிப்படையில் அவர்களை அவர் துண்டு துண்டாக பிரித்து தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்.
இதன்மூலம் அவர்களின் போரிடும் ஆற்றலையம் திரள் சக்தியையம் குறைப்பதே அவருடைய நோக்கம். அப்படி அவர்களை மட்டுப்படுத்pக் கொண்டு தொடர்ந்து போரை முன்னெடுப்பது. அதுவும் ஒவ்வொரு பகுதியாக போரைத்தொடுத்து அந்தப்பகுதிகளை மெல்ல மெல்ல கைப்பற்றுவது. இதன்படியே கிழக்கில் ஒரு வருடகாலத் தொடர் போரில் அவர் ஒவ்வொரு பகுதியாக மெல்ல மெல்ல கைப்பற்றினார். அவருடைய இநதத்திட்;டத்துக்கு கிழக்கின் புவியியல் நிலையம்சம் சாதகமாக இருந்துள்ளது.
கிழக்கில் இது வரையில் வலுவான மரபுவழிச்சமரெதையும் புலிகள் செய்யதில்லை. வாகரையிலும் படுவான்கரையிலும் அவர்கள் மரபுவழிக்குக்கிட்டவான ஒரு போர் முறையைக் கையாண்டிருந்தபோதும் முழு அளவில் அவர்கள அங்கே ஒரு போதும் மரபு வழிச்சமரைச் செய்யவில்லை. ஆனால் அவர்கள் 1990 காலப்பகுpதயிலேயே அதாவது ஏறக்குறைய பதினாறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே வடக்கில் மரபுவழிச்சமரை நடத்தியுள்ளனர். ஆனையிறவு படை முகாம் மீதான புலிகளின் முதலாவது பெரும் போர் நடவடிக்கையின் பொது புலிpகள் மரபுவழிச் சமரைச் சய்திருந்தனர். அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களிலும் பல களங்களிலும் புலிகள் வடக்கில் மரபுவழிச்சமரை நடத்தியுள்ளனர்.
ஆனால் அவர்கள் கிழக்கில் அவ்வாறான ஒரு பொறிமுறைக்குப் Nபுhகவில்லை. அப்படிப்போகவும் அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் கிழக்கில் மரபுவழியிலான பெரும் போரைச் செய்யக்கூடிய களநிலை இல்லையென்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தம்மை நொக்கி வரும் பெரும்போரை அங்கே வலுவுடன் நின்று எதிர் கொள்வதை விடவும் அங்கிருந்து தம்மைப்பாதுகாப்பாக வெளியகற்றுவதையே அதிகமும் விரும்புவார்கள். அதனையே அவர்கள் இப்போது செய்து மிருக்கிறார்கள்.
வாகரையைப் படையினர் கைப்பற்றியபோதும் இதுமாதிரியெ புலிகள் தம்மைப்பாதுகாப்பாக வெளியகற்றியிருந்தனர். அப்படி வெளியகற்றுவதன் மூலம் தமது போரிடும் திறனை அவர்கள பாதுகாத்துள்ளனர். அத்துடன் வெளியகன்ற புலிகள் எல்லாம் திரண்டு அவர்கள் இப்போது வன்னியில் பெரும் பலமாகியிரு;ககிறார்கள். அடுத்து பெரும் பேரை எதிர்கொள்ளக்கூடிய மாதிரியோ அல்லது பெரியதொரு போரைச் செய்யக்கூடியமாதிரியோ அவர்களின் பலம் திரண்டிருக்கிறது. இந்தப்பலத்தை ஒரு மையத்தில் திரட்டியிருப்பது அரசாங்கமே.
இதெல்லாம் நிச்சயம் படை;தரப்புக்குத் தெரியாதென்றுமில்லை. படைத்தரப்பைப் பொறுத்தவரையில் அதற்கு இராணுவச் சமநிலையில் அது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முனனர் தோல்விகளைச் சந்தித்ததாகவே அதன் கவலையிருந்தது. அப்படியே அதைப்பற்றிய மதிப்பீடுமிருந்தது.
அதை ஈடுகட்டும் நோக்குடன் இப்போது கிடைத்திருக்;கும சந்தர்ப்பத்தை படைத்தரப்பு பயன்படுத்த விளைகிறது. அதாவது இப்போது படைவலுச்சம நிலையில் புலிகளை வென்று விட்;டதாக அது தன்;னை உயர்த்தியுள்ளது. இதற்கமைய அது தனக்குச்சாதகமான பகுதிகளில் போர் நடவடிக்கையை விரிவாக்கியிருக்;கிறது. இதன்படி படைத்தரப்பு இப்பொழுது ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆனால் இந்த அடைவு குறித்து பல்வேறு வகையான அவதானங்களுண்டு.
கிழக்கில் வெற்றியைப்பெறுவதற்காக மிகவும் அகன்ற பரப்பில் படைததரப்பு காலை வைததுள்ளது. இதன்படி அது கைப்பற்றி வைத்திருக்கும் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக பெருஞ்சிரமப்பட வெண்டியிருக்கும். ஏனெனில் எல்லோரும் எதிர்பார்ப்பதைப்போல புலிகள் தமது நடவடிக்கையை கெரில்லாப் போர்முறைக்கு மாற்றுவார்கள். அப்படி கெரில்லாப்போர் முறையை அவர்கள்; கைக்கொள்ளும்போது படைத்தரப்பு அதைச்சமாளிக்க பெரிதும் திண்டாடும்.
அத்துடன் கிழக்கின் சமூக நிலையும் முற்றிலும் வித்தியாசமானது. அங்கே தமிழ் முஸ்லிம் சிங்களச் சமூகங்கள் இருக்கின்றன. அடுத்து தொடரும் கெரில்லா போரில் தனியே தமிழ் மக்களை மட்டும் படையினர் பழிவாங்கவோ இலக்க வைக்கவோ முடியாது.
அத்துடன் பரவியுள்ள படையினரைப்பாதுகாக்கவும் அவரகளுக்கான வழங்கல்களைச் செய்யவும் படைத்தரப்புக்கு அப்போது பெரும் நெருக்க்டியம் சவாலும் ஏற்படும். அப்போது அங்கே மேலதிக படையினரைக்குவிக்கவும் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் வேண்டிய கட்டம் அரசாங்கத்துக்கு ஏற்படும்.
அதேவேளை அப்போது அரசாங்கம் வேறு முனையில் போரைத் தொடங்கினால் அதற்கும் ஆளணி வேண்டும். எந்தப்பிரதேசத்தையும் கைப்பற்றுவது ஒரு படையின் பெறுமானத்தைக்காட்டுவதல்ல, கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதே அதன் நிலைப் பெறுமானம் என்பார்கள்.
இந்த நிலைப் பெறுமானத்தை அரசாங்கம் எட்டுமா. அதற்குப்புலிகள் இடமளிப்பார்;களா. ஏனெனில் புலிகள் இப்போது அரசாங்கத்தை மட்;டுப்படுத்த வேண்டிய அவசியத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். அதாவது அரசாங்கத்தின் போர் முனைப்புக்கு பதிலளிக்கவேண்டிய கட்டத்திலிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தின் போர முனைப்பை அவர்கள தணிக்க வேண்டுமெனில் வரும்போரை முறியடித்து அரசாங்கத்தின் முது கெலும்பை உடைக்க வேண்டும். அல்லது தாங்கள் ஒரு போரைத் தொடங்கி அதன் மூலம் அரசாங்கத்தை பின்னடையச் செய்யவேண்டும்.
இதன்படி அடுத்து நடக்கப்போகிற போர் என்பது அரசாங்கத்தை கட்டாயமாக போர் வெறுப்புக்கும் சமாதான விருப்புக்கம் கொண்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கான உள்வெளி அமைவுகளை திரு. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் உருவாக்கி விட்டது.
இப்போது அரசாங்கம் கொண்டாடியுள்ள வெற்றி என்பது தமிழ்மக்களை நிறையவும் காயப்படுத்தி விட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னர் யாழ்;ப்பாணத்தின் வெற்றியைக் கொண்டாடிய அரசாங்கம் அப்போது தமிழ்; மக்களை அவமானப்படுத்திpயது. அதையே இப்போது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் செய்திருக்pறது.
அப்போது யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்டதாகக்கூறிய அரசாங்கம் இப்பொழுது அதை திறந்த வெளிச்சிறைக்கூடமாக்கி வைத்திருப்பதைப்போல கிழக்கும் ஒரு தீராத பிரச்சினைகளின் மையமாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது தொடரும் யுத்த பூமியாகவும் அமைதியற்ற பகுதியாகவும் ஆகக்கூடிய சாத்தியங்களே அதிகம் தென்படுகின்றன. அத்துடன் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான எல்லையும் எட்டியே விட்டிருக்கிறது. அது போராயினும் சரி சமாதான மூலமாயினும் சரி. கிழக்கை ஒரு வெல்லும் வரை அல்லது கிழக்கை திரு;வில் இணைக்கும் வரை புலிகள் எதற்கும் இறங்கிவர மாட்டார்கள்.
ஆகவே பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளாகியே விட்டிருக்கிறது. போரின் மூலம் பெறப்படும் உடனடி வெற்றிகள் ஒரு போதும் தீர்வுக்கு வழியைத்தராது என்பது மிகச்சரியாகவேயிருக்கிறது.
இப்போது கிழக்கில் பெற்றுக் கொண்ட சாதக நிலையை பாதிக்கப்பட்டமக்களின் நோக்கு நிலையிலிருந்து பார்க்காமல் தன்னுடைய தேவை மற்றும் நோக்கு நிலையிலிருந்து பார்த்து கொண்டாடுகிறார் ஜனாதிபதி. என்ன செய்வது சந்திரிகா குமாரதுங்கவைப்போல டி.பி விஜயதுங்கவைப்போல அவரும் ஆட்சியிலிருக்கும்போது குதிரையை ஓட்டுகிறார். அவர் குதிரையை விட்டு இறங்கியவுடன் எல்லாமே தெரியவரும். அதாவது வெல்ல முடியாத போரில் தான் என்ன செய்திருக்கவேண்டும் என்று.
அடிப்படையில் இவ்வாறு இந்த வெற்றி விழாக்களை எப்போதும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் கொண்டாடுவதற்கான பின்னணி என்பது ஒன்றாகவேயிருக்கிறது. சந்திரிகா அப்போது போரை பெரும் எதிர்ப்புகளின் மத்தியில் ஆரம்பித்தார்.
அப்படி அவர் தொடங்கிய போர்; வெற்றியை நோக்கிச் செல்கிறது என்பதைக்காட்ட வேண்டிய தேவை அபடபோது அவருக்கிருந்தது. எனவே அதற்கு வெற்றி விழா அவசியப்பட்டது.
அத்துடன் நீண்டகாலமாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்தை முழதாக படையினர் கைப்பற்றியுள்ளனர் என்ற சேதியை வெளியே சொல்ல வேணும். அத்துடன் படையினரின் உளவியலை ஊக்கப்படுத்தி அவர்கள் அடுத்த போருக்கு தயாராகும் விதமாக செய்ய வேண்டும்.
இந்தமாதிரியான தேவைகள் மற்றும் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அப்போது அந்த வெற்றி விழாவைக் கொண்டாடினார் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவருக்கு அப்போது துணையாயக இருந்தவர் திரு. அனுருத் ரத்வத்த. அதாவது வீடுகொழுத்துகிற ராசாவுக்கு நெருப்புக் கொடுக்கும் மந்திரி போல அவரிருந்தார்.
இதேமாதிரி இப்போது கிழக்கில் மட்டக்களப்பு குடும்பிமலையைக் கைப்பற்றி விட்டதாகக்கூறி மகிந்தவின் அரசாங்கம் பெருமெடுப்பில் வெற்றி விழாவைக் கொண்டாடியுள்ளது. சந்திரிகாவுக்கு எந்தவகையிலும் தான் குறைந்தவரில்லை என்பதை இதன்மூலம் மகிந்து காட்ட முற்பட்டிருக்கிறார். அத்துடன் ரணிலுக்கும் மங்கள போன்ற புதிய அரசியல் எதிரிகளுக்கும் ஒரு செய்தியை அவர் இந்த வெற்றிவிழாவிpன் மூலம் சொல்ல முற்பட்டிருக்கிறார். போரில் தான் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் எனவே யாரும் தனக்குக் கிட்டவாக நெருங்க முடியாதெனவும் அவர் காட்;ட முற்பட்;டிருக்கிறார்.
நாட்டின் தேசியப்பிரச்சினையாக இருக்கும் இனப்பிரச்சினையை போரின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதைத் தீர்க்கலாம் என்று அவர் சிங்களச் சமூகத்துக்கு சொல்ல முற்பட்டிருக்கிறார். அப்படிச் சொல்வதன் மூலம் சிங்களத்தரப்பின் முழமையான ஆதரவை போருக்காகத் திரட்;ட முடியும் என்றும் ஜனாதிபதி கணக்கிட்டிருக்கிறார். அப்படிப்போருக்கு ஆதரவாக சிங்கள மக்களைத் திரட்டிவிட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வைத்து ரணிலோ மங்களவோ அல்லது ஜே.வி.பி யோ தனக்கெதிராக போராட்டங்களை நடத்த முடியாது என்றும் அவர் கருதியுள்ளார்.
அத்துடன் பொருளாதாரப்பிரச்சினைகளை யாரும் தூக்கவோ அது தொடர்பாக கேள்விகளை எழுப்பவோ முடியாத ஒரு நிலையை இந்தப்போரின் வெற்றி மூலம் அவர் உருவாகக்pவிட்டார். தவிர, கிழக்கின் வெற்றியை பிரமாண்டப்படுத்துவதன் மூலம் வடக்கிலும் அடுத்த வெற்றி இதுபோலப் பெறவேண்டும் என்ற ஒரு போட்டியணர்வை படையினர் மத்திpயில் ஏற்படுத்துவது. அதாவது கிழக்கின் கட்டளைத்தளபதிகளுக்கும் வடககிலுள்ள கட்டளைத்தளபதிகளுக்குமிடையில் போட்டியுணர்வை ஏற்படுத்தி தொடரும் வடக்குப் போர்க்களத்துக்கு சூடேற்றுவது.
மேலும் இந்த வெற்றியைக் கொண்டாடுவதன் மூலம் படையினரின் உளவியலை போரை நோக்கி உந்துவது. எப்படியென்றால் போரில் வெற்றி பெறமுடியும் என்று ஒவ்வொரு படையினரையும் அவர் நம்ப வைக்க இதன் மூலம் முயல்கிறார். அத்துடன் போரில் ஈடுபடும் படையினரின் உறவினரை ஆற்றுப்படுத்தவும் அவர் இந்த வெற்றி விழாவைப் பயன் படுத்தியிருக்கிறார். பொதுவாக சிங்களச்சமூகத்தை போருக்கு முழு அளவில் தயார்ப்படுத்துவதே இதன் நோக்கம்.
போரில் வெற்றி கிடைக்கும் என்ற ஒரு தோரணையை ஏற்படுத்தி விட்டால் சமாதானத்தைப் பற்றி யார் கதைத்தாலும் அது சிங்கள மக்களின் மத்தியில் எடுபடாது என்பது மகிந்த ராஜபக்ஸவின் கணிப்பாகும். அதிலும் மேற்கு இனி இப்போதைக்கு அமைதிப்பேச்சு வார்த்தையைப்பற்றி பேச்சே எடுக்க முடியாது என்ற கட்டம் உருவாகிவிட்டது. இதையே அவர் நோக்காகக் கொண்டு இயங்கியிருக்கிறார். கடந்த ஓராண்டுக்குள் கிழக்கை தன்னுடைய முழக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக அவர் சொல்வதும் இவற்றின் பின்னணியில்தான். இதன் அடிபபடையில்தான் புலிகளின் மீதிப்பகுதியையம் தாம் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று அவர் கடந்த வாரம் கொழும்பில் தெரிவித்திருப்பதும்.
எனவே ஜனாதிபதி முழதாகப் போர்ச்சன்னதமாடத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு இப்போது போர்தான் உள்ள ஒரே மார்க்கம். அவரிடம் சமாதானத்துக்குப் போகும் வழியெதுவும் கிடையாது. இனப்பிரச்சினையைத்தீர்ப்பதற்கான வேறு தெரிவுகளும் அவரிடமில்லை. அதனால் அவர் போரில்தான் முழு முதலீட்டையும் செய்திருக்கிறார். மகிந்த சிந்தனையில் செய்யப்படாதவைகளையும் செய்ய முடியாதவையையும் அவர் போரின் மூலமே கணக்குத்தீர்க்க விரும்புகிறார். யுத்தத்தில் கேள்விகளுக்கு இடமில்லை என்பார்கள். எல்லாக்கேள்விகளுக்குமான ஓரெ பதிலை யுத்தம் சொல்லிவிடும். ஆனால் அந்த யுத்தம் தோற்கும்போது எல்லாக்கேள்விகளும் யுத்தபிதாவை நோக்கியே ஒரு பெரும்யுத்தத்தை நடத்தத் தொடங்கிவிடும்.
மகிந்த தன்னை நோக்கிய எல்லாக் கேள்விகளைத் தவிர்ப்பதற்காகவும் தமிழ்மக்களை நோக்கி பெரும் யத்தத்தை நடத்துகிறார். அவர் கடந்த ஒரு வருடகாலமாக யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை திறக்காமலே மூடி வைத்திருக்கிறார். ஏறக்குறைய அதுவும் ஒரு போர் நடவடிக்கைதான். அதாவது யாழ்ப்பாணத்தில் அவர் தமிழ் மக்களை முற்றுகைக்குட்படுத்தி வைத்திருக்கிறார். தமிழ்மக்களைத் திரளச் செய்தால் அவர்கள் பலமடைந்து விடுவார்கள் என்ற அடிப்படையில் அவர்களை அவர் துண்டு துண்டாக பிரித்து தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்.
இதன்மூலம் அவர்களின் போரிடும் ஆற்றலையம் திரள் சக்தியையம் குறைப்பதே அவருடைய நோக்கம். அப்படி அவர்களை மட்டுப்படுத்pக் கொண்டு தொடர்ந்து போரை முன்னெடுப்பது. அதுவும் ஒவ்வொரு பகுதியாக போரைத்தொடுத்து அந்தப்பகுதிகளை மெல்ல மெல்ல கைப்பற்றுவது. இதன்படியே கிழக்கில் ஒரு வருடகாலத் தொடர் போரில் அவர் ஒவ்வொரு பகுதியாக மெல்ல மெல்ல கைப்பற்றினார். அவருடைய இநதத்திட்;டத்துக்கு கிழக்கின் புவியியல் நிலையம்சம் சாதகமாக இருந்துள்ளது.
கிழக்கில் இது வரையில் வலுவான மரபுவழிச்சமரெதையும் புலிகள் செய்யதில்லை. வாகரையிலும் படுவான்கரையிலும் அவர்கள் மரபுவழிக்குக்கிட்டவான ஒரு போர் முறையைக் கையாண்டிருந்தபோதும் முழு அளவில் அவர்கள அங்கே ஒரு போதும் மரபு வழிச்சமரைச் செய்யவில்லை. ஆனால் அவர்கள் 1990 காலப்பகுpதயிலேயே அதாவது ஏறக்குறைய பதினாறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே வடக்கில் மரபுவழிச்சமரை நடத்தியுள்ளனர். ஆனையிறவு படை முகாம் மீதான புலிகளின் முதலாவது பெரும் போர் நடவடிக்கையின் பொது புலிpகள் மரபுவழிச் சமரைச் சய்திருந்தனர். அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களிலும் பல களங்களிலும் புலிகள் வடக்கில் மரபுவழிச்சமரை நடத்தியுள்ளனர்.
ஆனால் அவர்கள் கிழக்கில் அவ்வாறான ஒரு பொறிமுறைக்குப் Nபுhகவில்லை. அப்படிப்போகவும் அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் கிழக்கில் மரபுவழியிலான பெரும் போரைச் செய்யக்கூடிய களநிலை இல்லையென்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தம்மை நொக்கி வரும் பெரும்போரை அங்கே வலுவுடன் நின்று எதிர் கொள்வதை விடவும் அங்கிருந்து தம்மைப்பாதுகாப்பாக வெளியகற்றுவதையே அதிகமும் விரும்புவார்கள். அதனையே அவர்கள் இப்போது செய்து மிருக்கிறார்கள்.
வாகரையைப் படையினர் கைப்பற்றியபோதும் இதுமாதிரியெ புலிகள் தம்மைப்பாதுகாப்பாக வெளியகற்றியிருந்தனர். அப்படி வெளியகற்றுவதன் மூலம் தமது போரிடும் திறனை அவர்கள பாதுகாத்துள்ளனர். அத்துடன் வெளியகன்ற புலிகள் எல்லாம் திரண்டு அவர்கள் இப்போது வன்னியில் பெரும் பலமாகியிரு;ககிறார்கள். அடுத்து பெரும் பேரை எதிர்கொள்ளக்கூடிய மாதிரியோ அல்லது பெரியதொரு போரைச் செய்யக்கூடியமாதிரியோ அவர்களின் பலம் திரண்டிருக்கிறது. இந்தப்பலத்தை ஒரு மையத்தில் திரட்டியிருப்பது அரசாங்கமே.
இதெல்லாம் நிச்சயம் படை;தரப்புக்குத் தெரியாதென்றுமில்லை. படைத்தரப்பைப் பொறுத்தவரையில் அதற்கு இராணுவச் சமநிலையில் அது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முனனர் தோல்விகளைச் சந்தித்ததாகவே அதன் கவலையிருந்தது. அப்படியே அதைப்பற்றிய மதிப்பீடுமிருந்தது.
அதை ஈடுகட்டும் நோக்குடன் இப்போது கிடைத்திருக்;கும சந்தர்ப்பத்தை படைத்தரப்பு பயன்படுத்த விளைகிறது. அதாவது இப்போது படைவலுச்சம நிலையில் புலிகளை வென்று விட்;டதாக அது தன்;னை உயர்த்தியுள்ளது. இதற்கமைய அது தனக்குச்சாதகமான பகுதிகளில் போர் நடவடிக்கையை விரிவாக்கியிருக்;கிறது. இதன்படி படைத்தரப்பு இப்பொழுது ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆனால் இந்த அடைவு குறித்து பல்வேறு வகையான அவதானங்களுண்டு.
கிழக்கில் வெற்றியைப்பெறுவதற்காக மிகவும் அகன்ற பரப்பில் படைததரப்பு காலை வைததுள்ளது. இதன்படி அது கைப்பற்றி வைத்திருக்கும் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக பெருஞ்சிரமப்பட வெண்டியிருக்கும். ஏனெனில் எல்லோரும் எதிர்பார்ப்பதைப்போல புலிகள் தமது நடவடிக்கையை கெரில்லாப் போர்முறைக்கு மாற்றுவார்கள். அப்படி கெரில்லாப்போர் முறையை அவர்கள்; கைக்கொள்ளும்போது படைத்தரப்பு அதைச்சமாளிக்க பெரிதும் திண்டாடும்.
அத்துடன் கிழக்கின் சமூக நிலையும் முற்றிலும் வித்தியாசமானது. அங்கே தமிழ் முஸ்லிம் சிங்களச் சமூகங்கள் இருக்கின்றன. அடுத்து தொடரும் கெரில்லா போரில் தனியே தமிழ் மக்களை மட்டும் படையினர் பழிவாங்கவோ இலக்க வைக்கவோ முடியாது.
அத்துடன் பரவியுள்ள படையினரைப்பாதுகாக்கவும் அவரகளுக்கான வழங்கல்களைச் செய்யவும் படைத்தரப்புக்கு அப்போது பெரும் நெருக்க்டியம் சவாலும் ஏற்படும். அப்போது அங்கே மேலதிக படையினரைக்குவிக்கவும் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் வேண்டிய கட்டம் அரசாங்கத்துக்கு ஏற்படும்.
அதேவேளை அப்போது அரசாங்கம் வேறு முனையில் போரைத் தொடங்கினால் அதற்கும் ஆளணி வேண்டும். எந்தப்பிரதேசத்தையும் கைப்பற்றுவது ஒரு படையின் பெறுமானத்தைக்காட்டுவதல்ல, கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதே அதன் நிலைப் பெறுமானம் என்பார்கள்.
இந்த நிலைப் பெறுமானத்தை அரசாங்கம் எட்டுமா. அதற்குப்புலிகள் இடமளிப்பார்;களா. ஏனெனில் புலிகள் இப்போது அரசாங்கத்தை மட்;டுப்படுத்த வேண்டிய அவசியத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். அதாவது அரசாங்கத்தின் போர் முனைப்புக்கு பதிலளிக்கவேண்டிய கட்டத்திலிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தின் போர முனைப்பை அவர்கள தணிக்க வேண்டுமெனில் வரும்போரை முறியடித்து அரசாங்கத்தின் முது கெலும்பை உடைக்க வேண்டும். அல்லது தாங்கள் ஒரு போரைத் தொடங்கி அதன் மூலம் அரசாங்கத்தை பின்னடையச் செய்யவேண்டும்.
இதன்படி அடுத்து நடக்கப்போகிற போர் என்பது அரசாங்கத்தை கட்டாயமாக போர் வெறுப்புக்கும் சமாதான விருப்புக்கம் கொண்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கான உள்வெளி அமைவுகளை திரு. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் உருவாக்கி விட்டது.
இப்போது அரசாங்கம் கொண்டாடியுள்ள வெற்றி என்பது தமிழ்மக்களை நிறையவும் காயப்படுத்தி விட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னர் யாழ்;ப்பாணத்தின் வெற்றியைக் கொண்டாடிய அரசாங்கம் அப்போது தமிழ்; மக்களை அவமானப்படுத்திpயது. அதையே இப்போது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் செய்திருக்pறது.
அப்போது யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்டதாகக்கூறிய அரசாங்கம் இப்பொழுது அதை திறந்த வெளிச்சிறைக்கூடமாக்கி வைத்திருப்பதைப்போல கிழக்கும் ஒரு தீராத பிரச்சினைகளின் மையமாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது தொடரும் யுத்த பூமியாகவும் அமைதியற்ற பகுதியாகவும் ஆகக்கூடிய சாத்தியங்களே அதிகம் தென்படுகின்றன. அத்துடன் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான எல்லையும் எட்டியே விட்டிருக்கிறது. அது போராயினும் சரி சமாதான மூலமாயினும் சரி. கிழக்கை ஒரு வெல்லும் வரை அல்லது கிழக்கை திரு;வில் இணைக்கும் வரை புலிகள் எதற்கும் இறங்கிவர மாட்டார்கள்.
ஆகவே பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளாகியே விட்டிருக்கிறது. போரின் மூலம் பெறப்படும் உடனடி வெற்றிகள் ஒரு போதும் தீர்வுக்கு வழியைத்தராது என்பது மிகச்சரியாகவேயிருக்கிறது.
இப்போது கிழக்கில் பெற்றுக் கொண்ட சாதக நிலையை பாதிக்கப்பட்டமக்களின் நோக்கு நிலையிலிருந்து பார்க்காமல் தன்னுடைய தேவை மற்றும் நோக்கு நிலையிலிருந்து பார்த்து கொண்டாடுகிறார் ஜனாதிபதி. என்ன செய்வது சந்திரிகா குமாரதுங்கவைப்போல டி.பி விஜயதுங்கவைப்போல அவரும் ஆட்சியிலிருக்கும்போது குதிரையை ஓட்டுகிறார். அவர் குதிரையை விட்டு இறங்கியவுடன் எல்லாமே தெரியவரும். அதாவது வெல்ல முடியாத போரில் தான் என்ன செய்திருக்கவேண்டும் என்று.
Subscribe to:
Comments (Atom)