Sunday, June 17, 2007

ஒரு மைதானக்காட்சி


ஆட்டம் முடிந்தபிறகு வெளித்திருக்கிறது மைதானம்

வீரர்கள் போய்விட்டார்கள்

ஆரவாரங்களும் போய்விட்டன

ஆட்டம்பற்றிய கதைகளோடும் விமர்சனங்களோடும்

ரசிகர்களும் போய்விட்டார்கள்.

மைதானத்தில் ஆடியபந்து

யாருடைய கவனமுமின்றி ஓய்ந்திருக்கிறது

தனியே



இப்போது

யாருக்காவது நினைவிருக்குமா அந்தப்பந்தை?



மைதானத்துக்கும் பந்துக்குமிடையில்

ரகசியமாகப்படர்ந்திருந்த மௌனவெளியில்

ஒப்பற்ற காயங்களோடு

வெற்றிபெற முடியாத வீரர்கள்

நடந்துசென்ற காட்சி

உலுக்குகிறது அரங்கத்திலும் அரங்கத்துக்கப்பாலும்.

No comments: