Sunday, June 17, 2007

காணாமற்போனவனின் புன்னகை

ஒரு பருவத்தின் நிழலில் கண்டேன்

காணாமற்போனவனின் புன்னகையை

கடந்துபோகமுடியாதபடி

கொதித்துக்கொண்டிருந்தது தீத்துண்டாக

அந்தப்புன்னகை

அதில் காயாமலே இருந்தன

இரண்டு கண்ணீர்த்துளிகளும்

அவனுடைய குருதியும்

திரும்பிச்செல்லவும் முடியவில்லை

காணாமற்போனவனின் புன்னகையை விட்டு

அங்கிருக்கவும் முடியாது

காயமறுக்கும்

கண்ணீர்த்துளிகளின் முன்னாலும்

குருதியின் அருகாமையிலும்.

No comments: