Friday, June 15, 2007

விடுதலைக்கான பயணம் தொடர்வதன் அவசியம்

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுவரும் சர்வதேசக்கவனம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களுக்குச் சாதகமானதாக, நீதியின்பாற்பட்டதாக அமையுமா என்ற கேள்வி பலதரப்பினரிடையேயும் எழுந்திருக்கிறது.
ஏற்கனவே வெளிச்சக்திகளின் தலையீடு அல்லது பங்கேற்பு என்பவற்றால் எந்த நன்மையும் பெறாத தமிழ்மக்கள் இப்போது புதிதாக உருவாகிவரும் வேறொரு கவனம் குறித்து இவ்வாறு சிந்திப்பது தவிர்க்க முடியாதது.இருபது ஆண்டுகளுக்கு முன்பான இந்தியத்தலையீடும் பின்னர் அண்மையில் நோர்வேயின் பங்கேற்பும் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
எந்தத்தரப்பாக இருந்தாலும் அந்தத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எல்லாவற்றையும் ஏப்பம் விடக்கூடியதொரு அரசியல் சாணக்கியத்தை சிறிலங்கா அரசு கொண்டிருக்கிறது. அதில் அது பெரும் வெற்றியம் கண்டிருக்கிறது.
சிங்களத்தரப்பு கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியிலிருந்துகொண்டே தமிழ்மக்களை ஒடுக்கிவருகிறது. இது பகிரங்கமானது. தன்னுடைய ஆட்சியில் தன்னைவிட விகிதாசாரத்தில் குறைந் பிரதிநிதத்துவமுடைய சிறுபான்மையினரை அது கடுமையாக ஒடுக்கி வருகிறது.
அடிப்படையில் இது பாரிய குற்றத்துக்குரியது. நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் நீதி கிடைக்கக் கூடியவாறான அரசியல் அமைப்பே இலங்கையில் இல்லை என்பது முதலாவது தவறான காரியம்.
ஆட்சியிலுள்ள சிங்களத்தரப்பினரைத்தவிர ஏனையோர் அச்சம் கொள்ளக்கூடியவாறாhகவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறது.
தவிர இந்தச்சமூகங்களின்மீது போரும் நெருக்கடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் பாரிய மனித உரிமை மீறல்களாகும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடருகின்ற மனித உரிமை மீPறல்கள்.
ஆனால் இப்போதுதான் இவற்றையெல்லாம் சர்வதேச சமூகம் கண்டுள்ளது. அல்லது அப்படிக்கண்டுள்ளது போல காட்டுகிறது.
ஆனாலும் பகிரங்கமாக சிறிலங்கா அரசினதும் சிங்களத்தரப்பினதும் இத்தகைய நீதி மறுப்பு நடவடிக்கைகளுக்கு கண்டனமோ எதிர்ப்போ ஏற்பட்டிருப்;பது ஒரு முக்கியமான நிகழ்ச்சியே. இது தமிழரின் விடுதலைப்போராட்டத்துக்கும் தமிழ்மக்களின் அவல நிலைக்கும் கிடைத்திருக்கும் ஒரு சாதகமான வாய்ப்பே.
ஆனால், இந்த நிலைமையையிட்டு தமிழர்தரப்பு மீண்டும் நம்பிக்கை கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில்; தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய எந்த முயற்;சியையும் அதற்கெதிரான கண்ணோட்டத்துடனேயே சிங்களத்தரப்;பு பார்க்கின்றது.
இங்கே தமிழ் மக்களுக்குச்சாதகமானது, நீதியானது என்பதிலேயே ஏகப்பட்ட சிக்கல்களுண்டு. இந்தச்சொற்றொடர் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதை இங்கே பார்க்கவேண்டும்.
இதைச் சிங்களத்தரப்பினர் புரிந்து கொள்ளும் விதம் வேறானது. அவர்களைப்பொறுத்தவரையில் தமிழ்மக்களுக்கு நீதியொ நியாயமோ கிடைக்கவேண்டும் என்று என்றைக்கும் விரும்பியதில்லை. அப்படி யாராவது இந்தப்பிரச்சினையை நீதியான முறையில் அணுகித்தீர்க்க வேணுமென்று விரும்பினால் அது தமக்கெதிரானதாகவே அமையும் என்று கருதுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களைப்பொறுத்தவரையில் அவர்களுக்கு நீதி கிடைப்பதுதான் சாதகம் எனப்படும். தொடர்ந்து பாதகமான சூழ்நிலைகளால் வாழ்வையிழந்த மக்களுக்கு நீதிகிடைக்குமென்றால் அதுவே அவர்களுக்குச் சாதகமானது எனப்படுகிறது. ஆனால் உண்மையான அர்த்தத்தில் இதைத் தமிழர்களுக்குச்சாதகமானது என்று சொல்லமுடியாது. சாதகமானது என்றால் மற்றத்தரப்பை விடவும் அதிகமான வாய்ப்புகள் ஒருதரப்புக்குக்கிடைக்கும் என்பதாகும். ஆனால் இங்கேஅப்படி வாய்ப்பெதுவும் கிடைக்கும் என்றில்லை. அத்துடன் தமிழர்கள் மற்றவர்களின் வாய்ப்புகளையோ உரிமைகளையோ என்றைக்கும் கேட்டதாகவும் இல்லை. அப்படியெதையும் விரும்பியதுமில்லை.
ஆனால் இதைப்புரிந்துகொள்ள முடியாமல் சிங்களத்தரப்பினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அதாவது தாமும் நீதியாக நடக்கத்தயாராகவில்லை. அதேவேளையில் மற்றவர்களையும் இந்தப்பிரச்சினையில் நீதியாக நடந்துகொள்வதற்கு அவர்கள் அனுமதிக்கிறார்களில்லை. இதுதான் அடிப்ப்டைப் பிரச்சினையே.
இந்தப்பிரச்சினையின் பின்னாலுள்ள சிங்களவரின் உளவியற் சிக்கல் மிகவும் பாரதூரமானது.
ஆதிக்கத்திலோ மேல்நிலையிலோ இருக்கும் ஒரு தரப்பு இலேசில் நீதியாக நடப்பதற்கு என்றும் சம்மதிப்பதில்லை. வர்க்க நிலையிலும் சரி, சாதியமைப்பிலும் சரி, பால்நிலையிலும் சரி, நிறம் மற்றும் பிரதேச ரீதியாகவும் சரி இது தான் யதார்த்தமானது. இதுதான் நடந்தும் வருகிறது.
எனவே ஆதிக்க நிலையில் இருக்கும் சிங்களத்தரப்பு சாதாரணமாக இந்த விசயத்தில் மாறிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. இலகுவாக அது விட்;டுக்கொடுப்புகளைச் செய்துவிடும் என்றும் எதிர்பார்க்கவும் முடியாது.
இவ்வாறு தமிழ்மக்களுக்கு நியாயம்; கிடைக்கக்கூடிய தீர்வு முயற்சியை தவறாக விளங்கி அதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் பாரம்பரியமே இலங்கையில் தொடருகிறது. இதை ஒரு வகையான குருட்டுத்தனம் அல்லது அறிவீனம் என்றே சொல்லவேண்டும்.
இந்த ஆதிக்க மனத்தோடுதான் சிங்களவர்கள் எப்போதும் தமிழரின் பிரச்சினையைப் பார்க்கிறார்கள். இந்தப்பிரச்சினையின் தீர்வுக்காக முயற்சிப்போரையும் அவர்கள் இந்தக் கண்ணோட்டத்துடன்தான் நோக்குகிறார்கள்.
இது உள்நாட்டு நிலவரம் என்றால், சர்வதேச நிலவரம் எப்படியிருக்கிறது என்றும் நாம் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா இலங்கையில் தொடரும் மனித உரிமைகள் தொடர்பாக வருத்தம், கண்டனம் என்றவாறாக அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதேவேளையில், அது சிறிலங்காவுக்கான ஆயத உதவிகளையும் செய்கிறது. அத்துடன் வழமையைவிடவும் இந்த ஆண்டு சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவி அதிகளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக என்று அது மேலதிக உதவிகளை அரசாங்கத்துக்கு வழங்கவும் தயாராக இருக்கிறது.

ஆனால் அந்த அளவுக்கு தமிழரின் உரிமைகள் தொடர்பில் அது அதிக கரிசனை கொண்டதாக இல்லை. அதற்கான எந்த நல்ல துலக்கமான சமிக்ஞைகளையும் அது காட்டவில்லை.

இதேபோலான நிலைப்பாட்;டையே ஏறக்குறைய மொத்தமான மேற்குலகமும் எடுத்துள்ளது. அதாவது தாம் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானவர்கள் என்று அவர்கள் காட்டுகின்றனர். இதில் தமது கனவான்தனத்தை தாம் பேணுவதாகவும் நீதியாளர்களாக தாம் இருக்க முனைவதாகவும் நிரூபிக்கின்றனர்.
மறுபக்கத்தில் போருக்கு ஆதரவை வழங்குகின்றனர். அப்படி தாம் வழங்கும் ஆதரவுக்கு அழகான நியாயத்தையும் அவர்கள் சொல்கிறார்கள். இதற்குப்பின்னாலுள்ள சில உண்மைகளை நாம் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் இவற்றுக்கென்று தனியான நலன்சார்ந்த அரசியல் இருக்கின்றது. அந்த நலனின் அடிப்படையில்தான் அவர்களுடைய அனைத்து அணுகுமுறைகளும் இருக்கின்றன.
இப்போது பிரித்தானியாவில் இலங்கைப்பிரச்சினை தொடர்பான புதிய கரிசனை பாராளுமன்ற மட்டம் வரையில் ஏற்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டியது. சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ்மக்களுக்கெதரான போர் நடவடிக்கைகள் வரையில் இங்கு கவனம் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பலகாலம் தொடர்ச்சியாக பாடுபட்டதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
ஆனாலும் இந்தக்கரிசனை என்பது, பிரித்தானிய அரசாங்கத்தின் முழு அளவிலான கரிசனையாக வளர்ச்சியடையுமா என்ற கேள்வியுண்டு. பிரித்தானிய பாராளுமன்ற மரபின்படி இத்தகைய அக்கறையை அது வெளியுலகம் பற்றி கொண்டிருப்பது வேறு. அதாவது பாராளுமன்றில் அங்கத்துவம் பெறும் தரப்பினர் அல்லது கட்சிகள் தமது அபிப்பிராயங்களையும் நிலைப்பாடுகளையும் கொண்டிருப்பதும் தெரிவிப்பதும் வேறு. பிரித்தானிய அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் என்பது வேறு. ஆனால் இந்தத்தரப்பினரின் விவாதப்பொருளை அரசாங்கம் மதிக்கும். அந்த மதிப்பை அரசாங்;;கத்தின் தீர்மானம்; என நாம் அவசரப்பட்டுக் கருதிவிட முடியாது.
இன்னும் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைப்பிரச்சினை தொடர்பில் வெளிப்படையாகவும் தீர்மானமாகவும் எந்த அறிவிப்பையும் செய்துள்ளதாகத் தெரியவி;ல்லை.
இதேபோலத்தான் பிரான்சும் ஏனைய நாடுகளும் இயங்குகின்றன. அதாவது, சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்களை இந்த நாடுகள் பகிரங்கமாகக் கண்டிக்கின்றன. பதிலாக சிறிலங்கா அரசின் போருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அவை உதவுகின்றன.
முதலில் போரை இவை நிறுத்தினால் மனித உரிமைகள் பாதிக்குமேல் பேணப்படும். போர்ச்சூழலை இவை மாற்றமுயன்றால் மீதி உரிமை மீறல்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஆனால் அதைச் செய்ய இந்த நாடுகள் விரும்பவில்லை. இது ஏன்.
போருக்கு வழங்கும் அங்கீகாரம் என்பது மனிதவுரிமைகள் மீறப்படுவதற்கு வழங்கப்படும் ஆதரவு என்றே கொள்ளப்படவேண்டும். போர் என்பதே மனித உரிமைக்கு எதிராகவேதான் நடத்தப்படுகிறது.
தமிழ்மக்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாடென்பது அடிப்படையில் மனித உரிமை மீறலுடன் தொடர்பு பட்டதே. அதன் விளைந்த வடிவம்தான் போரும் ஏனைய ஜனநாயக மறுப்பு விசயங்களும்.
ஆக மிக நீண்ட காலமாக சிறிலங்கா அரசாங்கம் போரிலும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அப்படியென்றால் அது நீண்டகாலமாகவே முழு அளவில் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகிறது.
அப்படி அது பெரும் குற்றச்செயலில் ஈடுபட்டு வரும்போது அதைப்பற்றி அக்கறைப்படாத சர்வதேச சமூகம் இப்போது திடீரென இப்படி அறிக்கைகளை விடத்தொடங்கியிருப்பது புதிய அரசியல் உத்தியாகவே இருக்கிறது.
இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய இரண்டுதரப்பினருக்கும்தாம் அழுத்தம் கொடுப்பதாக இப்போது இந்தச் சர்வதேச சமூகம் காட்டுகின்றது. ஆனால் உண்மை நிலைமை அப்படியிருப்பதாகத் தெரியவில்லை.
அரசாங்கத்துக்கு வெறுமனே கண்டனங்களை மட்டும் தெரிவித்துக்கொண்டு தமிழர் தரப்புக்கு அதாவது விடுதலைப்புலிகளின் தரபபுக்கு அதனைவிடத்தாக்கமேற்படுத்தக் கூடிய அழுத்தங்களையும் கொடுப்பதாகவே தெரிகிறது.
இது பாரபட்சமானது. அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தவகையான பெரும்பாதிப்பையும் ஏற்படுத்தாதது. அதனால் சமாதான நிலையைநோக்கி அது திரும்புவதற்கான சூழ்நிலை இதில் அதிகமேற்பட வாய்பப்pல்லை.
பதிலாக தமிழரை நோக்கிய போர் இன்னும் தீவிரப்படக்கூடிய சந்தர்ப்பமே அதிகமுண்டு.
இலங்கையின் ழுமு அளவிலான போர்ச்சூழலுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பாகும் என்று சர்வ தேசத்துக்கு நன்றாகத் தெரியும். இதற்கு சர்வதேசப்பிரதிநதிகளாக இலங்கையிலிருக்கும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவும் நோர்வேப்பிரதிநிகளும் சாட்சி.
பேச்சுவார்த்தை நடந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் இதற்காதாரமாகவுண்டு. அப்படியென்றால் இது தொடர்பாக நேரடியாகவோ அல்லது வெளிப்படையாகவோ அதுவுமல்லாவிட்டால் கொஞ்சம் கூடிய நெருக்குவாரத்தையோ சர்வதேச சமூகம் சிறிலங்காவுக்குக்கொடுக்கலாம். ஆனால் அது அப்படிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.
பதிலாக விடுதலைப்புலிகளின் மீதுதான் மேலும் நெருக்குவாரங்களை ஏற்படுத்துவதாக உணர முடிகின்றது. அமெரிக்கா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தமிழ்மக்களின்; துயர்துடைக்கும் நோக்குடன்; செயற்பட்டு வந்தவர்களை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இவ்வாறே தெரிகின்றன.
பெருந்தவறுக்குப் பொறுப்பாகவுள்;ள அரசாங்கத்தை மென்போக்காக கையாள்வதன் நோக்கம் இந்தத்தரப்பினரின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்சார்ந்ததாகவே இருக்கிறது. அந்த நலனில் பாதிப்பேற்படுத்தாதவாறு அவை இந்;த விவகாரத்தைக் கையாள்கின்றன.
கொழும்பில் அவற்றுக்கிருக்கும் கரிசனையென்பது இதன்பாற்பட்டதே.
எனவே தமிழ்மக்கள் இன்னும் தமது விடுதலைக்காகவும் துயரங்களுக்காகவும் பாடுபடவேண்டித்தான்உள்ளது. தாயகத்தில் போருக்கெதிராக போரிட வேண்டிய தமிழர்கள்.அதேபோல புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசின் நீதியின்மையை அம்பலப்படுத்தி தமிழ்மக்களின் அவலவாழ்வை வெளிப்படுத்தும் கவனயீர்;ப்புப்போராட்டத்தில் புலம்பெயர்மக்கள். இந்த இருநிலைப் பங்களிப்பை பக்குவமாக தீவிரப்படுத்த வேண்டியேயுள்ளது.
விடுதலைக்;கான பயணம் தொடரத்தான் வேண்டும்.

கொழும்பைப் பாதுகாக்கவா புதிய வியூகங்கள்


பத்து நாட்களாக வரும் தொலைபேசி அழைப்புகளில் பெரும்பாலானவையும் மீண்டும் சமாதான முயற்சிகள் தொடங்குமா, பேச்சுவார்த்தை எப்போது ஆரம்பமாகும், நோர்வேயின் பாத்திரம் எப்படி இருக்கப்போகிறது, சிறிலங்கா அரசு வசமாக மாட்டியிருக்க்pறது, நோர்வேயை ஏமாற்றியதைப்போல பிரித்தானியாவை ஏமாற்ற முடியாது என்று ஏகப்பட்ட அபிப்பிராயங்கள் பகிரப்படுகின்றன. இதில் ஊகநிலைப்பட்ட அபிப்பிராயங்களும் வியாக்கியானங்களுமே அதிகம். புலம்பெயர்ந்தோர் தொடக்கம் பெரும்பாலான தமிழர்கள் இந்தமாதிரியே அபிப்பிராயப்படுகிறாhர்கள். அல்லது இவ்வாறு சிந்திக்கிறார்கள். சிலர்மட்டும் இது இன்னுமொரு பொறி எனறு சொல்கிறார்கள்.

இவர்கள் இப்படிச்சிந்திப்பதற்குச்சில காரரணங்களிருக்கின்றன. அண்மைய நாட்களில் சிறிலங்கா அரசுமீது மனித உரிமைப்பிரச்சினைகள் குறித்து மேற்குலகம் தொடர்ச்சியான கண்டனங்களை தெரிவித்;து வந்தது. குறிப்பாக ஐரோப்பாவைத்தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச்சபையும் அமெரிக்காவைத்தலைமையகமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இந்த விடயத்தில் அதிகளவு எதிர்ப்பைக்காட்டியிருந்தன.

அடுத்தது இiணைத்தலைமை நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் படியும் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கும்படியும் மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கம் கூடிய கவனமெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தன.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஜேர்மனி சிறிலங்காவுக்கான நிதியுதவியை மட்டுப்படுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து உதவி வழங்கும் நாடுகள் சிறிலங்காவுக்கு வழங்குதாகத் தெரிவித்த நிதியையும் தவணை அடிப்படையில்தான் சிறிலங்காவுக்கு வழங்கமுடியும் என அறிவித்திருந்தமை.

இதற்கடுத்து இப்போது பிரித்தானியா தான் வழங்கச்சமமதித்த நிதியில் அரைவாசியைத்தான் இப்போது வழங்க முடியும் என அறிவித்துள்ளமை.

இவை எல்லாவற்றுக்கும் இந்தத் தரப்புகள் தெரிவிக்கும் காரணம் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்;படுகின்றன. போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வில்லை. பேச்சுவார்த்தை தொரப்பட வில்லை என்பனவாகும். தவிர அரசாங்கம் துணை ஆயதக்குழுக்களை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் மறைமுகமாகத் தெரிவக்கப்பட்nருக்கிறது.

மேலோட்டமாகப்பார்த்தால் இது தமிழருக்குச் சாதகமான மேற்குலகத்தின் ஒரு போக்காக இருக்;கலாம் என்று தோன்றும். அல்லது தமிழரின் நியாயத்தை சர்வதேச சமூகம் ஏற்றுள்ளதைப்போலத் தெரியும். ஆனால் உண்மை நிலைமை அப்படியில்லை. அதைப்பின்னர் பார்ப்போம்.

மேற்குலகம்;;;; விடுதலைப்புலிகள் மீதும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதையும் பார்க்கவேண்டும்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடைசெய்தது. புலிகளின் தொடர்பாளர்கள் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுவோரை அண்மையில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கைது செய்துள்ளன. ஆக இரண்டுதரப்பையும் சமநிலையில் பார்க்கின்றோம் என்றும் அப்படியே கையாள்கிறோம் என்றும் அவை காட்ட முற்படுகின்றன.


இதேவேளை இனப்பிரச்சினையின் மறுதரப்பான சிங்களவரின் மனப்பதிவும் எதிர்பார்ப்பும் சிந்தனையும் வேறுவிதமானவை. சிறிலங்காவில் வெளிச்சக்திகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. புலிகளுக்கு ஆதரவான தரப்புகள் மீண்டும் உள்நாட்டரசியலில் தலையிடுவதை ஏற்க மாட்டோம் என்று ஜே.வி.பி போன்ற தீவிர இனவாதிகள் முழக்கமிடுகிறாhர்கள்.

அவர்கள் தொண்டைகிழியக்கத்தியபடி தெருக்களில் இறங்கிவிட்டார்கள். நோர்வேக்கு முன்னர் எதிர்ப்புக்காட்டிய அதேபாணியில் அவர்கள் தங்களின் நடவடிக்கையைத்தொடங்கிவிட்டார்கள்.

இதேவேளை போர்நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் பரிசீPலிக்க தயார் என்று அரசாங்கத்தரப்பு தெரிவிக்கின்றது. அரசாங்கம் புலிகளுடன் பேசத்தயார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவுக்கும் பிரித்தானிய அரசு கடந்த வாரம் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக வெளியிட்ட செய்திகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளுமே காரணம்.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களுக்கென ஒரு சிறப்புப்பிரதிநிதியை பிரித்தானியப்பிரதமர் ரொனி பிளேயர் நியமித்துள்ளார.; இந்தப்பிரதிநிதி ஒரு மூத்த ராஜதந்திரி என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ராஜதந்திரியின் பணிகள் எவை எனவும் அவை எப்போது எந்த அடிப்படையில் ஆரம்பமாகும் என்றும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அதாவது இதுதொடர்பான ஒரு நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாராகவில்லைப்போலுள்ளது.

முதலில் பிரித்தானிய அரசு தனது நாட்டிலுள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பிரதிநித்துவப்படும் ஒரு குழவை அமைத்து இலங்கைப்பிரச்சினை குறித்து விவாதித்துள்ளதாகவும் அதன்பின்னர் இந்தப்பிரச்சினை குறித்து செயலாற்றும் வகையில் சில உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் இந்த ஏற்பாடு இலங்கையில் தேக்கமடைந்திருக்கும் அமைதிப்பேச்சுக்களை மீளத்தொடங்குவதற்கான சூழலை உருவாக்கவும் இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவும் உதவும் என்று அது அறிவித்துள்ளது.

பிரித்தானியாவுக்கு உதவியாகவோ அனுசரணையாகவோ அமெரிக்காவும் மெல்ல இந்த விவகாரத்தில் மறைமுகமாக இயங்கத்தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் தெற்காசியப்பிராந்திய நாடுகளுக்கான வெளியுறவுச்செயலர் றிச்சர்ட் பௌச்சர் இந்த வாரம் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடனும் பிற இடங்களுக்குச்சென்று ஏனைய தரப்பினருடனும் பேசிச்சென்றுள்ளார்.

அரசாங்கம் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்குத்தயாராக வேண்டும் என றிச்சர்ட் பௌச்சர் மகிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இணைத்தலைமை நாடுகளின் கூட்டமும் நடந்திருக்கிறது. அதிலும் தற்போதைய போர்ச்சூழல் பற்றியும் அதைத்தணிப்பதற்கான அடுத்த கட்ட முயற்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இவைதான் வெளிப்படையாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அசைவியக்கம் ஒன்று தென்படுவதற்கான ஆதாரங்கள். இந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு சில விசயங்களைப்பார்க்கலாம்.


முதலில் எத்தகைய முயற்சிகளை யார் இலங்கையின் இனப்பிரச்சினையில் மேற்கொண்டாலும் அவர்கள் சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பினரிடமும் கலந்தாலோசித்தே ஒரு நிகழ்ச்சி நிரலைத்தயாரிக்க முடியும். அதாவது புலிகளோடும் அரசாங்கத்தோடும் கலந்துபேசியே இந்த நிகழ்ச்சி நிரலைத்தயாரிக்கமுடியும். அவ்வாறு ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரான பின்னரே பேச்சுக்களுக்கோ அல்லது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கோ சாத்தியங்கள் ஏற்படும். ஆனால் அவ்வாறொரு நிகழ்ச்சி நிரலைத்தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தமாதிரியான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே விரைவாகவோ விறுவிறுப்பாகவோ இந்தத்தரப்பின் எந்த நடவடிக்கையும் நிகழலாம் என்று எதிர்பார்க்கக்கூடிய யதாhர்த்தம் காணப்படவில்லை.

அடுத்தது, ஏற்கனவே போர்நிறுத்த உடன்படிக்கையும் பேச்சுவார்த்தையும் முடக்கமடைந்து செயலற்று விட்டன.

போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை என்ற இந்த முயற்சிகள் முற்றிலும் மேற்குலகம் சம்மந்தப்பட்டவை. அதிலும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிற ஐரொப்பிய நாடுகளும் அதிகம் பின்னணியில் செயலாற்றியிருந்தன. ஆனால் அந்த முயற்சிகள் சூழ்ச்சிகரமாகக் கையாளப்பட்ட முடங்கியபின்னர் இப்போது மீண்டும் புதிதாக இத்தகைய முயறசி;கள் மேற்கொள்ளப்படுவதென்பது கூடிய அவதானத்துக்குரியவையாகவே இருக்கும். மீண்டும் ஒரு பின்னடைவை மேற்கு சந்திக்கத்தயாரா என்ற கேள்வி இங்கேயுண்;டு. அதுவும் வெளிப்படையாக பிரித்தானியா களத்தில் இறங்கியபின்னர் அத்தகைய முறிவுகளையும் பின்னடைவுகளையும் அது சந்திக்கத்தயாரா என்பது கவனிக்க வேண்டியது. கூடவே அமெரிக்காவும் துணையாக இருக்கும் வேளையில்.

எனவே நிகழ்ச்சி நிரலைத்தயார்க்க முன்பு இந்தப்பிரச்சினையில் தமது பாத்திரம் என்ன என்று இந்தத்தரப்புகள் தீவிரமாக யோசித்;த பின்பே களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கலாம். அதற்குமுன் இலங்கையின் இனப்பிரச்சினையில் திடீர்க்கரிசனை வருவதற்கான இந்தத்தரப்புகளின்; மெய்யான நோக்கம் என்ன என்றும் நாம் பார்க்கவேண்டும்.

இந்;தத்தரப்பிருக்கு இந்த இனப்பிரச்சினையைத்தீர்க்கவேண்டும் என்ற மெய்யான நோக்கமும் அக்கறையும் இருந்திருந்தால் அவை ஏற்கனவே போர்நிறுத்த உடன்படிக்கையை இப்படி கோமா நிலைக்குப்போக விட்டிருக்க முடியாது. அத்துடன் பேச்சுவார்த்தையும் இடையில் முறிவடைந்திருக்கச் சந்தர்ப்பம் அளித்திருக்கமாட்டா. ஆனால் அவை அந்த நிலைமையைத்தெரிந்துகொண்டே அத்தகைய சூழலுக்கு அனுமதித்திருந்தன. அல்லது அத்தகைய பாரிய அழிவுச்சூழலொன்று உருவாகுவதற்கு அவை துணைநின்றுள்ளன.

அதாவது இந்தத்தரப்பினர் கொஞ்சம் முதலில் நல்ல நோக்கத்தோடு இயங்கியிருந்தால் போர்நிறுத்த உடன்படிக்கை சிதைவடைந்த பின்னர் கொல்லப்பட்ட இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களைக்காப்பாற்றியிருக்;க முடியும்.

மூதூரிலும் வாகரையிலும் பளையிலும் மட்டக்களப்பு படுவான்கரையிலும் பூநகரி, வடடமராட்சி கிழக்கு ஆகிய இடங்களிலும் இருந்து பல்லாயிரம் சனங்கள் குரூரமாக இடம்பெயர்க்கப்பட்டதைத்தவிர்த்திருக்கலாம். வீணான சொத்திழப்புகளையும் கால விரையத்தையும் கூட விலக்கியிருக்கலாம். இப்படி எவ்வளவோ செய்ய வேண்டிய முக்கியமான நல்ல காரியங்களைச்செய்து பேச்சுவார்த்தையை முன்னோக்கி நகர்த்தியிருக்கலாம். போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தியிருக்கலாம்.


அவ்வாறு காரியமாற்றுவதற்குரிய ஆளுமையும் பொறுப்பும் இந்தத்தரப்பினருக்கிருந்தது. ஆனால் அவர்கள் அப்போது அதைச் செய்யவில்லை. இதுதொடரபாக விடுதலைப்புலிகள் பல தடவை நேரடியாகவும் கடிதமூலமாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்து வந்தனர்.

சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தையை திசை திருப்புகிறது, அதை முறித்துக்கொள்ளவே முயல்கிறது, பேச்சு மேசையில் நடைமுறைறப்படுத்துவதற்கு உடன்பட்ட விசயங்களை செய்யமறுத்து சூழலைக்கெடுக்கிறது என்றெல்லாம் புலிகள் பல தடவைகளில் வலியுறுத்தியிருந்தனர். விடுதலைப்புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அப்போது நோர்வேத்தரப்பினரிடமும் போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழவினரிடமும் அக்காலப்பகுதியில் தன்னைச்சந்தித்த வெளிநாட்டுத்தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடமும் இதை நன்றாக விளக்கியிருந்தார். தவிர ஊடகங்களின் வழியாக பகிரங்கமாகவும் அவர் இந்த அவசியத்தையும் அரசாங்கத்தின் சூழ்ச்சிகளையும் சறுக்கல்களையும் அத்துமீறல்களையும் தெளிவாக அறிவித்திருந்தார்.

ஆனால் அப்போது அது குறித்து இந்தத்தரப்பினர் எத்தகைய வலுவான தீர்மானத்தையும் எடுத்திருக்கவில்லை. எடுக்கத்தயாராகவும் இருக்கவில்லை. பதிலாக இன்னும் புலிகளைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளிலேயே ஈடுபட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடுகளும் இணைத்தலைமை நாடுகளின் பொருட்படுத்தாத்தன்மையும் பாரதூரமான விளைவுகளுக்கே இட்டுச்செல்லும் எனப்புலிகள் எச்சரிக்கை செய்ததையும் இவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. குறிப்பாக புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தால் அது சிறிலங்கா அரசுக்கு வாய்ப்பாக அமைந்து சமாதான முயற்சிகள் பாதிப்படையும் என்று புலிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன் சிறிலங்கா அரசின் இராணுவ முனைப்பு அதிகரித்துவிடும் என்பதையும் அவர்கள் தெளிவாக்கியிருந்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அதையெல்லாம் யாரும் கவனத்திலெடுக்கவில்லை.

இதனால் இந்த அவகாசத்தையும் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திச் சிறிலங்கா அரசு தமிழ்மக்களின்மீது போரைத் தொடுத்தது. பேரழிவுகளை ஏற்படுத்த்pயது.

தொடக்கத்தில் விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது என சிறிலங்கா அரசு கூறியது. பின்னர் அது முழமையாக பெரும் பிரதேசங்களின் மீது பெரும் படையெடுப்புகளை மேற்கொண்டது. வாகரை, படுவான்கரை மீதான படையெடுப்புகள் இனங்காணப்பட்ட இலக்குகளா.

இப்போது மீண்டும் இலங்கைத்தீவு போருக்குள் சிக்கி விட்டது. இனவெறி தலைவிரித்தாடத்தொடங்கிவிட்டது.

இப்படி எதிர்மறையான விளைவுகள் இலங்கைததீவில் பலமடைந்திருக்கிற நிலையில்தான் மீண்டும் சர்வதேச சமூகத்தின் தலையீடு அல்லது அக்கறை இப்போது ஏற்பட்டுள்ளது.

இப்பொழுது முண்டியடித்துக்கொண்டு பரபரப்பாக கடைவிரிக்க முனையும் சர்வதேச சமூகம் ஏன் மேற்சொன்ன சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகள் ஏற்படுகையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது.

வாகரையில் ஆறு மாதங்களுக்கு மேலாக சனங்கள் உப்புக்கும் வழியில்லாமல் கிடந்தார்கள். அப்போது இந்தப்புண்ணியவான்கள் எங்கே போனார்கள் என்று அங்கிருந்து படாத பாடெல்லாம்பட்டு, தன்னுடைய இரண்டு பிள்ளைகளை இழந்த பின்னர், இடம்பெயர்ந்து இப்போது மட்டக்களப்பு நகரில் அகதியாக இருக்கும் முதிய பெண்ணொருத்தி கேட்கிறாள். அந்தக் கேள்விக்கு யார் என்ன பதிலைக்கொடுக்கமுடியும்.

அதேபோல படுவான்கரையில் படையெடுப்பு நடந்தபோதும் இந்தக்கனவான்கள் தமிழ்மக்களின் நிலைகுறித்து எந்தக்கவனத்தையுதம் கொள்ளவில்லை.

பதிலாக அங்கிருந்து மக்;கள் இடம்பெயர வைக்கப்பட்டபிறகு அரசாங்கத்துக்கு எப்படி உதவலாம் என்று ஆராய்வதற்காக இரகசியமாக இவர்கள் மட்டக்களப்புக்குப்போயிருந்தனர்.

அப்போது இவர்கள் புலிகளின் எதிர்பாராத ஒரு தாக்குலில்; சிக்கி உயிராபத்தையும் சந்தித்திருந்தனர்.

யாழ்ப்பணத்தில் கடந்த ஓராண்டுக்குள் ஏறக்குறைய ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமற்போயுமுள்ளனர். அப்போது இந்தச்சர்வதேசிகளுக்கு எதுவும் தொன்ற வில்லை.

ஏ9 பாதை மூப்பட்டு ஆறு லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுகுறித்துக்கூட இந்தத்தரப்பினருக்கு எந்த அபிப்பிராயங்களும் இருந்ததாகத்தெரியவில்லை.

இப்போது அவசரஅவசரமாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிந்திக்கவும் அதற்காகப்பாடுபடவும் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு இங்கே குறிப்பிடுவதை யாரும் ஜே.வி.பி போன்ற அமைப்புகளின் எதிர்ப்பு நிலைப்பட்டுடன் இணைத்துப்பார்க்கக்கூடாது. அது வேறு. இது வேறு.

சிங்களவர்களுக்கு வெளிநாட்டு நிதி தேவை. வெளிநாட்டு ஆயதங்கள் தேவை. புலிகளுக்கெதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிரான போரைச்செய்ய சர்வதேசத்தின் ஆதரவு தேவை. ஆனால் இனப்பிரச்சினை குறித்தோ, தமிழர்களின் உரிமைகள் பற்றியோ அல்லது அரசின் மனித உரிமைகள் மீறல்களைக்குறித்தோ யாரும் எதுவும் சொல்லக்கூடாது.

ஆக தமிழர்களைக்கொல்வதற்கு ஆதரவு தேவை. மற்றும்படி எதுவும் தேவையில்லை. அது யாராயிருந்தாலென்ன, எதுவாக இருந்தாலென்ன.

அப்படியான அரசியல் ராஜதந்திரக்கொள்கையில் சிறிலங்கா கடந்;த ஐம்பதாண்டு காலத்திலும் சர்வதேச அரங்கில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதுபற்றி தனியாகவே விரிவாக பார்கக் வேண்டும். அதை இன்னொரு சந்தர்ப்பததில் பார்ப்போம்.

ஆக தமிழர்கள் பாதிக்கப்படும்போது பதறாத சர்வதேச சமூகம் இப்போது அந்தரப்படுவதன் நோக்க மென்ன.

விடுதலைப்புலிகளின் வான்புலிகளுடைய தாக்குதல் கொழும்பை ஆட்டம் காணவைத்திருக்கிறது. போர்வலுச்சமநிலையைக்குலைத்து தான் பலம் பெற்ற தரப்பாக காட்டிவந்த அரசாங்கம் எதிர்பாராமல் இப்போது பெரும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களைக் கைப்பற்றியதன் மூலம் இராணுவ மேலாதிக்கத்தைப் பெற்றுவிட்டதாகவே அரசாங்கம் கருதியது. இவ்வாறே சர்வதேச சமூகமும் கருதியிருந்தது. ஆனால் புலிகள் இதனை திடீரென மாற்றி விட்டனர். அதுவும் அதிர்ச்சிகரமாக மாற்றிவிட்டனர்.

இந்த மாற்றததின் விளைவுகள் பாரதூரமானவை. போர்வலுச்சமநிலையை இன்னொரு புதிய விதத்தில் இந்தத்தாக்குதல்கள் உருவாக்கியுள்ளன. அதாவது புலிகள் தமது பிடியிலிருந்த நிலப்பகுதியை இழந்திருந்தார்கள். பதிலாக சிறிலங்காவின் வான்வெளி உத்தரவாதத்தை கைப்பற்றியிருக்கிறார்கள்.

சிறி லங்கா அரசு புலிகளிடமிருந்த சாம்பற்பிரதேசத்தைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் பொன்னொளிரும் வான்பரப்பை புலிகளிடம் இழந்து விட்டது.

ஒப்பீட்டளவில் புலிகள் இழந்தபிரதேசத்தின் பெறுமதியை விடவும் அரசாங்கம் இழந்த பிரதேசத்தின் பெறுமதியே தீர்மானிக்கும் வலு நிலையில் அதிகமானது.

புலிகள் தாம் இழந்த பிரதேசத்தையிட்டு அதிகம் பாதிப்பை சந்திக்க மாட்டார்கள். வாகரையைத்தவிர. ஆனால் அரசாங்கம் இழந்துள்ள வான்பரப்பு அதன் உயிர் நரம்புகளைப் பாதிக்குமளவுக்கு சக்திவாய்ந்தது. அது கொழும்பு இயங்கு தளத்தின் நரம்புகளில் வெடிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் சிறிலங்காவில் விரிக்கப்பட்டிருக்கும் பல்தேசிய வணிக நடவடிக்கைகள் முடக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொழும்பினூடான விமானப்போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படும்போதும் கொழும்பில் பாதுகாப்;பில்லை என்ற நிலை உருவாகும்போதும் அதனால் ஏற்படும் நெருக்கடிகள் அதிகமானவை. இதில் ஆட்;டுக்கும் நட்டம். குட்டிக்கும் நட்டம் என்றதே யதார்த்தம்.

அடுத்தது, சிறிலங்கா அரசாங்கம் படைத்துறையிலும் போர்வலுச்சம நிலையிலும் சந்தித்துள்ள பெரும் நெருக்கடி. அதாவது கொழும்பின் அரசியலும் பொருளாதாரமணடலமும் படைவலுவும் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. எனவே இவற்றை மேலும் சரிய விடாமல் பாதுகாக்கவே இப்போது இந்தச்சர்வதேச சமூகம் ஓடோடி வருகிறது. கொழும்பைப்பாதுகாக்கவே சமாதானம் என்ற இந்த வியூகம் வகுக்கப்படுகிறது. இதில் தமிழர் மகிழக்கூடிய அளவுக்கோ நம்பிக்கைகொள்ளக்கூடிய விதமாகவோ எதுவும் தோன்றவில்லை.

சரி, ஏன் இந்தத்தரப்புக்கு கொழும்பு அவசியம் என்று பார்த்தால் ஒன்று அவர்களின் வர்த்தக நடவடிக்கைகள். அடுத்தது தமது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் இந்தப்பிராந்தியத்தில் வேறு நடவடிக்கைகள் துலக்கமாக மேற்கிளம்பக்கூடாதென்ற கவனம். மற்றது கொழும்பு ஆட்டம் காணும்போது அதைத்தாம் பாதுகாக்கத்தவறினால் அது சீனாவுடனோ பாகிpஸ்தானுடனோ சரிந்துவிடும் என்று இந்தியாவும் மேற்குலகமும் அதிகமும் நம்புகின்றன.

தமது நிகழ்ச்சி நிரலுக்கு இடைஞ்சலாக வேறு எந்த ஓட்டங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்ற மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் இணைந்த நடவடிகடகைகளே இந்தப்புதிய வியூகமாக இருக்கிறது.

ஆக இந்த நிகழ்ச்சி நிரலில் தமிழர்களுக்கு ஒரு சிறு ஆறுதல் மட்;டும் உண்டு. தமிழர்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை சர்வதேசம் அறியக்கூடிய ஒரு ஏற்பாடும் சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது என்பதற்கப்பால் வேறெதுவும் இல்லை.

தமிழர்கள் தாம் தமது வியூகத்தில் வெல்லும்வரை பிறர் வந்தாலும் ஆபத்து. வராது விட்டாலும் ஆபத்தே.

அபாயக்கொடிகள் அசைகின்றன என்று யாரோ சொன்னதுதான் இப்போது ஞாபத்துக்கு வருகிறது.

குளத்தைக்கலக்கிப் பருந்துக்குகொடுத்த கதை என்று சொல்வாhர்களே அதே மாதிரித்தான் இலங்கைத்தீவை கலக்கிச் சீரழித்து பிறருக்குக்கொடுத்திருக்;கிறார்கள் சிங்;களத்தலைவர்கள்.

அவர்களுக்குத்தெரியவில்லை மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ குடும்பத்தலைவன் என்ற ரீதியிலும் கணவன் என்ற வகையிலும் தந்தை என்ற ஸ்தானத்திலும் தண்டனையையோ அதிகாரத்தையோ திணிக்கும் காலம் இப்போதில்லை என்ற உண்மை.



அறம் அவரவர் சார்ந்தது



அமெரிக்காவைக் கண்டுபிடித்தது ஷகொலம்பஸ் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. எழுதப்பட்டுள்ள வரலாற்றுக் குறிப்புகளும் அப்படித்தான் சொல்லுகின்றன. ஆனால், இன்றைய மறுசிந்தனை இந்த வரலாற்றுப் புனைவின் மீது கேள்விகளை எழுப்புகிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் அமெரிக்கா இருக்கவில்லையா? அல்லது அப்படி அமெரிக்கா இருந்திருந்தால் அது எப்படி இருந்திருக்கும் போன்ற பல கேள்விகள் வரலாற்றுப் புனைவுகளின் மீது எழுப்பப்படும்போது அறியப்பட்ட வரலாற்றின் பொய் முகமும் குரூரமும் வெளிப்படுகிறது.
.
அநேகமாக அறியப்பட்ட எல்லா வரலாற்றுக்கும் மறுபக்கம் அல்லது வேறுமுகங்கள் இருக்கின்றன.

கொலம்பஸ் அமெரிக்காவில் கால்வைத்தபோது அங்கிருந்து பூர்வகுடிகளைக் கணக்கற்ற விதத்தில் கொன்று குவித்தார். அப்படி அந்தப் பூர்வீகக் குடிகளைக் கொன்று, வெற்றி கொண்டுதான் அமெரிக்காவில் கொலம்பஸ் தன்னை நிலை நிறுத்தினார்.

மேற்குலகின் பார்வையிலும், அறிவிலும் கொலம்பஸ்தான் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார். அமெரிக்காவுக்கு ஒளியூட்டினார். அதனைத் துலங்கச் செய்தார் என்ற மனப்பதி வுதான் இருக்கிறது. இதனால், அவர்கள் கொலம்பஸை முதன்மை அடையாளமாகவும் வரலாற்றின் நாயகனாகவும் கொண்டாடுகின்றனர்.

கொலம்பஸ் கொன்று குவித்த அமெரிக்கப் பூர்வ குடிகளைப் பற்றிய கணக்கெடுப்புக்களோ மதிப்பீடோ மனப்பதிவோ மேற்கில் இல்லை. அது குறித்த வருத்தமோ தயக்கமோகூட அவர்களுக்கில்லை. குறிப்பாக, மேற்காதிக்கச் சிந்தனையில் இல்லை.

இந்தியாவில் 1948 சனவரி 30 அன்று காந்தி கோட்சேயினால் சுட்டுக் கொல்லப் படுகிறார். காந்தியைச் சுட்டுக் கொன்றது தொடர்பாக 1948 ஓகஸ்ற் 11 அன்று கோட்சே நீதிமன்றத்தில் தன்னுடைய விரிவான வாக்குமூலத்தை அளிக்கின்றார். அப்போது இந்த வாக்கு மூலம் தடை செய்யப்பட்டு பின்னர் மொராஜி தேசாய் ஆட்சியிலிருந்த போது வெளியிடப்படுகிறது.

காந்திக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நாட்டின் மீது கொண்ட அக்கறை யினாலேயே என்று கோட்சே சொல்கிறார். அதற்கு ஆதாரமாக சீக்கிய, இந்து அகதிகள் காந்தியின் உண்ணாவிரதத்தினால் மசூதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதும் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாவை இந்தியா கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதும் பாகிஸ்தானைப் பிரிப்பதற்கு காந்தியே முக்கிய காரணமாக இருந்தார் என்றும் கோட்சே தெரிவித்தார்.

காந்தியின் கோணத்திலிருந்து அணுகுவோர் பெரும்பான்மையான இந்துக்கள் முஸ்லிம் களின் மீது பரிவுடன் நடந்து கொள்வார்கள், பெருந்தன்மையுடன் இணைந்து வாழ்வார்கள் என்று காந்தி நினைத்தார் என்கின்றனர்.

இங்கே பெருந்தன்மை பற்றியோ பரிவுபற்றியோ பேசுவதைவிட அவரவர்க்கான உரிமை கள் பற்றியே பேசவேண்டும். அதுவே அவசியமானது என்கின்றனர் காந்தியை மறுஆய்வுக்குட்படுத்தும் இன்னொரு சாரார். முஸ்லிம்களுக்குரிய உரிமை இந்துக்களுக்கான உரிமை என்பவை தனித்தனியாக வரையறுக்கப்பட வேண்டுமேயொழிய வெறுமனே பரிவும் இரக்கமும் மட்டுமல்ல என்கின்றனர் அவர்கள்.

இவை ஒவ்வொன்று தொடர்பாகவும் வௌ;வேறு கோணங்களிலான பார்வைகள் உண்டு. இந்த நிகழ்ச்சிகள் குறித்து இந்தியாவில் படிக்கப்படும் வரலாறும், பாகிஸ்தானில் படிக்கப்படும் வரலாறும், பிரிட்டனில் படிக்கப்படும் வரலாறும் வௌ;வேறாகவே இருக்கும் என்கிறார் சுரே~; குமார இந்திரஜித்.
ஒரு இடத்திற்குப் பல வரைபடங்களும் ஒரு காலத்துக்குப் பல சரித்திரங்களும் உண்டென்றும் அவர் மேலும் சொல்கிறார்.

மாற்றுச் சிந்தனையாளர்கள் வரலாற்றை மறுவாசிப்புச் செய்கின்றனர். இன்றைய அறிவுலகம் பன்முகத்தன்மையை அதிகம் நம்புகிறது. பன்முகத் தன்மையில் உருவாகுகின்ற பரிமாணங்களும் வலுவும் அதிகம் என்ற உண்மையை அது நிரூபிக்கிறது

அமெரிக்காவில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கானவர்கள் குறித்த குறிப்புக்களோ அந்தக் கொலைகள் குறித்த குற்றவுணர்ச்சியோ இன்றும் மேற்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது மேற்கின் பன்முகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் கொடுமையின் ஆறாதகாயங்களை தமிழில் மறுவாசிப்புச் செய்திருந்தார் எஸ். வி. ராஜதுரை. 1995இல் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுபமங்களா இதழில் எஸ்.வி.ஆர். இது பற்றி இரண்டு கட்டுரைகளை எழுதியிருந்தார். கொலம்பஸின் குரூரமுகத்தை; அதில் அவர் தெளிவாகக் காட்டினார்.. கூடவே மேற்குலகின் நாகரிகத்தையும்.

இதேபோல ச. தமிழ்ச்செல்வன் சுமங்களாவில் வேறொரு கட்டுரை எழுதியிருந்தார்.


உருண்டையான உலகத்தில் எப்படிக் கிழக்கும் மேற்கும் என்ற பிரிப்புக்கள் செய் யப்பட்டன? எந்த நோக்கத்திலும் எந்தத் தேவையின் அடிப்படையிலும் இந்தப் பிரிப்புகளும் பூமியின் ரேகைக்கோடுகளின் வரைபும் எப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

நமது கல்வி முறையையும், மனப்பதிவுகளையும் பிளந்தெறியும் விதமாக தமிழ்ச் செல்வன் பல உண்மைகளை எடுத்து வெளியே வைக்கிறார்.

ஐரோப்பியர்களின் மேலாதிக்கமே இந்த வரைபுகளை நிர்ணயம் செய்தன. அதிலும் பிரித்தானிய எழுச்சியும் அதன் விரிவாக்கமும் இந்தத் தேவைகளை உருவாக்கின. இந்த எழுச்சியோடிணைந்து எழுந்த அறிவுவாதம் புதிய நிர்மாண விரிவாக்கத்திற்கு ஏற்ற மாதிரித் தன்னை நெகிழ்ந்து கொடுத்து இந்த நிர்ணயங்களைச் செய்தன.


ஐரோப்பா ஒரு காலம் தன்னை மையப்படுத்தியே அனைத்தையும் சிந்தித்தது என்பதே இதன் சாரம். வரலாறு என்பது குரூரமானது என்று சொல்வதன் உண்மை ஒரு வகையில் சரிதான். அது எத்தனைதான் படிப்பினைகளைத்தந்தாலும் மீண்டும் மீண்டும் குருரங்கள் நிகழ்வதற்கான நிலைமைதானே மிஞ்சிக்கிடக்கிறது.


இப்போது ஈராக்கில் தினமும் கொலைகள் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. கட்டற்ற வகையில் அழிவுகள் தொடர்கின்றன. இன்றைய ஈராக் தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாடுகளும் அறிவிப்புகளும் எப்படி இருக்கின்றன என்பது சகலருக்கும் தெரிந்தது. அதேவேளை, ஈராக்கியர்களின் மனப்பதிவும் விருப்புகளும் எப்படி என்பதும் தெரிந்ததே. குறிப்பாக, ஈராக்கிலுள்ள ஸியா முஸ்லிம்களின் மனப்பதிவு வேறானது. சுனி முஸ்லிம்களின் பதிவு வேறானது. ஈராக்கிய அரசு மற்றும் போராட்டக் குழுக்களின் பதிவுகளும் நோக்கங்களும் வேறுவேறானவை. அங்குள்ள மக்களின் மனப்பதிவுகளும் வேறானவை.

இப்போது ஈராக்கின் வரலாறு என்பது அவரவர் நோக்கு, மனப்பதிவு, தேவைகளின் அடிப்படையில் வௌ;வேறாக எழுதப்பட வேண்டும். அப்படித்தான் எழுதவும்படுகிறது. இதில் சில இப்போது முன்னாதிக்கம் செலுத்தலாம். சிலவோ இப்போது பின்தங்கியிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் ஒருபோது மீண்டு மேலெழுந்து வரும்.
ஒற்றைப்படையான வரைபுகள் தகர்ந்துவரும் யுகம் இதுவென்பதை இந்த விடயங்கள் அனுபவமாக்குகின்றன.

வரலாறு என்பது அதிகாரத்தினால் கட்டமைக்கப்படுகிறது என்று சொல்வோர் உண்டு. அது அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தினால் அல்லது கலகத்தினால் உருவாக்கப்படுவது என்று குறிப்பிடுவோரும் உண்டு. வரலாறு என்பது வாழும் முறையால் உருவாகுவது என்று வாதிடுவோரும் உண்டு. வரலாற்றை அறிவே நிர்மாணிக்கிறது என்று நிரூபணம் செய்வோர்களும் இருக்கின்றார்கள்.

அதிகாரத்தினால் நிர்மாணிக்கப்படும் வரலாற்றின் கீழே குருதியும், நிணமும் நாறிக்கிடக்கின்றன. அதற்குள் தீராத வலியும் அவமானமும் குரோதமும் தீராப்பழியாக கொதித்துக்கொண்டும் பெரிதாகிக் கொண்டுமே இருக்கின்றன.

ஆபிரிக்காவை வெற்றி கொண்ட வெள்ளையர்கள் ஆபி ரிக்காவின் வரலாற்றைப் புனைந் திருக்கிறார்கள். இதுதான் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் நடந்தது. ஆனால், அங்கெல்லாம் நூற்றாண்டுத் துயரமாய் நூற்றாண்டுகளாய் தொடரும் வன்மமாய் இன்றும் பழங்குடிகள், மற்றும் கறுப்பர்களிடையே கோபமும் துயரமும் கொந்தளித்துக் கொண்டேயிருக்கின்றன. அவர்களுக்கான நீதியின்மைகள் தொடரும் வரையில் வெள்ளையர்கள் தங்களின் நாகரிகம் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. எத்தனைதான் வெள்ளை சனநாயகம் அழகாகப் பேசினாலும் அது ஆதிக்க வெளிப்பாடாகவோ அல்லது நாகரிகப் பொய்மையாகவோதான் இருக்கிறது.

அறத்தின் தளத்தில் கட்டமைக்கப்படுகின்ற மனப்பாங்கு, நீதி, நாகரிகம், வரலாறு குறித்த சிந்தனைகள் வலுவடைந்து வரும் சூழலில் அதன் தீவிரத்தை மழுங்கச் செய்வனவாகவே இன்றைய பொதுஅமைப்புக்களின் விரிவாக்கத்தை மேற்குலகம் செய்து வருகின்றது என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு பக்கம் எது அறம் என்ற வாதங்களும் உண்டு. அவரவர் தத்தமது நிலைப்பாடு களிலிருந்து தமக்கான அறத்தை உருவாக்குகிறார்கள். இன்னும் சரியாகச் சொன்னால், தமது நியாயங்களுக்கு ஒரு அறக்கோட்பாட்டை உருவாக்குகின்றனர்.

ஈராக்கில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்பது அமெரிக்காவின் அறம். அமெரிக்கா வைத் துரத்துவோம் என்பது ஈராக்கிலுள்ள அமெரிக்க எதிர்ப்பாளர்களின் அறம். வெளியே இருந்து நோக்கும் ஒருவர் இந்த இரண்டிலும் எதை மெய்யான அறம் என்று கொள்வது?

இங்கே விரிந்த அறிவு தேவைப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அறிவைக் கட்டமைப்பதே பல சந்தர்ப்பங்களிலும் அதிகாரமையங்களாக இருக்கின்றன.

இலங்கை வரலாற்றில் சிங்கள மேலாதிக்க சிந்தனை உருவாக்கி வைத்திருக்கும் அறிவு, மேற்குலகம் தனது சந்தைப் பொருளாதாரத்துக்கமைவாக உருவாக்கிவரும் அறிவு என்பவற்றை இங்கே கவனிக்கலாம்.

பாடசாலைக் கல்வி தொடக்கம் ஊடகங்கள் மற்றும் அரசியல் இராஜதந்திர செயற்பாடுகள் வரையில் இந்த மேலாதிக்க அறிவு விரிவாக்கம் நடைபெறுகிறது.

ஆகவே, இதன் வழி நின்றே இவ்வாறான வரலாற்றுப்புனைவுகளின் மீது நின்றே அறத்தையும் அதாவது, மேலாதிக்க சக்திகளின் நியாயத்தையும் உலகம் ஏற்க வேண்டியுள்ளது.

இது மிகக் கொடுமையானது?

நேரடியான ஒடுக்குமுறையையும்விட மிகப்பயங்கரமானதும் ஆபத்தானதும் இந்த அறிவு மயமாதலும் இந்த அறமயமாதலும் என்று எச்சரிக்கை செய்கின்றனர் விடுதலைக்கான சிந்தனையாளர்கள்.

விடுதலைக்கான அறத்தை ஒடுக்குமுறை யின் அறம் ஒருபோதுமே அங்கீகரிப்பதில்லை.

வரலாறு எப்படி அவரவர் நோக்கு, நலன் சார்ந்திருக்கிறதோ அவ்வாறுதான் அறப் பார்வையும் இருக்கிறது.

இங்கே துயரமென்னவென்றால் எல்லா நோக்கு நிலைகளாலும் பல சந்தர்ப்பங்களிலும் வீழ்ச்சியடைவது வாழ்க்கைதான்.

வாழ்வை மேம்படுத்துவதற்காகவே உலகம் முழுவதும் எல்லாக் காரியங்களும் நடக்கின்றன என்று சொல்லப்படுகின்ற போதும் இதுவே மெய்யாய் நடக்கிறது.

விடுதலை வரலாறும் விடுதலைக்கான அறமும் அதற்கான வழியையே திறக்க முயற்சிக்கின்றன. விடுதலை வரலாற்றில் சாதாரண மனிதர்களின் உணர்வுகளும் பங்கேற்பும் இடம்பெறுவது இதில் முக்கியமான அம்சம். இதுவே ஏனைய வரலாற்றியல்புகளை விடவும் வேறுபட்டிருப்பதும் மதிப்புக்குரியதாக அமைவதுமாகும்.

சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களுடைய உணர்வுத் தளத்தி லிருந்தும் பிறக்கின்ற வரலாற்றுக்கும் அறத்துக்குமே ஏனைய வரலாற்றை விடவும் மதிப்பு அதிகமாகிறது.

இது மற்றெல்லாப் புனைவுகளைவிடவும் அதிகம் வெளிப்படையானது. தவிர ஏனையவை அதிகமதிகம் ஆபத்தாக இருக்கும்போது இது மட்டும்தான் அவற்றிலிருந்து விலகி வேறு மாதிரியாக இருக்கிறது.

ஆனால், இந்த சனங்களின் வரலாறு இலகுவில் எட்டிவிடக்கூடிய தல்ல. அது விடுதலைப் போராட்டச் சூழலைத் தவிர வேறெங்கும் சாத்தியமாவதுமில்லை.

எல்லாக் குறிவைப்புக்களில் இருந்தும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய இலக்கு விடுதலையாளர்களுக்கே அதிகம் உண்டு. அதிக சவாலையும் அதிகவிழிப்பையும் விடுதலையாளர்களே கொண்டிருக்க வேண்டியது யதார்த்தத்தின் நியதி.

செம்பியன் செல்வன் நினைவுப்பெருக்கு



இடியப்பம், சுண்டல், வடை, அப்பம் இல்லையென்றால் அப்பம், சுண்டல், இடியப்பம், இட்லி அல்லது பிட்டு, சுண்டல், வடை, தோசை இப்படி நான்கைந்து உணவுகளை ஒரு காலை நேரச்சாப்பாடாகக் கொள்ளும் மனிதர் எனக்கு நண்பராக இருந்தார்.

அவருடைய காலை நேரச்சாப்பாடு தினமும் இப்படித்தானிருக்கும். இந்தமாதிரி நான்கைந்து அயிற்றங்களை ஒரேநேரத்தில் காலைச்; சாப்பாடாக எடுத்துக்கொள்ளும் அவருடைய சாப்பாட்டு முறை எனக்கு இப்போதும் வியப்பாகவே இருக்கிறது.

இவ்வளவையும் ஒரு காலைச்சாப்பாடாகக் கொள்ளும் அவர் மற்ற இரண்டு வேளையும் எதையெல்லாம்; எப்படிச்சாப்பிடுவார் என்று நீங்கள் கேட்கக்கூடும். அவர் பெரிய சாப்பாட்டு ராமனாகத்தானிருப்பார் என்று நீங்கள் எண்ணவும் கூடும்.

அவர் அப்படி ஒன்றும் பெரிய சாப்பாட்டு ராமனல்ல. ஆனால் சாப்பாட்டுப் பிரியர். விதவிதமாகச் சாப்பிடுவதில் தீராத ஆசை கொண்டவர். அதிலும் சாலைச்சாப்பாட்டில் அவர் சிறு பிள்ளையைப்போல பெரும் ஆசையுடையவராகவே இருந்தார்.

அதற்காக அவர் அதிகம் சாப்பிடுவார் என்றில்லை. ஒரு அடை பிட்டு, இரண்டு தோசை, ஒரு சிறிய கிண்ணம் சுண்டல், ஒரு வடை இப்படி ஒவ்வொரு அயிற்றத்திலும் எடுத்துக்கொள்வார்.

சாப்பிட்டு முடிந்தவுடன் ஒரு கப் பால் குடிப்பார்.

" காலையில் என்ன சாப்பிட்டீர்கள்" என்று அவரிடம் யாராவது கேட்டால் அவர் என்ன பதிலைச் சொல்வார் என்று பல தடவை யோசித்திருக்கிறேன்.

அவருடைய இந்த ஆசைக்கு எந்த வீட்டிலாவது அப்படிச்சமைத்துப்போட முடியுமா. அதுவும் தினமும் ஐந்து ஆறு அயிற்றங்களை.

அதனால் தனக்கேற்றமாதிரி கடையில்தான் காலைச்சாப்பாட்டை வைத்துக் கொண்டார். அதுதான் அவருடைய சாப்பாட்டு முறைக்குத் தோதாகவும் இருந்தது. அதுக்கேற்றமாதிரி அவருக்கு சொக்கன் கடையும் வாய்த்தது.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் வடக்கு வீதியில் இருந்தது சொக்கன் கடை. இப்போதும் அது அங்கேதானிருக்கிறது.

சொக்கன் கடையில் மூன்று விசயங்களுண்டு. ஒன்று தரமான தேநீர். அதற்கென்றே தனிச்சுவையிருக்கிறது. அது பிளேன்ரீயாக இருக்கலாம். அல்லது பால் தேநீராக இருக்கலாம். சுத்;தமான பாலாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதற்கென்று தனி ருசியுண்டு.

அடுத்தது தரமான சாப்பாடு. அதுவும் சிற்றுண்டிகள். தோசை, இட்லி, பிட்டு, இடியப்பம், அப்பம், வடை, சுண்டல் அல்லது கௌபி எல்லாம் மிகத்தரமாகவே இருக்கும்.

மூன்றாவது சொக்கன் கடையின் பகோடாவும் வாழைப்பழமும். ஆகக்குறைந்தது மூன்று நான்கு வகைகளில் ஒரே தரத்தில் பகோடா கிடைக்கும். கடைக்கு வரும் ஆட்கள்; பகோடாப் பொதியில்லாமல் படியிறங்குவது அபூர்வம்.

யாழ்ப்பாணத்தில் சொக்கன் கடைப் பகோடா அந்தளவுக்குப் பிரபலமாகியிருந்தது. அதேமாதிரி யாழ்ப்பாணத்தின் அத்தனைவகை வாழைப்பழத்தையும் சொக்கன் கடையில் வாங்கலாம்;. புகை அடித்தோ போறணையில் போட்டோ பழுக்க வைக்கும் வழக்கமெல்லாம் கிடையாது.

நன்றாக முற்றிக்கனிந்த பழங்கள். பெரிய பழங்கள். தொட்டால் விழக்கூடிய கனிவுடனிருக்கும் பழங்கள். சில பருவங்களில் கொடிமுந்திரிப்பழங்களும் கிடைக்கும்.

இப்படியெல்லாம் பொருந்தியிருக்கிற கடையைத்தான் நண்பர் தன்னுடைய காலைச்சாப்பாட்டுக்குத் தெரிவு செய்திருந்தார். அவருடைய தேர்வு மிகப்பொருத்தமாகவே இருந்தது.

சொக்கன் கடையில் எப்போதும் கூட்டம் அதிகமுண்டு. தேடிவரும் கூட்டம். சிறிய கடை. அதிலும்; பரபரப்பான இடத்த்pலல்லாமல் ஒரு ஓரமாக ஒதுக்குப்புறத்தில் இருந்தபோதும் தேடிவரும் வாடிக்கையாளர்.

அந்தக்கடையில் அதிகபட்சம் ஐந்து மேசைகள் மட்டுமுண்டு. ஒரே நேரத்தில் இருபது பேர் இருந்து சாப்பிடலாம். ஆனால் முப்பது முப்பந்தைந்து பேருக்கு மேல் கூட்டம் எப்பவுமிருக்கும். காலைக்கும் மதியத்துக்குமிடைப்பட்ட நேரத்தில் மட்டும் கூட்டம் குறைந்திருக்கும்.

சொக்கன் கடையில் மாமிசம் எல்லாம் கிடையாது. அது சைவைக்கடை. கைலாச பிள்ளையார் கோவில் வீதியில் கடை இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது சொக்கனுக்குச் சைவக்கடை வைத்திருப்பதில்தான் அதிக விருப்பமாக இருக்கலாம். அல்லது யாழ்ப்பாணத்தில் சைவக்கடைகளுக்குக் கூச்சமில்லாமல் வாடிக்கையாளர்கள் செல்வார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். சைவக்கடையில் சுத்தம்; கூடுதலாக இருக்கும் என்ற அதீத நம்பிக்கை இன்னொரு காரணமாக இருக்கலாம்.

எப்படியோ சொக்கன் கடையில் தன்னுடைய காலைச்சாப்பாட்டை வழமையாக்கியிருந்தார் நண்பர். அவர் கடைக்கு வந்தால் "இன்றைக்கு என்ன " என்று மட்டும் கேட்பான் கடைப்பையன்.

அவர் பட்டியலைச்சொல்வார். காலைச்சாப்பாட்டில் ஒரு பட்டியலே வைத்திருக்கும் அளவுக்கு அவருடைய சாப்பாட்டு முறை இருந்ததைப்பாருங்கள். கணக்குக் கொப்பியுண்டு. மாதம் முடியக்காசு கொடுப்பார்.

கடையில் இதெல்லாம் அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தன. கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களிடமும் அவர் ஒரு நூதனப்பழக்கமுள்ளவராக அறிமுகமாகியிருந்தார்.

எனக்கு அவர் அறிமுகமாகியிருந்த காலத்தில் ஒரு நாள் அவருடன் சொக்கன் கடைக்குப் போயிருந்தேன். அவர் சாப்பிடும் முறையைப் பார்த்த பின் " ஏன் இப்படி ஒரு விருப்பம்" என்று கேட்டேன்.

" காசைக் கொடுத்துச் சாப்பிடுகிறோம் அதில் விரும்பியதைச் சாப்பிடுவதுதானே" என்று சாதாரணமாகச் சொன்னார். ஆனால் அதுவல்ல அப்படி அவர் சாப்பிட்டதற்குக் காரணம் என்று எனக்குப் பிறகு ஒரு நாள் சொன்னார்.

அவர் தன்னுடைய இளவயதிலேயே தாயை இழந்து விட்டார். அவருடைய பாட்டிதான் அவரை வளர்த்தார். பாட்டி தன் பேரனுக்கு செல்லமாக காசு கொடுத்து பள்ளிக்கு அனுப்பியபோது இப்படியொரு சாப்பாட்டுத்தெரிவை அவர் உருவாக்கிக்கொண்டார்.

தன்னுடைய சாப்பாட்டு விருப்பங்களைப்பற்றியும் தேர்வு முறைகளைப்பற்றியும் அவர் விவரமாகச் சொன்னார். தன்னுடைய இளப்பிராயத்தின் அந்தரிப்பு நிலைபற்றியும் சொன்னார். அதிலெல்லாம் அவருக்கு வருத்தமோ துக்கமோ இருந்ததாக உணர முடியவில்லை. எந்த உணர்ச்சியுமற்று அவர் அதையெல்லாம் சொல்வார். ஆனால் அவருக்கு அவருடைய பாட்டியின் மீதும் அவருடைய அண்ணாவின் மீதும் அளவற்ற அன்பிருந்தது.

இப்படிப் பிறகும் பல வேளைகளில் தன்னுடைய வாழ்வொழுங்கு, நோக்கங்கள், தன்னுடைய விருப்பங்கள், தான்செய்தவை, செய்யவிரும்புபவை, நிறைவேற வேண்டிய ஆசைகள், செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் சொல்;லியிருக்கிறார்.

அவர் எதையும் மறைத்துப்பேசாதவர். அப்படிப்பேசத் தெரியாதவர். முன்னறிமுகமில்லாத ஆட்கள் யாரோடும் உடனடியாகவே அவர் நன்றாகப்பரிச்சயமானவரைப் போலப்பழகுவார். அவர்கள் யார், எவர், எப்படியானவர் என்றெல்லாம் பார்;க்காமலே தாராளமாகக் கதைக்கத்தொடங்கி விடுவார். இதுதான் செம்பியன் செல்வன்.

செம்பியன் செல்வனுடன் நான் அறிமுகமானதும் அப்படித்தான். எண்பதுகளின் முற்பகுதி. அப்போது தலைமறைவு வாழ்க்கையில் என் அடையாளத்தை மறைத்துத்திரிந்தேன். ஆனால் படைப்பாளிகளைச் சந்திப்பதில் பெரும் ஈடுபாடு. அவர்களுடன் பேசுவதி;ல், அவர்களைப்பார்ப்பதில் எல்லாம் ஒருவிதமான கவர்ச்சியும் விருப்பமுமிருந்தது. ஆனால் என்னுடைய நிலைமையில் இந்த விருப்பத்தை முழுதாக நிறைவேற்ற முடியாது.

சந்திப்போரிடம் என்னுடைய விவரங்களை என்னுடையதும் அவர்களுடையதுமான பாதுகாப்புக்காகமாற்றியே சொல்லியிருந்தேன். அதேவேளை அதிகம் பேரைச் சந்திப்பதையும் தவிர்த்திருந்தேன். அப்படிச்சந்தித்த சிலரில் செம்பியன் செல்வனும் ஒருவர்.

செம்பியனிடமும் என்னைப்பற்றிய வேறுவிதமான தகவல்களையே சொல்லியிருந்தேன்.

ஒரு மதியநேரம். யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்துக்கு முன்னாலிருந்த இயக்கச்சி மணியத்தின் புத்தகக்கடையில்தான் செம்பியனுடன் முதன்முதலில் பேசினேன். மணியம்தான் அறிமுகப்படுத்திவைத்தார்.

அப்போது நான் சில கவிதைகளை மல்லிகையில் எழுதியிருந்தேன். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நான் செம்பியனிடம் சொல்லவில்லை. அவரிடம் எப்படிச்சொல்லமுடியும். நான்தானே என்னுடைய பெயரையே வேறாக மாற்றிவைத்திருக்கிறேன். கவிதைகளை சொந்தப்பெயரில் எழுதிவந்தேன். ஆனால் பெரிய அறிமுகமெல்லாம் ஏற்பட்டிருக்கவில்லை. அதனால் அந்தப்பேச்சை எடுக்கவே முடியாது.

பொதுவாக வாசிப்பில் ஈடுபாடு உண்டு என்று சொன்னேன். எந்தமாதிரியான புத்தகங்களை வாசிக்கிறீங்கள் என்று கேட்டார். புரட்சி, விடுதலைப்போராட்டம் சார்ந்த புத்தகங்களையே அப்போது அதிகமாக வாசித்தேன். அதிகமாக என்ன முழுமையாக அவற்றையே வாசித்தேன். அதுதானே என்னுடைய வேலையாகவும் விருப்பமாகவும் இருந்தது.

ரஸ்யப்புத்தகங்கள், வியட்நாம், கியூபா, சீனா ஆகிய விடுதலைப்போராட்டங்களின் வரலாறுகள் மற்றும் அந்த நாடுகளின் இலக்கியம் போன்றவைதான் கூடுதலான வாசிப்புக்குரியவை. பலஸ்தீன விடுதலைப்போராட்டம் வங்கம் மற்றும் தெலுங்கானா போராட்டம் பற்றி வந்த வெளியீடுகளையும் படித்திருந்தேன்.

ஆனால் இப்போது அவை எதைப்பற்றியும் சொல்ல முடியாது. அப்படிச்சொல்வது பாதுகாப்பில்லாதது. எனவே அதையும் மறைத்து வேறுபுத்தகங்களாகச் சொன்னேன். ஆனால் அவற்றையும் நான் வாசித்திருந்தேன். என்றபடியால் அவற்றைப்பற்றி தாராளமாக அவருடன் என்னால் பேச முடிந்தது.

தமிழில் எனக்கு யாரை எல்லாம் பிடிக்கும் என்றுகேட்டார். புதுமைப்பித்தன் தொடக்கம் உமாவரதராஜன் வரையான ஒரு பட்டியலைச் சொன்னேன். அதில் அவருக்கு சற்றுத்திருப்தி இருந்தது. 'பரவாயில்லை ' என்றார்.

" ஏன் அதைவிட இப்போது, நாட்டிலிருக்கிற சூழலுக்கேற்றமாதிரி வாசிக்கவேண்டிய வேறு புத்தகங்களும் இருக்கே. அதை இப்போது கட்டாயம் வாசிக்க வேண்டும் " என்றார். அவர் சொன்னது நான் ஏற்கனவே முழுதாக வாசித்துக்கொண்டிருந்த விடுதலைப் போராட்டம் சார்ந்த புத்தகங்களையே.

நான் " படிக்கலாம்" என்றேன். அந்தப்புத்தகங்கள் தன்னிடமும் இருக்கிறது. வேண்டுமானால் தரலாம் என்றார்.

நான் அவருடன் அதிகம் அறிமுகமில்லாத ஆள். அன்றுதான் சந்தித்திருக்கிறேன். ஒரு பதினைந்து நிமிடநேர உரையாடல்தான் நடந்திருக்கும். அதற்குள் தன்னுடைய புத்தகங்களை இரவல்தர அவர் துணிந்து விட்டார்.

மற்றவர்களின் புத்தகங்களை மடக்குவதில் கெட்டிக்காரர்களாக இருந்த பலரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் செம்பியன் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராகத் தெரிந்தார்.

தேவையென்றால் பிறகு வருகிறேன் என்று சொல்லி அவருடைய முகவரியை வாங்கிக்கொணN;டன். ஆனால் அவருடைய வீட்டை எனக்கு முன்பே தெரியும். அதை நான் காட்டிக்கொள்ளவில்லை.

அப்போது நான் நல்லூர் மூத்த வினாயகர் கோவிலுக்கு முன்னாலுள்ள வீட்டில் இருந்தேன். அந்த இடத்தையும் அவருக்குச் சொல்லமுடியாது. சொக்கன் கடை நானிருந்த இடத்துக்கும் அவருடைய வீட்டுக்கும் இடையில் இருந்தது. வேண்டுமானால் அவரோ நானோ ஒரு பத்து நிமிட நடையில் கடைக்கு வந்துவிடலாம். ஆனால் அப்போது அப்படியொரு ஏற்பாட்டைச் செய்யவில்லை.

அவர் நான் சந்தித்த அந்தப்பதினைந்து நிமிசத்திலும் நிறைய விசயங்களைப்பற்றிப் பேசினார். தேநீர் குடிக்க பக்கத்திலிருந்த கடைக்கு அழைத்துப்போனார். அவருக்கு இளவயதில் ஒரு வாசகன் கிடைத்து விட்ட சந்தோசம். அதிலும் அந்த வாசகனை அப்போதிருந்த சூழலுக்கேற்ற மாதிரி போராட்டம் சார்ந்த வாசிப்பு உலகத்துடன் இணைத்துவிட வேண்டுமென்று விரும்பினார். படு உற்சாகமாக இருந்தார். அவர் அந்தப்புத்தகங்களைப்பற்றியே அந்தச்சந்திப்பிலும் அதன் பிறகான சந்திப்புகளிலும் பேசினார்.

மணியத்தின் கடையிலும் அப்போது அந்தப்புத்தகங்கள்தான் அதிகளவில் இருந்தன.

இப்படித்தானிருந்தார் செம்பியன் செல்வன். யாருக்கும் எதையும் தூக்கிக் கொடுத்துவிடுவார். அவை திரும்பிவருமா என்றெல்லாம் கொஞ்சம் கூட அக்கறைப்படமாட்டார்.

அவரிடம் எழுத்து, யாத்ரா, கொல்லிப்பாவை மறுமலர்ச்சி, கலைச்செல்வி அவர் செங்கை ஆழியானோடு சேர்ந்து வெளியிட்ட விவேகி போன்ற பழைய இதழ்களையெல்லாம் வாங்கிப்படித்திருக்கிறேன்.

செம்பியனுக்கு ஊர் சுற்றுவதில் பெரும் விருப்பமுண்டு. ஆனால் அவர் பார்த்த வேலையில் அதற்கு இடமில்லை. அவர் பள்ளியில் படிப்;பித்துக்கொண்டார். பள்ளிக்கு விடுமுறை எடுத்தால் அதனால் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள். அது பெரும்பிழையான காரியம். தனக்கு வேறு வேலை கிடைத்திருக்கக்கூடாதா என்று என்னிடமே அவர் சொல்லியிருக்கிறார். "ஏன் வேற வேலையை நீங்கள் தேடியிருக்கலாமே " என்று கேட்டேன். "எல்லா வேலையும் பழகினால் அடிப்படையில் ஓன்றுதான் " என்றார். அதுவும் ஒரு வகையில் சரியென்றே பட்டது. அப்படியென்றால் எதுக்காக தனக்கு வேறு வேலை கிடைத்திருக்கக்கூடாது என்றார். அதற்கான பதில் எனக்குத்தெரியவேயில்லை.

ஆனால் செம்பியனுக்கு தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் செங்குந்தா என்ற பள்ளியில் முதல்வர் பதவி கிடைத்தது. அதை அவர் விரும்பவேயில்லை. தன்னுடைய நிம்மதியைத்தின்னுகிறதுக்குத்தான் இந்த உத்தியோகம் கிடைத்திருக்கிறது என்று பெருந்துக்கத்தோடு சொன்னார். அப்போது அவருடைய விருப்பத்துக்கேற்றமாதிரி, அவர் அந்தப்பள்ளியில் பொறுப்பை எடுத்து நடத்தமுடியாதபடி யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது செம்பியனும் நன்றாக வாடித்தானிருந்தார். அந்த நாட்களில் அவர் தன்னை மிகவும் ஒடுக்கியிருந்தார். அதிலும் அவர் தன்னுடைய அடையாளத்தைத்தொலைத்தமாதிரி பேசாமலே இருந்தார். அவரைப்பார்த்தபோது எனக்குப் பெரும் அதிர்ச்சியாகவும் தாங்கமுடியாததாகவுமிருந்தது. ஆனால் அப்போது எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நாட்களில் அந்த நெருக்கடிகளிலும் எப்படியோ சந்தித்துக்கொள்வோம். அவர் அந்த இறுக்கத்திலிருந்தும் எதிர்பாராத அதிர்ச்சியிலிருந்தும் விடுபட நீண்ட நாட்களாயிற்று. ஆனால் அப்போதும் அவரிடமிருந்த ஒருவகையான விட்டேத்தித்தனம் அவரை விட்டுப்போகவில்லை.

ஒரு வகையில் செம்பியன் அப்படி நடந்து கொள்வதெல்லாம் தவிர்க்க முடியாதென்றும் சரியென்றும் பட்டது. அவருடன் தொடர்ந்து பழகியபோது அவரின்மேல் ஒருவகையான பிடிப்பு ஏற்பட்டது. அவர் ஒரு தனிரகமானவராகத் தெரிந்தார்.

முன்பு அவருடன் பல தடவை சொக்கன் கடைக்குப்போயிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் அவரை நான் சொக்கன் கடையில் சந்தித்து மிருக்கிறேன்.

அந்தக்கடையில் அவருடன் பல இலக்கிய நண்பர்கள் அநேமான நாட்;களில் இருக்கக்கண்டிருக்கிறேன். புத்தக வெளியீட்டு விழாக்களோ இலக்ககியக்கூட்டமோ நடந்து முடிந்தவுடன் அவர் நேரே சொக்கன் கடைக்கே வருவார். அப்போது நண்பர் கூட்டமொன்று கடைக்குள் திரளும். எல்லோருக்கும் அவர்தான் உபயம்.

கடையினுள்ளேயே விவாதங்கள் தொடங்கிவிடும். சிலபோது முடிவில்லாமலே அந்த விவாதங்கள் தொடர்;ந்து நீண்டுமிருக்கின்றன. எப்போதும் கூட்டம் சேருகிற அந்தக்கடையில் இருக்கைகளும் வசதிகளும் குறைந்த கடையில் அப்படி நீண்ட நேரம் இடத்தை அடைத்துக்கொண்டிருந்தால் கடைக்காரரின் வியாபாரத்துக்கே நட்டம் என்றுகூட அங்கே யோசனை வராது. அவ்வளவுக்குப் பேச்சுச்சுவாரசியம். இலக்கியக்காரன் என்றால் யதார்த்தம் புரியாதவன்தானா என்றே நான் பல தடவை யோசித்திருக்கிறேன்.

எழுதும்போது மற்றவர்களின் பொறுப்பின்மைகளைப்பற்றியும் புரிநதுணர்வில்லாத்தனத்தைப்பற்றியும் எழுதிக் குவிக்கிற படைப்பாளிக்குச் சிலவேளை தன்னுடைய குறைபாடுகள் தெரிவதில்லை. யதாரர்த்தத்தைப்பற்றி அதிகம் வலியுறுத்துகிற எழுத்தாளன் தான் யதார்த்தமாக இருக்;க முயல்வதில்லை.

இந்தக் கூட்டத்தைப் பார்த்து கடைக்காரரும் ஒன்றும் சொல்வதில்லை. சிரமங்களை எப்படியோ அவர் சமாளித்து விடுகிறார். ஒன்று தன்னுடைய வாடிக்கைக்காரர்கள் என்பதாக இருக்;கலாம். மற்றது அவருக்குப்படைப்பாளிகள் எழுத்தாளர்கள் தொடர்பாக வித்தியாசமான மதிப்பான புரிதல் இருக்;கலாம். ஆனால் அவர் எதையும் பேசியதில்லை. அதேவேளை அவர் எல்லோரையும் தெரிந்தும் புரிந்தும் வைத்திருந்தார்.

கடைக்குள்ளிருந்த விவாதம் கடை முற்றத்துக்கு வரும். அங்கே நேரம் ஒரு பொருட்டெனக்கருதப்படுவதில்லை. கைலாச பிள்ளையார் கோவில் தெற்கு வீதி மரத்தின் கீழே அது தொடரும். அதிலும் முடியவில்லை என்றால் சைக்கிளை உருட்டிக்கொண்டு நாவலர் வீதி வழியே சென்று அத்தியடியில் உள்ள செம்பியனுடைய வீட்டுக்குப் போகும்.

அத்தியடியில்தானிருந்தார் செம்பியன் செல்வன்;. அங்கிருந்தே அவர் தினமும் சொக்கன் கடைக்கு வந்து போனார்.

யாழ்ப்பாணப்புகையிரத நிலையத்துக்கு செல்லும் செம்பியனுடைய நண்பர்கள் அதற்கருகில் அத்தியடியில் இருந்த அவருடைய வீட்டில்தான் தங்களுடைய சைக்கிளை விட்டுச் செல்வார்கள். பயணம் முடிந்து திரும்பி வந்து சைக்கிளை எடுத்தப்போவார்கள்.

ரெயினிலிருந்து இறங்கியவுடன் செம்;பியன் வீட்டில் தேநீர் குடிப்பார்கள். அப்படியொரு ஏற்பாட்டை அவர் செய்திருந்தாரோ அல்லது அவருடைய மனைவிதான் அதை வழக்கமாக்கியிருந்தாரோ தெரியாது. ஆனால் அது தொடர்ந்தது. இரவல் வாங்கிய புத்தகத்தை மீளக் கொடுப்பார்கள். புதிய புத்தகத்தை வாங்குவார்கள். அதேபோல தாங்கள் புதிதாக வாங்கிவந்த பத்திரிகையையோ இதழையோ புத்தகத்தையோ அவருக்குக்கொடுப்பார்கள்.

அங்கே ஒரு குட்டி உரையாடல் தொடங்கும். ஆனால் அது அநேகமாக பெரிதாக முற்றாது. எப்படியோ பேசுவதற்கு அங்கே நிறைய விசயங்களிருந்தன. தாராளமாகக்கதைத்தார்கள். பேசுவதற்காகவே பிறந்ததுபோல செம்பியனிருந்தார். அவரிடம் நிறையச் செய்திகளிருந்தன. வாசித்த புத்தகங்களைப்பற்றி, அவற்;றை எழுதிய எழுத்தாளர்களைப்பற்றி, வந்திருக்கும் இதழ்களைப்பற்றி,; விமர்சனங்களைப்பற்றி என்று அவர் எதையாவது சொல்வார்.

செம்பியன் பெரும் வாசிப்பாளர். அவர் எல்லாவற்றையும் வாசிப்பார். தேர்ந்த வாசிப்பாளர். அதனால் அவர் சினிமா பற்றியும் கதைப்பார். ஓவியத்தைப்பற்றியும் பேசுவார். இசையைப்பற்றியும் உரையாடுவார். கவிதை, சிறுகதை, நாவல், விமரிசனம் என்று எல்லாவற்றையும் பற்றி அவர் தெரிந்து வைத்திருந்தார். எல்லாவற்றிலும் அவருக்கிருந்த ஈடுபாடு காhரணமாக அவர் இப்படி ஒரு பன்முக நிலையைக் கொண்டிருந்தார்.

இதற்குக்காரணம் அவர் இதழ்களின் ஆசிரியப் பொறுப்பிலிருந்ததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அத்துடன் செம்பியன் ஈழத்துத்திரைப்படமொன்றுக்கு திரைக்கதை வசனத்தையும் எழுதியிருந்தார்.

முதலில் விவேகியிலும் பின்னர் அமிர்தகங்கையிலும் செம்பியன் ஆசிரியராக இருந்தார்.

விவேகியில்; அவர் செங்கை ஆழியானோடு இணை ஆசிரியராக இருந்தார். அது அவர்களுடைய இளமைக்காலத்தில் வெளியிடப்பட்டது. அப்போதுள்ள சூழலின்படி விவேகி அதிகம் அரசியல் மயப்பட்டிருக்கவில்லை. ஆனால், அமிர்தகங்கை கூடுதலாக அரசியல் மயப்பட்டிருந்தது. அமிர்தகங்கையின் காலகட்டம் முழுஅளவில் அரசியல் ஆதிக்கம் பெற்றது. அது வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் ஏறக்குறைய போர் தொடங்கியிருந்தது. அதனால் அது அப்படி வெளிவரவேண்டியிருந்தது. ஆனபோதும் அமிர்தகங்கையை செம்பியன் முற்றுமுழுதான அரசியல் ஏடாக்கவில்லை.

அமிர்தகங்கையை இரண்டு கட்டமாகப் பார்க்க வேண்டும். முதலாவது, செம்பியனின் காலகட்டம். அடுத்தது செம்பியனுக்குப்பின்னான காலகட்டம். செம்பியன் தன்னுடைய காலகட்டத்தில் இலக்கியத்துக்கே முன்னுரிமையளித்தார். ஆனாலும் அதற்குள் விவேகியை விடவும் அரசியல் ஆதிக்கமிருந்தது.

ஈழத்திலக்கியத்தில் அரசியற் செல்வாக்கு எப்போதும் அதிகமாகவும் தூக்கலாகவுமே இருக்கிறது. பெரும்பாலும் இது ஒரு பொதுக்குணமாகியும் விட்டது. இந்தக்குணத்திற்குள் படைப்பை அதன் பெறுமானத்தோடு அணுகுவதிலேயே ஒவ்வொரு இதழுக்கும் அதன் ஆசிரிய பீடத்துக்கும் நுட்;பமும் வேறுபாடுமிருந்தது.

செம்பியன் இந்த வேறுபாட்டை நுட்பமாகக் கையாண்டார். அவர் தமிழ்பேசும் மக்களின் அரசியல் விடுதலை குறித்து அக்கறையுடையவராக இருந்தபோதும் அந்த அரசியலுக்கு இயைபாகவும் அதேவேளை அதனை படைப்புக்குச் சேதாரமில்லாமல் இணைப்பதிலும் ஆற்றலோடும் திறனோடும் நுட்பத்தைக் கையாண்டார். அமிர்தகங்கையில் செம்பியன் செல்வனுக்குப் பெரும்பங்குண்டு. அது ஒரு அடையாளத்தைத்துலக்கமாகக் மேற்கிளம்புவதற்கு தொடர்ந்து சூழலும் களமும் பொருந்தியிருக்கவில்லை.

அமிர்தகங்கை தீவிர இலக்கியத்தளத்தில் இயங்கவில்லை. அதை இடைநிலைத்தன்மையோடு வந்த இதழாகவே சொல்லலாம். செம்பியனின் படைப்பியக்கமும் ஏறக்குறைய இதேதன்மையுடையதுதான். ஆனால் அவர் புறக்கணிக்கக்கூடிய படைப்பாளியல்ல. அவருடைய நாவல்களையும் சிறுகதையும் விட அவர் எழுதிய கட்டுரைகள் ஓரளவுக்குச்சீரியசானவை.

யேசுராசா செம்பியனின் கட்டுரைகளை தன்னுடைய இதழ்களில் பிரசுரித்;திருக்கிறார். ஆனால் அவருடைய கதைகளை அவர் ஏற்றுக்கொண்டதில்லை. இதுபற்றி செம்பியனிடம் ஒருதடவை கேட்டேன்.

அது யேசுராசாவின் விருப்பத்தையும் தேர்வையும் பொறுத்தது. அதில் தனக்கெந்தவிதமான வருத்தமும் இல்லையென்றார் செம்பியன். இதுதான் செம்பியன். அவருக்கு எதிலும் வருத்தமில்லை. அவரை யார் எதிர்த்தாலும் சரி ஏற்றுக்கொண்டாலும் சரி அதைப்பற்றியெல்லாம் அவருக்குப் பொருட்டல்ல. அவருக்கு எல்லாம் ஒன்றுதான். அதுதான் அவருடைய பலம் என்று நினைக்கிறேன். அவர் இதைப்பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. எந்த நிலையிலும் சமநிலை தளம்பாமல் அவற்றைப் பொருட்படுத்தாமலே அவர் சாதாரணமாப் பேசிக்கொண்டிருப்பார்.

சிலர் தங்களுடைய கதைகளைப்பற்றியோ கவிதைகளைப்பற்றியோ யாராவது ஏதாவது அபிப்பிராயங்களைச் சொல்லி விட்டால் போதும். அதைப்பெரிய விவகாரமாக்கி விடுவார்கள். அது பாராட்டென்றால் அதைப் பெருங்கொண்டாட்டமாக்கிவிடுவார்கள். அது எதிர்மறையானதாக இருந்தால் அந்த விமர்சனத்தை வைத்தவர்மீது பெரும் தாக்குதலையே நடத்தி விடுவார்கள். இதற்கென்றே ஒரு அணியை உருவாக்கும் ஆட்களுமிருக்கிறார்கள். ஆனால் செம்பியன் இதிலிருந்து முற்றிலும் வேறானவராக இருந்தார்.

செம்பியன் செல்வனிடமிருந்த இந்தமாதிரியான குணங்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அவருடன் நான் நெருக்கமாகத் தொடங்கினேன். அவருடன் பல நாள் சொக்கன் கடையில் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். சைக்கிளில் இரண்டுபேருமாக யாழ்ப்பாணத்தின் ஒழுங்கைகளுக்குள்ளால் பல இடங்களுக்கும் போயிருக்கிறோம். போகும் வழிநெடுகவும் பேசிச்சென்றிருக்கிறோம். அந்த வழிகளில் இன்னமும் எங்களின் பேச்சுக்குரலும் பேசிய விசயங்களும் காற்றோடு படிந்திருக்கலாம்.

பசுவய்யாவின் ஒரு கவிதையில் உள்ளதைப்போல 'என்றேனும் காற்றையறியும் கருவியைக் கண்டுபிடித்தால் ' செம்பியன் பேசிய பேச்சுகளை அறியலாம்.

செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவல் திரைப்படமாக்கப்படும்போது செம்பியன் செல்வன்தான் அந்தப்படத்துக்கு கதை வசனம் எழுதியிருந்தார். அந்தப்படம் ஈழத்துத்திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க அடையாளத்தைப் பெற்றிருந்தது. ஆனால் அந்தப்படத்துக்காக செம்பியன் கடுமையாகக் கஸ்ரப்பட்டபோதும் அதை மறைக்கிற மாதிரி கே.எம். வாசகர் தன்னுடைய பெயரை முதன்மைப்படுத்திவிட்டார்.

ஆனால் செம்பியனுக்குத் தொடர்ந்தும் சினிமா ஆசை அவருi;ய மனதில் ஒளிந்துகொண்டேயிருந்தது. பேச்சுகளின்போது அவருடைய அந்த ஆசை வெளிப்படும். னால் அவருக்கான அந்த வாய்ப்புக்கடைசிவரையில் கிடைக்கவேயில்லை.

ஒருதடவை, அப்போது நான் என்னை யாரென்று அவருக்கு தெளிவு படுத்தியிருந்தேன். அதன்பிறகு அவர் இன்னும் என்னுடன் நெருக்கமானார். அன்றிரவு தங்களின் வீட்டில் என்னைத் தஙகும்படி சொன்னார். மறுப்புச்சொல்லாமல் அன்று அங்கே அவருடன் தங்கினேன். இடியப்பத்தோடு சொதியும் பச்சை மிளகாய்ச் சம்பலும் முட்டைப்பொரியலுமாக நல்ல சாப்பாடு.

பின்னிரவு வரை பேசினோம். அவர் அன்று சகல விசயங்களைப்பற்றியும் பேசினார். அரசியல், முற்போக்கு இலக்கியம் அதில் கைலாசபதி செய்த பங்களிப்புகள், அந்தப்பங்களிப்புகளுக்கு மாறாக கைலாசபதி வரட்;டுத்தனமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் பார்க்கத்தவறிய விசயங்கள், அவர் செய்த இருட்;டடிப்புகள் பாரபட்சங்கள் என்று அந்தக்கதை ஒருபக்கம். மறுபுறத்த்pல் கனக செந்திநாதன், யாழ் இலக்கிய வட்டத்தின் செயற்பாடுகள் பற்றிய விவகாரங்கள். அப்பொழுது யேசுராசா தரப்பினரின் அலைக்கும் டானியல் அன்ரனியின் சமருக்குமிடையில் விவாதங்களும் கடுஞ்சமரும் நடந்து கொண்டிருந்தது. அந்த விவாதங்களில் உள்ள உள்நோக்கங்கள் பற்றி செம்பியன் பல விசயங்களைச் சொன்னார். டானியல் அன்ரனி கைலாசபதி தரப்பினரால் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் உண்மையில் டானியல் அன்ரனி பரிதாபத்துக்குரியவர் என்றும் சொன்னார். அடுத்தது மு.தளையசிங்கத்தின் மெய்யுள் கோட்பாடு பற்றிய விளக்கங்களும் அது தொடர்பான விமர்சனங்களும் ஆய்வுகளும். அன்றிரவு இப்படிச்சிதறலாகப் பேசப்பட்ட விசயங்களோடு கழிந்தது.

ஆனால் அவருக்கென்றொரு பதிவும் பார்வையுமிருப்பதை கண்டு கொண்டேன். ஆனால் அதற்காக அவர் அதையிட்டு தன்னைச்சுற்றி எந்தக்கோட்டையையும் எழுப்பவுமில்லை. நிறங்களைப்பூசிக் கொள்ளவுமில்லை.


செம்பியன் செல்வனும் செங்கை ஆழியானும் இணையாசிரியர்களாக இருந்து 1965 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் விவேகி என்ற இதழை வெளிக்கொண்டு வந்தார்கள். விவேகியை ஆசீர்வாதம் வெளியிட்டார். நான்காண்டுகளாக விவேகி வெளிவந்தது.

இவர்கள் இருவரும் பள்ளித்தோழர்கள். பின்னர் கண்டி- பெரதெனியாப் பல்கலைக்கழகத்திலும் ஒன்றாகப்படித்தவர்கள். அதிலும் ஒரே துறையில் - புவியியல் துறையில்- பயின்றவர்கள். இலக்கியத்திலும் சமகாலத்தில் இயங்கினாhர்கள்.இருவரும் இணைந்து தொடர்கதைகளை எழுதியதாகவும் நினைவுண்டு.

செம்பியனை விடவும் செங்கை ஆழியான் நிறைய எழுதினார். இருந்தபோதும் செம்பியன் செங்கை ஆழியானை விடவும் அகன்ற பரப்பில் தன்னுடைய உறவு வட்டத்தைக் கொண்டவராக இருந்தார். அவருக்கு எல்லா அணியினரோடும் எல்லா முகாமோடும் தொடர்பும் உறவுமிருந்தது. ஆனால் அவர் அந்த அணிகளின் வரையறைகளுக்குள்ளும் கோட்பாடுகளுக்குள்ளும் நிற்கவில்லை. அதேவேளை மிக அன்பாகவும் நேர்மையாகவும் உறவைப் பேணினார். இதில் அவர் என்றைக்கும் புத்திபூர்வமாகச் சிந்தித்துச் செயற்பட்டார் என்று சொல்ல முடியாது.

அவர் எதிலும் ஒருவித அலட்சியத்தன்மையோடு நடந்து கொள்வதாகவே உணர்ந்திருக்கிறேன். அதாவது எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத்தனம் அவருக்குள்ளிருந்தது. இதை அவருடைய படைப்புகளிலும் காணலாம். அதையும் விட அவருடய உரையாடலிலும் அவருடைய பேச்சுகளிலும் இந்த விட்டேத்தித்தனமிருந்தது.

சில சந்தர்ப்பங்களில் மிக அருமையாகப் பேசுவார். சிலபோது என்ன பேசினார், எதைப்பற்றிப்பேசினார் என்று தெரியாமலே இருக்கும். ஆனால் அவர் வலு சீரியஸாகவும் விவரமாகவும் பேசக்கூடியவர். இதனால் அவரை ஒரேயடியாக விலக்கிவிடமுடியாது. அதேவேளை அவருடைய பேச்சுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கவும் இயலாது. சில சந்தர்ப்பங்களில் அவருடைய பேச்சை அதிகமாக எதிர்பார்த்திருந்தால் அதற்கு மாறாக அவர் அன்று அதைக் கவிழ்த்துவிடுவார். ஒரு தடவை யாழ்ப்பாணம் எழுத்தாளர் ஒன்றியத்தில் மல்லிகைப்ந்தலின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் செம்பியனும் ஒரு பேச்சாளர். அன்று பத்தினியம்மா திலகநாயகம்போலும் நா.சுப்பிரமணிய ஐயரும் பேசியிருந்தனர் என்று ஞாபகம்.

அன்று கூட்டம் குப்பைத்தனமாக சீரழிந்து கொண்டிருந்தது. யாருமே பொருத்தமாகவும் சரியாகவும் பிரயோசனமாகவும் பேசவில்லை. அடுத்ததாக செம்பியனாவது பரவாயில்லாமற் பேசுவார் என்று காத்திருந்தோம். ஆனால் அன்று செம்பியனும் கவிழ்த்து விட்டார். மண்டபம் பேதமைத்தனத்தாலும் எரிச்சலூட்டும் வார்த்தைகளாலும் நிரம்பியது. கூட்டம் முடியமுதலே நாங்கள் மண்டபத்தைவிட்டு வெளியேறி;னோம். அன்றிரவு அந்தக்கூட்டத்தைப்பற்றி நான் ஒரு கவிதையை எழுதினேன். அதில் செம்பியனைச் செம்மையாகத் திட்டியிருந்தேன்.

அதை நண்பர்கள் சத்துருக்கனும் சிறிக்குமரனும் செ.பொ.சிவனேசுவும் நன்றாக ரசித்தார்கள். பின்னர் அந்தக்கவிதை நண்பர்களிடத்தில் பிரபலமாகியிருந்தது. பிறகு அதை நாங்கள் செம்பியனிடமே காட்டினோம். அவரரும் அதைரசித்தார். ஆனால் அந்தக்கவிதை தன்னைப்பற்றிய, தன்னுடைய பேச்சைப்பற்றிய கடுமையான விமர்சனம் என்றார். அதற்குப்பிறகு தான் எப்போதாவது பேசப்போனாலும் அநேகமாக அந்தக்கவிதைபோல வேறு யாரும் எழுதிவிடக்கூடாது என்பார். ஆனால் அவருடைய பேச்சு சீரியசுக்கும் வழவழாவுக்குமாக மாறிமாறித்தாவிக் கொண்டேயிருந்தது. செம்;;பியனின் உரையாடலிலும் இந்தத்தனம் இருந்தது. சிலவேளை அவருடைய பேச்சைவிட்டு எழுந்து போக மனமிருக்காது. அந்தளவுக்கு அவருடைய உரையாடல் ஆழமாகவிருக்கும். சிலசமயத்தில் அவர் எதைப்பற்றிப்பேசுகிறார் என்றே புரியாமலிருக்கும்.

செம்பியன் 1960 களில் எழுதத்தொடங்கினார். இதுவரையில் ஏழு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. மூன்று சிறுதைத்தொகுப்புகள். இரண்டு நாவல்கள். கவிதைத்தொகுத் ஒன்று. குறுங்கதைத்தொகுப்பு ஒன்று. இவற்றைத்தவிர அவர் எழுதிய கட்டுரைகள் நிறையவுண்டு.


கவிதைபற்றி, இலக்கியக்கோட்பாடுகள் பற்றி, விமர்சனக்கூட்டங்களைப்பற்றி, நூல்களைப்பற்றியெல்லாம் அவர் நிறைய எழுதியிருக்கிறார். சில கட்டுரைகள் ஆழமான விவாதத்துக்கும் கவனத்துக்குமுரியவை. சில ஆமலோட்டமானவை. சில கூர்மையானவை. சில சோர்வானவை. ஆனாலும் அவருடய கட்டுரைகள் கவனத்திற்குரியவை. அவருடைய பரந்த பார்வையையும் அவருடைய ஈடுபாட்டுப்புலத்தையும் அந்தக்கட்டுரைகள் சொல்கின்றன. அந்தக்கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படவுமில்லை. ஒரு கட்டுரைத்தொகுதியை வெளியிட அவர் விரும்பினார். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது வெளிவரவேயில்லை.

செம்பியன் யாழ்;ப்பாணச்சமூகத்தின் கடந்த நூற்றாண்டின் யதார்த்தப்பிரச்சினைகளை விமர்சனரீதியாகப்படைப்பாக்கினார். குறிப்பாக குடும்பங்களுள் நடக்கின்ற மோதலை அவர் தன்னுடைய படைப்புகளின் மையமாக்கினார.; அதேவேளை தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான அரசியற் கதைகளையும் அவர் எழுதினார். முதற்காலகட்டக்கதைகள் குடும்பம், சமூகம் என்ற இரண்டு தளங்களிலும் நடந்த சிதைவுகளையும் போராட்டங்களையும் உணர்வுகளையும் உள்விரிவாகக் கொண்டவை. அடத்தகாலகட்டகக்தைகள் பெரும்பாலும் அரசியற்கதைகள்தான். அதிலும் போர்க்கதைகள்.

வெளிச்சம், ஈழநாதம் போன்ற ஏடுகளில் அவர் எழுதிய கதைகள் போரில் தான் பட்ட அனுபவங்களின் பதிவாக இருந்தது. குறிப்பாக 1990களின் முற்பகுதியில் யாழ்ப்பாண நகரத்;தை சிறிலங்கா அரசாங்கத்தின் விமானப்படை குண்டுவீசி அழித்தது. தினமும் குண்டுவீச்சு. அதிலும் இரவுபகலாக நடக்கும் குண்டு வீச்சு. நகரம் கண்முன்னே நொருங்கிச்சிதிலமாகிக் கொண்டிருந்தது. நகரத்தில்தான செம்பியனின் வீடுமிருந்தது. நகரத்தில் வீடிருந்த காரணத்தால் அவர் பங்கருக்குள்ளே இருந்தார். அவருக்கு பங்கருக்குள் இருப்பதைப்பற்றிப் பிரச்சினையில்லை. ஆனால் தன்னுடைய நகரம் தன் கண்முன்னால் சிதைவதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை. பொறுத்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.

அவர் யாழ்ப்பாணக்கோட்டைப்பக்கம் போய்ப்பார்க்க ஆசைப்பட்டார். அப்போது கோட்டையைச் சுற்றி விடுதலைப்புலிகள் முற்றுகையிட்டிருந்தார்கள். முற்றுகைக்குள்ளாகியுள்ள படையினரைகாப்பாற்ற வேண்டும். அல்லது அவர்களை மீட்க வேண்டும் என்ற பெரும் நெருக்கடியால் யாழ்ப்பாத்தின்மீது அரசாங்கப்படைகள் கண்கெட்;டதனமாகத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தன. யாழ்ப்பாண நகரம் அங்கிருந்து முற்றாக வேறிடத்துக்கு மாறியிருந்தது. அது பழைய இராசதானி இருந்ததாகச் சொல்லப்படும் நல்லூர் முத்திரச்சந்தைக்குப்போயிருந்தது. இந்தநிலைமைக்குள்தான் எப்படியாவது நகரத்தைப் பார்க்கவேண்டுமென்று அவர் விரும்பினார்.

அவருடைய ஆசையை யார் அனுமதிப்பார்கள். நகரம் மரணவலயமாகியிருந்தது. அந்த ஆபத்துக்குள் அவரைவிடுவதற்கு-அவரை அனுமதிப்பதற்கு- போராளிகள் விரும்பவில்லை. ஆனாலும் அவர் பொறுப்பானவர்களோடு பேசி அவர்களுடன் சேர்ந்து கோட்டையை அண்மித்த பகுதிவரை போய்வந்தார். பின்னர் அந்த விவரங்களையும் அனுபவங்களையும் வைத்து காலமை என்றொரு கதையை எழுதினார்.

செம்பியன் செல்வன,; வரதர், சொக்கன், கனகசெந்திநாதன் பரம்பரையைச்சேர்ந்தவர் என்று சொல்லலாம். யாழ் இலக்கியவட்டம்தான் அவர்களின் இயங்கு மையம். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் பிற பொறுப்புகளிலும் செம்பியன் இருந்திருக்கிறார். ஆனால் அவர் எல்லோருடனும் பழகினார். நட்பு வைத்திருந்தார். அணிபிரிந்து செயற்படுவதில் அவருக்கு என்றைக்கும் ஈடுபாடில்லை. அவர் அலையுடனும் உறவை வைத்திருந்தார். சமருடனும் தொடர்பாக இருந்தார். யேசுராசாவோடும் கதைப்பார். அதேவேளை தாயகம் தணிகாசலத்துடனும் பேசுவார். ஆனால் மற்றவர்களைவிடவும் அவருக்கு யேசுராசாவுடன் பின்னாளில் கூடுதலான நெருக்கமிருந்தது. கடைசிவரையும் யேசுராசாவும் செம்பியனும்இணைந்து இயங்கியிருக்கிறார்கள். 'செம்பியன் எழுதும் 'என்று அவரை யேசுராசா உற்சாகப்படுத்துவார். யேசுhசாவின் தெரிதலில் செம்பியன் தொடர்ந்து எழுதிவந்தார்.

யேசுராசாவின் கவிதை இதழிலும் தெரிதலிலும் செம்பியன் அதிகமாக எழுதினார். இளைய படைப்பாளிகளை இலக்குவைத்தே இருவரும் இயங்கியது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் இருவருக்கும் இளைய படைப்பாளிகளின் தொடர்பும் உறவும் அதிகமாக இருந்தது.

செம்பியனுக்கு அதிகம் மதிப்புக்குரிய மனிதராக ஏ.ஜே இருந்தார். ஏ,ஜே யை பலரும் சரியாகப்புரியவில்லை என்றும் அவரை மேலும் தமிழ்ச்சமூகம் ஊக்குவித்திருக்கலாம் என்றும் அடிக்கடி சொல்வார். அதேபோல செம்பியன் டொமினிக் ஜீவாவிவன் மீதும் அன்பு வைத்திருந்தார். ஜீவாவின் மீது அவருக்கு நிறைய விமர்சனங்களும் விலகல்களும் இருந்தன. ஆனால் ஜீவாவுக்கென்றொரு பாத்திரம் இருக்கிறது என்றும் அந்தப்பாத்திரத்தை ஜீவா பலமாக்கத்தவறிவிட்டார் என்பதும் செம்பியனின் கணிப்பு. ஜீவா பின்னர் சமரசங்களுக்குப்போனதாலேயே அவருக்குச்சரிவு வந்ததென்றும் செம்பியன் சொன்னார். எழுபதுகளில் வந்த மல்லிகைக்கும் பின்னர் வருகின்ற மல்லிகைக்கும் இடையில இந்த வேறுபாட்டை ஆதாரமாகக் காணமுடியும் என்று தன்னுடைய கருத்துக்கு ஆதாரம் தந்தார்.

தொண்ணூறுகளில் செம்பியனை ரெயினே இல்லாத, சிதைந்தழிந்து அகதிகளின் இருப்பிடமாகிவிட்ட யாழ்ப்பாண ரெயில்வே ஸ்ரேசனுக்கு முன்னாலிருந்த வசந்தம் புத்தகக்கடையிலும் மணியத்தின் யாழ் புக் ஹவுஸிலும் பெரும்பாலும் காணலாம். அப்போது வசந்தத்தத்துக்கு நல்ல புத்தகங்கள் நிறைய வரும். புதிய புத்தகங்கள் வந்த சேதியை அவர் பலருக்கும் சொல்லி அனுப்புவார். மணியமும் பின்னர் அங்கேதான் கடையை வைத்திருந்தார். இப்போது அங்கே, அந்த இடத்தில் பெரிய இராணுவமுகாமிருக்கிறது. யாழ்ப்பாத்துக்கு அதன் சரித்திரத்தில் எப்போதாவது புகையிரதம் ஓடியதா என்று கேட்கும் அளவில்தான் புகையிரத நிலையமும் வண்டிப்பாதைகளுமிருக்கின்றன. புகை வண்டிப்பாதைகள் இருந்த சுவடுகளே இல்லாது போய்விட்டன.


செம்பியனுடன் நான் செய்த பயணங்களில் இரண்டு பயணங்கள் மறக்கமுடியாதவை. ஒன்று உயிராபத்துகள் நிறைந்திருந்த கிளாலியூடான பயணம். அப்போது கிளாலிக்கடனீரேரியூடாகப் பயணம் செய்வோர் உயிரைப்பணயம்வைத்தே போகவேணும். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே போவதற்கும் வெளியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கும் பாதைகளேயில்லை. எல்லாப்பாதைகளையும் அடைத்து, சிறிலங்கா அரசு அங்கெல்லாம் படைகளைக்குவித்திருந்தது. சனங்கள் கடல்வழியாகவே சிறுபடகுகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்தார்கள். அந்தப்பயணத்தையும் கடற்படை விடவில்லை. கடலில் வைத்தே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மனிதர்கள் அந்தப்பாதையால் போகவே அஞ்சினாhர்கள். ஆனால் அதைத்தவிர வேறு வழியும் இருக்கவில்லை. கடற்படைக்குத்தப்பினால் மேலே விமானங்கள் தாக்கும். அதனால் அந்தக்கடற்பயணம் இரவில்தான் நடக்கும்.

இந்தநிலையில்தான் நாங்களும் கிளாலிய+டாகப்பயணம் செய்தோம். அதுவும் ஒரு இலக்கியக்கூட்டத்துக்கான பயணம். உண்மையில் அந்த நிலைமையில் அப்படி றிஸ்க் எடுத்து இலக்கியக்கூட்டத்துக்கு போகவேணுமா என்று நிiனைத்தேன். அதைவிட இப்படியான நிலையில் இலக்கியக்கூட்டத்துக்காக கிளாலியால் போகிறோம் என்றால் அதற்கு எந்த வீட்டிலும் சம்மதிப்பார்களா. என்றபடியால் அந்தப்பணயத்தில் வந்த யாரும் வீட்டில் சரியான காரணத்தைச் சொல்லியிருப்பாரர்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் நாங்கள் பயணம் செய்தபோது கடலில் கடற்புலிகள் சற்றுப்பலமான நிலையில் போக்குவரத்துக்கான பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனாலும் உயிராபத்து நீங்கியிருக்கவில்லை.

நான்,செம்பியன், தணிகாசலம், எஸ்.ரி.அரசு, இளையவன் இன்னும் ஒன்றிரண்டு பேர் சேர்ந்து பயணிதN;தாம். அது நிலாக்காலம். உண்மையில் எந்த மரணபயமுமில்லாமல் அந்தப்பயணம் நடந்தது. போகவும் திரும்பவுமாக இரண்டுதரம் மரணவலயத்தைக்கடக்க வேண்டும். செம்பியன் வலு உற்சாகமாக கதைத்துச் சுவாரசியத்தை ஏற்படுத்தியபடி வந்தார். அந்தப்பயணத்தில் இன்னும் பலர் வருவதாகச் சொல்லியிருந்த போதும் இறுதிநேரத்தில் வராமற் தவிர்த்து விட்டார்கள். ஆனால் ஒருபோதுமே கிடைக்க முடியாத அந்தப்பயணத்தின் அருமையான சந்தர்ப்பத்தையும் அனுபவத்தையும் அவர்கள் இழந்தே விட்டார்கள். சாவுக்குப்பயந்தால் வாழமுடியுமா என்று அப்போது செம்பியன் கேட்டது இன்னும் அப்படியே நினைவிலிருக்கிறது.

வன்னியில் மூன்று நாட்கள் மிகச்சுவாரசியமாகப் பொழுது போனது. வன்னியிலுள்ள் படைப்பாளிகளைச்சந்தித்து பல விசயங்கள் குறித்தும் பேசினோம். நல்ல சாப்பாடு. வன்னியின் இயற்கைச்சூழல் குளிர்ச்சி நிரம்பியது. கிளிநொச்சி விவசாயிகளின் நகரம் என்றார் தணிகாசலம். அது உண்மைதான். சுற்றிவர வயல்களும் வாய்க்கால்களும். சனங்களும் விவசாயப்பொருட்களோடும் விவசாயத்தேவைகளோடும்தான் திரிந்தார்கள். விவசாயப்பொருட்களுக்கான கடைகளும் அதிகமாக இருந்தன.

வன்னிப்பயணத்தை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினோம். யாழ்ப்பாணம் திரும்புவதற்கு முதல்நாள் கடலில் கடற்புலிகளுக்கும்; சிறிலங்காக் கடற்படைக்குமிடையில் சண்டை நடந்தது. ஆனால் மறு நாள் அதிகம் பிரச்சினைகளிருக்கவில்லை. ஆனாலும் பயம் கடல் முழுவதும் பரவிக்கிடந்துது. படகில் போகும்போது மேலே நிலவு அழகாக கடலுக்கு ஒளியூட்டியபடி நின்றது. நிலவில் அலைகள் பளிங்காக மினுங்கின. அது சிறுகடல். பரவைக்கடல். அங்கே பேரலைகள் கிடையாது. மீன்கள் துள்ளிப்படகில் ஏறின. சிலவேளை அவை அந்தப்படகில் பயணம் போவோர் யாரென்று அறிந்தும் இருக்கலாம்.

அடுத்த பயணம் தமிழ் சிங்களக் கலைக்கூடலுக்காக கொழும்புக்குச் சென்றது. கலை, பண்பாட்டுக்கழகமும் தமிழ் சிங்களக்கலைஞர்களும் இணைந்து நட்புறவு சார்ந்து அந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருந்தனர். யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா, மலையகம் எனச்சகல இடங்களிலிருந்தும் படைப்பாளிகள் கொழும்பில் திரண்டிருந்தனர். சிங்களப்படைப்பாளிகளும் பல இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.

கொழும்புக்கு நான்கு பஸ்களில் படைப்பாளிகளும் கலைஞர்களும் யாழ்ப்பாணத்திலிருந்தும் வன்னியிலிருந்தும் போய்க்கொண்டிருந்தோம். செம்பியன் விவேக்குடனே சேர்ந்திருந்தார். நான் பயண ஏற்பாடுகளைக்கவனித்துக் கொண்;டிருந்தபடியால் யாருடனும் ஆறதலாக இருந்து பேசமுடியவில்லை. அந்தப்பயணத்தின்போது செம்பியன் அதிக உற்சாகத்தைக்காட்டவில்லை. அவருக்கு அந்த ஒன்று கூடல் நல்ல விருப்ப்த்துக்குரியதாகவே இருந்தது. ஆனால் அவருடைய உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. மாநாட்டின்போதே இடையில் அவர் மருத்துவமனைக்குப் போய்வந்தார். அவர் மாநாட்டைப்பாதியும் தன்னுடைய உடலைப்பாதியுமே அங்;கே கவனித்துக் கொண்டிருந்தார். சுவாசிப்பதற்கு அதிகம் சிரமப்பட்டார். அப்போது சுவாசத்தைச் சீராக்குவதற்காக



அவருக்கு நீரிழிவு வியாதியும் பிடித்திருந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்னரிருந்த செம்பியன் திடகாத்திரமானவர். கம்பீரமானவர். அழுத்தமாக வாரிவிடப்பட்ட அடர்ந்த முடியும் பரந்த முகமும் அவருடைய பொலிவைக்கூட்டியிருந்தன. ஆனால் இப்போது அவர் சற்று மெலிந்து விட்டார். வாடியிருந்தார். மெல்லிய சோர்வு அவரில் படியத்தொடங்கியிருந்தது. ஆனாலும் அவர் வந்திருந்த எல்லோரோடும் கதைத்துக் கொண்டிருந்தார். இரவு நீண்ட நேரம் பேசுவதைத்தவிர்க்குமாறு அவருடைய உடல் நிலையைக்கருதி மெல்லிதாக அவருக்;குச் சொல்லியிருந்தேன். அவர் அதைக்காதில் எடுத்துக்கொண்டதாக இல்லை. இரவிரவாகப் பேசினார். அதைவிட்டால் பின்னர் வேறு சந்தர்ப்பங்கள் இனி அப்படி வாய்க்காது என்பதைப்போல அவர் பேசிக்கொண்டேயிருந்தார்.

இரண்டாம்நாள் இரவு கவிஞர் வில்வரெத்தினம் விடுதியில் பாடினார். ஆனால் அது உற்சாகமான இரவாக இருக்கவில்லை. வில்வரெத்தினத்தின் பாடல் பிரபஞ்சத்தையே கரைத்துவிடக்கூடியது. அன்று பகல் ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும் - இவை இரண்டுமே கடுமையான இனவாதச் சிங்களக்கட்சிகள்- மாநாட்டைக்குழப்புவதற்கான பெருந்தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. இந்தக் குழப்பத்தால் பகல் சில மணிநேரம் மாநாடு இடைநிறுத்தப்பட்டுமிருந்தது. அந்தக்குழப்பங்கள் இரவு எல்லோரையும் சோர்வுக்குள்ளாக்கியிருந்தன.

தமிழ் மக்களின் பிரச்சினையை புரிந்து கொண்ட சிங்களப்படைப்பாளிகளும் ஹிரு என்ற சிங்கள ஊடக அமைப்பொன்றுமே அந்த மாநாட்டுக்கான முழு ஏற்பாட்டையும் செய்திருந்தன. பகல் சிங்கள இனவாதிகள் கத்தி, பொல்லு, இரும்புக்கம்பிகளுடன் வந்து தாக்கத்தொடங்கியதால் அதை எதிர்த்து மாநாட்டிலிருந்த சிங்களக்கலைஞர்களும் தொழிற்சங்கப்பிரதிநிதிகளும் படைப்பாளிகளும் தாக்குதலை நடத்தியிருந்தனர். இரு தரப்பிலும் காயங்களும் குருதிப்பெருக்கும். அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம்.
பொலிசுக்கு அறிவிக்கப்பட்டபோதும் பதிலாக எந்த நம்பிக்கையூட்டக்கூடிய நடவடிக்கையையும் காவல்துறை எடுத்தமாதிரித் தெரியவில்லை.

ஆனால் பேராசிரியர் சுசரித்த கம்லத், சிங்களச்சினிமா மற்றும் நாடக நெறியாளர் தர்மசிறி பண்டார நாயக்க, ஹிரு இதழின் ஆசிரியர் ரோஹித பாசண, பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோர் அவசரமாக மாநாட்டு மண்டபத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி உண்மை நிலையை தெளிவுபடுத்தினர். ஏனெனில் அந்தப்பகல் சம்பவத்தில் தாக்க வந்த தரப்பினரை திருப்பித்தாக்கி அவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர் ஹிரு குழுவினர். தமிழ்ப்படைப்பாளிகளைப்பாதுகாப்பது தங்களின் கடமை என்றும் அதற்காகத் தங்களின் உயிரையும் அவர்;கள் கொடுப்பதற்கு ஆயத்தமாக இருந்தார்கள்.

ஏற்கனவே கொழும்பில் புலிகள் மாநாடு நடத்துகிறார்கள் என்றும் அதற்கு சில சிங்களப்புத்திஜீவிகளும் கலைஞர்களும் ஆதரவளிக்கிறார்கள் என்றும் சிங்கள் ஊடகங்கள் சில அப்போது செய்திகளை அபாயகரமாக வெளியிட்டும் இருந்தன. பகல் நடந்த சம்பவத்தில் அடிவாங்கிய சிங்களத்தரப்பினர் வேறு ஏதாவது விபரீதமான காரியங்களில் ஈடுபடலாம் என்று எதிர்பார்;ப்பும் எச்சரிக்கையும் உருவாகிவிட்டது. அதனால் அன்றிரவு யாரிடமும் அதிக உற்சாகம் இருக்கவில்லை. ஆனால் அன்று தமிழ்;ப்படைப்பாளிகளைச் சுற்றி ஹிரு குழவினரும் பிற சிங்களப்படைப்பாளிகளும் காவலிருந்தார்கள். அதை மறக்கவே முடியாது. அன்றிரவு பகல் நடந்த தாக்குதலைப்பற்றியும் அடுத்து என்ன நடக்குமோ என்பதிலுமே பெரும்பாலும் எல்லோருடைய பேச்சுமிருந்தது.

இவ்வளவுக்கும் இந்த ஒன்று கூடல் நடந்தது போர்நிறுத்தம் உச்சத்தில் இருந்தபோதுதான். அப்போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. நல்லிணக்கத்துக்கான ஒரு புரிந்துணர்வுத்தளத்தை நிர்மாணிப்பதற்காகவும் தமிழ் சிங்கள மக்களின் மனவுலகை பகிரங்கப்படுத்துவதற்காகவுமே அந்த மாநாடு நடத்தப்பட்டது.

ஆனால் அதற்கு எதிர்மறையாகவே பெரும்பாலான சிங்கள ஊடகங்களும் தரப்பினரும் நின்றனர். இனமுரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஒரு போதும் இந்தச்சக்திகள் விடப்போவதில்லை என்று அங்கே கூடியிருந்த சிங்கள தமிழ் படைப்பாளிகள் வருத்தத்துடன் பேசினோம்.

மறுநாள் அந்தச்சிங்கள நண்பர்களிடமிருந்து விடைபெற்றபோது நிகழ்ந்த பரவசமான நிலையை யாராலும் எந்தச்சந்தர்ப்த்திலும் மறக்கமுடியாது. வரும்போது செம்பியன் உடைந்து தழும்பிய குரலில் அந்தச்சிங்கள நண்பர்களைப்பற்றிப் பேசிக்கொண்டு வந்தார். அவர் சொன்னார், "இனவாதத்தை சிங்களத்தரப்பினர் எல்லா மட்டத்திலும் பலமாக நிறுவனமாக்கி வைத்திருக்கிறார்கள். அதற்குள் சிக்காத சக்திகள் பலமற்ற நிலையிலேயே இருக்கின்றன. அவர்;களுக்கு பாதிக்கப்படும் தமிழ்மக்களின் ஆதரவும்அனுதாபமும் தான் உண்டு " என்று. செம்பியன் சொன்னது பெரும்பாலும் முழுமையான உண்மையே.


செம்பியனுக்கு இனிப்புப்பண்டங்களில் பெரும் விருப்பமுண்டு. பின்னாளில் அவருக்கு நீரிழிவு வியாதி வந்து அவர் கஸ்ரப்பட்டபோதும் அவர் இனிப்புபப்ண்டங்களைத்தின்பதில் இருந்த ஆர்வத்தைக்குறைக்கவில்லை. சாப்பாட்டு விசயத்தில் அவர் எப்போதும் சிறு பிள்ளைகளைப்போலவேயிருந்தார். கட்டுப்படுத்தமுடியா ஆசையும் அல்லது விருப்பமும் சிறு பிள்ளைகளின் பிடிவாதமும் இருந்தது.

" கரு, என்ர வருத்தத்துக்கு இனிப்புக்கூடாதெண்டு தெரியுது. ஆனா மனங்கேக்குதில்லையே" என்று அப்பாவித்தனமாகச் சொல்வார். அவரைப்பார்க்கப் பரிதாபமாக இருக்கும். சாப்பாட்டுப்பிரியரான அவர் பத்தியம் காக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருந்தார். பின்னாளில் சொக்கன் கடையில் அவருக்கான பத்தியத்தோடு சாப்பாட்டைப் போட்டார்களா தெரியாது. அதையெல்லாம் அறியக்கூடியமாதிரி நான் அங்கே போக முடியவில்லை. அவர் இறந்தபோதுகூட நான் அங்கே போக வாய்க்கவில்லை.

செம்பியன் தொடர்பாக எனக்கு தீராமலே இரண்டு துக்கங்கள் மிஞ்சியிருக்கின்றன. ஒன்று அவரை இழந்தது. மற்றது அவருடைய மரணநிகழ்வில் கலந்து கொள்ள முடியாமற்போனது.

மீண்டும் பேச்சுக்கள் சாத்தியமா?



மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறார்கள் சிலர். இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த சர்வதேச சமூகத்தின் அறிக்கைகளையும் அறிவிப்புகளையும் அதீத அக்கறைகளையும் அவதானிப்போருக்கு இவ்வாறான கேள்விகள் எழும். இவற்றை வைத்துக்கொண்டே அவர்கள் இப்படிக்கேட்கிறார்கள்.



சர்வதேச சமூகத்தின் அதிகரித்த கரிசனைகள் இனப்பிரச்சினை விவகாரத்தில் ஏதாவது அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அப்படி அவர்கள் எதிர்பார்;ப்பதில் முழுத்தவறிருப்பதாகவும் சொலல்;முடியாது. ஆனால் இலங்கையின் இனப்பிரச்சினையை சரியாக விளங்கிக் கொண்டவர்களுக்கு இதெல்லாம் எந்தப் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று தாராளமாகவே தெரியும்.



இதில் இரண்டு முக்க்pயமான விசயங்களிருக்கின்றன. ஒன்று இவர்கள் கருதுவதைப் போலவே சர்வதேச சமூகமும் கருதுகிறது. அதாவது தமது கண்டனங்களையும் அறிவுறுத்தல்களையும் கண்டு சிறிலங்கா அரசாங்கம் மிரண்டுவிடும், போரை நடத்த அஞ்சும், இனவாதத்தைத் தொடராமல் அடங்கிவிடும் என்றெல்லாம் சர்வதெச சமூகம்; கனவு காணுகிறது.



ஆனால் இந்த வெருட்டுதல்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் எந்த மதிப்பையும் சிறிலங்கா அரசாங்கம் கொடுக்கப் போவதில்லை. இதையெல்லாம் கண்டு சிங்களச்சமூகம் என்றைக்கும் பயந்து விடப்போவதுமில்லை.



அவர்கள் இந்தமாதிரிச் சந்தர்ப்பங்களையும் நெருக்குவாரங்களையும் பல முறை கண்டு வந்தவர்கள். அத்துடன் அந்த நெருக்கடிகளையெல்லாம் மிக நுட்;பமாகக் கையாண்டு அதில் வெறறியும் பெற்றவர்கள்.



அதானால்தானே இப்போதும் இனப்பபிரச்;சினையைத்தீர்க்காமல் அவர்களால் வைத்திருக்கவும் தொடரவும் முடிகிறது. இன்னும் தயக்கமில்லாமல் போரைத் தொடரவும் இயலுகிறது. அதுவும் சர்வதேச சமூகத்தின் விருப்பத்தையும் மீறி அதனுடைய எதிர்பாரர்ப்புக்கு மாறாகப் போரைச் செய்ய் முடிகிறது. அத்துடன் ஐம்பது ஆண்டுகட்கும் மேலாக வெளிப்படையாகவே இனவாதத்தையும் படுகொலைகளையும் செய்யவும் முடிகிறது. அதேவேளையில் இவ்வளவையும் சர்வதேச அபிப்பிராயத்துக் கெதிராகச் செய்து கொண்டே அது அதே சர்வதேச சமூகத்தின் உதவிகளையும் பெறுகிறது. இதெல்லாம் சாதாரணமான விசயங்களல்ல.



அடுத்தது சர்வதேச சமூகம் நடைமுறையில் இனப்பிரச்சினையைத்தீர்க்கும் மெய்யான கரிசனையொடும் யதார்த்தத்தோடும் இயங்கவில்லை என்பது. அப்படி அது இயங்குமாக இருந்தால் இப்படி சிறிலங்கா அரசாங்கம் வாலாட்ட முடியாது.



இனி இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் சற்றுப் பார்ப்போம்.



முதலில் சிங்கள சமூகத்தினதும் சிறிலங்கா அரசினதும் இயல்பையும் Nபுhக்கையும் அவற்றின் கடந்தகால, சமகால நடத்தைகளுக்கூடாகப் பார்க்கலாம்.

தமிழர்களுக்கெதிராக இயங்கும் ஒரு பொறிமுறை சிங்களவரிடம் எப்போதுமுண்டு. அரசாங்கம் தவிர்க்க முடியாத ஒரு கட்டத்தில் அல்லது ஒரு சூழ்நிலையில் இனப்பிரச்சினை விடயத்தில் தீர்வுகுறித்து ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டுக்குப் போகத்தான் வேணுமென்ற நிலை வரம்போது அதற்கெதிராக இன்னொரு தரப்பு வலுவான எதிர்ப்பைக் காட்டும் மரபை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

பண்டாரநாயக்கா செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் செய்த போது ஜே.ஆர.;ஜெயவர்த்தனா அதை எதிர்த்து கண்டிக்குப் பாத யாத்திரை போனார். ஜே.ஆர். ஜெயவர்த்தனா இந்தியாவுடன் உடன்படிக்கை செய்தபோது அதை ஜே.வி.பி நேரடியாக எதிர்த்தது. அNதுவேளை அரசாங்கத்துக்குள்ளிருந்த பிரேமதாசா அணியினர் அதற்கெதிராக நின்றனர்.

அப்படி ஒரு பொறிமுறையை வைத்திருந்த படியால்தான் பின்னர் பிரேமதாச ஆட்சிக்கு வந்தவுடன் அவர் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்கு இலகுவாக முடிந்தது. ஏற்கனவே இந்திய இராணுவத்தின் வருகையை விரும்பாதவர் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் போது தொடர்ந்து ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படவிருக்கும் பிரச்சினகைள் பெரும் சிக்கலாகி விடும் என்ற நிலையில் இந்தியப்படை வெளியேறுவதே அதிக நன்மையாகும் என்று அப்போது இந்தியத்தரப்பில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் புலிகளுடனான போரில் ஒரு தீராத சிக்கலுக்குள் மாட்டியிருந்த இந்தியப்படை வெளியேறவும் முடியாமல் உள்ளே நிற்கவும் முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தபோது பிரேமதாசவின் வருகையும் அவருடைய அணுகுமுறையும் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தை சாத்தியமாக்கியிருந்தது.

தவிர, இந்தியாவின் நெருக்குவாரத்தை இத்தகைய இரட்டை அணுகுமுறையின் மூலம் சிங்களவர்கள் வெற்றிகரமாகக் கடந்தார்கள்.

அத்துடன் இந்தியா கொடுத்த அழுத்தத்தை அவர்கள் தமிழர்மீதே திருப்பியும் விட்டார்கள். அத்துடன் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பகைமைப் பொறியையும் பொருத்தி விட்டார்கள்.

பதிலாக இப்போது தமிழருக்கெதிரான போருக்கு இந்தியாவிடமிருந்து ஆயத உதவியையும் பெறுகிறார்கள். அது மட்டுமல்ல, தன்னிடமே சிறிலங்கா அரசு ஆயத உதவிகளைப் பெறவேணும் என்று இந்தியா கேட்குமளவுக்கு சிங்களவர்கள் நுட்பமான ராஜதந்திரத்தைக் கையாள்கிறார்கள்.

இந்திய நெருக்கடியை வெல்வதற்காக இந்தியாவுடன் நேரடியாக மோதாமல் அதனுடன் ஒத்துப்போவதாகக் காட்டி பின்னர் அதனை முறியடித்து தமது நிலைப்பாட்டைப் பேணியுள்ளது சிங்களத்தரப்பு. இறுதியில் இலங்கை இந்திய உடன்படிக்கையில் வரையப்பட்டிருந்த வடக்குக்கிழக்கு மாகாணத்தை பிரித்தும் விட்டது.

அதாவது இந்தியாவை நேரடியாக எதிர்க்காமல் அதை கையாளும் விதத்தாலும் நுட்பத்தாலும் எதிர்கொண்டு இருபது ஆண்டுகளில் அதனைத் தோற்கடித்து விட்டது சிறிலங்கா.


இதேபோலவே பின்னர் இப்பொழுது மேற்குலகத்தையும் சிறிலங்கா அரசு கையாண்டு வருகிறது. அதாவது இப்போது மேற்குலகம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை சிங்களத்தரப்பு தனது நுட்பமான ரராஜதந்திரப் பொறிமுறைக்கூடாகத் தோற்கடித்து வருகிறது.

இந்த உண்மையை இப்போது ஏற்றுக் கொள்வதற்கு யாருக்கும் உடன்பாடில்லாதிருக்கலாம். ஆனால், இதை மிக அவதானமாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தமாகும்.

மேற்குலகத்தின் கரிசனை இலங்கைத்தீவில் தீவிரமாகத் தொடங்கியபோது அதை கூடியவரையில் விலக்கவே சிறிலங்கா முயற்சித்தது. நோர்வேயின் மத்தியஸ்த முயற்சியை தொடக்கத்தில் முடிந்தவரையில் தவிர்க்க முற்பட்டவர் திருமதி சந்திரிகா குமாரதுங்க.

வெளித்தலையீடு ஒன்று இனப்பிரச்சினை விடயத்தில் ஏற்படும்போது அதில் கூடுதலான நெருக்கடிகளையும் சங்கடங்களையும் எதிர்கொள்ள வேண்டியது ஒடுக்கும் தரப்பான தம்மையே சாரும் என்று அவர் புரிந்திருந்தார்.
குற்றம் செய்பவர்களுக்குத்தானே நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். அதனால் இந்தத்தலையீட்டை சநதிரிகா முடிந்தவரையில் தவிர்க்க முயன்றார்.
ஆனால் சந்திரிகாவின் விருப்பத்தையும் மீறி அதற்குரிய களத்தை புலிகளின் போர்த்திறன் திறந்தது. புலிகள் ஆனையிறவைக்கைப்பற்றியதும் தீச்சுவாலை நடவடிக்கையில் படைத்தரப்புக்கு ஏற்படுத்திய பேரழிவும் கட்டுநாயக்க விமானத்தளத்தின்மீது நடத்திய பேரழிவுத்தாக்குதலும் சந்திரிகாவுக்கு மாற்று வழிகளை இல்லாமற் செய்து விட்டது.
சந்திரிகா குமாரதுங்க வேறுவழியில்லாமல் நோர்வேயுடன் இணங்க வேண்டிய நிலைக்குத்தள்ளப் பட்;டார். இப்படித்தான் ஜே.ஆரும் இந்தியாவிடம் மடங்குவதற்கு புலிகள் வடமராட்சியில் நடத்திய முதலாவது கரும்புலித்தாக்குதல் வழிவகுத்தது என்பதை இங்கே கவனிக்கலாம்.



நோர்வேயின் பிரசன்னத்துக்கு அரசாங்கம் சம்மதித்தபோதும் அதை தொடர்ந்து சிங்களத்தரப்பில் பல அணிகளும் எதிர்த்து வந்தன. ஜே.வி.பி நோர்வேக்கு எதிராகவும் சமாதான அனுசரணைப்பணிகளில் முக்கியமானவராக இருந்த எரிக் சொல்கெய்ம் க்கு எதிராகவும் வலுவானதொரு மனப்பாங்கை உருவாக்கியது. இதில் ஜே.வி.பி யுடனிணைந்து சிங்கள ஊடகங்களும் ஹெல உறுமய மற்றும் பிற தரப்புகளும் தொழிற்பட்டிருக்கின்றன.



இந்த இரட்டை அணுகுமுறை இந்தத்தடவையும் பலமாகவே இருந்தது.



இது தொடர்ந்து வளர்ச்சி பெற்று போர் நிறுத்த உடன் படிக்கைக்கும் போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழுவுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் எதிராக சிங்களச்சமூகத்தைத் திரட்டியிருக்கிறது.



அதாவது சர்வதேச சமூகத்தின் விருப்பங்களுக்கும் அணுகுமுறைக்கும் எதிராக சிங்களத்தரப்பு வலுவாக நிற்கின்ற ஒரு நிலையை அவர்கள் இப்போது உருவாக்கி விட்டார்கள்.



பேச்சுவார்த்தையையும் தீர்வையும் அவர்கள் கிடப்பில் போட்டுவிட்டார்கள். அல்லது பின்தள்ளி விட்டார்கள். மீண்டும் தமக்கு நெருக்கடி ஒன்று வரும்போது அதைச்சசமாளிப்பதற்காக மெல்ல இறங்கி வருவார்கள். அதுவரையிலும்இப்ப்டித்தண்ணி காட்டிக்கொண்டு தங்களின் காரியத்தை பல விதங்களிpலும் பார்க்கிறாhர்கள்.



அதேவேளையில் சர்வதேச சமூகத்தை அரசாங்கம் நேரடியாகப்பகைத்துக் கொள்ளவில்லை என்ற தோற்றப்பாட்டையும் அவர்கள் ஏற்படுத்த முனைகிறார்கள்.



இந்த அணுகுமுறை அரசாங்கத்துக்கான நேரடியான அழுத்தங்களைத்தவிர்ப்பதோடு கிடைக்கின்ற உதவிகளிலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதற்கேற்றது.



இதற்கு அரசாங்கத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும்; கடும்போக்காளர்களை தயாரித்து வைத்திருக்கிறது சிங்;களத்தரப்பு. இவர்களே நிலைமையை பலன்ஸ் பண்ணுகிறார்கள். இந்தக்கடும் போக்காளர்களுக்கு அரசாங்கத்தரப்பினருக்கிருக்கும் மதிப்பும் செல்வாக்கு மண்டலமும் எப்போதும் சிங்கள அரசிடமும் சிங்களச்சமூகத்திடமும் உண்டு.



குறிப்பாக இந்தக்கடும்போக்காளர்களை சிங்கள அதிகார மையமும் பௌத்த பீடங்களும் சிங்கள ஊடகங்களுமே உருவாக்கிவருகின்றன.



ஒவ்வொரு காலகட்டத்திலும் இனப்பிரச்சினையை புதிய நெருக்கடியை நோக்கி தள்ளுவதிலும் வளர்த்தெடுப்பதிலும் இந்தப் பின்தளம் தீவிரமாகவேயிருக்கிறது.



பெரும் இனவாதிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் அளவுக்கு இன்று வரையில் இனப்பிரச்சினையை அமைதி வழியில் தீர்க்க வேண்டும் என்று யோசித்தவர்களுக்கு சிங்களத்தரப்பு இடமளித்ததில்லை.



ஆகவே அவர்கள் தமக்கு பிற நெருக்கடிகள் ஏற்படாத வண்ணம் ராஜதந்திரத்தைக் கையாண்டு வருகிறார்கள். அதையும் மீறி நெருக்கடிகள் மிக இறுக்கமாக வந்தால் அதை இந்த இரட்டை அணுகுமுறை மூலம் கடக்க முயற்சிக்கிறார்கள்.



இதற்காக சிஙகளத்தரப்பு மிக நீண்டகாலம்வரையில் பொறுமைகாக்கவும் சலிப்பில்லாமல் தொடர்ந்து தனது தந்திரோபாயத்தைக் கையாளவதற்கும் தயாராகவேயிருக்கிறது.



இதில் வரும் உடனடியான பின்னடைவுகளையிட்டு அது அதிகம் வருந்துவதில்லை. போர்நிறுத்த உடன்படிக்கை செய்தே ஆக வேண்டும், புலிகளுடன் பேசியே ஆகவேண்டும், நோர்வேயை அனுசரித்தே தீர வேண்டும் என்ற போதெல்லாம் சிங்களத்தரப்பு விருப்பமில்லாமலே அதற்கு இணங்கியது.



இப்போது நான்கு வருடங்களின் பின்னர் இதையெல்லாம் அது தூக்கியெறிந்து விட்டது. இறுதியில் போர் நிறுத்த உடனபடிக்கையை நிராகரிக்க வேண்டுமென்ற கட்டத்துக்கு சிங்களத்தரப்பு வந்துவிட்டது. ஆக உடனடி நெருக்;கடிகளைவிடவும் இறுதிவிளைவுகளைப்பற்றியே அது சிந்திக்கிறது.



இப்போது பிரித்தானியா இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் தீர்வு நோக்கிய பணிகளில் உதவப்போவதாக செய்திகளும் அறிவிப்புகளும் வெளியாகியபடி இருக்கின்றன. இதை வழமையைப் போல சிங்களத்தரப்பு எதிர்க்கத் தொடங்கி விட்டது.



கடும்போக்காளாகத் தெரியும் சிறிலங்கா அரசின் பாதுகாப்புச் செயலர் கோஅபய ராஜபக்ஸ பிரித்தானியா உள்ளிட்ட வெளிச்சமூகத்தின் கண்டனங்களை பகிரங்கமாகவே மறுத்து கடுந்தொனியில் எதிர்த்திருக்கிறார்.



உண்மையில் இந்த எதிர்ப்புத்தான் சிங்கள சமூகத்தின் நிலைப்பாடு. ஆனால்; இந்த எதிர்ப்பு வெளியே பெரும் விவகாரமாகி விட்டால் அதை அரசாங்கம் வேறுவழிகளில்; சரிக்கட்டிவிடுகிறது.



அதாவது தமது நிலைப்பாட்டையும் போக்கையும் மாற்றாமல் விட்டுக்கொடுப்பதுபோல நடந்து தன்மை நிலைப்படுத்திக் கொள்வது.



கடந்தவாரம் கொழும்பிலிருந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு அந்த நடவடிக்கைக் கெதிரான குரல்கள் எழத்தொடங்கியபோது அதை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மூலம் சமாளிக்க முற்பட்டது சிறிலங்கா அரசு.



இந்த விடயம் குறித்து ஜனாதிபதி எந்த அபிப்பிராயத்தையும் வெளிப்படையாகத்; தெரிவிக்கவில்லை. அதற்கு அவர் தயாராகவும்இல்லை.



பதிலாக எந்தவிதமான அதிகாரரமுமில்லாத வெறும் பெயரளவிலேயே இருக்கிற பிரதமரைக் கொண்டு அந்த நெருக்கடியைத் தணிக்க முயலப்பட்டுள்ளது.



இதில் ஒரு பிரதமரே மன்னிப்புக் கேட்டிருக்கிறார் என்ற தொனிதான் தெரியுமே தவிர வேறெதுவும் நடந்து விடவில்லை.



ஆகவே சிறிலங்க அரசும் சரி சிங்களத்தரப்பும் சரி பேச்சுவார்த்தைக்கோ தீர்வு முயற்சிகளுக்கோ வரப்போவதில்லை இப்போதைக்கு.



பதிலாக இந்தியாவை ஏமாற்றியதைப்போல, நோர்வேயை ஓரங்கட்டியiதைப் போல இன்னும் எவiரையும் தின்று ஏப்பம் விடவே காத்திருக்கிறது சிறிலங்கா அரசும் சிங்களத்தரப்பும்.



அது இப்போதும் சர்வதேச சமூகத்தை அப்;படித்தான் பயன்படுத்தி வருகிறது. சர்வNதுச சமூகம் தன்னை அறியாமலேயோ அறிந்தோ சிறிலங்காவுக்குப் பலியாகியே வருகிறது.



இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம் என்று யாரும் எதிர்பார்கக்கத்தேவையில்லை.



குறிப்பாக சர்வதேச சமூகம் இநதக்கனவை முற்றாக விட்டுவிடலாம். இன்னும் உத்தியோக பூர்வமாக போர்நிறுத்த உடன்படிக்கை விலக்கப்படவில்லை என்ற படியால் அதற்கு இன்னும் பெறுதி இருக்கிறது என்று ஒரு வெளிநாட்டு ராஜதநதிரி பெருமையோடு கடந்தவாரம் கொழும்பில் பேசியிருக்கிறாhர்.

அவருக்கு இலங்கையின் அண்மைய வரலாற்றில் நிகழ்ந்திருக்க்pற இந்தச்சிறு உதாரணங்களெ போதும். அவருக்கு மட்டுமல்ல அவரைப்போல கனவு காணுகிற எல்லோருக்கும்தான்.