மகிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் தமிழர்களை வெற்றி கொண்டுவிட்டோம் என்ற தோரணையில் பெரியதொரு வெற்றி விழாவைக் கொண்டாடியிருக்கிறது. இந்தமாதிரி முன்னர் திருமதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலும் ஒரு வெற்றிவிழாக் கொண்டாடப்பட்டது. அது யாழ்;ப்பாணத்தை வெற்றி கொண்ட விழா. இது மட்டக்களப்பின் குடும்பிமலைக்காட்டுப்பகுதியை வெற்றி கொண்ட விழா. இந்த வெற்றி விழாவுக்கு அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதே இப்போதுள்ள பெரும் எதிர்பார்ப்பாகவுள்ளது.
அடிப்படையில் இவ்வாறு இந்த வெற்றி விழாக்களை எப்போதும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் கொண்டாடுவதற்கான பின்னணி என்பது ஒன்றாகவேயிருக்கிறது. சந்திரிகா அப்போது போரை பெரும் எதிர்ப்புகளின் மத்தியில் ஆரம்பித்தார்.
அப்படி அவர் தொடங்கிய போர்; வெற்றியை நோக்கிச் செல்கிறது என்பதைக்காட்ட வேண்டிய தேவை அபடபோது அவருக்கிருந்தது. எனவே அதற்கு வெற்றி விழா அவசியப்பட்டது.
அத்துடன் நீண்டகாலமாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்தை முழதாக படையினர் கைப்பற்றியுள்ளனர் என்ற சேதியை வெளியே சொல்ல வேணும். அத்துடன் படையினரின் உளவியலை ஊக்கப்படுத்தி அவர்கள் அடுத்த போருக்கு தயாராகும் விதமாக செய்ய வேண்டும்.
இந்தமாதிரியான தேவைகள் மற்றும் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அப்போது அந்த வெற்றி விழாவைக் கொண்டாடினார் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவருக்கு அப்போது துணையாயக இருந்தவர் திரு. அனுருத் ரத்வத்த. அதாவது வீடுகொழுத்துகிற ராசாவுக்கு நெருப்புக் கொடுக்கும் மந்திரி போல அவரிருந்தார்.
இதேமாதிரி இப்போது கிழக்கில் மட்டக்களப்பு குடும்பிமலையைக் கைப்பற்றி விட்டதாகக்கூறி மகிந்தவின் அரசாங்கம் பெருமெடுப்பில் வெற்றி விழாவைக் கொண்டாடியுள்ளது. சந்திரிகாவுக்கு எந்தவகையிலும் தான் குறைந்தவரில்லை என்பதை இதன்மூலம் மகிந்து காட்ட முற்பட்டிருக்கிறார். அத்துடன் ரணிலுக்கும் மங்கள போன்ற புதிய அரசியல் எதிரிகளுக்கும் ஒரு செய்தியை அவர் இந்த வெற்றிவிழாவிpன் மூலம் சொல்ல முற்பட்டிருக்கிறார். போரில் தான் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் எனவே யாரும் தனக்குக் கிட்டவாக நெருங்க முடியாதெனவும் அவர் காட்;ட முற்பட்;டிருக்கிறார்.
நாட்டின் தேசியப்பிரச்சினையாக இருக்கும் இனப்பிரச்சினையை போரின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதைத் தீர்க்கலாம் என்று அவர் சிங்களச் சமூகத்துக்கு சொல்ல முற்பட்டிருக்கிறார். அப்படிச் சொல்வதன் மூலம் சிங்களத்தரப்பின் முழமையான ஆதரவை போருக்காகத் திரட்;ட முடியும் என்றும் ஜனாதிபதி கணக்கிட்டிருக்கிறார். அப்படிப்போருக்கு ஆதரவாக சிங்கள மக்களைத் திரட்டிவிட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வைத்து ரணிலோ மங்களவோ அல்லது ஜே.வி.பி யோ தனக்கெதிராக போராட்டங்களை நடத்த முடியாது என்றும் அவர் கருதியுள்ளார்.
அத்துடன் பொருளாதாரப்பிரச்சினைகளை யாரும் தூக்கவோ அது தொடர்பாக கேள்விகளை எழுப்பவோ முடியாத ஒரு நிலையை இந்தப்போரின் வெற்றி மூலம் அவர் உருவாகக்pவிட்டார். தவிர, கிழக்கின் வெற்றியை பிரமாண்டப்படுத்துவதன் மூலம் வடக்கிலும் அடுத்த வெற்றி இதுபோலப் பெறவேண்டும் என்ற ஒரு போட்டியணர்வை படையினர் மத்திpயில் ஏற்படுத்துவது. அதாவது கிழக்கின் கட்டளைத்தளபதிகளுக்கும் வடககிலுள்ள கட்டளைத்தளபதிகளுக்குமிடையில் போட்டியுணர்வை ஏற்படுத்தி தொடரும் வடக்குப் போர்க்களத்துக்கு சூடேற்றுவது.
மேலும் இந்த வெற்றியைக் கொண்டாடுவதன் மூலம் படையினரின் உளவியலை போரை நோக்கி உந்துவது. எப்படியென்றால் போரில் வெற்றி பெறமுடியும் என்று ஒவ்வொரு படையினரையும் அவர் நம்ப வைக்க இதன் மூலம் முயல்கிறார். அத்துடன் போரில் ஈடுபடும் படையினரின் உறவினரை ஆற்றுப்படுத்தவும் அவர் இந்த வெற்றி விழாவைப் பயன் படுத்தியிருக்கிறார். பொதுவாக சிங்களச்சமூகத்தை போருக்கு முழு அளவில் தயார்ப்படுத்துவதே இதன் நோக்கம்.
போரில் வெற்றி கிடைக்கும் என்ற ஒரு தோரணையை ஏற்படுத்தி விட்டால் சமாதானத்தைப் பற்றி யார் கதைத்தாலும் அது சிங்கள மக்களின் மத்தியில் எடுபடாது என்பது மகிந்த ராஜபக்ஸவின் கணிப்பாகும். அதிலும் மேற்கு இனி இப்போதைக்கு அமைதிப்பேச்சு வார்த்தையைப்பற்றி பேச்சே எடுக்க முடியாது என்ற கட்டம் உருவாகிவிட்டது. இதையே அவர் நோக்காகக் கொண்டு இயங்கியிருக்கிறார். கடந்த ஓராண்டுக்குள் கிழக்கை தன்னுடைய முழக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக அவர் சொல்வதும் இவற்றின் பின்னணியில்தான். இதன் அடிபபடையில்தான் புலிகளின் மீதிப்பகுதியையம் தாம் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று அவர் கடந்த வாரம் கொழும்பில் தெரிவித்திருப்பதும்.
எனவே ஜனாதிபதி முழதாகப் போர்ச்சன்னதமாடத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு இப்போது போர்தான் உள்ள ஒரே மார்க்கம். அவரிடம் சமாதானத்துக்குப் போகும் வழியெதுவும் கிடையாது. இனப்பிரச்சினையைத்தீர்ப்பதற்கான வேறு தெரிவுகளும் அவரிடமில்லை. அதனால் அவர் போரில்தான் முழு முதலீட்டையும் செய்திருக்கிறார். மகிந்த சிந்தனையில் செய்யப்படாதவைகளையும் செய்ய முடியாதவையையும் அவர் போரின் மூலமே கணக்குத்தீர்க்க விரும்புகிறார். யுத்தத்தில் கேள்விகளுக்கு இடமில்லை என்பார்கள். எல்லாக்கேள்விகளுக்குமான ஓரெ பதிலை யுத்தம் சொல்லிவிடும். ஆனால் அந்த யுத்தம் தோற்கும்போது எல்லாக்கேள்விகளும் யுத்தபிதாவை நோக்கியே ஒரு பெரும்யுத்தத்தை நடத்தத் தொடங்கிவிடும்.
மகிந்த தன்னை நோக்கிய எல்லாக் கேள்விகளைத் தவிர்ப்பதற்காகவும் தமிழ்மக்களை நோக்கி பெரும் யத்தத்தை நடத்துகிறார். அவர் கடந்த ஒரு வருடகாலமாக யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை திறக்காமலே மூடி வைத்திருக்கிறார். ஏறக்குறைய அதுவும் ஒரு போர் நடவடிக்கைதான். அதாவது யாழ்ப்பாணத்தில் அவர் தமிழ் மக்களை முற்றுகைக்குட்படுத்தி வைத்திருக்கிறார். தமிழ்மக்களைத் திரளச் செய்தால் அவர்கள் பலமடைந்து விடுவார்கள் என்ற அடிப்படையில் அவர்களை அவர் துண்டு துண்டாக பிரித்து தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்.
இதன்மூலம் அவர்களின் போரிடும் ஆற்றலையம் திரள் சக்தியையம் குறைப்பதே அவருடைய நோக்கம். அப்படி அவர்களை மட்டுப்படுத்pக் கொண்டு தொடர்ந்து போரை முன்னெடுப்பது. அதுவும் ஒவ்வொரு பகுதியாக போரைத்தொடுத்து அந்தப்பகுதிகளை மெல்ல மெல்ல கைப்பற்றுவது. இதன்படியே கிழக்கில் ஒரு வருடகாலத் தொடர் போரில் அவர் ஒவ்வொரு பகுதியாக மெல்ல மெல்ல கைப்பற்றினார். அவருடைய இநதத்திட்;டத்துக்கு கிழக்கின் புவியியல் நிலையம்சம் சாதகமாக இருந்துள்ளது.
கிழக்கில் இது வரையில் வலுவான மரபுவழிச்சமரெதையும் புலிகள் செய்யதில்லை. வாகரையிலும் படுவான்கரையிலும் அவர்கள் மரபுவழிக்குக்கிட்டவான ஒரு போர் முறையைக் கையாண்டிருந்தபோதும் முழு அளவில் அவர்கள அங்கே ஒரு போதும் மரபு வழிச்சமரைச் செய்யவில்லை. ஆனால் அவர்கள் 1990 காலப்பகுpதயிலேயே அதாவது ஏறக்குறைய பதினாறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே வடக்கில் மரபுவழிச்சமரை நடத்தியுள்ளனர். ஆனையிறவு படை முகாம் மீதான புலிகளின் முதலாவது பெரும் போர் நடவடிக்கையின் பொது புலிpகள் மரபுவழிச் சமரைச் சய்திருந்தனர். அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களிலும் பல களங்களிலும் புலிகள் வடக்கில் மரபுவழிச்சமரை நடத்தியுள்ளனர்.
ஆனால் அவர்கள் கிழக்கில் அவ்வாறான ஒரு பொறிமுறைக்குப் Nபுhகவில்லை. அப்படிப்போகவும் அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் கிழக்கில் மரபுவழியிலான பெரும் போரைச் செய்யக்கூடிய களநிலை இல்லையென்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தம்மை நொக்கி வரும் பெரும்போரை அங்கே வலுவுடன் நின்று எதிர் கொள்வதை விடவும் அங்கிருந்து தம்மைப்பாதுகாப்பாக வெளியகற்றுவதையே அதிகமும் விரும்புவார்கள். அதனையே அவர்கள் இப்போது செய்து மிருக்கிறார்கள்.
வாகரையைப் படையினர் கைப்பற்றியபோதும் இதுமாதிரியெ புலிகள் தம்மைப்பாதுகாப்பாக வெளியகற்றியிருந்தனர். அப்படி வெளியகற்றுவதன் மூலம் தமது போரிடும் திறனை அவர்கள பாதுகாத்துள்ளனர். அத்துடன் வெளியகன்ற புலிகள் எல்லாம் திரண்டு அவர்கள் இப்போது வன்னியில் பெரும் பலமாகியிரு;ககிறார்கள். அடுத்து பெரும் பேரை எதிர்கொள்ளக்கூடிய மாதிரியோ அல்லது பெரியதொரு போரைச் செய்யக்கூடியமாதிரியோ அவர்களின் பலம் திரண்டிருக்கிறது. இந்தப்பலத்தை ஒரு மையத்தில் திரட்டியிருப்பது அரசாங்கமே.
இதெல்லாம் நிச்சயம் படை;தரப்புக்குத் தெரியாதென்றுமில்லை. படைத்தரப்பைப் பொறுத்தவரையில் அதற்கு இராணுவச் சமநிலையில் அது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முனனர் தோல்விகளைச் சந்தித்ததாகவே அதன் கவலையிருந்தது. அப்படியே அதைப்பற்றிய மதிப்பீடுமிருந்தது.
அதை ஈடுகட்டும் நோக்குடன் இப்போது கிடைத்திருக்;கும சந்தர்ப்பத்தை படைத்தரப்பு பயன்படுத்த விளைகிறது. அதாவது இப்போது படைவலுச்சம நிலையில் புலிகளை வென்று விட்;டதாக அது தன்;னை உயர்த்தியுள்ளது. இதற்கமைய அது தனக்குச்சாதகமான பகுதிகளில் போர் நடவடிக்கையை விரிவாக்கியிருக்;கிறது. இதன்படி படைத்தரப்பு இப்பொழுது ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆனால் இந்த அடைவு குறித்து பல்வேறு வகையான அவதானங்களுண்டு.
கிழக்கில் வெற்றியைப்பெறுவதற்காக மிகவும் அகன்ற பரப்பில் படைததரப்பு காலை வைததுள்ளது. இதன்படி அது கைப்பற்றி வைத்திருக்கும் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக பெருஞ்சிரமப்பட வெண்டியிருக்கும். ஏனெனில் எல்லோரும் எதிர்பார்ப்பதைப்போல புலிகள் தமது நடவடிக்கையை கெரில்லாப் போர்முறைக்கு மாற்றுவார்கள். அப்படி கெரில்லாப்போர் முறையை அவர்கள்; கைக்கொள்ளும்போது படைத்தரப்பு அதைச்சமாளிக்க பெரிதும் திண்டாடும்.
அத்துடன் கிழக்கின் சமூக நிலையும் முற்றிலும் வித்தியாசமானது. அங்கே தமிழ் முஸ்லிம் சிங்களச் சமூகங்கள் இருக்கின்றன. அடுத்து தொடரும் கெரில்லா போரில் தனியே தமிழ் மக்களை மட்டும் படையினர் பழிவாங்கவோ இலக்க வைக்கவோ முடியாது.
அத்துடன் பரவியுள்ள படையினரைப்பாதுகாக்கவும் அவரகளுக்கான வழங்கல்களைச் செய்யவும் படைத்தரப்புக்கு அப்போது பெரும் நெருக்க்டியம் சவாலும் ஏற்படும். அப்போது அங்கே மேலதிக படையினரைக்குவிக்கவும் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் வேண்டிய கட்டம் அரசாங்கத்துக்கு ஏற்படும்.
அதேவேளை அப்போது அரசாங்கம் வேறு முனையில் போரைத் தொடங்கினால் அதற்கும் ஆளணி வேண்டும். எந்தப்பிரதேசத்தையும் கைப்பற்றுவது ஒரு படையின் பெறுமானத்தைக்காட்டுவதல்ல, கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதே அதன் நிலைப் பெறுமானம் என்பார்கள்.
இந்த நிலைப் பெறுமானத்தை அரசாங்கம் எட்டுமா. அதற்குப்புலிகள் இடமளிப்பார்;களா. ஏனெனில் புலிகள் இப்போது அரசாங்கத்தை மட்;டுப்படுத்த வேண்டிய அவசியத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். அதாவது அரசாங்கத்தின் போர் முனைப்புக்கு பதிலளிக்கவேண்டிய கட்டத்திலிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தின் போர முனைப்பை அவர்கள தணிக்க வேண்டுமெனில் வரும்போரை முறியடித்து அரசாங்கத்தின் முது கெலும்பை உடைக்க வேண்டும். அல்லது தாங்கள் ஒரு போரைத் தொடங்கி அதன் மூலம் அரசாங்கத்தை பின்னடையச் செய்யவேண்டும்.
இதன்படி அடுத்து நடக்கப்போகிற போர் என்பது அரசாங்கத்தை கட்டாயமாக போர் வெறுப்புக்கும் சமாதான விருப்புக்கம் கொண்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கான உள்வெளி அமைவுகளை திரு. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் உருவாக்கி விட்டது.
இப்போது அரசாங்கம் கொண்டாடியுள்ள வெற்றி என்பது தமிழ்மக்களை நிறையவும் காயப்படுத்தி விட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னர் யாழ்;ப்பாணத்தின் வெற்றியைக் கொண்டாடிய அரசாங்கம் அப்போது தமிழ்; மக்களை அவமானப்படுத்திpயது. அதையே இப்போது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் செய்திருக்pறது.
அப்போது யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்டதாகக்கூறிய அரசாங்கம் இப்பொழுது அதை திறந்த வெளிச்சிறைக்கூடமாக்கி வைத்திருப்பதைப்போல கிழக்கும் ஒரு தீராத பிரச்சினைகளின் மையமாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது தொடரும் யுத்த பூமியாகவும் அமைதியற்ற பகுதியாகவும் ஆகக்கூடிய சாத்தியங்களே அதிகம் தென்படுகின்றன. அத்துடன் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான எல்லையும் எட்டியே விட்டிருக்கிறது. அது போராயினும் சரி சமாதான மூலமாயினும் சரி. கிழக்கை ஒரு வெல்லும் வரை அல்லது கிழக்கை திரு;வில் இணைக்கும் வரை புலிகள் எதற்கும் இறங்கிவர மாட்டார்கள்.
ஆகவே பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளாகியே விட்டிருக்கிறது. போரின் மூலம் பெறப்படும் உடனடி வெற்றிகள் ஒரு போதும் தீர்வுக்கு வழியைத்தராது என்பது மிகச்சரியாகவேயிருக்கிறது.
இப்போது கிழக்கில் பெற்றுக் கொண்ட சாதக நிலையை பாதிக்கப்பட்டமக்களின் நோக்கு நிலையிலிருந்து பார்க்காமல் தன்னுடைய தேவை மற்றும் நோக்கு நிலையிலிருந்து பார்த்து கொண்டாடுகிறார் ஜனாதிபதி. என்ன செய்வது சந்திரிகா குமாரதுங்கவைப்போல டி.பி விஜயதுங்கவைப்போல அவரும் ஆட்சியிலிருக்கும்போது குதிரையை ஓட்டுகிறார். அவர் குதிரையை விட்டு இறங்கியவுடன் எல்லாமே தெரியவரும். அதாவது வெல்ல முடியாத போரில் தான் என்ன செய்திருக்கவேண்டும் என்று.
No comments:
Post a Comment