இரண்டுவழிகளால் எப்போதும் உதவிகளும் நன்மைகளும் கிடைப்பதை இருகுருச் சந்திர யோகம் என்று சோதிடத்தில் சொல்லுவார்கள். இங்கே சோதிடம் பற்றி நாம் அதிகம் பேசவில்லை. ஆனால் இந்த இருகுருச்சந்திர யோகத்தைப்போல எப்போதும் சிறிலங்கா அரசுக்கு உதவிகளும் நன்மைகளும் கிடைப்பதைப்பற்றியே பார்க்கிறோம்.
அதுவும் போர், மனித உரிமை மீறல்கள், இனப்பிரச்சினைக்குத்தீர்வு காணாது இழுத்தடித்தல் என்று நாட்;டைப்பாழ்படுத்தும் காரியங்களைச் செய்து கொண்டிருக்கும்போதே இந்த உதவிகள், இரண்டுவழியான உதவிகள்,இருகுருச்சந்திரயோக உதவிகள் சிறிலங்காவுக்கு கிடைத்துக் கொண்டிருக்கினறன.
சிறிலங்கா அரசு மனித உரிமை மீறல்களை தொடர்கிறது, அதிகரித்திருக்கும் வன்முறையைக்கட்டுப்படுத்த அது தவறி விட்டது என்றெல்லாம் சொல்லி அதற்கு நிதி உதவி அளிப்பதைப்பற்றி மீள் பரிசீலனை செய்யவுள்ளோம் என்பதாக சில நாடுகள் அறிக்கைவிட்டன.
சிறிலங்காவின் திருப்தியற்ற நடவடிக்கைகள் காhரணமாக நிதி முடக்கத்தைச் செய்வதாக கடந்த வாரங்களில் பிரிட்டன் கூடச் சொல்லியிருந்தது. அதற்கு முன்னர் ஜேர்மனியும் இத்தகைய அறிவிப்பைச் செய்திருந்தது. தொடர்ந்து இது மாதிரி பல தரப்பினரும் சிறிலங்கா அரசை எச்சரிப்பது போல அறிவிப்புகளைச் செய்தனர். ஐ.நா கூட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்காவை பல வகையிலும் குறறம் சாட்டியும் அறிவுறுத்தியும் எச்சரித்துமிருந்தது.
ஆனால் இந்த எச்சரிக்கைகள் பற்றியெல்லாம் சிறிலங்கா அரசு அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. இந்த அறிவிப்புகளால் உள்@ர அதற்கு நெருக்கடியோ அச்சமோ ஏற்பட்டிருக்;கலாம். ஆனால் அது வெளிப்படையாக உசார் நிலையிலேயே இருக்கின்றது. அப்படி இருக்கக்கூடிய மாதிரியே இன்னும் சர்வதேச சமூகத்தின் அணுகுமுறைகளிருக்கின்றன.
" வேண்டுமானால் இலங்கைக்கு யாரும் உதவி செய்யலாம். ஆனால் அதற்காக யாரும் எமக்கு நிபந்தனை விதிக்க முடியாது" என்று சிறிலங்காவின் ஜனாதிபதி திரு. மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளமைக்கான பின்னணியை இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ராஜபக்ஸ இப்படிச்சொல்வதற்குச் சில காரணங்களுண்டு. ஒன்று, சிறிலங்கா அரசை எவர் கண்டித்தாலும் அவர்களின் கண்டனம் எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்கக்கூடிய யதார்த்தத்தில் இல்லை என்பதைப்பற்றி அவருக்குத் தெரியும். அடுத்;தது ஒருதரப்பு உதவுவதற்குப்பின் நின்றால் அவர் இன்னொரு தரப்பினரிடம் உதவி பெறக்கூடிய பின்புலத்தோடிருக்கிறார்.
மேற்குலகம் பின்னின்றால் அவர் சீனாவிடம் உதவியைப் பெறுவார். அப்படித்தான் உதவிகள் பெறப்பட்டும் வருகின்றன. இதுதான் இங்கே இருகுருச் சந்திரயோகம் என்று சொல்லப்படுவது.
எனவே இந்தப்பின்னணியில் என்னதான் முன்னர் உதவிகளை மட்;டுப்படுத்துவோம் எனறு சர்வதேச சமூகம் சொன்னாலும் அது பின்னர் அதை முழுதாகச் செய்தே தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கின்றது.
இதனால் அவர்களின் கண்டனத்துக்கு அப்பால் அவர்கள் செய்துவரும் உதவிகள் அரசாங்கத்தைப் பலப்படுத்துகின்றன. இதனால்தான் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் போர் முனைப்போடும் யாருடைய ஆலோசனைகளையும் கேட்காத தன்மையோடுமிருக்க்pறது.
இப்படிப் பெறப்படும் சர்வதேச சமூகத்தின் இந்த உதவிகள் நிதி, அரசியல் ஆதரவு, ஆயுத உதவி எனப்பல வகைப்படுகின்றன.
இந்த உதவிகளால் அரசாங்கம் பலமடைகிறது. அப்படி அது பலமடையும்போது அது தன்னை நோக்கி முன்வைக்கப்படும் கண்டனங்களையிட்டு அதிகம் கவலைப்படப்போவதில்;லை.
பிரித்தானியா சிறிலங்காவுக்கான நிதியுதவியில் பாதியை இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு வாரங்களில் இப்போது அது சிறிலங்காவுக்கான நிதி உதவியை மீண்டும் அளிப்பதற்கு முன்வந்துள்ளது.
ஆனால் இதில் ஒரு சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னர் சிpறிலங்காவின் அபிவிருத்திக்கென அளிக்கப்படவிருந்த நிதி அந்த உதவியின் பெயரை மாற்றி இப்போது மீள் குடியேற்ற நிதி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
இது உண்மையில் கண்ணாமூச்சி காட்டும் விளையாட்டுத்தான். பிரித்தானியாவும் கண்ணா மூச்சி விளையாட்டில் ஈடுபடுகிறதா என்று யாரும் கேட்கலாம். ஆனால் அதுதான் நடக்கிறதாகத் தெரிகிறது.
சிறிலங்கா அரசினால் தொடரப்படும் போரினாலும் வன்முறைகளாலும் மனித உரிமைகள் படு மோசமாகச் சீரழிந்து போயுள்ளன என்பது பகிரங்கமாகியுள்ள நிலையில் தொடரந்து வெளிப்படையாக அதற்கு உதவ முடியாதென்ற நிலைமை பிரித்;தானியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசின் போர்முனைப்பை பல நாடுகளிலுமுள்ள பல்வேறு தரப்பினரும் க்ணடித்தும் வருகின்றனர். குறிப்பாக பிரித்தானியப் பாராளுமன்றில் அண்மையில் இலங்கை நிலைவரம் பற்றி அனைத்துக்கட்சிகளும் கவனிக்கத்தக்க விவாதத்தையும் நடத்தியிருந்தன. அதைத்தொடர்ந்து பிரித்தானியா தீர்வு முயற்சிக்காக பாடுபடவேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது.
இதனுடனிணைந்தே அப்போது இலங்கைக்கான நிதிக்குறைப்பு அறிவிப்பும் வெளியானது. அதாவது ஏனைய கட்சிகளினதும் பொதுத்தீர்மானத்தின்போது நிதிக்குறைப்புப்பற்றி அறிவித்து விட்;டு பின்னர் வேறு சாட்டுகளைச் சொல்லி அந்த நிதியை பிரித்தானிய அரசு வழங்குகிறது.
இதில் மனித உரிமைகள் விசயத்தில் கூடுதலான அக்கறையுடனிருப்பதாகவும் காட்டிக்கொள்ளலாம். அதேவேளையில் சிறிலங்காவைப் பகைத்துக்கொள்ளாமலே அதனுடன் நட்புறவைப்பேணி அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்து தனது நலனையும் பேணிக்கொள்ளலாம் என்று பிரித்தானியா கருதுகிறது. ஆக இந்த இரட்டை அணுகுமுறையில் அதிகம் நன்மையைப் பெறுகிறது சிறிலங்கா. அதிகம் பாதிக்கப்படுவிறாhர்கள் தமிழ்மக்கள்.
இந்தமாதிரித்தான் அமெரிக்காவின் அணுகுமுறையும் இருக்கிறது. அது மனித உரிமைகள் விவகாரத்தில் தான் மிவும் இறுக்கமான நிலைப்பாட்டைக்கடைப்பிடிக்கப்போவதாகவும் அதன்பின்பே சிறிலங்காவுக்கான உதவிகள் பற்றிச் சிந்திக்க முடியும் என்றும் சொன்னது. அதேவேளை அது சிறிலங்காவுக்கான ஆயுத உதவியை வழமையை விடவும் இப்போது அதிகரிததிருக்கிறது. ஆனால் அந்த உதவி போருக்கல்ல என்றும் சொல்லுகிறது. இதுதான் வேடிக்கையானது.
முழு அளவிலான போரை சிறிலங்கா அரசு செய்து கொண்டிருக்கும் போது கிடைக்கும் ஆயுத உதவியை அது என்ன செய்யும் என்று சின்னக்குழந்தைகளுக்கும் கூடத் தெரியும். சிலவேளை இதுபற்றி அமெரிக்காவுக்குத் தெரியாமலிருக்கலாம். அல்லது இது பற்றி மற்றவர்களுக்கு ஒன்றுமே புரியாது என்றும் அது கருதிக்கொண்டிருக்கலாம்.
தீர்வு பற்றி நியாயமாகச் சிந்திக்காது விட்டால் நிதிக்குறைப்புச் செய்யவேண்டியிருக்குமென்றே ஜப்பானும் முதலிலு; தெரிவித்திருந்தது. ஆனால் அதைப்பின்னர் கைவிட்டுவிட்டு இப்போது நிதியைக் கொடுத்துள்ளது. அதுவும் மனித உரிமைகள் அமைப்புகளின் வேண்டுகோளையும் மீறி ஜப்பான் இந்த உதவியை வழங்குகிறது.
ஆக உதவிவழங்கும் நாடுகளின் நிதி மட்டும்தான் இப்போதுவரையில் தடைப்பட்ட நிதியாக இருக்கிறது.
பொதுவாகவே சர்வதேச சமூகத்தின் அணுகுமுறைகள் இப்படித்தான் இருக்கின்றன. இதற்கு மேலும் சில விளக்கங்களுண்டு.
சிறிலங்கா அரசு போர்நிறுத்தத்தை முற்றாக மீறியே வாகரையிலும் மட்டக்களப்பு படுவான்கரையிலும் பெரும்படை யெடுப்பை மேற்கொண்டது.
வாகரைக்கு உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் அனுப்பாமல் அது தடுத்திருந்தது. தொண்டர் நிறுவனங்கள் கூட அங்கே செல்வதற்கான அனுமதியை அது மறுத்திருந்தது. இதெல்லாவற்றையும் இந்தத்தரப்பினர் அப்போது கண்டுகொள்ளவில்லை.
அந்தப்படையெடுப்புகளின்போதெல்லாம் பெரும் மனித அவலம் நிகழ்ந்தது. இது உலகறிந்த உண்மை.
அப்போது, அந்தப்படையெடுப்புகள் குறித்து சர்வதேச சமூகம் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்;காமல் மௌனமாகவே இருந்தது. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்ட போதும் இந்தத்தரப்பினர் அது குறித்து எதுவும் கூறாதேயிருந்தனர்.
ஆனால் அந்த மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களின் நிலை தொடர்பாக விளக்கம் அளிக்கவென்ற பெயரில் வெளிநாடுகளிடமிருந்து நிதியைக்கறக்க சிறிலங்கா அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு இந்தச்சர்வதேசப்பிரதிநிதிகள் சென்றனர். இதன்போதுதான் அவர்கள் மட்டக்களப்பில் எதிர்பாராமல் நடந்ததொரு தாக்குதலில் சிக்கியதும்.
சர்வதேச சமூகத்தினரால் அங்கீகரிக்கப்பட்;;;;ட போர் நிறுத்த உடன் பாட்டையே மீறி அரசாங்கம் மக்கள்மீது போர் நடத்தும்போது அதைப்பாராமுகமாக இருக்கும் தரப்பினர் அந்த மக்களைவைத்து அதே அரசு நிதி உதவி கோரும்போது மட்டும் எப்படி உதவத்தயாராக இருக்கிறாhர்கள்.
அப்படியென்றால் சனங்களை இராணுவப்பிடிக்குள் வைத்திருக்கும் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவைத்தருகிறதா.
அதாவது மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தியை சர்வதேச சமூகம் மறைமுகமாக ஆதரிக்கிறதா. அது தமிழ் மக்களை இராணுவ அடக்குமுறைக்குள் தள்ளிவிட்டுக்கொண்டு மனித உரிமைகளைப்பற்றி பேசி தன்னை நியாயப்படுத்துகிறதா.
இத்தகைய இரட்டை அணுகுமுறையைத்தான் முன்னர் இந்தியாவும் கடைப்பிடித்தது. அந்த அணுகுமுறைதான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இன்னும் பல பிரச்சினைகளை இன்னும் ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது.
அடுத்தது வாகரையிலுள்ளமக்களைப்போல யாழ்ப்பாணத்திலிலுள்ள மக்;களும் பெரும் பட்டினிச்சாவின் அவலத்துக்குள்ளாகியிருந்தனர். அவர்களுக்கான போக்குவரத்துப்பாதைகள் மூடப்பட்டேயிருக்கின்றன. இது பற்றியும் எந்தவிதமான அபிப்பிராயத்தையும் சர்வதேச சமூகம் இதுவரையில் சொல்லவில்லை.
உண்மையில் யாழ்ப்பாண மக்கள் பெரும்பொறிக்குள்ளேதானிருக்கிறார்கள். அடுத்து அங்கேயொரு பெரும்போர் மூழுமானால் அங்கு இடம்பெறக்கூடிய மனிதப் பேரவலம் மிகப்பெரியதாகவே இருக்கும். நெருக்கடியின்போதுஅந்த மக்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறக்கூடிய வழிகள்கூட இல்லை. ஒரு படமாளிகைக்கோ அல்லது உரு வானனத்துக்கோகூட அவசரகால வழிகளிருக்கும். ஆனால் யாழ்ப்பாண மக்களுக்கு எதுவுமில்லை.
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வாகரையிலும் படுவான்கரையிலும் நடந்ததைப்போலவே இப்போது வன்னியிலும் சிறிலஙகா அரசு போருக்;கான நெருக்குவாரங்களை ஏற்படுத்துகிறது. வவுனியா மன்னார் பகுதிகளில் அடிக்கடி தொடருகின்ற இராணுவ நடவடிக்கைகள் இந்த அடிப்படையிலானவையே.
அத்துடன் வன்னிப்பகுதிக்கான Nபுhக்குவரத்துப்பாதைகளை அடிக்கடி மூடி முதற்கட்டமாக பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றது. இத்தகைய நிலைமை மேலும் தீவிரமடையும்போது வன்னியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பல தொண்டர் அமைப்புகளும் வெளியேறிவிடும். இப்படியே அடுத்த கட்;;டத்தில் ஒரு மாபெரும்; மனித நெருக்க்டியை ஏற்படுத்தி தனக்குச்சாதகமான ஒரு நிலையை உருவாக்கிக்கொண்டு போரை முழு அளவில் நடத்த அரசாங்கம் தயாராகிறது.
ஆனால் வன்னிக்களத்தின் யதார்த்ம் வேறு விதமாகவே இருககும் என்பது வேறு விசயம். என்றபோதும் பெரும் மனித அவலம் நடக்க வாய்ப்புள்ளது என்பதே இங்கே கவனிக்க வேண்டிய செய்தி. அதிலும் மனித அவலங்களைப்பற்றி அதிகமாக கவலை கொள்ளும் சர்வதேச சமூகம் இது பற்றி ஒன்றுமே தெரியாமலிருப்பதுதான் வேடிக்கையானது. அதிலும் அரசாங்கம் போரை நடத்தக்கூடிய வலுவையும் பின்னணியையும் உருவாக்கி விட்டு வெளியே உயர் மனிதாபிமானம் பற்றிக் கதைக்கும் வெளியுலகத்தின் கனவான்தனத்தை இங்கே மக்கள் வேடிக்கையாகவே பார்க்கிறார்கள். அவர்கள் இதைக்கண்டு நகைக்கிறாரர்கள்.
இப்படித்தான் சிறிலங்கா அரசு போர் நிறுத்தத்தை மீறி, போரை தொடங்கியபோது அதைப்பற்றி எதுவும் பேசாதிருந்து விட்டு, பின்னர் அரசாங்கம் மனித உரிமைகளை மீறிக்கொண்டிருக்கிறது என்று இந்தச்சர்வதேச சமூகம் அழுது வடிகின்றது. அத்தகைய சீரழிவு ஏற்படுவதற்கு முன்னர் அதாவது போர்ச்சூழலுக்கு சிறிலங்கா அரசு போவற்கு முன்னர் அதைத்தடுதது நிறுத்தியிருக்கலாமே. அப்படி தடுத்து நிறுத்தக்கூடிய பொறுப்பும் வல்லமையும் சர்வதேச சமூகத்துக்கிருந்;தது. ஆனால் அதை அது செய்யவிரும்பவில்லை.
இப்போது சர்வதேச சமூகத்தினர் நாளாந்;தம் வெளியிட்டுவருகின்ற கண்டனங்களையும் அறிக்கைகளையும் அவர்களே அர்த்தமிழக்கச்செய்து வருகின்றனர்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால், அரசாங்கம் முன்வைப்பதாக சொலப்பட்ட தீர்வுத்திட்டத்தை அது இன்னும் வைக்கவில்லை. அது பல கால எல்லைகளை அறிவித்ததே தவிர அதை இன்னும் முன்வைக்கும் அறிகுறிகளே இல்லை.
அதேவேளையில் ஆளுங்கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்திருக்கும் உத்தேச யோசனைகள் காலங்கடத்தும் உத்தியாகவும் பிரச்சினைக்கான தீர்வைப்பற்றிச் சிந்தி;ககாமல் அதைமேலும் சிக்கலடைய வைப்பதாகவுமே இருக்கிறது.
அந்தத்தீர்வு யோசனை தமிழ் மக்களைமட்டும் அவமானப்படுத்தவில்லை. உண்மையில் அது சர்வ தேச சமூகத்துக்கு சிறிலங்கா அரசு கொடுத்துள்ள அவமானம் என்றே சொல்ல வேண்டும்.
எனவே எல்லாவற்றுக்கும் அப்பால்பெரும் போர் நிகழக்கூடிய நிகழ்ச்சி நிரலே வளர்ச்சியடைந்து செல்கிறது. பெரியதொரு மனிதப்பேரவலத்தை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய சூழலையே சிறிலங்கா அரசு உருவாக்கி வருகிறது.
இந்த யதார்த்தத்தையெல்லாம் சர்வதேச சமூகம் அறியாமலிருக்கிறது என்று யாரும் சொல்ல முடியுமா.
வேண்டுமானால் அப்போதும் இந்தச்சர்வதேச சமூகம் ஒப்பாசாரமாக 'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சம்மந்தப்பட்;ட இரண்டு தரப்பினரும் இதில் அக்கறை செலுத்த வேண்டும் ' என்று அரசாங்கத்துடனும் முட்;டாமல் புலிகளுடனும் முட்;டாமல் சில அறிக்கைகளை மட்டும் விடலாம். அது ஏற்படும் மனித அழிவுகளை ஈடுசெய்யாது.
பதிலாக தமிழ் மக்கள் இன்னும் கொல்லப்படுவதற்கான சூழ்நிலைகளையே இந்த இரட்டைத்தனம் ஏற்படுத்துகிறது.
ஆக இரடடை நிலையிலேயே சர்வதேச சமூகம் இயங்குகிறது என்று தெளிவாகத் தெரிகிறது. உண்மையில் தமிழ் மக்களின் நியாயத்தையும் அந்த மக்களின் பிரச்சினைகளையும் அது புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் இன்னும் தயாரில்லை என்பதும் புலனாகிறது.
எனவே தமிழ் மக்கள் தங்களின் விடுதலைக்காக இன்னும் பாடுபடவும் உத்தரிக்கவும் வேண்டித்தானிருக்கிறது.
இந்த உலகத்தில் நீதியின்மைக்கு இன்னும் இருகுருச்சந்திரயோகமே இருக்கிறது. அதற்கு நல்லதொரு உதாரணம் சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்கச்சிந்தனைக்கும் போர் வெறிக்கும் கிடைத்துவரும் சர்வதேச சமூகத்தின் இரட்டைமுக அங்கீகாரம்.
No comments:
Post a Comment