Sunday, May 27, 2007

புதிய கொடிகள் அசைகின்றனவா? புதிய வழிகள் தெரிகின்றனவா?

சர்வதேச மயப்பட்டிருக்கிற இலங்கையின் இனப்பிரச்சினை அடுத்த கட்டத்தில் எப்படியான திருப்பங்களுக்கும் நிலைக்கும் உள்ளாகப்போகிறது என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது. இப்போது இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, சீனா, நோர்வே, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா எனப்பல தரப்பும் கூடுதலான அக்கறையைக் கொண்டிருக்கின்றன. இந்த அக்கறையை அவை வெளிப்படையாகவும் காட்டிக்கொள்கின்றன.



இனப்பிரச்சினை தொடர்பாக அபிப்பிராயங்களைச் சொல்லுதல், ஆலோசனைகளைத் தெரிவித்தல், தங்களின் விருப்பங்களை கோடிகாட்டுதல் என்றவாறாக இவற்றின் செயற்பாடுகளிருக்கின்றன.



முதல்முறையாக சீனாவும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையே சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.



இந்தத்தரப்பினர்தான் இன்று உலகின் அரசியல், பொருளாதார விசயங்களில் தீர்மானமெடுப்போராகவும் எதையும் கட்டுப்படுத்தும் வல்லமையுடையோராகவும் இருக்கின்றனர். இதில் நோர்வே சற்று விதிவிலக்கு. மற்றும்படி இன்றைய உலக ஒழுங்கில் செல்வாக்குச் செலுத்தும் தரப்பினராக இவர்களே இருப்பதால் இந்தத்தரப்பினரின் இலங்கை தொடர்பான அக்கறை கூடுதலான கவனத்திற்குரியதாகிறது.



எனவே இந்தத்தரப்பினரின் அக்கறையும் கவனிப்பும்; இந்தப்பிரச்சினையில் கூடுதலாக ஏற்பட்டிருப்பதால், இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாதது. அதிலும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் சற்றுக் கூடுதலாக இலங்கை விவகாரத்தில் கரிசனை கொண்டிருப்பதாக தெரிவதால் ஏதாவது மாற்றங்;கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு கூடுதலாக தமிழ்மக்களிடம் தானுண்டு. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வருந்தியவர்;கள் துன்பப்பட்டு வருகிறவர்கள் என்ற வகையில் இத்தகைய எதிர்பார்ப்பு அவர்களிடம் உருவாகியிருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு ஏதாவது பொருளுண்டா என்பதே இங்கே இப்போது அறியவேண்டியது.



இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக சர்வதேசக்கவனமோ அக்கறையோ முன்னரைவிடவும் அதிகமாயிருக்கிறது என்பது உண்மைதான். இப்போது தினமும் இந்த நாடுகளின் பிரதிநிதிகளில் யாராவது ஒருவர் இந்தப்பிரச்சினை குறித்து கதைத்தபடியே இருக்கின்றார். அறிக்கைகளும் அடிக்கடி வந்தபடிதான் இருக்கின்றன. ஆனால், அதற்காக நடைமுறையில் இனப்பிரச்சினை தீர்வை நோக்கிச் செல்லவுமில்லை. தமிழ்

மக்களின் வாழ்க்கைக்கு எந்தவிதமான உத்திரவாதமோ நம்பிக்கையோ ஏற்படவும் இல்லை. இந்தச்சர்வதேசக் கவனிப்பினால் சிறிலங்கா அரசினதும் சிங்களத்தரப்பினதும் அணுகுமுறையிலும் சிந்தனையிலும் எந்த மாற்றங்களையும் அவதானிக்கவும் முடியவில்லை.



அப்படியென்றால் இந்தத்தரப்பினரின் கவனிப்பின் பெறுமானம் என்ன என்ற கேள்வி பெரியதாகவே எழுகிறது. அதுவும் தமிழ்மக்களிடம் இது இன்னமும் ஆழமாக எழுகிறது.



முதலில் இந்த விவகாரம் பற்றிய சர்வதேசக்கவனத்தின் பெறுமானம் இன்றைய நிலையில் எத்தகைய பெறுமதிக்குரியது என்று பார்க்கவேண்டும். எத்தகைய நோக்கங்களுக்குரியதென்றும் கவனிக்க வேண்டும். அத்துடன் அரசாங்கமும் சிங்களத்தரப்பும் இந்தச்சூழலில் எப்படி இயங்குகின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.



சர்வதேச சமூகம் என்பது இப்போது இரு நிலைகளையுடையதாக வளர்ச்சி பெற்று வருகிறது. முன்னர் அமெரிக்கா, ரஷ்யா என்று சொல்லப்;பட்ட இருதுருவ அரசியல் போய் அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலகமே சர்வதேச உலகமாக மாறியிருந்த நிலை இப்பொழுது அடுத்தகட்டத்தை நோக்கி வளர்ச்சி பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதில் சீனா முக்கிய புள்ளியாக நொதிக்கிறது.



அமெரிக்கா தலைமையிலான விரிவாக்கத்துக்கு ஈடுகொடுத்து சீனாவும் தன்னுடைய விரிவாக்கத்தைச் செய்து வருகிறது. இதன்படி ஆபிரிக்க நாடுகளில் கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் சுவடுகள்தான் அதிகமாகியிருக்கின்றது. அதேபோல தென் ஆசியப்பிராந்தியத்திலும் சீனாவின் நிழல் விரிவடைந்து வருகிறது. தென் கிழக்காசியாவிலும் இதே நிலைமைதான்.



வளர்ச்சி பெற்றுவரும் சீனப்பொருளாதாரத்துக்கான சந்தைத்தேவை சீனாவை அதிகம் சுறுசுறுப்படையச் செய்திருக்கிறது. அடுத்தது சீனாவின் வேகஉற்பத்திக்குத் தேவையான அளவுக்கு மூலப்பொருளும் அவசியமாக இருக்கிறது. எனவே அதற்காக சீனா தன்னுடைய கால்களை அகல விரித்து வைக்கிறது. இந்தப்போட்டியில் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்வதற்காக சீனா பல பிராந்தியங்களிலும்; தனக்கான படைத்துறைத்தளங்களையும் ஸ்தாபித்து வருகிறது.



சீன விரிவாக்கம் மேற்குலகத்துக்கு விருப்பமானதல்ல என்றபோதும் உருவாகியுள் யதாhர்த்தத்தை அது அதிகம் உராய்வுகளில்லாமலே கையாளவும் தணிக்கவும் விரும்புகிறது.



இதன்படி சீனாவும் அமெரிக்காவும் அதிகம் தொலைவு மில்லாத அதிகமும் நெருக்கமும் இல்லாத ஒருவகையான இணைநிலையைக் கடைப்படிக்கின்றன. கடந்த ஆண்டு சீனத்தலைவர் அமெரிக்காவுக்குச் சென்றதும் அமெரிக்கத்தலைவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதும் பல விசயங்களில் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டதும் இங்கே கவனிக்கத்தக்கது.



ஆனால் இந்த மென்னுறவுக்கு முன்னும் பின்னுமாக வல்லரசுகளுக்கடையிலான வெட்டி யோடுதல்களும் நடந்து கொண்டுதானிருக்கிறது.



சீனா மிக விரைவாகவும் ராஜதந்திரமாகவும் இந்த விசயத்தில் செயற்பட்டு வருகிறது. அதாவது அது கடந்த பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் கொண்டிருந்த வெளிப்படையற்ற தன்மையை விட்டுவிட்டது. இப்போது தான் போட்டியில் ஈடுபடும் ஒரு வலுவான தரப்பு என்பதை வெளிப்படையாக்கியுள்ளது.



இதேவேளை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் சீனாவுக்;கெதிரான போட்டியிலும் விரிவாக்கத்திலும் வேகமாக இயங்கியே வருகின்றது. ஆக இருநிலைப் போட்டி என்பது மீண்டும் ஏதோ ஒருவகையில் நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் இதன் அர்த்தம் முன்னர் இருந்ததைப்போல இருதுருவ அரசியல், பொருளாதார,படைபலப் போட்டியென்றில்லை. அப்படி இல்லை என்றும் இல்லை. இதுவொரு கலங்கல் நிலையிலான போட்டி. அதேவேளை இதன் தன்மையும் வடிவமும் வேறானது.



இந்தப்போட்டிக்குள் சில நாடுகள் சிக்குப்பட்டிருக்கின்றன. சில நாடுகள் இதற்குள் தமது சாதுரியமான சிந்தனையாலும் புத்திபூர்வமான நடவடிக்கைகளாலும் லாபத்தையும் பெற்றுக்கொள்கின்றன. இலங்கை இதில் இரண்டாவது வகையில் புத்தி பூர்மாக செயற்பட்டு தன்னுடைய லாபங்களையும் நோக்கங்களையும் அடைகின்றது.







இந்த அணுகுமுறையைத்தான் இப்போது சிறிலங்கா அரசும் பின்பற்றுகிறது. அது தன்;னுடைய இனவாத நடைமுறையைப்பின்பற்றுவதற்காக சீனாவின் பக்கமும் சாய்கிறது. தேவையானபோது இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உலகத்தின் பக்கமும் சாய்கிறது. அப்படிச்சாய்ந்தே அது தன்னுடைய தேவைகளையும் நலனையும் நிறைவேற்றிக்கொள்ளுகிறது.



சிறிலங்கா அரசு இப்;படியெல்லாம் டபிள்கேம் அடிக்கிறது என்று அமெரிக்காவுக்கும் தெரியும். சீனாவுக்கும் தெரியும். ஏன் இதெல்லாவற்றையும் இந்தியாவும் அறியும். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அவரவர் தேவை,அவரவருக்கான நலன் என்ற அடிப்படைதான் இங்கே முக்கியமானதாக இருக்கிறது. அதன்படியே அரசியலும் அதன் அறமும் அக்கறைகளும் கருணையும் இருக்கின்றன.



தன்னுடைய இனவாதப்போக்கைப்பலமாக்குவதற்கு சிறிலங்கா அரசு, உலகத்தின் பெருந்தரப்புகள் எல்லாவற்றையும் தனக்குச்சாதகமாகவே பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்போதும் அப்படியே அவற்றைப்பயன்படுத்தி வருகிறது.





ஆக ஒருவருக்கொருவர் தேவையாக இருப்பதன் அவசியத்தை வைத்துக்கொண்டு அவரவர் அரசியல் நடக்கிறது. அந்த அரசியலன்படிதான் அறம் நீதி. நியாயம்,மனித உரிமைகள் எனச் சகலதும் பார்க்கப்படுகின்றன.



இதற்குள் இந்த அண்டிப்பிழைக்கும் தரப்புகள் என்று சொல்;லக்கூடிய நாடுகள் தமது தவறான அரசியலை மிக வெற்றிகரமாக நடத்திவிடுகின்றன. இது அரபுலகத்திலும் நடக்கிறது. இங்கேயும்; நடக்கிறது.



பிற்போக்குச் சக்திகளும் மதவாத, இனவாத அரசுகளும் ஏன் அரசல்லாத தரப்புகளும் இந்தவாய்ப்பை தாராளமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. இதற்கு ஏராளம் உதாரணங்களுண்டு.



இலங்கை அரசும் இந்த பொது உபாயத்தையே பின்பற்றி தன்னுடைய இனவாதத்தை தமிழரின்மீது பிரயோகிக்கிறது. இங்கே கவனிக்கவேண்டிய முக்கியமான விசயம் ஒன்றுண்டு.



இலங்கையில் இனப்பிரச்சினை உண்டென்ற விசயம் சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாங்கம் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றும் இந்தத்தரப்புகள் நீண்டகாலமாகச சொல்லி வருகின்றன. அதற்கு இராணுவ வழிமுறை ஒரு போதும் தீPர்வாகாது என்றும் இந்;தச்சகலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால் சிறிலங்கா அரசோ இவையெல்லாவற்றுக்கும் நேர்மாறாகவே நடந்து கொள்கிறது. அப்படி அது நடந்துகொள்வதற்கான துணிபென்பது என்ன என்றே தமிழ் மக்கள் கேட்கிறார்கள்.



அதிலும் இனப்பிரச்சினை தீர்க்ப்பட வேண்டும் என்று பலரும் கடுமையாக வலியுறுத்தியும் வற்புறுத்தியும் வருகின்ற சூழலில் அதைப்புறந்தள்ளி விட்டு அது போரிலே ஈடுபட முனைப்புக்காட்டுவதென்பது சாதாரணமானதல்ல. அத்துடன் இவ்வளவு நிலைமைகளுக்கப்பாலும் எந்த வகையான அடிப்படைகளுமில்லாத தீர்வொன்றை ஆளும் கட்சி முன்வைக்கத்துணிந்ததும் நமது கவனத்திற்குரியது.



இப்போது இவற்றை நாம் தொகுத்துப்பார்ப்பதன் மூலம் நமக்குச் சில உண்மைகள் தெரியவரும். சர்வ தேச சமூகத்தின் கண்டனங்களும் வற்புறுத்தல்களும் சிறிலங்கா அரசை பெரிதும் பாதிக்காது. அப்படிப்பாதிக்கக்கூடிய அரசியற் பின்புலம் இப்போது இலங்கைக்கு இல்லை.



இலங்கையை இந்தியாவும் கைவிட முடியாது. இந்தியாவுடன் இணைந்து மேற்குக்கூட்டணியும் கைவிடவியலாது. அதேபோல சீனாவும் இதைப்பாராமுகமாக இருக்க முடியாது.



ஒரு உதாhரணத்தை இங்கே சொல்லவேண்டும். விடுதலைப்புலிகளின் வான்படையினால் ஏற்படக்கூடிய போர் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக சிறிலங்கா சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் உதவியைக் கோரியுள்ளது.



இந்த இடத்pல் சீனாவின் உதவியைச் சிறிலங்கா பெறுவதை இந்தியா அனுமதிக்க முடியாது. அப்படி அது இப்போது அனுமதித்தால் பின்னர் சீனாவின் நேரடியான புலனாய்வு அவதானிப்புக்கும் அச்சுறுத்;தலுக்கும் தொல்லைக்கும் ஆளாக நேரிடும். எனவே இந்தியா தானாகவே வலிந்து சிறிலங்காவிற்கான பாதுகாப்புக்கு இப்போது உதவவேண்டும். இதுதான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்.



இப்படித்திரைக்குப் பின்னால் ஏராளம் சங்கதிகளுண்டு.



மேற்குலகம் தன்னுடைய நவீன அணுகுமுறையின்படி அதிகம் நேரடியான தலையீட்டுத்தன்மையை விலக்கிச் செயற்படடு வருகிறது. அதனால் அது ஜனநாயகம், மனித உரிமைகள், அரசியற் தீர்வு என்றவாறாகப் பேசுகிறது. அதாவது ஒரு வகையான கனவான தனத்தை அது காட்டுகிறது. இன்றைய நாகரீகமான அரசியற் தலையீட்டை இந்த அணுகுமுறையிலேயே மேற்கு செய்கிறது.



எனவே தன்னுடைய செல்வாக்கிற்குட்பட்ட நாடுகளில் மனித உரிமை விவகாரங்களை அது வலியுறுத்துகிறது. அதற்காக இந்த விசயங்களெல்லாம் அங்கே முழு அளவில் கடைப்பிடிக்;கப் படுகின்றன என்;று அர்த்தமில்லை. ஆனால் மேற்கு இது தொடர்பாக கூடுதலாகப் பேசியும் வலியுறுத்தியும் வருகிறது.





இதேவேளை சீனா தன்னுடைய விரிவாக்கத்துக்காக பல முனைகளிலும் தேவையான சக்திகளை அரவணைக்கிறது. இதில் அது தனக்கிசைவான தரப்பை உருவாக்குகிறதே தவிர அந்தத்தரப்புகளின் உள்நாட்;டரசியல் குறித்து அது அதிகம் கவனம் செலுத்துவதில்லை.



சம்மந்தப்பட்ட நாடு உள்நாட்டில் மிக மோசமான போரையோ ஒடுக்கு முறையையோ மக்கள் மீது நடத்தினாவும் அது அதைப்பற்றி எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டுவதில்லை. அது தனக்குத் தேவையான பொருளாதாரத் தளத்தைப்பற்றியும் தனது விரிவாக்கத்துக்கான சாதக நிலைபற்றியுமே அதிகம் சிந்திக்கிறது. அதன்படி அது ஓடுக்குமுறையை மேற்கோள்ளும் அரசுக்கு தாராளமாக ஆயுத உதவி உட்;பட சகல ஆதரவையும் உதவிகளையும் வழங்குகிறது.



இடதுசாரி அரசொன்று எப்படி இவ்வாறு இயங்க முடியும் என்று யாரும் ஆச்சரியத்தோடு கேட்கலாம். பத்தாண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவுக்கு சீனா பெருந்தொகையான ஆயதங்களை வழங்கியிருந்தபோது சீனச்சார்பு கொம்யூனிஸ்ட் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன்.



எப்படி ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் ஒரு இனவெறி அரசுக்கு சீனா இப்படி இராணுவ உதவிகளை வழங்கமுடியும் என்ற என்னுடைய கேள்விக்கு அந்த நண்பர் சொன்ன பதில், இப்போது சீனா ஒரு வளர்ந்து வருகின்ற பெரும் வல்லரசாகியிருக்கிறது. அதனால் அதன் வளர்ச்சியை மேலும் விரிவாக்க அது இந்தமாதிரி காரியங்களில் ஈடுபட்டே தீரும். நமது விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் அப்பாலானது இந்த அணுகுமுறை. அமெரிக்காவுக்குப்போட்டியான ஒரு நிலையை அது எதிர்கொள்ளத்தொடங்கியுள்ளது. எனவே அது ஒடுக்கப்படும் மக்களைப்பற்றியெல்லாம் இனி அக்கறைப்படுமென்று சொல்லமுடியாது என்று.



ஏறக்குறைய அந்த நண்பர் இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் அப்போதே சொல்லியிருந்தார். அவர் அப்போது சொன்னவைதான் இப்போது நடந்து கொண்டிருப்பதாகப் படுகிறது.



எனவே இத்தகைய அதிகாரப்போட்டி உலகத்தில் இரு வேறான தலையீடுகள், அணுகுமுறைகளின் மத்தியில் நமது பிரச்சினை இருக்கிறது. இதில் மேற்குலகம் இப்போது சிறிலங்கா அரசுக்கு வழமையை விடவும் சற்று அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. சிறிலங்காவில் அதிகரித்திருக்கும் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து அது தொடர்ச்சியாக கண்டனங்களை வெளியிட்டு வருகிறது.



மேற்குலகத்தின் கனவான் தனமான இந்த துப்புரவுப்பணியில் சிறிலங்கா அரசின் ஒத்துழைப்புப் போதாது என்பதே இப்போதுள்ள பிரச்சினை. மேற்குலகம் சிறுவர் உரிமைகள், பெண்ணுரிமை மற்றும் மனித உரிமை விசயங்களில் அதிக கவனத்தையும் கொண்டிருக்கிறது. இதற்காக அது பெருந்தொகையான நிதியையும் ஆண்டுதோறும்; செலவழிக்கின்றது. அத்துடன் இதற்காக அது நிறையத் தொண்டு நிறுவனங்களையும் களப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அதிலும் இந்த நிறுவனங்;களும் களப்பணியும் மூன்றாம் உலக நாடுகளிலேயே அதிகமாக மையமிடப்பட்டுள்ளன.



எனவே இந்த அடிப்படையில் சிறிலங்கா இப்போது மனித உரிமைகள் விவகாரத்தில் பொறுப்புச்சொல்ல வேண்டிய கட்டத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தை வைத்துக்கொண்டே இப்போது அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கை இனப்பிரச்சினை பற்றி அதிகமாகக் கதைககின்றன.



ஆனால் இந்தத்தரப்பின் கண்டனங்களையும் கருத்துகளையும் சிறிலங்கா கவனத்தில் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. பதிலாக இன்னும் அது போர் முனைப்போடு இருப்பதாகவே தெரிகிறது. போரைத்தீவிரப்படுத்தும்; போக்கையே அவதானிக்கவும் முடிகிறது. இராணுவ வழித்தீரவிலேயே அது முழு அக்கறை கொண்டுமிருக்கிறது.



மேற்குலகம் கண்டனங்களைத்தெரிவிக்கும்போது சிறிலங்கா சீனாவின் பக்கம் சாய்ந்து தன்னுடைய தேவைகளையும் நலனையும் பெறுகிறது. அதனால் அதற்கு இந்தக்கண்டனங்கள் அதிக அழுத்தத்தையோ நெருக்கடியையோ கொடுப்பதாக இல்லை.



மேற்கு இறுக்கத்தை ஏற்படுத்தும்போது அதிலிருந்து விடுபடுவதற்காகவும் தனது இனவாத நடவடிக்கையை தொடரவும் சிறிலங்கா சீனாவைப் பயன்படுத்துகிறது.



இவ்வாறு இந்த இரட்டை உலகத்தை சாதுரியமாக பயன்படுத்தும் சிறிலங்காவை வெளியுலகத்தின் எந்த மென் அழுத்தங்களும் மாற்றத்துக்குள்ளாக்கப்போவதில்லை. ஆகையால் இன்றுள்ள நிலையில் சர்வதேச சமூகத்தின் அக்கறைகளையிட்டு தமிழ்மக்கள் அதிகம் திருப்பங்களை எதிர்பார்க்கமுடியாது. துவிர ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன ஒடுக்கு முறையை வெற்றிகரமாக செயற்படுத்தி வந்த கொழுத்த அனுபவம் சிறிலங்காவுக்கு இருக்கிறது என்பதையும் இங்கே நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.





அதேவேளை முதற்தடவையாக சீனா உட்பட சகல வெளிச்சக்திகளும் ஒரே நேர்கோட்டில் இபபோது இனப்பிரச்சினை பற்றி பொதுச்சிந்தனைக்கு வந்துள்ளன.



இந்தப்பொதுச் சிந்தனை வளரச்சி பெற வேண்டும். அதாவது அமெரிக்கா தலைமையிலான தரப்பும் சீனாவும் இந்திய, ஜப்பான் உள்ளிட்ட பிற தரப்பும் ஒருமித்த நிலைப்பாட்டில் இந்தப்பிரச்சினை குறித்த நிலைப்பாட்டுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் வரவேண்டும்.



இத்தகையதொரு நிகழ்ச்சி நிரலைத்தயாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது என்பது உண்மை. அதாவது சிறிலங்காவின் ஜனாதிபதி திரு மகிந்த ராஜபக்ஸ எவரையும் எடுத்தெறியும் போக்குடையவர். அதேவேளை தீவிர இனவாதக்கூட்டணியுடன் சேர்ந்துகொண்டு இராணுவத்தீர்வில் அவர் கடுமையான நாட்டத்தோடு செயற்பட்டு வருகிறாhர். இதைத்தவிர அவருடைய நிகழ்ச்சி நிரலிலும் மனதிலும் மூளையிலும் வேறு தெரிவேயில்லை. இது சர்வ தேச சமூகத்தை ஒரு மையத்தில் குவிப்பதற்கு உதவலாம். சிங்களத்தரப்பும் மாற்று அபிப்பிராயமில்லாமல் போருக்கே ஆதரவளித்து வருவதால் இதற்கான சந்தர்ப்பம் இன்னும் அதிகித்திருக்கிறது என்றே சொல்ல முடியும். ஆனால் இப்பொழுதுள்ள கவனிப்பும் கரிசனையும் மட்டும் போதாது.



இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்பும் சற்று வேகமாகவும் நிதானமாகவும் புத்திபூர்வமாகவும் செயற்பட வேண்டிய காலகட்டம் இது. தமிழர் தரப்புக்கான அருமையான சந்தர்ப்பத்தை சிங்களத்தரப்பும் திரு மகிந்த ராஜபக்ஸவும் உருவாக்கி வருகிறார்கள். இதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இதற்கு களத்திலும் புலத்திலும் நொதியங்கள் உடன் தேவை.







இப்போது இவற்றை நாம் தொகுத்துப்பார்ப்பதன் மூலம் நமக்குச் சில உண்மைகள் தெரியவரும். சர்வ தேச சமூகத்தின் கண்டனங்களும் வற்புறுத்தல்களும் சிறிலங்கா அரசை பெரிதும் பாதிக்காது. அப்படிப்பாதிக்கக்கூடிய அரசியற் பின்புலம் இப்போது இலங்கைக்கு இல்லை.



இலங்கையை இந்தியாவும் கைவிட முடியாது. இந்தியாவுடன் இணைந்து மேற்குக்கூட்டணியும் கைவிடவியலாது. அதேபோல சீனாவும் இதைப்பாராமுகமாக இருக்க முடியாது.



ஒரு உதாhரணத்தை இங்கே சொல்லவேண்டும். விடுதலைப்புலிகளின் வான்படையினால் ஏற்படக்கூடிய போர் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக சிறிலங்கா சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் உதவியைக் கோரியுள்ளது.



இந்த இடத்pல் சீனாவின் உதவியைச் சிறிலங்கா பெறுவதைத இந்தியா அனுமதிக்க முடியாது. அப்படி அது இப்போது அனுமதித்தால் பின்னர் சீனாவின் நேரடியான அச்சுறுத்;தலுக்கும் தொல்லைக்கும் ஆளாக நேரிடும். எனவே இந்தியா தானாகவே வலிந்து சிறிலங்காவிற்கான பாதுகாப்புக்கு உதவவேண்டும். இதுதான் இப்பேபாது நடந்து கொண்டிருப்பதும். இப்படித்திரைக்குப் பின்னால் ஏராளம் சங்கதிகளுண்டு. அதையெல்லாம் கணக்கிலெடுத்தக்கொண்டே தமிழர்கள் தமது பாதையையும் பயணத்தையும் தீர்மானிக்க வேண்டும்.

No comments: