ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அரசு பெருங்குற்றத்தை செய்து வருகிறது. தான் பாதுகாக்க வேண்டிய மக்களை அது கொன்றும் ஒடுக்கியும் வருகிறது. வெளிப்படையாகவே இனப்பாகுபாட்டையும் அநீதியையும் இழைத்து வருகிறது. அதுவும் சிறுபான்மையாகவுள்ள மக்களின் மீதே இந்தக்; கொடுமைகளை அது பிரயோகித்து வருகிறது. இதற்கெல்லாம் எப்படிச் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறது என்று கடுங்கோபத்துடன் ஒரு முதியவர் கேட்டார்.
அவரை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்தேன். பதினைந்து ஆண்டுகள் தான் அகதியாக இருக்கிறேன் என்று சொன்னார். இந்தப்பதினைந்து ஆண்டுகளில் தான் மூன்று தெரிதலில் அகதியாக இருந்து கொண்டே வாhக்களித்தேன் என்றும் கூறினாhர்.
அவர் பதினைந்தாண்டுகளில் பதினொரு வீடுகளுக்கு மாறியிருக்கிறார். அந்தப்பதினைந்தும் வீடுகள் என்றும் சொல்ல முடியாது. அநேமாக அவற்றில் ஒன்றிரண்டைத்தவிர மற்றெல்லாமும் குடிசைகளே. அவருக்கு சொந்தமாக நிலமுண்டு. ஆனால் அங்கே அவர் இருப்பதற்கு அனுமதியில்லை. அங்கே போகவும் முடியாது. அவர் தன்னுடைய கட்டிய வீடுண்டு. ஆனால் அதில் அவரால் வாழமுடியாது. அந்த வீட்டுக்குப்போவதற்கு அவருக்கு அனுமதியுமில்லை. அதெல்லாம் இப்போது உயர்பாதுகாப்பு வலயம் எற்றாக்கப்பட்டு விட்டன. அதனால் இவற்றிலெல்லாம் அவருக்கு இப்போது உரிமையுமில்லை.
அவருடய காணி, வீடு எல்லாம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு சிறு பாதுகாப்பும் இல்லை. அவர் அகதி அட்டையுடன் அலைந்து கொண்டிருக்கிறார்.
இது அந்த முதியவருக்குமட்டுமான தனியான ஒரு பாதிப்பல்ல. இலங்கைத்தீவில் வாழுகின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு நிகழ்ந்துள்ள பொதுவான நிலை. அதுவும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் அல்லது தாயகப்பிரதேசம் என்று சொல்லப்படுகின்ற பகுதிகளில் இதுதான்,இப்படித்தான் நடந்துள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இனவன்முறைகளின்போது தமிழர்கள் சிங்களப்பகுதிகளிலிருந்து அடித்து விரட்டப்பட்டார்கள். அப்போதவர்கள் பாதுகாப்புத்தேடி தமது தாயகத்துக்கே ஓடி வந்தார்கள். இவ்வாறு நவீன இலங்கையின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் நான்கைந்து தடவைகள் விரட்டப்பட்டிருக்கிறார்கள்.
சிங்கள தேசத்தில் அல்லது சிங்களப்பபகுதிகளில் தமிழர்கள் நிரந்தரமாக வாழமுடியாது என்ற நிலையையும் உணர்வையும் உண்மையையும் அந்தச்சம்பவங்கள் காட்டின.
அதன்பிறகு இப்போது, தமிழர்கள் தமது சொந்த நிலத்திலேயே நிம்மதியாக வாழமுடியாது என்றாகி விட்டது. தமிழ் மக்களின் தாயகப்பிரதேசம் பெரும் இராணுவ வலயங்களாககப்பட்;டுள்ளது. மக்களோ அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அதுவும் லட்சக்கணக்கான மக்கள் இருபதாண்டுக்கும் மேலாக அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையின் புதிய வரலாற்றில் இதெல்லாம் புதிய விசயங்களில்லை. எண்பதினாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவும் புதியதல்ல. இனப்பிரச்சினை தீர்க்கப்படுமென்று சொல்லிச்சொல்லியே அரசாங்கத்தால் தமிழ்மக்களின் மீது போர் தொடுக்கப்;பட்டும்; தொடரப்பட்டும் வருகிறது. அதுவும் புதியதல்ல. இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை அரசாங்கம் நம்ப வில்லை என்றும் அரசியற் தீர்வின்மூலமே அதனைத்தீர்க்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. பதிலாக இப்படிச்சொல்லிக்கொண்டே பெரும் படையெடுப்புகளும் நில ஆக்கிரமிப்புகளும் தொடரப்படுகின்றன. இவையும் புதியனவல்ல.
அப்படியென்றால் எதுதான் புதியதென்று நீங்கள் இப்போது கேட்கக்கூடும். அப்படி நீங்கள் கேட்டால் சந்தேகமேயில்லை. நீங்கள் புத்திசாலிதான்.
வரலாற்றில் முன்னகரும் சக்திகளிடமும் தரப்பினரிடமும்தான் புதமையும் புதியவையும் இருக்கும். அவைதான் வளர்ச்சிப்போக்கில் எப்போதும் புதியனவற்றை உருவாக்குவதும் புதியன குறித்துச் சிந்திப்பனவாகவுமிருக்கும். அதற்கு மாறாக வரலாற்றின் இயங்குவிசைக்கெதிராக செயற்படுவோரிடம் புதியனவற்றையும் புதுமையையும் யாரும் எதிர்பார்க்க முடியாது.
சிறிலங்காவில் புதமைக்கெப்படி இடமிருக்க முடியும். இன்றைய உலகம் விரைவும் நுட்பமும் இலகுவும் பொதுத்தன்மையும் நிரம்பியது. இதன்படியே அது தொழிற்படுகிறது. போட்டியும் ஆற்றலும் நிரம்பிய உலகில் பன்முகத்தன்மைக்கு அதிக இடமளிக்கும் போக்கு அதிகரித்துச் செல்கிறது. விடுதலை குறித்த எண்ணங்கள் விரிவடைந்து வளர்ச்சி பெற்றுவருகின்றன. பெண் விடுதலை, சிறுவர் உரிமைகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள் எனச் சகலரையும் பொதுத்தளத்துக்கு உயர்த்தி எல்லோரின் ஆற்றலையும் பெறும் போக்கு விருத்தியாகிவருகிறது.
படுமோசமான அடக்கு முறைகளையும் அடிமைமுறைகளையும் கடைப்பிடித்த நாடுகளும் தரப்பினரும் தாம் முன்னர் அப்படி நடந்து கொண்டதற்காக வருத்தமும் வெட்கமும் அடைகின்றனர். அந்த வெட்கக் கேடான, வருத்தந்தரும் அனுபவத்திலிருந்து பாடங்களைப்பெற்றுக்கொண்டு அவர்கள் புதிய உலகம் பற்றி சிந்திக்கிறார்கள். அவர்கள் அப்படிச் சிந்திப்பதன் மூலம் புதிய உலகத்தைப் படைக்கவும் விரும்புகிறார்கள். அவர்கள்தான் அடுத்துவரும் உலகத்தை ஆளவும் கூடிய பெறுமானத்தையும்; தகுதியையும் பெறுகிறார்கள்.
ஆனால் இந்தப் பேருண்மையை விளங்கவே மாட்டாம் என்று சிங்களத்தரப்பும் சிறிலங்கா அரசும் தானும் கெட்டு தமிழ் மக்களையும் கெடுத்துக்கொண்டிருக்கிறது.
அது வரலாற்றின் இயங்குவிதியிலிருந்து தனிமைப்படவே விரும்புகிறது. இனவொடுக்கு முறை என்பது அறிவும் மாண்பும் நிரம்பிய சமூகங்களில் வெட்கந்தரும் ஒரு விவகாரமாகும். அதிலும்; ஆட்;சிப்பொறுப்பிலிருக்கும் பெரும்பான்மையானோர் தமது ஆட்;சிக்குட்பட்டிருக்கும் மககள்திரளை மிகக் கண்ணியமாகவும் பொறுப்போடும்; நடத்த வேண்டும். அரசு அதற்குரிய தகுதியை தான் கொண்டிருக்க வேண்டும்.
அவ்வாறு அது தன்தகுதியை கொண்டிருக்கவில்லை என்றால் அதற்குரிய மதிப்பு உள்ளரங்கிலும் கெட்டு விடும். வெளியுலகிலும் சரிந்து விடும். சிறிலங்காவுக்கு நெர்ந்திருப்பது இப்போது இதுதான்.
தமிழழ் மக்கள் சிறிலங்கா அரசை தங்களுடைய அரசாக கருதுவதை எப்போதோ விட்டுவிட்டார்கள். அவர்கள் நாற்பது ஆண்டுகளுககும் மேலாக இதனை வலுவாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்தக் காலப்பகுதியில் நடந்த தேர்தல்களின் மூலம் அவர்கள் எதனை விரும்புகிறாரகள் என்றும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். பின்னரும் அரசாங்கத்தின் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் தமது விருப்பு வெறுப்புகளையும் நிலைப்பாட்டினையும் ஏன் எதிர்ப்பினையும் கூட தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
அனால் இவையெல்லாவற்றையும் சிறிலங்கா அரசாங்கமும் சிங்களளத்தரப்பும் கவனத்தில் எடுக்கவேயில்லை. பதிலாக அது மீண்டும் மீண்டும் போர் முனைப்போடும் இனவெறியோடும்தான் இயங்குகிறது.
ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிரச்சினை தீர்க்கப்படாது இருக்கிறது என்றால் அந்த நாடு எப்படி உருப்படும் என்ற சாதாரண கேள்வியை நீங்கள் ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். இந்த அரை நூற்றாண்டிலும் போருக்கும் இன ஒடுக்கு முறைக்குமாக எவ்வளவு பெருந்தொகைப்பணம் செலவழிக்கபபட்டிருக்கிறது. எத்;தனை ஆயிரம் உயிர்கள் தமிழர் தரப்பிலும் சிங்களத்தரப்பிலுமாக இது வரையில் பலியெடுக்கப்பட்டுள்ளன.
பல கோடீ ரூபாய்கள் பெறுமதியான சொத்துகளும் இயற்கை வளமும் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்ட்டும்; இருக்கின்றது. முன்னர் காங 'கேசன்துறையில் சீமெந்து ஆலை, பரந்தனில் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, மட்க்களப்பு வாழைச்சேனையில் இலமனையிற் ஏற்றுமதி என்று பல வருவாயையும் தொழில் வளத்தையும் தரக்கூடிய தளங்களிருந்தன. தவிர, இலங்கையின் கடல் வளத்தின் பெரும்பகுதியான வடக்குக் கிழக்கிலிருந்து கடல் உணவும் அந்தப்பொருட்களும் தாhராளமாக எடுக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது அவை எதுவும் இல்லாமல் முடக்கப்பட்டு விட்டன.
ஐக்கியம் பற்றி பேசுகின்ற சிங்களத்தரப்பாளர்கள் இவ்வாறான குருட்டுத்தனமான ஒடுக்குமுறையாலும் பாரபட்சத்தாலும் இழக்கப்பட்ட தேசிய வருமானத்தையிட்டு எத்தகைய புரிதலைக்கொண்டிருக்;கிறார்கள.
தவிரவும் நாட்டைச்சேதப்படுத்தும் மையப்பிரச்சினையைத் தீர்க்கும் திராணியற்றுமிருககிறர்கள். அதிலும் இந்தப்பிரசச்pனையை இலகுவாகத்தீர்க்கக்கூடிய அதிக பட்சமான ஒத்தழைப்பைத்தமிழர்கள் வழங்கியபின்னரும் அவர்கள் இதனைத்தீர்க்க வில்லை என்பது இங்கே கவனத்திற்குரியது.
அத்துடன் இந்தப்பிரச்சினை உள்@ர் மட்டத்pலானபிரச்சினை என்ற கட்டத்தைக் கடந்து பிராந்தய மட்டத்த எடடியபோதுகூட இதைத்தீர்ப்பதற்கான ஆதரவு கிட்டியது. ஆனால் அதனையும் சிறிலங்கா தவறவிட்டது மட்டுமல்ல அது இந்தப்பிராந்தியத்தில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கும் விவகாரங்களை உருவாக்கியது. அத்துடன் சிறிலங்கா அரசு இன்னும் இந்தப்பிரச்சினையை தீர்க்;காமல் இழுத்தடிப்பதன் மூலம் இன்னுமின்னும் இந்தப்பிராந்தியத்தின் அமைதிக்கு எதிராகவே இயங்குகிறது.
இதனைச் சுரக்கமாக விளங்குவதாயின் இலங்கைத்தீவு என்பதை ஹெல உறுமயக்காரர்கள் சொல்லுவதைப் போல அரசாங்கம் சிங்களவருக்கு மடடுமே உரியதென்று கருதுகிறது. அதுதான் அடிப்படையானது. இந்த அடிப்படையிலேயெ அதன் அனைத்து நடவடிக்கைகளும்; நடந்து வருகின்றன.
சிறிலங்காவின் படைத்துறை முற்று முழதாக சிங்களவர்களைக்கொண்டே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. படையணிகள், றெஜிமென்ட் களுக்கு சூட்டப்பட்ட பெயர்வரை இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
அதேபோல அரசாங்கம் நியமித்துவரும் வெளிநாட்டுத்தூதுவர்கள, அரசாங்க அதிபர், ஆளுநர்; எனப்பல நிர்வாக அதிகாரிகள் வரையில் படைத்துறையாளர்;ளையே இதற்குத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
மேலும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் அந்த வழியான அணுகுமுறைக்கும் கொடுக்கப்படும் அக்கறைகளில் சிறிதளவேனும் அரசியல் தீர்வுக்கான முயற்சிக்கோ அது குறித்த சிந்தனைக்கோ அளிப்பதில்லை.
எனவே தொடர்ந்தும் அது பெருந்தவறையே செய்ய முயற்சிக்கிறது. இப்Nபோது சர்வ தேசத்துக்கு ஒரு நெருக்;கடி ஏற்பட்டிருக்கிறது.
சர்வதேச நிகழ்ச்சி நிரலின்படி மனித உரிமை மீறல்கள், இன ஒடுக்குமறை மற்றும் அடிப்படைவாத பண்புகளை அது நிராகர்த்தும் கண்டித்தும் வருகிறது. இந்தமாதிரியான விசயங்களெல்லாம் புதிய வணிக உலகத்துக்கு இடைஞ்சலானவை என்பது அதன் நிலைப்பாடு.
ஆகையால் சர்வதேச சமூகம் இப்போது இந்தப்பிரச்சினையில் கூடுதல் அக்கறை காட்ட முயற்சிக்கிறது. ஆனால் பழமைவாதத்திலும் மதத்திலும் இனவெறியிலும் ஊறிக்கிடக்கும் சிங்கள தேசத்தை அதனால் எழுப்ப முடியுமா என்பது சந்தேகம்தான்.
சிறிலங்கா தனக்குக் கிடைக்கும் அரிய மூன்றாவது சந்தர்ப்பத்தையும் விழிப்புணர்வில்லாமற் தவறவிட்டது. அது மட்டுமல்ல அது நோர்வே என்ற மென்போக்குடைய நாட்டையும் அதன் பின்னால் நின்ற சர்வதேச சமூகத்தையும் கூட புறக்கணித்தது.
அதன்விளைவுகள் தான் அது இப்பொழுது அறுவடை செய்து கொண்டிருக்கின்ற சர்வதெசக் கண்டனங்கள் என்பது.
சிறிலங்காவின் வரலாற்றிpல் அது இப்போது பெற்றுவரும் சர்வதேசக்கண்டனம் அளவுக்கு முன்னர் ஒர போதும் பெற்றதில்லை. இப்போது அரசாங்கத்துக்கு வெளியுலகம் விதித்து வரும் நெருக்கடியளவுக்கு மனனர் நெருக்கடிகள் ஏற்படவுமில்லை.
இவையெல்லாம் உணர்த்துகின்ற உண்மைள் மிகச் சாதாரணமானவை. கெடுகுடி சொற்கேளாது, வினை விதைத்தவன் வினை அறுப்பான், அன்று விதைத்தது இன்று விளைந்திருக்கிறது என்ற பழகிய உண்மைகளே.
அந்த முதியவரின் கண்ணீரில் தெரிவதென்ன சொல்லுங்கள்?
No comments:
Post a Comment