Monday, June 25, 2007

மகிந்தவின் போர்ப்பொறி

முழு ஈழத்தமிழரையும் இயங்க முடியாத ஒரு நிலைக்குத்தள்ளியிருக்கிறார் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. தமிழர்களைப் பொறுத்தவரையில் ராஜபக்ஸ ஒரு டேஞ்சரான பேர்வழி என்று ஒரு நண்பர் சொல்வது மிகச்சரியாக இருக்கிறது.
இலங்கைத்தீவில் எங்கேயிருந்தாலும் சுயமாகச் சிந்திக்கமுடியாத அளவுக்கு மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கெதிராக உள்ளது. எதையும் திட்டமிட முடியாதவாறும் மகிந்தவின் போர்ப்பொறி தமிழருக்கு முன்னால் விரிக்கப்பட்டிருக்கிறது.
எல்லா இடங்களிலும் வௌ;வேறு விதமான ஒப்பிரேஸன்களை தமிழருக்கெதிராக மகிந்தவின் அரசு செய்து வருகிறது. எல்லாமே தமிழ்மக்களை முடக்கும் நோக்pலானவை. அத்துடன் அவர்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் வகையிலுமானவை.
இவையெல்லாவற்றுக்கும் அரசாங்கம் சொல்கிற பதில், அல்லது நியாயம் இதெல்லாம் புலிகளுக்கெதிரான போர் என்பதே. அரசாங்கம் அதை இன்னும் வியாக்கியானப்படுத்தி பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்றும் சொல்கிறது.
இப்படிச் சொல்வதன்மூலம் தனது பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்துவதுடன் பயங்கரவாதத்துககு எதிரான போரை சிறிலங்கா செய்துவருவதாகவும் அதற்குச் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவையென்றும் ஒரு தோற்றப்பாட்டை அது காட்ட முனைகிறது.



ஆனால், சிறிலங்காவில் அரச பயங்கரவாதமே கடந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரச பயங்கரவாதமே இலங்கைத்தீவிலும் தென்னாசியப்பிராந்தியத்திலும் பெரும் நெருக்கடிச்சூழலையும் உருவாக்கியுள்ளது. இதனைச் சர்வதேச சமூகமும் நன்கறியும்.
இலங்கையின் இனப்பிரச்சினை என்பதே அரச பயஙகரவாதத்தின் இன்னொரு வடிவம்தான். அது அரசியல் ரீதியாகவும் தமிழர்களை ஒடுக்குகிறது. இராணுவரீதியாகவும் ஒடுக்குகிறது. பிராந்திய நாடுகளையும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது.
இந்த ஒடுக்குமுறைக்கு பல சந்தர்ப்பங்களிலும் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச சமூகமும் ஆதரவை வழங்கி வந்திருக்கிறது. சர்வதேச சமூகம் தன்னுடைய நலன்களுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்குள் இந்தப்பயங்கரவாதத்தை அது இன்னொரு விதத்தில் வளர்த்தும் வந்திருக்கிறது.
ஆனால் அரசு என்ற அடிப்படையில் இந்தப்பயங்கரவாதம் மறைக்கப்பட்டும் காப்பாற்றப்பட்டும் வந்துள்ளது. அப்படி இது காப்பாற்றப்பட்டு வந்தமையே இப்போது மகிந்த அரசின் உசசமான மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாகியுமிருக்கிறது. இதை இன்னும் மென்போக்காக மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில, என்ற அளவில் இப்போதும் சர்வதேச சமூகம் காப்பாற்றலாம் அல்லது மறைக்கலாம். ஆனால் அது இன்னும் இன்னும் பயங்கரமானதாகவும் கட்டுப்படுத்த முடியாததாகவும் வளர்ந்தே செல்லும்.



ஏனெனில் இலங்கையின் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் அது வரவர மேலும் மேலும் சிக்கலாகியே செல்கிறது. அந்த கூர்மைப்பட்ட வளர்ச்சியின் இப்போதைய நிலையே மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரலாகும். மகிந்தவின் இந்த நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதே இப்போது சர்வதேச சமூகத்தின் முன்னாலுள்ள பிரதான கேள்வியாகும். மகிந்தவின் நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே சர்வதேச சமூகத்துக்கு உவப்பில்லாமலேயிருந்தது. அவர் ஆட்சிக்கு வரும்போதே முன்வைத்திருந்த 'மகிந்த சிந்தனை ' என்ற கொள்கைப்பிரகடனம் அப்போதே சர்வ தேச சமூகத்துக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கவில்லை. அந்தப்பிரகடனத்தில் மேற்கின் விருப்பங்களுக்கு அதிக இடமிருக்க்வில்லை எனபது இங்கே கவனிக்கத்தககது. அதிலும் தொடருகின்ற இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு யோசனைகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்வில்லை. அப்போது மேற்கின் ஆதரவோடு நோர்வேயின் அனுசரணையில் சமாதானப் பேச்சுவாhர்த்தை நடந்து கொண்டிருந்தது. சமாதானப் பேசசுவார்த்தைக்கு முற்றிலும் நேர்மாறான கருத்தையுடைய தரப்பாக மகிந்தவின் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. இது ஒரு மோசமான சமிக்ஞை என்று அப்போதே பல நோக்கர்களும் சுட்டிக்காட்டியிருந்தாhர்கள். அந்தச் சமிக்ஞை இப்போது எதிர் நிலையில் பிரகாசமாயிருக்கிறது.



இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரலை சர்வதேசம் தொடர்ந்தும் அனுமதிப்பதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் அந்த நிகழ்ச்சி நிரலை தமிழர் தரப்பு அடுத்து எவ்வாறு கையாளப் போகிறது என்பதும் முக்கியமானது.



உண்மையில் மகிந்தவின் நிகழ்ச்சிநிரல் தமிழர்களுக்கும் இந்தியா, ஜப்பான் உள்ளடங்கிய மேற்குலகத்துக்கும் எதிரானது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அது இந்தத்தரப்புக்கு எதிர் விளைவுகளை உருவாக்கும் ஒரு பாதகமான நிகழ்ச்சி நிரலாகும்.
அடுத்த கட்டமாக எந்த அசைவுகளையும் ஏற்படுத்த முடியாத படிக்கு அந்த நிகழ்ச்சி நிரல் இறுக்கமானது. அதனால்தான் அது இத்தனை சிக்கல்களுக்குள்ளாகியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையை விழுங்கிய நிழ்ச்சி நிரலாகவும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழவை முடக்கியதாகவும் சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தததாகவும் இந்தியா நெருங்கவும் முடியாது தூரப்போகவும் முடியாது தவிக்கும் படியாகவும் என பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலாக அது இருக்கிறது. மேற்கு இப்போது பலவிதமான மறைமுக அழுத்தங்களைக் கொடுக்கின்ற போதும் மகிந்த எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை என்ற நிலையை அவர் தன்னுடைய நிகழ்ச்p நிரலுக்குள்ளால் உருவாக்கியுள்ளார். அதாவது தன்னுடைய திட்டத்தின் ஒரு பாதியை சீனா மற்றும் அதனோடிணைந்த வளைய நாடுகளுடன் தொடர்பு படுத்தி வைத்திருக்கிறார். இதை அவர் மறைமுக வெளிப்படையாகவே கையாள்கிறார். பட்டும் படாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்று சொல்வோமே அதேமாதிரிக் கையாள்கிறார்.



இது மேற்குத்லைமையிலான சர்வதேச சமூகத்துக்கு ஒரு மிகப்பெரிய நெருகக்டிக்குரிய விசயமாகவுள்ளது. இதை இந்த அணியினர் இறுக்கிப்பிடிக்வும் முடியாது தளர்த்தி விடவும் முடியாத ஒரு நிiலையில் கையாள முயற்ச்சிக்கின்றனர். இதில் ஆகப்பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்டிருப்பது இந்தியாதான். இந்தியா சிறிலங்காவைக்கட்டுப்படுத்தவும் முடியாமல் அதற்கு ஆதரவளிக்கவும் முடியாமல திணறுகிறது.அது வலிய உதவிககளைச் செய்கிறேன் என்று சொன்னாலும் அதனை சிங்களவர்கள் இப்போது ஏற்கத்தயாரி;லலாதது போலக்காட்டுகிறார்கள். ஏன் இந்தியாவின் ஆயத உதவியையே அவர்கள் பகிரங்கமாகவே மறுத்துமிருக்கிறார்கள்.



ஆனால் இந்தியா இதையெல்லாம் புரிந்து கொள்ளாததுபோல தொடர்ந்தும் தன்னுடைய ஆயத உதவிகள் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் என்று சொல்லிக்கொண்டேயிருக்pறது. இந்தியாவின் ஆயத உதவி அறிவப்புகளை, அதிலும் வலிந்த ஆயத உதவிகளை சிறிலங்காவின் பொறுப்பான அமைச்சர்களும் அதிகாரிகளும் படுகேவலமான முறையில் கொச்சைப்படுத்தி நிராகரித்தாரர்கள்.
இந்தியா கொட்டும் பழைய குப்பைகளை வாங்குவதற்கு சிறிலங்கா தயாரில்லை என்றுகூடச் செசான்னாரர்கள். ஆனால் இந்தியா மிகப்பிடிவாதமாகவும் மிகவும் தீவிரமாகவும் சிறிலங்காவுக்கு உதவியே தீருவேன் என்ற முடிவு செய்திருக்கிறது. அதிலும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலொசகர் நாரயணன் சொன்னதை சிறிலங்கா பொருட்படுத்தாமல் விட்;டதன் பின்னரும் இந்திய்ப பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி மறபடியும் இந்திய உதவிகள் சிறிலங்காவுக்கு கிடைக்கும் என்று கெஞ்சாத குறையாக, அழாக்குறையாகச் சொல்லியிருக்கிறார்.

அதுவும் சிறிலங்கா அரசாங்கம் இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்ப்பதற்குப்பதிலாக இராணுவரீதியாக போரையே செய்து கொண்டிருக்கிறது என்ற நிலையிலும் அதற்கு இப்படி இராணுவ உதவிகள் தாராளமாகக்கிடைக்கின்றன.ஒருபக்கம் மனித உரிமை மீறல்கள் பற்றிய கண்டனங்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டிருக்கிறNபுhதும் இந்த உதவிகளை சம்மந்தப்பட்ட தரப்பினர் வழங்கிவருவது கவனத்திற்குரியது. இதற்கிடையில் இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கிடையில் சிறிலங்கா சீனாவிடம் ஒரு தொகுதி ஆயதங்களை வாங்கியிருப்பதாகவும் தெரிகிறது. சீனாவிடம் சிறிலங்கா ஆயத உதவிகளைப் பெறக்கூடாது எனறுதான் இந்தியா முந்திமுயன்றபோதும் அதற்கு சிறிலங்கா மசிந்து கொடுக்க்வில்லை. அது சீனாவிடம் நெருங்க நெருங்க அதற்குப்பதிலாக சிறிலங்காவுக்கு இந்தியாவும் ஜப்பானும் இன்னும் மேற்குலகமும் போட்டிபோட்டுக்கொண்டு தாராளாக உதவவருகிpன்றன.



மகிநத இப்படி சகல தரபபினரிடமிருந்தும் உதவியைப் பெறக்கூடியதொரு பொறியமைப்புக் கொண்ட ராஜதந்திரத்;தை கையாள்கிறார். இது மகிந்த ராஜபக்ஸவுக்கு முன்னர் திருமதி சந்திரிகா குமாரதுங்க கையாண்ட ராஜதந்திர அணுகுமுறையாகும். சிங்களவர்கள் இப்போதுள்ள ஒற்றை உலக ஒழுங்கையும் அதற்குள் தென்னாசிய, தென்கிழக்காசியப்பிராந்திய அரசியலையும் நன்றாகப்புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று ஒரு அவதானி சொன்னார். அதாவது அவர்கள் இப்போது இநத நெருக்கடிகளைக்கடப்பதற்காகவும் சிறிலங்காவை எப்போதும் சர்வதேச அரங்கில் ஒரு முக்கிய புள்ளியாக வைத்திருக்கவும் தங்களுடைய ராஜதந்திரத்தை வடிவமைததிருக்கிறார்கள். சிங்கள ராஜதந்திரம் கடந்த முப்பதாண்டுகளில் தென்னாசியப்பிராந்தியத்தில் பெருந்துலக்கமாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறாரர். தவிர சிங்கள ராஜதந்திரத்தை சரியாக விளங்கிக் கொள்வதாயின் அது இந்திய ராஜதந்திரத்தை விடவும் சிறப்பானதாகவுமே இருப்பதாகவும் படுகிறது என்றுமவர் மேலும் சொல்கிறார். இதுபற்றிப்பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். சிங்களவர்களின் இந்த ராஜதந்திரம் என்பது அவர்களுடைய வரலாற்றுத் தொடர்ச்சியை காட்டுவதற்கு அவர்களிடமுள்ள மகாவம்ச ஆக்கத்தைப்போலவே தனித்தன்மை கொண்டதாக உள்ளது. அதாவது கூட்டு எண்ணத்தின் விளைவாக அதை அவர்கள் திரட்டிக்கொள்கிறார்கள்.



மகிந்தவைப்பலப்படுத்துவதும் இந்தக்கூட்டு எண்ணத்திரட்சிதான். இது ஒரு பக்கம் தமிழ் மக்களுக்கெதிரான மனப்போக்குடையது. அதேNவுளையில் அது இந்திய எதிர்ப்பையும் அடிப்படையாகக்கொண்டது. ஆனால் இத்தகைய விரோதப் போக்குடைய சிறிலங்காவின் எண்ணத்திரட்சிக்கு இன்னும் இந்தியத்தரப்pல் வலுவான ஒரு மறுதீர்மானம் அல்லது மறு சிந்தனை உருவாகவில்லை என்பது கவனத்திற்கும் வருத்தத்துக்குமுரியது. எப்படியோ மகிந்தவின் நிகழ்ச்சி நிரலை சர்வதேச சமூகம் தொடர்ந்து அனுசரிக்க முடியாத ஒரு நிலைக்கு வந்துவிட்டது. எனவே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது முக்கியமாகியுள்ளது.



அத்துடன் தமிழர் தரப்பும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலை மாற்றி புதிய சூழ்நிலையொன்றை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழர் தரப்புக்கு இப்போது இரண்டு பிரதான அணுகுமுறைகளிருக்கின்றன. ஒன்று போரை போரினால் எதிர்கொள்வது. இப்போது அதை நோக்கியே கள நிலவரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப்போரென்;பது சாதாரணமாக நடந்து விடப்போவதில்லை. அது பெரும் மாற்றங்களுக்கும் முடிவுகளுக்குமானது. எனவே அதறகேறற மாதிரியே அதன் விளைவுகளும் மிகப்பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பாhர்க்கப்படுகிறது. பெரும் உயிரிழப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் போராகவே அது இருக்கும். மற்றது போருக்கெதிராக சிறிலங்காவை மடக்குக்கூடிய மாதிரி ராஜதந்திரப் பொறியை வைப்பது.



அந்த அணுகுமுறை சர்வதேச சமூகம் தமிழர் தரப்பை நோக்கி நெருங்கக்கூடியமாதிரி அமையும் போது தமிழர் தரப்பு பல அனுகூலங்களை பெறவாய்ப்பிருக்கிறது. இப்போது சர்வதேச சமூகம் போருக்கெதிரான ஒரு நிலைப்பாட்டை விரும்புகிறது. இந்த விருப்பத்தை தமிழர்கள் தமக்குச்சாதகமாக கையாள்வதன் மூலம் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலை சிதைக்க முடியும்.

No comments: