யப்பானிய சிறப்புத்தூதுவர் யசூஸி அகாஸி ஒரு காரிய சித்தர் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. அவர் தன்னுடைய நோக்கம் நிறைவேறும் வரையில் ஒரு போதும் அந்த முயற்சியில் தளர்ந்து விடுவதில்லை.
அந்த முயற்சி வெற்றி பெறவேண்டுமென்பதற்காக அவர் எவ்வளவு கீழே இறங்கமுடியுமோ அந்தளவுக்கு கீழே இறங்கிக்கொள்வாhர். எவ்வளவு இறுக்;கமாக நிற்க முடியுமோ அந்தளவுக்கு இறுக்கமாக நிற்பார்.
அவரைப் பொறுத்த வரையில் யப்பானுக்காகவே எல்லாம். அதுவும் எதிர்கால யப்பானுக்காக எல்லாம் எல்லாம்.
அகாஸியின் தீவிரமான முயற்சி இப்Nபுhது மெல்ல வெளிப்படையான பலனை அவருக்கு ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. அவர் போர் நெருக்கடியும் அபாயமும் நிறைந்த வாகரைக்கே போயிருந்தார்.
மீள் குடியேற்றம் என்றபோர்வையில் சிறிலங்காவுக்கு உதவும் பொருட்டே அவர்அங்கே சென்றார். அவருடைய பயணம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியென ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் காட்டும் முயற்சி என்று சில நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறர்கள்.
அத்துடன் சிறிலங்காவுக்கு வேண்டிய உதவிகளை யப்பான் தொடர்ந்து செய்;யும் என்றும் அவர் சொல்லியிருந்தார். இப்படிச் சொல்லி, அவர் சிறிலங்காவுக்கு ஒரு பெரிய தூண்டிலைப் போட்டிருந்தார்.
சிறிலங்கா இப்பொழுது சர்வதேச ரீதியாக மனித உpமைகள் விசயத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் சூழலில் யப்பானின் இந்த உதவியும் அறிவிப்பும் சிறிலங்காவுக்கு பெரும் ஆறதலாகவேயிருந்தது.
அதற்குப் பதிலாக சிறிலங்கா இப்போது யப்பானுடன் மீண்டும் கொடுக்கல் வாங்கல்களை அதிகரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.
கடந்த மூன்று மாதங்களின் முன்பு நூற்றுக்கு மேற்பட்டோரைக் கொண்ட பெரியதொரு வர்த்தகக் குழுவுடன் ஜனாதிபதி சீனாவுக்குப் போயிருந்தார். சிறிலங்காவில் சீனா தாhராளமாக முதலீடுகளைச் செய்யலாம். சீனப் பொருட்களை இலங்கைச்சந்தையில் விற்கலாம் என்ற உடன்படிக்கைகள் அப்போது செய்யப்பட்டன.
ஆனால் அந்த நிலைமையை சற்று மாற்றியமைக்கும் விதமாக இப்போது அகாஸியின் முயற்சிகள் அமைந்திருக்கின்றன. அவருடைய முயற்சியின் விளைவாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித Nபுhகல்லாகம அடங்கிய குழவினர் இப்போது யப்பானுக்குப் போயிருக்கிறார்கள்.
யப்பானில் இந்தக்குழுவுக்கு உற்சாகமான வரவேற்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது சீனாவுக்கு கிடைத்திருக்கும் சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்பை கையகப்படுத்தும் தீவிர முயற்சியில் இப்பொழுது யப்பான் ஈடுபட்டிருக்கிறது.
ஏறக்குறைய பன்னிரண்டாண்டுகளுக்கு முதல் சிறிலங்காவின் சந்தையில் யப்பான் அதிக செல்வாக்குடையதாக இருந்தது. குறிப்பாக ஐ.தே. க காலத்தில் யப்பானின் செல்வாக்கு அதிகமாக இருந்தது.
சந்திரிகா வந்து இதை மாற்றியமைத்தார். அவர் தமிழ் மக்களுக்கான போரைச் செய்வதற்கான முறையில் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை தயாரித்தபோது அது யப்பானுக்கு சற்றுப் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனை மாற்றுவதற்காக யப்பான் கடுமையாக முயன்றது. இதற்காக அது ரணிலை முழதாக நம்பியுமிருந்தது. ரணில் ஆட்சிப்போறுப்பை ஏற்றவுடன் யப்பான் அதிகமாக சந்தோசப்பட்டது. ரணில் போர்; நிறுத்த உடன் படிக்கையைச் செய்தNபுhது யப்பான் அதற்கு முழ ஆதரவைத் தெரிவித்து உதவியது.
இந்தப்புதிய ஏற்பாட்டுடன் யப்பான் வலு மும்முரமாக களத்தில் இயங்கத் தொடங்கியது. அகாஸி சிறப்புத்தூதுவராக இலங்கைக்கான பயணங்களைத் தொடங்கினார். இந்த ஐந்தாண்டுகளில் அதிகமாக இலங்கைக்குப் பயணம் செய்த வெளிநாட்டுத்தூதர்களில் அகாஸியும் ஒருவர்.
ஆனால் அகாஸியின் திட்டத்துக்கு மரணாக ரணிலின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
அவர் அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எம்பிக்களைச் சந்தித்த போது அவர்கள் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் போர் முனைப்பையும் தமிழ் மக்களுக் கெதிரான Nபுhக்கையும் அகாஸியிடம் சொன்னார்கள். அதற்கு அகாஸி சொன்னார், ரணிலைத் தோற்கடித்ததன் பலனை இப்போது அனுபவிக்கிறீர்கள் என்று. இதை அவர் சொல்லும்போது தாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்ற உணர்வோடுதான் சொன்னாராம்.
இதேபோல ஒருதடவை அவர் விடுதலைப்புலிகளைச்சந்திக்கும் Nபுhது " யப்பானுக்கு அமெரிக்கர்கள் என்ன செய்தார்கள் என்று நாங்கள் இப்போது யோசிக்கவில்லை, இனி அமெரிக்காவுடன் எப்படி இருக்கப் போகிறோம், மாறிவரும் புதிய உலகில் எதையெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம் என்பதைப்பற்றியே சிந்திக்கிறோம், கடந்தகாலத்தைப்பற்றி யோசித்துக் கொண்டிருப்பதைவிடவும் எதிர்காலத்தில் என்ன செய்;லாம் என்று சிந்திப்பதே முக்கியமானது " என்ற தொனிப்பட சொல்லியிருந்தாராம்.
அதாவது 'அமெரிக்கா அணுக்குண்டு போட்டதையே மறந்து விட்டோம் அதைவிடவா இந்தப்பிரச்சினையெல்லாம் பெரியது ' என்று அவர் கேட்காமல் கேட்கிறார்.
இந்தக்கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதோ இல்லையோ ஆனால் இதுதான் அகாஸி, இதுதான் யப்பான்.
அதாவது இத்தகைய ஒரு போக்கைப் பின்பறறியதால்தான் இனறு யப்பான் மீண்டும் உலக அரஙகில் முன்னுக்கு வந்திருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். அதாவது யப்பானின வெளியுறுவுக் கொள்கை மிக வித்தியாசமானது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவைப்போலல்லாது அது நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது எனபதே இங்கே கவனிகக் வேண்டியது.
யப்பான் இரண்டாம் உலகப்போருடன் சர்வதேச சமூகத்தால் முற்றிலும் துண்டித்து விடப்படும் அபாயத்திலிருந்த நாடு. அதிலும் மேற்குலகம் யப்பானை அடியோடு 'படுத்;திவிடும் ' நோக்கில் அதனைத் தனிமைப்படுத்த முயற்சித்;தது.
யப்பான் ஒரு ஆசிய நாடாக இருந்ததும் இதற்கான காரணங்களில் ஒன்று. தவிர யப்பான் மூர்கத்தனமான உழைப்பிலும் நுட்பத்திறனிலும் வளர்ச்சி பெற்ற தன்மை. அதிலும் ஆசிய நாடுகளிலேயே யப்பானில்தான் இந்த இயல்பு முதன்முதலிலும் அதிகமாகவும் இருந்தது.
எனவே இந்தமாதிரியான காரணங்களால் மேற்கு யப்பானை அடக்கி வைப்பதற்காக அதைத்தனிமைப்படுத்த முயற்சித்தது. ஆனால் அதற்குள்ளால், அந்தத்தடைகள் நெருக்குவாரங்களுக்குள்ளால் எல்லாம் யப்பான் நிமிர்ந்து விட்டது.
உண்மையில் அமெரிக்கா யப்பானுக்கு இழைத்த அநீதி என்றென்றைக்கும் மாறாதது மட்டுமல்ல, மறக்க முடியாததும் கூட. ஆனால் அதை வைத்துக் கொண்டு பகைமை பாராட்டும் அரசியலை யப்பான் தவிர்த்து விட்டது. அதன்மூலம் அது தொடரும் நெருக்க்டிகளைத் தவிர்த்ததுடன் புதிய வளர்ச்சியை நோக்கியும் போய்விட்டது. யாராலும் புறக்கணிக்கமுடியாத ஒரு ஸ்தானத்தையும் பெற்றிருக்கிறது.
இப்போது சர்வNதுச ரீதியில் சந்தையைப் பகிர்வதுடன் தீர்மானமெடுக்கும் தரப்புகளில் முக்கியமன நாடுகளில் ஒன்றாகவும் அது தன்னை நிலை நிறுததியிருக்கிறது. இத்தகைய உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் யப்பானின் உளவியலும் உழைப்புத்திறனும் சிந்தனையுமே அடிப்படை.
யப்பானியர்களின் உழைப்பைப்பற்றி பொதுவாக எவரும் சிறப்பித்தே சொல்வார்கள். அந்த உழைப்புத்தான் அவர்களுடைய முதல் நம்பிக்கை.
எந்தச்சூழலிலும் தங்களின் உழைப்பின் மூலம் எந்தத்டைகளையும் தாம் கடந்து விடுவோம் என்ற மனோ பலம் அவர்களிடம் வலுவாகவுண்டு. அதேபோல அந்த உழைப்புக்கான பெறுமதியை வீணாக இழக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள்.
எனவே தங்களுடைடய உழைப்பின் பெறுமதியை இழக்காமல் அதை மேலும் அதிகரிக்ச் செய்யும் நோக்கிலான வெளியுறவுக் கொள்கையை அவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதையே அவர்கள் பின்பற்;றுகிறார்கள்.
இந்த வெளியுறவுக் கொள்கையில் அவர்கள் தங்களுக்கான வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது யப்பானின் முதன்மையிடம் குறித்தே அவர்கள் எப்போதும் இயங்குகிறார்கள்.
இதற்கு யப்பானின் வரலாற்றில் நிறைய அடையாளங்களுண்டு. ஆனால் அதைப்பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில்; பார்த்துக் கொள்வோம்;.
சீனா எனற பெரிய நாட:டுக்கு அருகில் கடலால் சூழப்பட்ட தீவுககூட்டமாக இருந்த யப்பான் சீனாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் பல தடவை வைத்திருந்தது இதற்கொரு நல்ல உதாரணம்.
இந்தப்பின்னணியில் இப்போது யப்பான் இலங்கை விவகரத்தில் செயற்படுகிற விதத்தைப் பார்க்கலாம்.
யப்பான் இலங்கையின் அரசியல் விவகாரங்களில் நேரடியாக தலையிடாத ஒரு போக்கைக் கடைப்பிடித்து வந்தது. ஆனால் இது வெளியே தெரிந்த ஒரு Nபுhக்கு மட்டுமே. இதற்குப்பின்னே மறைமுகமாக யப்பானின் தொடர்புகளும்; உதவிகளும் இலங்கை அரசியலிலும் இனப்பிரச்pனையிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
யப்பானின் வர்த்தகத் தொடர்புகளும் நிதியுதவிகளும் சிறிலங்கா அரசை எப்போதும் பலப்படுத்தியே வந்துள்ள்து. அதிலும் ஜே. ஆரின் காலத்தில் யப்பான் சிறிலங்காவுக்குச் செய்த உதவிகளும் சிறிலங்காவுடன் கொண்டிருந்த வர்த்தக உறவுகளும் சிறிலங்காவை மிகப்பலமாக்கின.
இது இனப்பிரச்சினையில் பாதிப்புகளை அடைய விடாமல் சிறிலங்காவைக் காப்பாற்றியது. அNதுவேளை போரினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை யப்பானின் இந்த உதவி மறுவளத்தால் ஈடுசெய்தது.
இதில் யப்பான் இலங்கையின் இனப்பிரச்சினையில் பாதகமான நிலைப்பாட்டை எடுததாக முழதாகச்சொல்ல முடியாது. அதாவது யப்பான் தமிழர்களுக்குப் பாதகமான நிலைப்பாட்டை எடுத்ததாக அர்த்தமில்லை. ஆனால் யப்பானின் பொருளாதார உறவுகளையும் உதவிகளையும் திரட்டி சிறிலங்கா தமிழர்களுக் கெதிராகவே பிரயோகித்தது.
யப்பானுக்குத் தேவை எப்போதும் சந்தையே. அதிலும் இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதார வளர்ச்சி யப்ப்hனுக்கு நேரடிச்சவாலான விசயம். இந்தியாவும் சீனாவும் யப்பானின் சந்தையை இப்போது அதிகமாகப் பங்கு போட்டு வருகின்றன.
பதினைந்து வருசத்துக்கு முதல் சிறிலங்காவில் யப்பான்தான் பொருளாதாரப் பிரயோகத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. ஆனால் அந்த நிலைமை பின்னர் இல்லை.
குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் சந்தையில்; அதிக செல்வாக்கை யப்பான் செலுத்தி வந்தது. இப்போது இந்தச் சந்தையை இலக்கு வைத்து சீனாவும் இந்தியாவும் தமது பொருளுற்பத்தியையும் சந்தையையும் விரிவாக்கம் செய்துள்ளன. இது இன்றைய நிலையிலும் எதிர்கால நோக்கிலும் யப்பானுக்கு நெருக்கடிகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துமு; காhரியங்கள்.
எனவேதான் யப்பான் புதிய 'றோலைப் பிளே' பண்ணத் தொடங்கியிருக்கிறது. இதன்படி அது இணைத்தலைமை நாடுகளுக்கூடாகவும் தனியாகவும் உதவி வழங்கும் தரப்பினருடன் இணைந்தும் இந்த விசயத்தைக் கையாளத் தொடங்கியுள்ளது.
மறுபக்கம் தன்னுடைய தேவைகளுக்காக இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்துக்கு அப்பாலும் அது செயறபடத்தீர்மானித்துள்ளது போலுள்ளது. இந்தமுறை இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்தை உள்ளடக்கிய கூட்டறிக்கையை சேர்ந்து விடுவதில் யப்பான் இணங்கவில்லை என்றும் சொல்லபபடுகிறது.
இலங்கையில் போரோ சமாதானமோ எதுவோ நடந்தாலெனன் நடக்காது விட்டாலென்ன தனது நலன்கள் நிறைவேறினால் போதும் என்று நினைக்கின்றது யப்பான்.
இதில் மகிந்த ஆட்சியென்றால் என்ன ரணில் ஆட்சியென்றால் என்ன என்ற கட்டத்துக்கும் அது வந்து விட்டது. அதாவது அது ரணில் ஆட்சியமைக்கும் வரையில் காத்திருக்குத் தயாரில்லை.
அதுதான் அகாஸியே சொல்லி விட்டாரே அமெரிக்கா செய்த பாதகத்தைவிடவும் தமக்குத் தேவையாக இருப்பது இன்றைய நலன்களே, எதிர்காலத்துக்கான பலத்தை சேகரிப்பதற்கான வளங்களே. அதுக்காக அவர்கள் எதையும் மறக்கவும் தயார், மன்னிக்கவும் தயார். யாரோடும் கூட்டுச்சேரவும் தயார். யாரைப் பகைக்கவும் தயார்.
இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்தில் விலகி நிற்கவும் அது துணிந்திருப்பதன் பின்னணியை இந்த வகையிலே புரிந்து கnhள்ளலாம்.
அதாவது இப்போது இலங்கை விவகாரத்தைப் பொறுத்தே இந்த நிலைப்பாடு. அகாஸி ஒரு விடாக்கண்டராக இந்த முதுமையிலும் ஓடித்திரிகிறார். அவர் எல்லாக்கதவுகளையும் திறக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தோடே இயங்கிக் கொண்டிருக்pறார்.
No comments:
Post a Comment